Skip to main content

Posts

Showing posts from November, 2021

Google ads

கண்களில் ஏற்படும் வெள்ளெழுத்து பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 கண்களில் உட்புறத்தில் பட்டன் மாதிரி வட்ட வடிவில் ஒரு லென்ஸ் இருக்கிறது. இந்த லென்ஸ் தூரத்தில் உள்ள பொருட்களையோ அல்லது உருவத்தையோ பார்க்கும் போது விரிந்து கொடுக்கும். கிட்டத்திலுள்ள பொருட்களையோ அல்லது உருவத்தையோ பார்க்கும் போது சுருங்கும். இதுதான் இந்த லென்ஸின் வேலை. இதன் மூலம் ஒரு பொருளைப் பார்க்கிறோம். எழுத்தைப் பார்க்கிறோம். லென்ஸ் இந்தச் சக்தியை இழந்துவிட்டால் நாம் பார்க்கும் பொருள்கள் மங்கலாகவும், தெளிவில்லாமலும் புகைமண்டலம் போல் வெள்ளையாகவும் தோன்றும். இது நோய் அல்ல. கண் பார்வையில் உண்டாகும் கோளாறு. இதைக் கிராம மக்கள் சாலேசரம் என்றும் வெள்ளெழுத்து என்றும் கூறுகிறார்கள். பிரஸ்பியோப்பியா என்று கண் மருத்துவர்கள் இதைக் குறிப்பிடுவார்கள். வெள்ளெழுத்து என்று இதை ஏன் சொல்லுகிறார்கள்?  படிக்கும் போது புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள் தெளிவில்லாமல் வெள்ளையாகத் தோன்றும். கண்களுக்கு வெகு தூரத்தில் புத்தகத்தை வைத்துக் கொண்டு பார்த்தால் தான் எழுத்து தெரியும். படிக்க முடியும். அருகில் புத்தகத்தை வைத்துக் கொண்டு படித்தால் சரியாகத் தெரியாது. இதேபோன்று உருவங்களும் தூரத்தில் இருந்தால்தான் தெரியும்

நடப்பதால் கிடைக்கும் நன்மைகள்/அறியாத தகவல்கள்- Medical Tamizha

 குளத்து நீரில் அசுத்தங்கள் தேங்கி நிற்கின்றன. ஆனால் ஆற்று நீரில் அசுத்தங்கள் தேங்குவதில்லை, எப்போதும் ஓடிக் கொண்டிருப்பதால் அசுத்தங்கள் நிற்பதில்லை. மேலும் ஓடும் நீரில் பிராண வாயு கலந்திருக்கும். அசுத்த நீரில் கரியமில வாயு கலந்திருக்கும். இதுபோலவே இரத்தம் ஓடிக் கொண்டிருந்தால் அதில் அழுக்குச் சேர்வதில்லை. ஒதுங்கிவிடுகிறது. இரத்தம் ஓடிக் கொண்டிருப்பதால் அதில் பிராண வாயும் கலந்து ஓடுகிறது. கரியமில வாயு ஒதுக்கப் படுகிறது. இரத்தத்தை ஓட வைப்பது நம்முடைய உழைப்பு. குறிப்பாகச் சொன்னால் கைகளை வீசி நடக்கும் நடையே நம் இரத்தத்தை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நன்கு ஓடச் செய்கிறது. உடல் உறுப்புக்களில், இரத்த நாளங்களில் இரத்தம் தங்கு தடையில்லாமல் ஓடுவதற்கு நடை மிகமிக அவசியமாகத் தேவைப் படுகிறது. தத்தித்தத்திச் செல்லும் சிறு குழந்தைக்கு மூன்று சக்கரத் தள்ளு வண்டியைக் கொடுத்து நடைபயில விடுகிறார்கள். இல்லா விட்டால் குழந்தை சப்பாணியாகி விடும்.  இடுப்புக்குக் கீழே உள்ள தசைகளை, நரம்புகளை இயக்கி விட வேண்டும். அப்போது தான் கீழ்ப் பகுதிக்கு வந்த அசுத்த இரத்தம் நடக்கும்போது மேல் நோக்கித் தள்ளி விடப்படும். அ

உடைகளால் வரும் உடல் கோளாறுகள்/அறியாத தகவல்கள்- Medical Tamizha

 வெப்பத்தையும் குளிரையும் சமாளிக்கவும் உடம்பின் உஷ்ணத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ளவும். மனிதனுக்கு உடை தேவைப்படுகிறது. இதனால் பருவ மாறுதல்களுக்கு ஏற்ப உடைகளைத் தைத்துப் போட்டுக் கொண்டு உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து வந்தார்கள் நம் முன்னோர்கள். உடை, உடம்பின் பாதுகாப்பிற்காக என்ற நிலைமாறி உடல் அழகுக்காகவும் தோற்றப் பொலிவுக் காகவும் புதிய புதிய பாஷன்கள் என்ற முறையில் உடை அலங்கார நிபுணர்கள் சில மாறுதல்களைச் செய்தார்கள். இதனால், ஒருபக்கம் நன்மை உண்டானது என்றாலும் இலைமறை காய்போல் சில தீமைகளும் தொடர்ந்துவந்து உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. இந்தியா வெப்பமான நாடு. இதற்கு மாறுபாடான சீரோஷ்ண நிலைமைகளை உடையவை மேலைநாடுகள். குளிர்ச்சியான நாட்டின் உடை அலங்காரம் வெப்ப நாட்டில் புகுந்தது. காழுத்தை இறுக்கும் காலர், டைப் பழக்கம், பாதங்களை மூடும் ஷூப் பழக்கம் ஆகியவற்றை  இங்குள்ள இந்தியர்கள் பின்பற்றவேண்டிய கட்டாயத்திற்கு வந்த பிறகு, புதிய நாகரிகத்தால் புதிய நோய்கள் சில தோன்றின. குறிப்பாகத் தோல் தொல்லைகள் அதிகமாயின. இரத்த நாளங்கள் அழுத்தப்படுவதால் வலி, வீக்கம், நரம்புக் கோளாறுகள் உண்டாயின. உடைகளாலும், உடை

நோய் குணமாக நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

 நோய் உடலைத் தாக்கும் போது நோயாளி பலவீன மடைகிறான். உடலின் இயக்கம் தளர்ந்து போகிறது. பசி இல்லை. நல்ல தூக்கம் இல்லை. இதனால் உடல் சோர்ந்து போகிறது. மனமும் பாதிக்கப்படுகிறது. ஆகவே நோயாளியை நல்ல காற்றோட்டமுள்ள அறையில், வெளிச்சம் உள்ள அறையில் ஓய்வாக இருக்கும் படி வைக்க வேண்டும். வெப்பமோ, குளிரோ தாக்காமல் நோயாளியைப் பாதுகாக்கவேண்டும். ஒருவருக்கு ஜூரம் வரும்போது மூளையும் நரம்புகளும் தங்களுக்கு வேண்டிய போஷிப்பை பெற்றுக் கொள்வதில்லை. இதனால் தளர்ச்சியும் வலிப்பும்கூட உண்டாகும். இழுப்பும் தோன்றும். இருதயம் அளவுக்கு அதிகமாகத் துடிப்பதால் அதன் முறையான வேலைகளும் பாதிக்கப் படுகின்றன.  இது தவிரச் சிறுநீரகங்கள் கழிவுப் பொருளை வெளியே தள்ள முடியாமல் தளர்ச்சியடைந்து போகிறது. இதனால் சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. உடல் தளர்ந்த நிலையில் வேறு சில தொற்று நோய்களும் இந்தக் கட்டத்தில் தாக்கலாம்.  பெரியம்மை, தட்டமை தொற்றலாம். ஆகவே நோயாளி வெகு சுவனமாக இருக்க வேண்டும். ஜூரத்தை முற்றவிடாமல் மருந்துகளாலோ அல்லது உணவுகளாலோ அதிகமாகாமல் டாக்டருடன் சிகிச்சை முறையில் ஒத்துழைக்க வேண்டும். ஒரு டாக்டரிடம் மருந்து சாப்பிடுவது;

திக்குவாய் பிரச்சனையை சரி செய்வது எப்படி? அறியாத தகவல்கள்- Medical Tamizha

 வாய் உள்ள அத்துணை பேரும் பேசவேண்டிய விஷயங்களைப் பிறர் விளங்கிக் கொள்ளும் படி பேசுவதில்லை.ஆனால், சிலரோ தட்டுத் தடுமாறிப் பேசுகிறார்கள். சொல்லுகிறார்கள். இதை ஸ்டட்டரிங் என்று ஆங்கிலத்தில் இன்னும் சிலர் சொற்களையோ, வாக்கியங்களையோ முழுவதும் சரியாக உச்சரிக்க முடியாமல் விழுங்கிவிழுங்கிப் பேசுகிறார்கள். இதை ஸ்டாமரிங் என்று ஆங்கிலத்திலும் திக்கித் திக்கிப்  பேசுதல் என்று தமிழிலும் சொல்லுகிறார்கள். தமிழ்நாட்டின் சில கிராமங்களில் இதைக் கொன்னை வாய்ப் பேச்சு என்று கூறுவர். இந்தியாவில் திக்குவாய்ப் பேச்சாளர்கள் சுமார் ஒருகோடிப் பேர் இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். இது ஒரு நோயா? இல்லை. சிலருக்குச் சில காலங்களில் இப்படி ஒரு குறைபாடு ஏற்படுகிறது. இது ஒன்றைத் தவிர இவர்களின் உடலில் வேறு எவ்விதக் குறைபாடும் இருப்பதில்லை. இந்தக் குறைபாட்டையும் இவர்கள் வாயைத் திறந்து பேசும் போதுதான் அறிய முடிகிறது. பெண்களைவிட ஆண்களையே இந்தக் குறைபாடு அதிகமாகச் சோதித்துவிடுகிறது. மேலும் குழந்தைப் பருவத்தில் உள்ளவர்களைத்தான் இந்தக் குறைபாடு அதிகமாகப் பாதிக்கிறது. குழந்தைப் பருவத்தில் கண்ணால் கண்டதையும், காதால் கேட்

மருந்து விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியவை!

 டாக்டருக்கும் நோயாளிக்கும் இடையில் மருந்து விற்பனையாளர் ஒருவர் இருக்கிறார். இவர் விற்பனை செய்யும் மருந்தை வாங்கி நோயாளி சாப்பிடுகிறார். மருந்து விற்பனையாளருக்கு மேலே, மருந்தை உற்பத்தி செய்பவர் இருக்கிறார்.  இவர் தயாரித்து அனுப்பும் மருந்தை, மருந்துக் கடைக்காரர்கள் விற்பனை செய்கிறார்கள். மருந்து வியாபாரம் ஓர் இலாபகரமான வியாபாரம் என்று இப்போது இந்தத் தொழிலில் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் போலி மருந்துகளின் நடமாட்டம் இந்தியாவில் பெருகிவருகிறது என்ற அச்சம் தரும் செய்திகள் தினசரித் தாள்களில் படிக்கிறோம். நோயிலிருந்து விடுதலை பெற எந்தவிலை கொடுத்தும் மருந்துகளை வாங்கும் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதோடு. சீக்கிரமாகவே இந்த உலகத்தை விட்டுப் போய் விடுகிறார்கள்.  மருந்து விற்பனையில் கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் வியாபாரிகள் சட்டத்தின் சந்துகளில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதை அரசும் அதிகாரிகளும் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களுக்கு வருவோம்:  ஒரு நோயாளி, டாக்டரிடம் சிகிச்சை செய்து கொள்ளும் போது டாக்டர் எழுதிக் கொடுக்கும் சீட்டைக் கவனமாகப் ப

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுப்பது எப்படி?

 குழந்தைகளைப் பாதிக்கும் எத்தனையோ தொந்தரவுகளில் Bed wetting என்று சொல்லப்படும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் தொந்தரவும் ஒன்று. சாதரணமாக குழந்தைகள் இரண்டு வயது முதல் நான்கு வயதிற்குள் சிறுநீர் மற்றும் மலத்தைக் கட்டுப் படுத்தும் சக்தியைப் பெற்று விடுகிறார்கள். ஆனால் ஒருசில குழந்தைகள் சில நேரங்களில் தங்களைக் கட்டுப் படுத்த முடியாமல் படுக்கையில் சிறுநீர், கழித்துவிடுகிறார்கள். இது பெற்றோருக்குத் தர்மசங்கடமான நிலைமையை ஏற்படுத்திவிடுகின்றன. பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா? அதைப் பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா? என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். பேணி வளர்ப்பதில் குழந்தைக்கு " டாய்லட் டிரைனிங்" என்று சொல்லப்படும் சிறுநீர், மலம் கழிக்கும் பயிற்சியும் ஒன்று. குறிப்பிட்ட நேரத்தில் குழந்தைகளுக்கு மலம் சிறுநீர் கழக்கும் பழக்கத்திற்குத் தாய்தான் உதவ வேண்டும். பொதுவாக இடுப்புக் கீழே உள்ள உறுப்புக்கள் தன்னிச்சையாகச் செயல்படுவதில்லை. வயிறு, குடல், சிறுநீரகம் இவை எல்லாம் பழக்கத்திற்கு அடிமையான உறுப்புக்கள். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட செயலைச் செய்யும்படி பழக்கப் படுத்தினால் அந்தப் பழக்

தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பது எப்படி?அறியாத தகவல்கள்- Medical Tamizha

 இந்த உலகில் எல்லோரையும் சமமாகப் பாவிக்கும் ஒரு சக்தி உண்டு என்றால் அது நோய் ஒன்று தான். பிறந்த குழந்தை என்றோ சாகப் போகும் பெரியவர் என்றோ, எவரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. மனிதன் என்றோ,மிருகம் என்றோ பேதம் பார்ப்பதில்லை.  ஆண் என்றோ,பெண் என்றோ,பணக்காரன் என்றோ, ஏழை என்றோ பாகுபாடு பார்ப்பதில்லை. படித்தவன் என்றோ, பாமரன் என்றோ ஏற்றத் தாழ்வுகளைப் பார்ப்பதில்லை. சொல்லாமல் வருகிறது. கொல்லாமல் கொல்லுகிறது! இந்த நோய்களில் மட்டும் இரண்டு பெரிய பிரிவுகள் உண்டு. ஒன்று தொற்றும் நோய்கள். இன்னொன்று தொற்றாத நோய்கள். நோய்களில் சில மனிதனைத் தொத்திக் கொண்டு அவன் மூலம் இன்னொரு மனிதனை வாரி வளைத்துப் போடுவதைப் பார்க்கிறோம். பெரியம்மை , சின்னம்மை , மணல்வாரி , தட்டம்மை கிச்சிலுப்பை , நீர்க் கொளுவான், புட்டாலம்மை , பொன்னுக்கு வீங்கி, அக்கி , சொறி , சிரங்கு . டிப்தீரியா , டெட்டனஸ் , கக்குவான் , மூலைக் காய்ச்சல் , டைபாய்ட் , பாரா டைபாய்ட், இளம்பிள்ளை வாதம். டி.பி. தொழுநோய் என்று, தொத்தும் நோய்களைப் பட்டியலாகப் போடலாம். தொத்தும் நோய்கள் அனைத்தையும் கண்களுக்குத் தெரியாத கிருமிகளால் உண்டாகின்றன. ஒவ்வொரு நோய்க்

கீரைப் பூச்சிகள் நூல் புழுக்கள்/அறியாத தகவல்கள்- Medical Tamizha

 குழந்தைகளுக்குச் சில சமயங்களில் சளி பிடித்துக் கொள்கிறது. நெஞ்சில் சளி, இருமல், இருமித்துப்பும் போது இரத்தம் விழுகிறது. இதற்கு என்ன காரணம்? சில குழந்தைகளுக்கு ஜூரம் வருகிறது, அதோடு வலிப்பும் உண்டாகிறது. இதற்கு என்ன காரணம்? சில குழந்தைகளுக்கு முகம் வெளுந்து, வயிறு பெருத்து, கன்னங்கள் ஊதிப் போய் இருக்கும். இதற்குக் காரணம்? சில குழந்தைகளுக்கு வயிற்றுவலி, பேதி ஆகிறது. விஷக் கிருமிகளால் பேதி ஆகிறது. இதற்கு என்ன காரணம்? குழந்தைகள் நன்றாகச் சாப்பிடுகின்றன. ஆனால் உடம்பு தேறவில்லை. தேய்ந்து தேய்ந்து தேவாங்குகள் போல் ஆகிவிடுகின்றன. குழந்தைகள் சாப்பிடும் சாப்பாடு எல்லாம் எங்கே போகிறது? எல்லாவற்றிற்கும் காரணம் குடற் பூச்சிகள் என்கிறார்கள் மருத்துவர்கள். இவை எல்லாம் உண்மைதானா? உண்மைதான்! இந்தப் புழுக்களால் குழந்தைகளுக்கு வரும் நோய்கள் அநேகம். மறைமுகமாகக் குடலில் போய் தங்கிக் கொண்டு குழந்தைகளையும் சில சமயங்களில் பெரியவர்களையும் தொல்லைப் படுத்துகின்றன. இந்தப் புழுக்கள் சில உருண்டை வடிவமாகவும், இன்னும் சில இலை போல் தட்டையாகவும் இருக்கின்றன. இதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால் இவற்றினுள் ஆண்,பெண் பிரிவுக

குழந்தைகளின் மந்த புத்திக்குக் காரணம்?அறியாத தகவல்கள்- Medical Tamizha

 சில பெற்றோர், தங்களின் குழந்தையைப் பற்றிச் சொல்லும் போது, எல்லாக் குழந்தைகளும் ஓடியாடி விளையாடுகிறார்கள் என் குழந்தை மட்டும் எப்போதும் டல்லாக இருக்கிறான் என்பார்கள். இன்னும் சில தாய்மார்கள் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுத்தாலும் மண்டையில் ஏறுவதில்லை. மந்தமாக இருக்கிறான். இதற்கு என்ன காரணம்? என்று கேட்பதுண்டு. பிறக்கும்போதே ஏற்படும் சில கோளாறுகளே மந்த புத்திக்குக் காரணங்களாகச் சொல்லலாம். கர்ப்பமாக இருக்கும் சில தாய்மார்கள் ஊட்டச் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடாமல் இருப்பதால் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தை மந்த புத்தியுள்ளவர்களாகப் பிறவியிலேயே உருவாகிறார்கள். கர்ப்பிணிகளின் உணவில் அயோடின் சத்தக் குறைவதால் மந்த நிலை ஏற்படலாம். ஆகவே கர்ப்பமான பெண்கள் அயோடின் உப்புச் சேர்ந்திருக்கும் உணவுகளை நன்கு சாப்பிடவேண்டும். கர்ப்பமான காலத்தில் அதிகமாக மருந்துகளைச் சாப்பிட்டாலும் குழந்தை மந்தமாகப் பிறக்கிறது என்று மகப்பேறு மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். குழந்தைகளை படிப்பில் ஆர்வமாக இருப்பதற்கு வழிமுறைகள் குழந்தை பிறக்கும்போது ஏற்படும் சிக்கல் காரணமாகச் சில சமயங்களில் மூளை பாதிக்கப்படலாம். குழந்தைக்க

நோய் குணமாக டானிக் அவசியமா?/அறியாத தகவல்கள்- Medical Tamizha

 டானிக் என்பது ஒரு கிரேக்கச் சொல். தொடர்ந்து திசுக்களுக்குச் சத்துமூலம் சக்தி அளிக்கும் ஒருபொருள் இது. மனிதன் உயிர் வாழப் புரதம், கொழுப்பு. கார்போஹைட்ரேட். மினரல்ஸ் அல்லது தாதுப் பொருள், வைட்டமின்கள், நீர் ஆகிய ஆறு சத்துப் பொருள்களும் தேவை. நாம் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நீர் ஆகியவை இருக்க வேண்டும். ஆனால் தாதுப் பொருட்களும், வைட்டமின்களும் குறைந்த அளவில் இருந்தால் போதும். உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கும்,இயக்கத்திற்கும் வைட்டமின் சத்துக்கள் தேவைப்படுகின்றன். திரவமாக இந்த ஊட்டச் சத்துக்களை மருத்துவர்கள் கொடுக்கிறார்கள். இந்தச் சத்துக்களை நம் உடம்பே உற்பத்தி செய்துகொள்ள முடியாது. நாம் சாப்பிடும் உணவில் எல்லாச் சத்துக்களும் அடங்கி இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சத்தை மட்டும் பிரித்துச் சாப்பிடமுடியாது.வைட்டமின் சத்துக்கள் சுமார் 20க்கு மேல் இருக்கின்றன. ஒவ்வொரு சத்தும் தனியாகப் பிரித்து எடுக்கப்பட்டுத் தனித்தனி மாத்திரைகளாகவோ, திரவப் பொருளாகவோ மாற்றப்பட்டு இரசாயனக் சுலவையாகத் தரப்படுகிறது. இதுவே டானிக். வைட்டமின் சத்துக்கள் உணவில் மிகக் குறைந்த அளவில் இருந்தால், நோ

புளுராசிஸ்- எனும் ஒருவகைப் பல்நோய்/அறியாத தகவல்கள்- Medical Tamizha

வாழ்க்கையில் சில மனிதர்களைப் பார்க்கிறோம். இவர்களுக்கு நேராக இருக்கவேண்டிய கால்கள், கைகள் வளைந்து போய் இருக்கும். நடக்கும் போது முட்டிக் கால்கள் ஒன்றோடொன்று உரசும். இதுவும் ஒருவகை உடல் ஊனம்தான். மூட்டு நோய்களால் ஏற்படும் கோளாறுதான். உறுப்புக்களில் இப்படி ஒரு வளைவை உண்டாக்கு வது ஒரு நோயின் விளைவு என்பது பலருக்கும் தெரிவதில்லை. இந்த நோயைப் புளூராசிஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறார்கள். இந்த நோய் மனிதனுக்குள்ளே முடங்கிக் கிடந்து காலமெல்லாம் அச்சமூட்டிக்கொண்டே இருக்கும். இதனால் உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் எலும்புத் தொடர்பான அங்கக் குறைவுகளை ஏற்படுத்தி உருவ அமைப்புக்களைப் பரிகசிக்கும்படி செய்து விடுகின்றது. புளூராசிஸ் நோய் பத்து வயதுக்காரர்களை மடக்குகிறது.எப்படி? பல் புளூராசிஸ் நோய் சிறுவர்-சிறுமியர்களின் பற்களைத் தாக்க ஆரம்பிக்கிறது.பற்களில் மஞ்சள் நிறக் கறையை உண்டாக்கிக் கடைசியில் கறுப்பு நிறத்தைப் படர விட்டு உறுதியான பற்களை உருக்குலைத்துவிடுகிறது. புளூராசிஸ் நோய் மனிதனை மட்டும் தாக்குவதில்லை. ஆடு,மாடுகள், எலி, மீன் ஆகியவற்றையும் தாக்கும். பிராணிகளின் பற்களைக் கறைப்படுத்தி நச்சுத் தன்ம

வயிற்றில் ஏற்படும் எரிச்சலை போக்கும் வழிமுறைகள்

 நாம் Blow jaundice உணவு ஜீரணிப்பதற்காக இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தியாகிறது. இதுபோலவே பித்த நீர்ப்பையில் பித்த நீர் சுரக்கிறது. இது கொழுப்புப் பொருட்களைக் கரைக்க உதவுகிறது. இந்த அமிலத்தால் அல்லது பித்த நீரால் இரைப்பையின் மெல்லிய ஜவ்வு பாதிக்கப்படலாம். புண்ணும் உண்டாகலாம். நாம் உண்ணும் உணவில் காரம், புளி, மசாலாப் பொருட்கள் அதிகமாகச் சேர்ந்தால் வயிற்றில் புண் உண்டாகும். புகை பிடிப்பது, மது அருந்துவது, இவற்றாலும் வயிற்றில் புண் உண்டாக இடம் உண்டு. வலி போக்கும் சில மருந்துகள் வயிற்றில் கோளாறுகளை உண்டாக்குகின்றன. நம் மனத்தில் ஏற்படும் கவலை, கோபம், பரபரப்பு ஆகிய உணர்ச்சிகளால் நரம்பு பாதிக்கப்படுகிறது. அமிலம் அதிகமாக ஊற்றெடுக்கக் காரணமாகிறது. இதனாலும் வயிற்றில் புண் ஏற்படும்.இது தவிர, வயிறு முட்டச் சாப்பிடுவதாலும், வயிற்றைக் காலியாகப் போடுவதாலும் வயிற்றில் புண் உண்டாகும். எந்தக் காரணத்தால் வயிற்றில் புண் ஏற்பட்டாலும் அது இரைப்பையைத் துளைத்துவிடும். சிலருக்கு இரைப்பையில் அடைப்பும் உண்டாகலாம். புண் காலப் போக்கில் புற்று நோயாகவும் மாறும். உண்ணும் உணவினால் மட்டும் வயிற்றுக்குக் கேடு

கக்குவான் இருமல் ஐ தடுப்பது எப்படி?அறியாத தகவல்கள்- Medical Tamizha

 பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தொல்லை கொடுக்கும் இருமல் நோய் கக்குவான். உண்ட உணவை இருமிஇருமிக் கக்கி வெயியேற்றுவதால் இதற்குக் கக்குவான் இருமல் என்று பெயர் வந்தது. பெர்டுஸில் என்ற கிருமியினால் இந்த நோய் உண்டாகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இது ஒரு தொற்று நோய். குழந்தைகள் மத்தியில் மிக வேகமாகப் பரவித் தொல்லை தருவதால் இருமல் வந்த குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் பெற்றோர் பாதுகாக்க வேண்டும். இந்த நோய் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் தாக்கினால், இசிவை உண்டாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும். இந்த நோய் வந்த குழந்தைகளுக்கு தொந்தரவுகளும் உண்டாகலாம். தொடர்ந்து இருமுவதால் சுவாசப் பைகளிலுள்ள சிறு காற்றுக் குழாய்கள் விரிவடைகின்றன. இதனால் பிராங்கியக்டஸிஸ் என்ற சுவாசக் கோளாறு நோயும் உண்டாகிறது. ஆகாரத்தை இருமியபடி வாந்தி எடுப்பதால் குழந்தையின் உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டுத் துரும்பாய் இளைத்து விடுகிறார்கள். பகலைவிட இரவில் இருமல் அதிகமாவதால் குழந்தைகளின் தூக்கம் கெடுவதோடு, குடும்பத்திலுள்ள அனைவரின் தூக்கமும் கெட்டு எல்லோருமே துன்பத்திற்கு ஆளாகிறார்கள். இதையும்

காய்கறிகளை சமைப்பதால் சத்துக்கள் குறைகிறதா?

 ஓர் ஆங்கிலப் பழமொழி சொல்லுவார்கள். ' மனிதனை இறைவன் படைத்தான். சமயலைச் சாத்தான் 'படைத்தான் ,' என்று நாவுக்கு ருசியாக இருக்கவும் மூக்குக்கு மணத்தைத் தரும் ஏலம் பட்டைக் கிராம்புப் பொருள்களையும், கண்களுக்கு அழகாக இருக்கச் சில இராசாயன பொருள்களையும் சேர்த்துச் சமைத்துவைப்பது தான் சாத்தானின் வேலை. இப்படிச் சமைப்பதால் ஆரோக்கியத்தை மனிதன் இழக்கிறான். இதையும் படிக்க :    பேதி மருந்து சாப்பிடுவது உடம்புக்கு நல்லதா? கெட்டதா ? உடல் ஆரோக்கியத்திற்காக உணவு ஏற்பட்டது. உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ள அல்ல. நாம் உண்ணும் உணவு எளிதாகச் சீரணிக்கவேண்டும். உடல் உறுப்புகளுக்குக் கேடு தரக்கூடாது, அந்நியப்பொருள்கள் அனாவசியமாக உள்ளே போகக்கூடாது. கவனமாகச் சமைத்து உண்ணும் உணவுதான் உடலுக்குச் சக்தி அளிக்கிறது, சத்துணவாகவும் மாறுகிறது. பச்சை காய்கறி, கீரைகள். கிழங்குகளில் இயற்கையாக அமைந்த ஹைட்ரோலிஸ் என்று சொல்லப்படும் நீர்க் குணம், சமைப்பதால் மாறிவிடுகிறது. சமைப்பதால் காய்கறிகளில் உள்ள ஜீவ சத்துக்கள் அழிந்து விடுகின்றன. என்றும் வறுத்த, பொரித்த, தாளித்த உணவு வகைகள் அமில குணத்தைப் பெறுகின்றன என்றும் இயற்கை

குழந்தைகள் சொத்தை பற்கள் சரிப்படுத்துவது எப்படி?

 குழந்தைகள் சிரிக்கும்போது முகத்திற்தகு அழகு தருபவை அழகிய பற்கள். இந்தப் பற்களில் சொத்தை விழுந்துவிட்டால் அழகின் சிரிப்பே பறந்துவிடும். எனவே குழந்தைப் பருவத்தில் பற்களைப் பழுதுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். புட்டிப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பாலில் இனிப்புக்காகச் சர்க்கரையை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால் சர்க்கரையானது பல்லில் சில விளைவுகளை உண்டாக்குகிறது. ஊட்டச் சத்து என்ற பெயரில் மாவு சேர்க்கப்படுவதால் இந்த மாவு பல் பகுதியில் படிகிறது.  கிருமிகள் சர்க்கரையையும், மாவுப் பண்டங்களையும் பயன்படுத்திக்கொண்டு அவற்றை அமிலமாக மாற்றுகின்றன. இந்த அமிலம் வளரும் பற்களின் எனாமலை அரிக்கிறது.  பற்களில் புள்ளிகளை உண்டாக்கி அந்தப் புள்ளிகள் மூலம் துளை விழுந்து கிருமிகள் பற்களின் வேர்ப் பகுதிவரை சென்று கட்டியை உண்டாக்குகிறது. அதிலிருந்து சீழ் உண்டாகிறது.  கிருமிகள் உற்பத்தி செய்யும் நச்சு நீரும் பற்களை அரித்துச் சேதப்படுத்திவிடுகிறது. கிருமிகள் உற்பத்தி செய்யும் என்சைம் என்ற சுரப்பு நீர்தான் பற்களின் எனாமல் அழிவதற்கு காரணம்.  குழந்தைகள் மிட்டாய், ரொட்டி, ஐஸ்கிரீம் ஆகிய தின்பண்டங்களை அதிகமாக விரும

பள்ளிக்கூடத்தில் ஏற்படும் நோய்களை தடுக்கும் வழிமுறைகள்

 பள்ளிக்கூடங்கள் நோய்களின் உற்பத்தி ஸ்தானங்கள் அல்ல. ஆனால் நோய்கள் பரவும் இடங்களுள் ஒன்று என்பதை மறுக்க முடியாது. பள்ளிப்பருவ இளம் சிறார்களுக்கு நோய் தொற்றும் இடங்களுள் பள்ளிக் கூடங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன.  இன்றையப் பள்ளிக் கூடங்களில் படிக்கும் மாணவர்களும், மாணவிகளும் நாளைக்கு நாட்டின் குடி மக்களாகவும், குடும்பத் தலைவராகவும், நாடாளும் தலைவர்களாகவும் வளர்ந்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கக் கூடியவர்கள். இவர்களின் உடல்நலமும், மனநலமும் வளர அரசும் பெற்றோரும், ஆசிரியர்களும் செயல்படவேண்டும். பள்ளிப் பருவத்திலே வரும் நோய்கள் பல. கண் நோய்கள், பல் நோய்கள், காது மூக்குத் தொண்டை நோய்கள், தோல் சம்பந்தமான நோய்கள், ஊட்டச் சத்துக் குறைகளால் ஏற்படும் நோய்கள் இப்படிப் பல வாறாகச் சொல்லிக் கொண்டே போகலாம். இவற்றுள் பெரியம்மை, காலரா, டைபாய்டு, இளம் பிள்ளை வாதம் டிப்தீரியா என்ற தொண்டை அடைப்பான் நோய், வலிப்பு நோய்கள் ஆகியவை ஆபத்தையும் கொடுக்கும்.  பள்ளிக்கூடத்தில் ஏற்படும் நோய்கள் இதனால் இந்த நோய்கள் தோன்றும் போது வீட்டில் பெற்றோர் மிகவும் கவனமாக அக்கறை எடுத்துக் கொண்டு உடனே சிகிச்சை செய்ய வேண்டும

பற்களை உறுதியாக வைத்திருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

 உடம்பு உறுதியாக இருக்க வேண்டுமானால் பற்கள் உறுதியாக இருக்கவேண்டும் என்று பல்நோய் நிபுணர்கள் கூறுகிறார்கள். பல்லுக்கும் உடம்புக்கும் என்ன சம்பந்தம்? உணவைப் பக்குவப்படுத்துவது வாய்.  பற்கள் கடினமான உணவுகளை உடைத்து எச்சிலோடு கலக்கப்பட்டு இரைப்பைக்குச் செலுத்தப்படுகிறது. உணவு ஜீரணமாவதற்குப் பற்கள் ஆற்றும் பணி மிகமிக முக்கியமானது.  உணவுப் பொருள்கள் அரைக்கப்படாமல் அப்படியே விழுங்கப்பட்டால் இரைப்பைக்கு வேலை அதிகமாகிறது. இதனால் ஜீரண உறுப்புக்கள் சீர்கேடு அடைவதால் உண்டாவதுதான். பற்கள் எப்போது உருவாகின்றன?  தாயின் வயிற்றில் குழந்தை உருவாகி ஆறு வாரங்களில் பல்லுக்கு அஸ்திவாரம் போடப்படுகிறது. குழந்தை பிறந்த ஆறாவது மாதத்தில் பால் பற்கள் தோன்றுகின்றன. குழந்தையின் வளர்ச்சியில் இரண்டு ஆண்டுகளில் இருபது பற்கள் தோன்றுகின்றன.  பிறகு பன்னிரெண்டு ஆண்டுகளில் எல்லாப் பற்களும் முளைத்து விழுந்து விடுகின்றன. அதன் பிறகு நிலையான பற்கள் முளைக்க ஆரம்பித்து முழு மனிதன் ஆகும்போது முப்பத்திரண்டு . பற்களும் வளர்ச்சியடைந்து உறுதிபெறுகின்றன. சிறு வயதில்தான் பல்லுக்குப் பல நோய்கள் உண்டாகின்றன. பல்சொத்தை, பல் ஆட்டம், பல்லர

எலும்பு முறிவை சரிசெய்ய செய்ய வேண்டிய வழிமுறைகள்

 விபத்திலோ விளையாட்டிலோ, திடீரென்று அடிபடுகிறது. அடிபட்டவிடத்தில் வலி எடுக்கிறது சிறிது நேரத்தில் வீக்கம் ஏற்படுகிறது. கையிலோ காலிலோ காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனால் வலி எடுக்கிறது.  அந்த இடத்தில் வேதனை உண்டாகிறது. இது என்ன ஊமைக் காயமா? சுளுக்கா? அல்லது எலும்பு முறிவா என்று தெரியவில்லை. உடனே என்ன செய்வது? எக்ஸ்-ரே எடுத்துப் பார்ப்பது அவசியம். சுளுக்கு, எலும்பு முறிவு இந்த இரண்டிற்கும் ஏறக்குறைய ஒரே சிகிச்சை முறைதான். அதிக வித்தியாசம் இல்லை. நம்மில் பலர் சுளுக்கை (அதாவது ஆங்கிலத்தில் ஸ்பிரெயின் என்று சொல்லப்படும் பாதிப்பை) நரம்பில் ஏற்படும் கோளாறு என்று நினைத்துவிடுகிறார்கள்.  இது நரம்பில் ஏற்படும் நோய் என்று சொல்லுவது தவறு. தசை பிசகியிருக்கிறது என்பதுதான் சரி. தசை பிசகியிருந்தால் பிஸியோதெரபி மூலம் இந்தக் கோளாறைப் போக்கலாம். எலக்டிரிக் ஹீட் சிகிச்சை இருக்கிறது. இரத்தக் கட்டாக இருந்தாலும் சரிசெய்துவிட முடியும். மூட்டுக்கு உள்ளே தசைப் பிசகுவதால் விளையாட்டு வீரர்கள் இதனால் பாதிப்புக்கு ஆளாகிறார்கள். ஆர்த்ரோஸ்கோப் என்ற கருவி மூலம் இதைச் சோதித்து அறியலாம். தசை பிரண்டிருந்தால் அதை அப்புறப்

செயற்கை பற்கள் என்றால் என்ன? அவற்றின் நன்மைகள்

 பொய்களும், போலிகளும் மலிந்துவிட்ட காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். உண்மைகள் இருந்த இடத்தில் போலிகளை இட்டு நிரப்பி அதையும் ஒரு கலையாக அமைத்துவிட்டான் மனிதன்.இதுவும் சில நன்மைகளைத் தந்து நயம்பட வாழ வைக்கிறது. உச்சந் தலையிலிருந்து உள்ளங்கால் வரை பொய் உறுப்புக்களைப் புகுத்தி மனிதனை நடமாட வைத்திருக்கிறார்கள் மருத்துவர்கள்.  அதில் ஒன்று பொய்ப் பற்கள்.  இதை நாகரிமாகச் சொன்னால் செயற்கைப் பற்கள் என்று சொல்லலாம்.இயற்கையான பற்கள் செயலிழக்கும் போது செயற்கைப் பற்களைப் பொருத்தும் மருத்துவத்திற்கு  டென்டல் பிராஸ்திசிஸ் என்று சொல்லுகிறார்கள். பற்கள், நமக்கு எத்தனையோ நன்மைகள் செய்வதற்குப் படைக்கப் பட்டிருக்கின்றன. முகத்திற்கு அழகு தருபவை பற்கள் அல்லவா? நாம் உண்ணும் உணவை அரைத்துக் கொடுத்து நமக்குச் செரியானத்தையும் ஊட்டத்தையும் உண்டாக்குபவை பற்கள் அல்லவா? நாம் பேசும் போது வார்த்தைகளை அழகாக உச்சரிக்க நமக்கு உதவுபவை பற்கள் என்பது சிலருக்குத் தெரியாது. கன்னங்கள் குழிவிழாமல் இளமையைக் காப்பாற்றுவது பற்களின் அமைப்பு என்பதை எத்தனை அறிந்திருக்கிறார்கள்? அஸ்திவாரம் போடும் பற்கள் இல்லாவிட்டால் எப்படி இர

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணைக்கப