Skip to main content

Google ads

பற்களை உறுதியாக வைத்திருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

 உடம்பு உறுதியாக இருக்க வேண்டுமானால் பற்கள் உறுதியாக இருக்கவேண்டும் என்று பல்நோய் நிபுணர்கள் கூறுகிறார்கள். பல்லுக்கும் உடம்புக்கும் என்ன சம்பந்தம்? உணவைப் பக்குவப்படுத்துவது வாய். 

பற்கள் கடினமான உணவுகளை உடைத்து எச்சிலோடு கலக்கப்பட்டு இரைப்பைக்குச் செலுத்தப்படுகிறது. உணவு ஜீரணமாவதற்குப் பற்கள் ஆற்றும் பணி மிகமிக முக்கியமானது. 

உணவுப் பொருள்கள் அரைக்கப்படாமல் அப்படியே விழுங்கப்பட்டால் இரைப்பைக்கு வேலை அதிகமாகிறது. இதனால் ஜீரண உறுப்புக்கள் சீர்கேடு அடைவதால் உண்டாவதுதான்.

பற்கள் எப்போது உருவாகின்றன?

 தாயின் வயிற்றில் குழந்தை உருவாகி ஆறு வாரங்களில் பல்லுக்கு அஸ்திவாரம் போடப்படுகிறது. குழந்தை பிறந்த ஆறாவது மாதத்தில் பால் பற்கள் தோன்றுகின்றன. குழந்தையின் வளர்ச்சியில் இரண்டு ஆண்டுகளில் இருபது பற்கள் தோன்றுகின்றன.

 பிறகு பன்னிரெண்டு ஆண்டுகளில் எல்லாப் பற்களும் முளைத்து விழுந்து விடுகின்றன. அதன் பிறகு நிலையான பற்கள் முளைக்க ஆரம்பித்து முழு மனிதன் ஆகும்போது முப்பத்திரண்டு . பற்களும் வளர்ச்சியடைந்து உறுதிபெறுகின்றன.

சிறு வயதில்தான் பல்லுக்குப் பல நோய்கள் உண்டாகின்றன. பல்சொத்தை, பல் ஆட்டம், பல்லரணை பயோரியா இன்னும் பல சிறிய நோய்கள் தோன்றி பற்கள் உறுதியாக வளரமுடியாமல் பலமிழந்து போகின்றன. 

ஊட்டச் சத்துக் குறைவு ஒருபுறம் இருந்தாலும், பற்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பாங்கு இந்தப் பருவத்தில் கவனிக்கப்பட்டாமல் பலவிதப் பல் நோய்களுக்குச் சிறுவர்களும் சிறுமிகளும் ஆளாகிறார்கள். உறுதியான வளர்ச்சிக்கு இடமில்லாமல் வயதிலேயே தவறான பழக்கங்களால் பற்கள் பாதிக்கப்படுகின்றன.

பற்களை உறுதியாக வைத்துக் கொள்வது எப்படி ?


இன்றைய நாகரிக வளர்ச்சியால் சிறுவர்களின் தின்பண்டங்களில் புதுமை பெருகிவருகிறது. இதுவே பற்களுக்குத் தீமையைக் கொடுக்கிறது. மிட்டாய்களில் எத்தனை பெயர்கள், எத்தனை இரகங்கள்! பற்களில் ஒட்டிக்கொள்ளும் சாக்லெட், பல் இடுக்களில் அடைத்துக்கொள்ளும் பிஸ்கெட், கேக் வகைகள். விதவிதமான ஐஸ் புரூட்கள், ஐஸ் க்ரீம்கள் இவை எல்லாம் சிறுவர்களின் பல் வளர்ச்சிக்கு எமன்களாக மாறிக் கொண்டிருக்கின்றன.

இதனால் பயோரியா நோய் உண்டாகிறது. இனிப்புச் சாப்பிட்ட உடனே தண்ணீரில் வாய் கொப்பளித்துப் பற்களைச் சுத்தம் செய்பவர்கள் எத்தனைப் பேர் இருக்கிறார்கள்?

பற்கள் உறுதியாக இருக்க, நாம் சாப்பிடும் உணவில் சுண்ணாம்புச் சத்தும், கந்தகச் சத்தும், வைட்டமின்-D சத்தும் தேவைப்படுகிறது. பற்கள் தேயாதபடி, சொத்தை விழாதபடி ஆட்டம் காணாதபடி பல் சிதைவு ஏற்படாதபடி பற்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால் பல்லும் அதன் உறுப்புக்களும் பலம் பெறவேண்டும். 

இதற்கு உயிர்ச் சத்துக்கள் உணவில் இருந்தே தாடைப் பகுதியும், எகிறு, ஈறு பகுதியும் இழுத்துக்கொண்டு பலம் பெறுகிறது. கால்ஷியம், பாஸ்பரஸ், கந்தகச் சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்தால் பற்கள் உறுதியாக வளர்ந்து நிலைபெற்று நிற்கும். 

இந்தச் சத்துக்கள் குறைந்தால் பலமிழந்து கிருமிகளின் தாக்குதலுக்கு இலக்காகிச் சொத்தைப் பல், பல் அரணை, பயோரியா நோய்களுக்கும், வாய்ப் புற்று நோய்களுக்கும் ஆளாகி விழுந்துவிடுகிறது.

 பற்கள் வலுவடைய முக்கியமான சத்துப் பொருட்கள் பால், முட்டை, மீன் எண்ணெய், கீரைகள், தக்காளி, ஆரஞ்சு, கேரட் ஆகியவற்றில் வைட்டமின் ஏ, பி, சி, டி கால்ஷியம் ஆகிய சத்துக்கள் நிறைய இருக்கின்றன.

வைட்டமின்-டி சத்தைப் பெற வேர்க்கடலை, பட்டாணி, பச்சைப் பட்டாணி, முந்திரிப் பருப்பு, காய்கறிகளில் தக்காளி, பீன்ஸ், பழங்களில் 'திராட்சை, ஆரஞ்சு, மீன் எண்ணெய் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும். இவை பற்களுக்கு உறுதி தருபவை.

பற்கள் உறுதி இழக்க உணவில் சில விஷயங்களை நீக்கவேண்டும். மிளகாய்க் காரம் கூடாது. புளிச் சுவை கூடாது. பல்லுக்கு அதிகச் குளிர்ச்சிதரும் பானங்களையும் அதிகச் சூடு தரும் உணவு வகைகளையும் சாப்பிடக்கூடாது. வாயினால் சுவாசிப்பதும் பல்லுக்குக் கேடு தரும். வெற்றிலை பாக்கு, பான் பீடா போடக் கூடாது. இவை

இரத்தச்சோகை-ஏன்? புற்று நோய்களைக்கூட உண்டாக்கும். ஆகவே பற்கள் உறுதியாக நிலைபெற்று நிற்க வாய்ச் சுத்தம் மிக மிகத் தேவை.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும