Skip to main content

Google ads

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன.

ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை.

இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது.

நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம்.

ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு.



ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணைக்கப்பட்டு நோயாளியின் ஆசனத் துவாரத்தில் செலுத்தப்படுகிறது. பாத்திரத்தில் தண்ணீர் அல்லது வெந்நீர் அல்லது மருந்து கலந்த நீர் ஊற்றப்பட்டு அந்த நீர் மலக் குடலுக்கு வர ஏற்பாடு செய்கிறார்கள்.

இதனால் அடிக் குடலில் தங்கியுள்ள மலம் கரைந்து வெளியேறுகிறது. இதுவே எனிமா சிகிச்சை முறை.இந்தத் தண்ணீர் அடிக் குடலைத் தாண்டிப் பெருங்குடலுக்குப் போவதில்லை.

அப்படியே அதிகமாக நீர் போனாலும் அதனால் பாதிப்பு ஒன்றும் ஏற்படுவதில்லை. எனிமா சிகிச்சை முறை இயற்கையான சிகிச்சை அல்ல.செயற்கை சிகிச்சை.

ஆகவே இதை பழக்கத்திற்குக் கொண்டு வரக்கூடாது அடிக்கடி எனிமா எடுத்துக் கொள்வதும் உடலுக்கு நல்லது அல்ல.

எனிமாக்களில் ஆறு வகை உண்டு.  

சாதாரணமாகத் தண்ணீரை ஊற்றிக் குழாய் மூலம் பீச்சுவது ஒரு வகை.

இரண்டாவது வகை, வெந்நீரை ஊற்றி மலக்குடலைச் சுத்தம் செய்வது. சாதாரணச் சூடு இதற்குப் போதும், காய்ச்சல், வயிற்று வலி, வாயுக் கோளாறு இருந்தால் மிதமான வெந்நீர் எனிமா நல்லது. நீரின் வெப்பத்தால் அணுக்கள் விரிவடைந்து இரத்தம் ஓட்டம் துரிதடைந்து மலத்தை வெளியே கொண்டு வந்துவிடும். 

கடு நீர் எனிமா கொடுக்க நல்ல அனுபவம் பெற்ற வர்கள் மட்டுமே கையாள வேண்டும்.

அதிகச் சூடு இருந்தால் அது இதயத்தைப் பாதிக்கும். கடுமையான வயிற்று வலி, வாயுத் தொல்லை, சிறுநீரகக் கோளாறு, இடுப்புவலி உள்ளவர்களுக்குச் சுடுநீர் எனிமா கொடுக்கப்படுகிறது.

டானிக் எனிமா என்று ஒரு வகை உண்டு. பலவீன மானவர்களுக்கு டானிக் கொடுப்பதுபோல இரண்டு அல்லது மூணு அவுன்ஸ் தண்ணீரை ஓரடி உயரத்தில் வைத்துக் கொண்டு மெல்லமெல்ல இரவு நேரங்களில் கொடுக்கப்படும். இதனால் காலையில் மலம் வெளியேறும். கெட்டினாய மலம் உள்ளவர்களுக்கு இந்த முறை எனிமா நல்லது.

மெடிக்கேட்டட் எனிமா, என்று ஒரு வகை உண்டு.வயிற்றில் பூச்சிப் புழுத் தொல்லை இருந்தால், தோல் சம்பந்தமான நோய் இருந்தால்,டைபாய்டு ஜூரம், சின்னம்மை நோய்கள் இருந்தால் தண்ணீரில் வேப்பிலையைப் போட்டுக் கொதிக்கவைத்து ஆறவைத்துப் பிறகு கொடுக்கிறார்கள். உப்பு அல்லது எலுமிச்சம் பழச் சாறு அல்லது கிளிசரின் ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றைத் தண்ணீருடன் கலந்து எனிமா கொடுப்பார்கள்.

இதனால் பூச்சிப் புழுக்கள் செத்துவிடும். நோய்களும் தணிந்துவிடும்.

ஆசனக் குழாய் சிலருக்கு பலவீனம் அடைந்து விடலாம். இதனால் ஆசனக் குழாய்க்கு வலுவூட்ட ஒரு வகை எனிமா கொடுக்கப்படுகிறது.

குளுகோஸ், பழச்சாறு ஆசனக் குழாய் மூலம் செலுத்தி எனிமா கொடுப்பதால் இதை ரெக்டம் பீஃடிங் எனிமா என்றும் சொல்லுகிறார்கள்.

வாய்மூலம் உணவு செல்லாதவர்களுக்கு முறையைக் கையாளுகிறார்கள்.

இந்த எனிமா யாருக்குக் கொடுக்கக் கூடாது என்று விதி படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாதவர்களுக்கு உள்ளது.

டாக்டர்கள் எனிமா கொடுப்பதில்லை.ஆசன வாயில் புண் இருந்தால் கொடுப்பதில்லை. மன நோயாளிகளுக்குக் கொடுப்பதில்லை.

இவை தவிர, காய்ச்சல் சளித் தொல்லை உள்ள நேரங்களில் தண்ணீர் எனிமா கொடுப்பதில்லை. எனிமா சிகிச்சை மகப்பேறு பெறும் தாய்மார்களுக்கு மட்டுமின்றிப் பல்வேறு பிரிவினருக்கும் அது பயன்படுகிறது.

என்பது பலர் அறியாத உண்மை. நோய்களைக் குணப்படுத்தும் எத்தனையோ சிகிச்சை முறைகளில் எனிமா சிகிச்சையும் ஒன்று,

இதைக் கவனத்தோடு செய்தால் மலச்சிக்கல், வயிற்று வலி, பேதி, அஜீரணக் கோளாறுகளை அடியோடு போக்கிவிடலாம்.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும