Skip to main content

Google ads

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன.

இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன.

ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம்.



ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள்.

முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று.

முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது.

மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது.

சில சமயங்களில் அரிப்பு ஏன் ஏற்படுகிறது என்கிற காரணத்தைக் கண்டுபிடிப்பதே கஷ்டம் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இந்தத் தொல்லைகளால் அதிகமாகப் பாதிக்கப்படுகிறவர்கள் குழந்தைகள். குறிப்பாகப் பெண் குழந்தைகள்.

ஜீரணக் கோளாறுகளால் பாதிக்கப்படும் ஆண்களும், பெண்களும், வயதானவர்களும் இந்த அரிப்புத் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். சிறுவர்கள்-சிறுமிகள் அசுத்தமான பண்டங்களை வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.

இதனால் வயிற்றுப் பூச்சிகள் குடல் வழியாக ஆசன வாய்க்கு வந்து ஒருவிதத் தினவை உண்டாக்குகின்றன. மலத்தோடு சேர்ந்துள்ள கொக்கிப் புழுக்கள் ஆசனத்தில் குடைச்சலை உண்டாக்குகின்றன. 

அவர்களின் விரல்களில் பூச்சிகள் ஒட்டிக் கொண்டுவிடுகின்றன. கைகளைச் சுத்தமாகக் கழுவாமல் சாப்பிடுகிறார்கள். இதனால் பூச்சிகள் வாய் வழியாக வயிற்றுக்குள் சென்று நிரந்தரத் தொல்லையைக் கொடுக்கின்றன.

சொரிந்து பெண் குழந்தைகளுக்கு ஆசன உறுப்பும், பெண் உறுப்பும் அருகில் அமைந்திருப்பதால் அரிப்புத் தொல்லை 

இன்னும் அதிகமாகிறது. வயிற்றுப் பூச்சிகள் சிறுநீர் உறுப்புக்குத் தாவுகின்றன. இதனால் இரட்டைத் தொந்தரவுகளை அனுபவிக்கிறார்கள்.

 குழந்தைகள் செல்லப் பிராணிகளான நாய், பூனை இவற்றோடு கொஞ்சி விளையாடும் போது பிராணிகளிடத்தில் உள்ள குடல் பூச்சிகள் அவர்களுக்கு ஒட்டி அதுவே தொந்தரவைத் தொடர்கதையாக்கி விடுகின்றன. இதனால் குழந்தைகள் அரிப்புத் தொல்லைக்கு நிரந்தரமாக ஆளாகிறார்கள்.

குழந்தைகள் தெருவோரங்களில் புழுதி மேடுகளில் மலம் கழிப்பதால் மண்ணோடு கலந்துள்ள பூச்சிகள் குழந்தைகளை அதிகமாகப் பற்றிக் கொண்டு பல்வேறு நோய்களுக்குப் பலியாகிறார்கள்.

குழந்தைகளின் கைவிரல்களைச் சுத்தமாக வைத்திருக்கவும், விரல் நகங்களை வெட்டிவிட்டு அழுக்கு சேராமலும் பாதுகாப்பது பெற்றோர் கடன்.

பெரியவர்கள் குடல் பூச்சிகளால் பாதிக்கப்படுவதற்குக் காரணம் குடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பதே.

இதனால் மலச்சிக்கல், மூல நோய், பிஸ்டுலா போன்ற தொந்தரவுகள் உண்டாகின்றன.

கிராமப் பகுதிகளில் வாழ்கிறவர்கள்தாம் அரிப்பு நோய்க்கு அதிகமாக உள்ளாகிறார்கள். கழிப்பிடங்கள் சுத்தமாக இருப்பதில்லை.

பலர் மலம் கழித்த இடங்களில் மேலும்மேலும் மலம் கழிப்பதால் கக்கூஸ் பத்து என்ற நோயால் பாதிக்கப்படுகிறார்கள். குளம் குட்டை என்று தேங்கிய தண்ணீர்களில் கைகால் கழுவுகிறார்கள்.

திறந்த சதைப் பகுதி, ஆசனம் ஆதலால் நோய் எளிதில் பற்றிக் கொள்கிறது. அரிப்புத் தொல்லை அதிகமாகிறது. இதற்கு மலப் பரிசோதனை செய்துகொண்டு பூச்சித் தொந்தரவு என்று கண்டால் பூச்சிகளை ஒழிக்கும் மருந்துகளைச் சாப்பிட வேண்டும்.

மலம் கழித்த பிறகு சுத்தமாகக் கழுவி இரண்டு கரண்டி வாசலைன் 50 சொட்டு கார்பாலிக் ஆஸிட் குழைத்து ஆசனப் பகுதியில் தடவிவிட வேண்டும். அரிப்பு அடங்கும். கைகளைச் சுத்தமாகச் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.

இதனால் அரிப்புத் தொந்தரவு உள்ளவர்கள் மலச் சிக்கலை ஒழிக்க லிக்விட் பாரபின் சாப்பிடலாம். இது எல்லா மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

புளிப்பு ஏற்படாமல் இருக்க மில்ச் ஆப் மெக்னீஷியா சாப்பிடலாம்.அதைவிட உணவோடு சுண்டை வற்றல், வேப்பம்பூ துவையல் ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக் கொண்டு வந்தால் பூச்சித் தொல்லையிலிருந்து விடுதலை பெறலாம்.

கசப்புச் சுவையை நாம் ஒதுக்கித் தள்ளுவதால் நமக்கு எத்தனையோ பாதிப்புக்கள் உண்டாகின்றன.

அரிப்பை அடியோடு ஒழிக்க கசப்புச்சுவை நிறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும