Skip to main content

Posts

Showing posts with the label ஆரோக்கிய குறிப்புகள்

Google ads

செவித்துணைக் கருவிகள் என்றால் என்ன ?செவித்துணை கருவிகளின் அவசியம் -Medical Tamizha

செவித்துணைக் கருவிகள்  மனிதர்களுக்கு ஏற்படும் உடல் குறைகளை, உடல் உறுப்புக்களில் உண்டாகும் ஊனங்களைச் சரிசெய்து   மீண்டும் இயங்கவைக்க விஞ்ஞானிகள் புதியபுதிய கருவிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்து வருகிறார்கள். கண்பார்வைக் குறைவானவர்களுக்குக் கண்ணாடியும், வாய்ப் பற்கள் இழந்தவர்களுக்குச் செயற்கைப் பற்களும். கை, கால் இழந்தவர்கள் நட மாட, செயல்பட செயற்கைக் கை, கால் ஊன்றுகோல் போன்ற துணைக் கருவிகளைத் தயாரித்து உடலோடு பொருத்தி ஊனங்களை, குறைகளை ஓரளவு நிவர்த்தி செய்து வருகின்றனர். இதுபோல் காது கேளாதவர்களுக்கும் செவித் துணைக் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுக் காதுகளில் பொருத்தி மற்றவர்களைப் போல் அவர்களும் வாழ வழி செய்து கொடுத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள், மனிதனுக்கு எந்தக் குறை இருந்தாலும் அதைப் போக்க விஞ்ஞானம் அற்புதமான செயற்கை உறுப்புகளை உருவாக்கிச் சாதனைகள் பல செய்து வருகிறது. செவித் துணைக் கருவிகளைப் பொருத்திக் கொள்வதில் செலவு கொஞ்சம் அதிகம் என்பதைத் தவிர மனிதர்களின் மனக் குறைகள் இப்போது குறைந்து கொண்டு வருகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஒலிகளைக் கிரகிக்கும் சக்தியைக் க

மூச்சுத் திணறல் ஏன் ஏற்படுகிறது ? தடுப்பது எப்படி ? Medical Tamizha

 மூச்சு விடுதல் என்பது எந்தவிதச் சிரமும் இல்லாமல் சலனம் இல்லாமல், இன்னும் சொல்லப் போனால் நாம் உணராமல் இந்தநிகழ்ச்சி பிறந்தது முதல் இறக்கும் வரையில் நடந்து கொண்டு வருகிறது. பெருமூச்சு விடும்போது மட்டும் நெஞ்சு விம்முகிறது. அதிக அளவு காற்று உள்ளே இழுக்கப்பட்டு அதிக அளவு காற்று வெளியே தள்ளப்படும் போது ஒருளிதச் சலனம் ஏற்படுவதை உணர்கிறோம். மற்ற நேரங்களில் மூச்சு தன்னிச்சையாகச் செயல் படுகிறது. ஆனால் மூச்சுத் திணறல் என்பது அப்படி அல்ல. சாதாரணசுவாசத்தைவிட வேறு பட்டது வித்தியாசமானது. சற்று சிரமத்தையும் தருவது. மிஞ்சினால் ஆபத்து உண்டு. ஒரு நிமிஷத்திற்கு 16 முதல் 20 தடவை மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுகிறோம் என்று விஞ்ஞானிகள் அளந்து கூறுகிறார்கள். இந்த எண்ணிக் கைக்குமேல் போகும்போது அது திணறல் எனப்படுகிறது. இருதய நோயாளிகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகள், மூச்சுத் திணறலால் அதிகமான சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.  மூச்சுத் திணறல் என்பது நோய் அல்ல. நோயின் அடையாளமே சில நோய்கள் உடலைத் தாக்கும் போது மூச்சுத் திணறல் அதில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. குழந்தைகள், பெண்கள். ஆண்கள், வயதானவர்கள் என்ற

நீரிழிவு நோய் என்றால் என்ன ? அதன் பாதிப்பு மற்றும் தடுக்கும் வழிமுறை - Medical Tamizha

 சில நோய்களுக்கு உலகப் புகழ் உண்டு. நீண்ட சரித்திரமும் உண்டு. அப்படித் தோன்றிய நோய்களுள் ஒன்று நீரிழிவு. கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இந்த நோயைக் கண்டு பிடித்து அதற்குப் பெயரிட்டவர்கள் கிரேக்கர்கள். இதற்கு  (  டயாபெடிஸ் மெலிட்டஸ் ) என்று பெயர் வைத்தவர் அரிடாய்ஸ் என்ற கிரேக்கத் தத்துவஞானி. டயாபெடிஸ் என்பது கிரேக்கப் பெயர். இதிலிருந்து நீரிழிவு நோய் நீண்ட காலப் புகழ்பெற்ற நோய் என்று தெரிகிறது. உலகத்தில் 25 கோடி மக்கள் இந்த நீரிழிவால் தூண்டப்பட்டு இப்போது இன்சுலின் என்ற மருந்தால் ஓரளவு நோயைக் கட்டுப் படுத்திக்கொண்டு வாழ்கிறார்கள். நீரிழிவு என்றால் என்ன என்பதை இப்போது எல்லோரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு வீட்டுக்கு வீடு இந்த நோயாளிகள் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். சர்க்கரை நோயால் பாதிக்கப் படாத குடும்பங்கள் அபூர்வம்.  இரைப்பைக்குப் பின்னால் நாக்கு வடிவத்தில் ஓர் உறுப்பு இருக்கிறது. இந்த உறுப்பு பைக்குக் கனையம் (ஆங்கிலத்தில் பாங்கிரியாஸ் ) என்று அழைக்கிறார்கள். இந்த உறுப்பிலிருந்து இரண்டு வகைத் திரவங்கள் சுரக்கின்றன. ஒன்றிற்குப் பெயர் கணைய நீர். இதைக் கைமோட்ரைப்சின் என்ற

காது மந்தத்திற்கு என்ன காரணம் ? சரி செய்வது எப்படி?

 ஒலிகள் எந்தத் திக்கிலிருந்து வந்தாலும் அதைக் கேட்பதற்கே மனிதனுக்கு இரண்டு காதுகள் படைக்கப் பட்டிருக்கின்றன. இலை அசைவிலிருந்து உண்டாகும் ஒலி முதல், இடி முழக்கத்திலிருந்து உண்டாகும் ஒலிவரை. இந்தக் காதுகள் கேட்கும் திறனைப் பெற்றிருக்கின்றன. ஆனால் உடலுக்கு ஏற்படும் கேடுகளைப் போலக் காதிற்கும் சில காரணங்களால் கேடுவிளைகின்றது. இதனால் ஒலிகள் முழுமையாகக் கேட்கும் திறன் குறைந்து காதுகள் மந்தமாகின்றன. நம் நாட்டில் 100க்கு 35 பேர் காது மந்தம் உள்ளவர்களாகவும் 100க்கு ஐந்து பேர் முழுச் செவிடாகவும் வாழ்கிறார்கள். காதிருந்தும் செவிடர்களாய் வாழும் நிலை பலருக்கு ஏற்பட்டுக் கொண்டு வருகிறது. இதற்கு என்ன காரணம்?  நாகரிகமான வாழ்க்கை பலருக்கு நன்மையைத் தந்திருக்கிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் நாம் பல நன்மைகளைப் பெற்றிருக்கிறோம். ஆனால் அதே விஞ்ஞானத்தின் விளைவால் சில தீமைகளையும் அனுபவித்துக் கொண்டு வருகிறோம் என்று விஞ்ஞானிகளே சொல்லுகிறார்கள். 60 வயதுக்கு மேல் உண்டாகும் காதுக் கோளாறுகள் எல்லாம் இப்போது 20 வயதுக் காரர்களுக்கு உண்டாகிறது. என்கிறார் மேற்குஜெர்மன் மருத்துவ டாக்டர் ப்ளெஸ்டர். ஒலி பெருக்கி, வானொலி

ஹார்மோன் கோளாறு என்றால் என்ன? அதை போக்கும் வழி?

 நாம் வாழ்க்கையில் கொரில்லா போன்ற தோற்ற முடைய சிலரைப் பார்க்கிறோம். கரடி போல் ரோமம் நிறைந்த சில உருவங்கள். பனைமரம் போல் உயரமாக வளர்ந்த மனிதர்கள். வளர்ச்சி இல்லாத உருவங்கள். கரிய நிறம். சிவந்த நிறம் கொண்ட ஆண் பெண் உருவங்கள். ஆணும் இல்லை பெண்ணும் இல்லை என்ற இரண்டுங்கெட்ட மனிதர்கள். மார்பு வளர்ச்சி இல்லாத பெண்கள். பெண் போல் மார்பு வளர்ச்சி பெற்ற ஆண்கள். மீசை உள்ள பெண்கள். முடியில்லாத புருவங்கள். எப்போதும் கை கால்களில் வியர்வை கொட்டும் மனிதர்கள். ஆண்மை இல்லாத ஆண்கள். பெண்மை இல்லாத பெண்கள். விழி பிதுங்கிய ஆந்தை மனிதர்கள். இன்னும் எத்தனை எத்தனையோ வித உடல்நலம், மன நலம் சரியில்லாத ஆண் பெண்களையெல்லாம் வாழ்க்கையில் சந்திக்கிறோம். இவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் கோளாறுகளுக்கு ஒரு பின்னணி இருக்கிறது என்பதை மட்டும் அறிவோம். ஆனால் விரிவாகத் தெரிவதில்லை. இவற்றை ஹார்மோன் கோளாறுகள் என்று டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.  Hormones என்றால் என்ன?  நம் உடலில் சுரக்கும் சில நீர்களில் இரசாயனக் கூட்டுப் பொருள்கள் சேர்ந்திருக்கின்றன. இவை உடலில் பல பாகங்களில் உற்பத்தியாகி இரத்தத்துடன் கலந்து சில உறுப்புக்களில் ஆதிக்கம்

இடுப்பு பிடிப்பு சரியாக என்ன செய்ய வேண்டும்?அறியாத தகவல்கள்- Medical Tamizha

 உடல் பாரத்தைத் தாங்குவது இடுப்பு:  இந்த இடுப்புப் பகுதியில் 33 க்கு மேற்பட்ட எலும்புகளும், தசை நார்களும், இரத்த நாளங்களும், அதன் கிளைகளும் ஏராளமாக இருக்கின்றன. இவற்றுள் ஏதாவது பாதிக்கப்பட்டால் முதுகு வலி மற்றும் இடுப்பு வலிகள் தோன்றுகின்றன. இந்தப் பகுதியில் தோன்றும் வலிகளை உண்டாக்கும். நோய்க்கு லம்பாரேக் என்று பெயர். ஈரத்தில் அதிகமாக நடமாடுவதாலும், கடிஎமாக உழைக்கும்போது உடல் மீது குளிர்ந்த காற்றுப் படும் போதும், இருமல், தும்மில் ஏற்படும் போதும், விபத்தில் சிக்கி இடுப்பில் அடிபடும்போதும், வாயு வேகத்தைக் கிளப்பிவிட்டு விடுகிறது. இதனால் இடுப்பில் பிடிப்பும், வலியும் உண்டகின்றன. கோணல்மாணலாக உட்காருபவர்களுக்கும் தலையை சாய்த்துக் கொண்டு உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கும்.,இரத்தம் உடலெங்கும் சரிவரப் போய்ச் சேராதவர்களுக்கும். இடுப்பு வலிகள் வரலாம்.  இடுப்பு எலும்புகள், நரம்புகள், தசைகள், இரத்த நாளங்கள் உள்ளுறுப்புக்களில் ஏற்படும் கோளாறுகளால் அழுத்தப்படும்போது கழுத்து வலி, முதுகுவலி, இடுப்புவலி ஆகியவை ஒன்றையடுத்து இன்னொன்று வரும். இந்த மூன்றும் சங்கிலித் தொடர்கள் போல நடு முதுகு எலும்புகளையும்,

அடிக்கடி உணர்ச்சிவசப்படுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா ?

 உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும், புல், பூண்டு, செடி, கொடி, மரங்களுக்கும் உணர்வுகள் உண்டு. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துகின்றன. அவை தம் உணர்வுகளை தொட்டால் சிணுங்கி என்ற செடியின் இலைகள் விரிந்து இருக்கும். நாம் தொட்டவுடன் இலைகள் மூடிக் கொள்ளும். இதுபோலக் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை ஏதாவது ஒரு காட்சியைப் பார்க்கும்போதோ, ஏதாவது ஒரு சுவையை அறியும்போதோ, ஏதாவது ஒரு வாடையை நுகரும் போதோ கிளர்ச்சி அடைகிறார்கள். இந்தக் கிளர்ச்சியை உண்டுபண்ணுபவை உணர்வு நரம்புகளே. ஆகவே, ஏதாவது ஓர் உணர்ச்சிக்கு வசப்படாதவர் என்று எவரையும் கூறிவிட முடியாது. மகிழ்ச்சி, கோபம், துக்கம், விருப்பு, வெறுப்பு என்று ஏதாவது ஒருவகையில் மனிதன் வசப்படுகிறான். அப்போது மனிதனுடைய தசைகளில் அசைவுகள் ஏற்படுகின்றன. இதனால் நாடித் துடிப்பு அதிகமாகிறது. இருதயம் படபடக்கிறது. இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன. இரத்த அழுத்தம் அதிகமாகிறது. இரத்தத்திலுள்ள சர்க்கரைப் பொருள்கள் பெருக்கெடுக்கின்றன. சுவாசம் சுறுசுறுப்பாக நடைபெறுகிறது. உடம்பிலுள்ள நரம்புகள், எலும்புகள், தசைகள் எல்லாமே விழிப்படைந்து உடம்பின் இயக்கத்திற்கு உதவுகின்ற

முகத்தில் எண்ணெய் வடிகிறதா ? தடுப்பது எப்படி ? தமிழ் சித்த மருத்துவம்

 பிறவியிலேயே சிலர் அழகிய முகத் தோற்றத்தைப் பெற்றிருக்கிறார்கள். இயற்கை அழகு இல்லாதவர்கள் செயற்கை முறையில் அழகை உருவாக்கிக் கொள்ள இன்று எத்தனையோ அழகுச் சாதனங்கள் கடைகளில் அலங்காரமாக அடுத்தி வைக்கப் பட்டு விற்பனையாகிவருகின்றன. முக அழகிற்கு இடையூறாக இருப்பவை முகப்பரு, மற்றும் தழும்புகள், கருஞ் சினைப்புகள், வெள்ளைப் புள்ளிகள் போன்றவைதாம். முகப்பரு. Black head என்று சொல்லப்படும் கருஞ் சினைப்புகளுக்குக் காரணம் முகத்தில் எண்ணெய்ப் பசையே என்று மருத்துவ விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள்.  எண்ணெய்ப் பசை ஏன் உண்டாகிறது? வியர்வையே இதற்குக் காரணம். முகத்தில் எண்ணெய்ச் சுரப்பிகள் அதிகமாக உள்ளன. முகம் வறண்டு போகாமல் இருக்க எண்ணெய்ப்பசை ஓரளவு தேவைதான். அளவுக்கு மீறி எண்ணெய் முகத்தில் படர்வது நல்ல தல்ல. இதனால் வேறு சில கோளாறுகளும் உண்டாகின்றன.  முகத்தில் வழியும் எண்ணெய்க்குக் காரணம் நாம் உண்ணும் உணவில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதுதான். கொழுப்பிலிருந்து எண்ணெயைப் பிரித்து வெளியே கொண்டுவருபவை வியர்வைச் சுரப்பிகள். வியர்வைத் துவாரங்கள் மூலம் எண்ணெய் வெளியேறப் படுகிறது.  இந்த எண்ணெய் முகத்தில்தான் அதிகமாகப்

எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லதா ? கெட்டதா? -

 தமிழ்நாட்டு வழக்கம், மாதத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ தலைக்கு எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகிக் கொள்வது. தலைமுறை தலைமுறையாக நடந்துவரும் தலைமுழுக்குப் பழக்கம் இப்போது குறைந்து கொண்டு வருகிறது. வாழ்க்கையில் ஒரு விஷயம் தேவை என்று நாம் நினைக்கும்போது அது தேவையான காரியமாகிறது. தேவை இல்லை என்று நினைக்கும்போது அது தேவையற்றதாகிறது! ஆனால் உடல் நலத்திற்குத் தேவையாகும் போது ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே! எண்ணெய்த் தலைமுழுக்குத் தேவைதானா? என்ற கேள்வி, படித்தவர்கள் மத்தியில் ஒரு பெரும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. ஆங்கில வைத்தியர்கள் பலர் எண்ணெய்த் தலைமுழுக்கால் பயன் இல்லை என்கிறார்கள்.  ஆனால் அதற்கு மாறாகச் சித்த வைத்தியர்களும், ஆயுர்வேத வைத்தியர்களும், எண்ணெய் முழுக்கு அவசியம்தான். இதனால் ஏராளமான நன்மைகளும் உண்டு என்று வாதித்துக்கொண்டு வருகிறார்கள். குளிர்ச்சி மிகுந்தது மேல்நாடு. வெப்பம் நிறைந்தது இந்திய நாடு. மேலைநாட்டார் குளிப்பதில்லை. இந்தியர்கள் குளிக்காமல் இருப்பதில்லை.  வெம்மையின் கொடுமையைத் தணிக்க உச்சி குளிர நல்லெண்ணெயையோ அல்லது தேங்காய் எண்ணெயையோ தலைக்குத் தடவிக் கொண்டும். உடல் மு

உடலுக்கு சத்தான உணவு எது ? தேர்ந்தெடுத்து சாப்பிடுவது எப்படி?

சரிவிகித உணவு  அர்த்தம் :  ✷ நம் உணவை ஆறு பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள். சக்தி கொடுக்கும் மாவுப் பொருள்கள், வளர்ச்சியைத் தரும் புரதம், கொழுப்புப் பொருள்கள், வெப்பமும் சக்தியும் தரும் உணவுப் பொருள்கள்.  ✷ ஜீவ சத்துக்கள் உலோக உப்புக்கள், மற்றும் குடிநீர் ஆகியவை நம் உணவில் தகுந்த அளவில் கலந்தும்,சரியான விகிதத்திலும் இருக்கவேண்டும். இதுவே சரிவிகித உணவு என்று உணவு விஞ்ஞானம் கூறுகிறது. ஆறு சுவைகளும் அவற்றின் நன்மைகளும்: ✷  உணவில் இன்னொரு விஷயமும் கவனிக்கப்பட வேண்டும். ஆறு சுவைகளும் அளவோடு கலந்திருக்க வேண்டும். ✷ காரச்சுவை உடலுக்கு உஷ்ணத்தை அளிப்பது. உணர்வுகளைக் கூட்டவும் குறைக்கவும் செய்வது.  ✷ கசப்புச் சுவை உடலுக்குத் தேவையில்லாத கிருமிகளை அழிக்கவும், சக்தியை உண்டாக்கவும் உதவுகிறது.  ✷ இனிப்புச் சுவை தசைகளை வளர்க்க உதவுகிறது.  ✷ புளிப்புச் சுவை இரத்தக் குழாயில் உள்ள சுசடுகளை நீக்க உதவுகிறது. ✷ துவர்ப்புச் சுவை இரத்தத்தை வீணாக வெளியேறாமல் உறையச் செய்வது.  ✷ உப்புச் சுவை அளவோடு சேர்த்துக் கொண்டால் நினைவாற்றலை அளிக்க உதவுகிறது. ஆக, இந்த ஆறு சுவைகளில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் உடலுக்குக் க

வீட்டுப் பிராணிகளால் இவ்வளவு நோய்கள் உருவாகுமா ? ஐயோ !

 ✷மனிதன் தன் சுயநலத்திற்காக மிருகங்களையும் பிராணிகளையும் பயன்படுத்திக்கொண்டு அவற்றைத் தன் வீட்டிலேயே வளர்க்க ஆரம்பித்தான்.   ✷சவாரி செய்யக் குதிரையையும், பாலுக்காகப் பசுவையும், ஆட்டையும், உழவுக்காக மாட்டையும், காவலுக்காக நாயையும், எலிகளை ஒழிக்கப் பூனையையும் வளர்க்க ஆரம்பித்தான். அவற்றின் மீது பரிவுகாட்டி நாய் பூனைகளை மடிமீது வைத்துக் கொஞ்சவும் ஆரம்பித்தான்.  ✷இதனால் பிராணிகளைத் தாக்கும் நோய்கள் மனிதனுக்கும் தொற்றிக்கொண்டு மனிதனை ஆட்டிப் படைத்தன.  ✷நாம் விரும்பாமலே நம் வீட்டுக்குள் புகுந்து தொல்லை கொடுக்கும் பிராணி எலி. எப்படியோ அடுக்களையில் புகுந்துகொண்டு சமையலுக்காக வைத்திருக்கும் அரிசி, பருப்பு, காய்கறி பொருட்களைத் தின்று நமக்குத் தொல்லை கொடுப்பதிலிருந்து பிளேக் நோயைப் பரப்புவது வரை எலிகள்-பெருச்சாளிகள் பல கெடுதல்களைச் செய்கின்றன.   ✷எலிகளின் இரத்தத்தை உறிஞ்சி வாழும் ஒருவகை ஈக்கள் மனிதனைக் கடிக்கின்றன. எலியிடம் பெற்ற நோய் மனிதனுக்குப் பரவுகிறது. பிளேக் நோய் உண்டாகிறது. இப்போது இந்த நோயின் அட்ட காசங்கள் குறைந்துவிட்டன என்றாலும் முற்றிலும் ஒழியவில்லை. வீட்டுப் பிராணிகளால் உருவாகும் நோய

உயரமாக வளர என்ன செய்ய வேண்டும்?அறியாத தகவல்கள்- Medical Tamizha

 ✷உயரமாகவோ, அல்லது குள்ளமாகவோ இருக்க யார் காரணம் என்று ஆராய்ந்ததில் பெற்றோர் காரணம், நம் முன்னோரே காரணம், என்று ஆராய்ச்சிகளின் முடிவு தெரிவித்தது. ✷பெற்றோர்களும், முன்னோர்களும், உயரமாக இருந்தால் அந்தப் பாரம்பரியத்தில் வந்தவர்கள் உயரமானவர்களாக வளர முடியும் என்று விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்தனர். ✷இந்தக் கருத்தில் ஓரளவு தான் உண்மை இருக்கிறது என்று பிறகு வந்த விஞ்ஞானி ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துச் சொன்னார்கள். ✷ஒரே குடும்பத்தில் ஒருவர் குள்ளமாகவும், மற்றவர் நெட்டையாக உயர்ந்தும் இருக்கும் போது இதற்கும் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகள் காரணமாக இருக்க முடியாது.வேறு ஏதாவது காரணம் இருக்கவேண்டும் என்று முடிவுக்கு வந்தார்கள். ✷அவர்களின் ஆராய்ச்சிப்படி மனித மூளையில் பிட்டியூட்டரி கிளாண்ட் என்ற ஒரு சுரப்பியிலிருந்து உற்பத்தியாகும் ஹார்மோன் என்ற ஒருவித இரசாயனப் பொருளே ஒருவர் உயரமாகவும் குள்ளமாகவும் வளரக் காரணம் என்று கண்டு பிடித்துச் சொன்னார்கள். ✷ 1920 ல் கலிபோர்னியா பல்கலைக் கழக டாக்டர் ஹெர்பர்ட் எம் எவன்ஸ் என்பவர் மாடு ஒன்றின் ஹார் மோனை எடுத்து, எலிகளின் உடலில் செலுத்தினார். எலிகள் அசுர

பாலியல் நோய்கள் என்றால் என்ன? பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன?

 ஆபத்தான நோய்கள் என்று சொல்லப்படும் சிபிலிஸ், கொனேரியா நோய்கள் உலக நாடுகள் முழுவதும் பரவி மனித சமுகத்திற்கு பெரும் சாபக் கேடுகளாக தலைவிரித்து ஆடுகின்றன. இந்தியாவில் 20 இலட்சம் பேர்கள் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள். இது ஒழுக்கக் கேட்டின் மூலமாகவே தோன்றியது என்றாலும் ஒழுக்க சீலர்களையும் தொற்றிக்கொண்டு வெளியே தலைகாட்ட முடியாமல் அணுவணுவாகக் கொல்லுகிறது. சிபிலிஸ் என்றும், கிரந்தி நோய் என்றும், மேக நோய் என்றும் அழைக்கப்படும் இந்நோய் டிரிபோனீமா பாலிடம் என்ற கிருமிகளால் உண்டாகிறது. கொனோரியா கானோகாக்கல் என்ற கிருமிகளால் தோன்றுகிறது. இந்த நோய்க் கிருமிகளால் வெளிச்சம் பட்டால், வெளி உஷ்ணத்தில் செத்துவிடும். இதனால் மறைவாக இருந்தே மனித குலத்திற்கு தீமை செய்கின்றன. இக்கிருமிகள் தவறான, நெறிகெட்ட ஆண்களிடம் பெண்களிடம் பிறப்பு உறுப்புக்களில் தங்கிக்கொண்டு உடலெங்கும் பரவி விடுகின்றன. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. இன்பம் என்ற போர்வையில் இன்னலை மட்டுமல்ல, இறுதிச் சடங்கையும் நடத்தி விட்டுச் சிரஞ்சீவியாக வாழ்கிறது. ஆணிடமிருந்து பெண்ணுக்கோ, பெண்ணிடமிருந்து ஆணுக்கோ தொற்றிக்கொண்டு அவர்களுக்கு

வியர்வை நாற்றம் போக என்னென்ன செய்ய வேண்டும்?

 நம்மைச் சுற்றியுள்ள இடமும் சரி, சுற்றியுள்ள மனிதர்களும் சரி, தூய்மையாக இருந்தால் அந்த இடத்தையும், மனிதர்களையும் விட்டு நாம் விலகிப் போக விரும்பமாட்டோம். என்னதான் அறிவாளியாக இருந்தாலும், நல்லவனாக இருந்தாலும் மிக வேண்டியவனாக இருந்தாலும் அவனிடம் கெட்ட வாடை வீசினால் நெருங்கிப் பழக நம் மனம் இடம் தருவதில்லை. ஆகவே மக்களைக் கவர்ந்து இழுக்க நல்ல குணம் இருந்துவிட்டால் மட்டும் போதாது. நல்ல வாடையும் நம்மைச் சுற்றி வீசவேண்டும். மனிதன் நெருங்கிப் பழகத் தடையாக இருப்பது வாய் நாற்றமும், வியர்வை நாற்றமும் என்பதை எவரும் ஒப்புப் கொள்வர். கெட்ட வாடை காரணமாக, கணவன் மனைவி நல்லுறவுகள் பாதிக்கப்படுகின்றன. ஆகவே மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களில் உடல் தூய்மையும் ஒன்று. உடல் நாற்றத்திற்குக் காரணம் குடல் நாற்றம், குடல் சுத்தமாக இருந்தால் உடல் சுத்தமாக இருக்கும்.  ஆகவே இதற்கு மலச்சிக்கல் ஒரு காரணம், மலச்சிக்கல் உள்ளவர்களின் உடம்பிலிருந்து வரும் வியர்வை நாற்ற மடிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். வியர்வை நம் உடலுக்கு நன்மை செய்வதற்காகவே அமைந்த ஒரு நல்ல திரவம். தினசரி 24 மணி நேரத்தில் சுமார் 75 அவு

உடல் எடையை குறைக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

 பூமிக்குப் பாரமாகவும், சோற்றிற்குக் கேடாகவும் இருக்கிறார்கள் என்று ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் வேலை இல்லாத வாலிபர்களைப் பற்றிக் கூறுவார்கள் பெரியவர்கள். ஆனால் இப்போது பூமிக்கு மட்டும் பாரமாக இல்லை. சுமந்துகொண்டு தங்களுக்கே பாரமான உடலை வைத்துக் கொண்டு பலர் வாழ்கிறார்கள். இதற்குக் காரணம் உடல் எடையை வயதிற்கும், உயரத்திற்கும் தகுந்தபடி வளர்த்துக் கொள்ளாமல் அளவுக்குமீறிப் பெருக்கிக் கொண்டதுதான். சாதாரணமாக, வளரும் காலத்தில் ஆண்களும் பெண்களும் நன்றாகச் சாப்பிட்டு, ஓடி விளையாடி உடல் எடையைப் பெருக்கிக்கொள்கிறார்கள். இந்த வளர்ச்சி 16 வயதிலிருந்து 30, 40 வயது வரை நீடிக்கிறது. இவர்கள் தங்களையும் அறியாமல் உடல் எடையைப் பெருக்க வைத்துக் கொள்கிறார்கள். உடல் எடை பெருக்கத்தால் நடு வயதில்தான் பிரச்னையே எழுகிறது. வயதுக்கு வந்த பெண்களும், மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களும் சில சமயம் உடல் எடை கூடுவதால் சிரமப்படுகிறார்கள். உடல் எடை கூடுவரற்குக் குடும்பப் பாரம்பரியம் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதுவும் ஓரளவு உண்மை என்றாலும் உணவைக் குறைத்து உழைப்பைப் பெருக்கி உடல் எடையைக் கட்டுப்படுத்தலாம். உடல் எடைக் கூடு

நடப்பதால் கிடைக்கும் நன்மைகள்/அறியாத தகவல்கள்- Medical Tamizha

 குளத்து நீரில் அசுத்தங்கள் தேங்கி நிற்கின்றன. ஆனால் ஆற்று நீரில் அசுத்தங்கள் தேங்குவதில்லை, எப்போதும் ஓடிக் கொண்டிருப்பதால் அசுத்தங்கள் நிற்பதில்லை. மேலும் ஓடும் நீரில் பிராண வாயு கலந்திருக்கும். அசுத்த நீரில் கரியமில வாயு கலந்திருக்கும். இதுபோலவே இரத்தம் ஓடிக் கொண்டிருந்தால் அதில் அழுக்குச் சேர்வதில்லை. ஒதுங்கிவிடுகிறது. இரத்தம் ஓடிக் கொண்டிருப்பதால் அதில் பிராண வாயும் கலந்து ஓடுகிறது. கரியமில வாயு ஒதுக்கப் படுகிறது. இரத்தத்தை ஓட வைப்பது நம்முடைய உழைப்பு. குறிப்பாகச் சொன்னால் கைகளை வீசி நடக்கும் நடையே நம் இரத்தத்தை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நன்கு ஓடச் செய்கிறது. உடல் உறுப்புக்களில், இரத்த நாளங்களில் இரத்தம் தங்கு தடையில்லாமல் ஓடுவதற்கு நடை மிகமிக அவசியமாகத் தேவைப் படுகிறது. தத்தித்தத்திச் செல்லும் சிறு குழந்தைக்கு மூன்று சக்கரத் தள்ளு வண்டியைக் கொடுத்து நடைபயில விடுகிறார்கள். இல்லா விட்டால் குழந்தை சப்பாணியாகி விடும்.  இடுப்புக்குக் கீழே உள்ள தசைகளை, நரம்புகளை இயக்கி விட வேண்டும். அப்போது தான் கீழ்ப் பகுதிக்கு வந்த அசுத்த இரத்தம் நடக்கும்போது மேல் நோக்கித் தள்ளி விடப்படும். அ

நோய் குணமாக நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

 நோய் உடலைத் தாக்கும் போது நோயாளி பலவீன மடைகிறான். உடலின் இயக்கம் தளர்ந்து போகிறது. பசி இல்லை. நல்ல தூக்கம் இல்லை. இதனால் உடல் சோர்ந்து போகிறது. மனமும் பாதிக்கப்படுகிறது. ஆகவே நோயாளியை நல்ல காற்றோட்டமுள்ள அறையில், வெளிச்சம் உள்ள அறையில் ஓய்வாக இருக்கும் படி வைக்க வேண்டும். வெப்பமோ, குளிரோ தாக்காமல் நோயாளியைப் பாதுகாக்கவேண்டும். ஒருவருக்கு ஜூரம் வரும்போது மூளையும் நரம்புகளும் தங்களுக்கு வேண்டிய போஷிப்பை பெற்றுக் கொள்வதில்லை. இதனால் தளர்ச்சியும் வலிப்பும்கூட உண்டாகும். இழுப்பும் தோன்றும். இருதயம் அளவுக்கு அதிகமாகத் துடிப்பதால் அதன் முறையான வேலைகளும் பாதிக்கப் படுகின்றன.  இது தவிரச் சிறுநீரகங்கள் கழிவுப் பொருளை வெளியே தள்ள முடியாமல் தளர்ச்சியடைந்து போகிறது. இதனால் சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. உடல் தளர்ந்த நிலையில் வேறு சில தொற்று நோய்களும் இந்தக் கட்டத்தில் தாக்கலாம்.  பெரியம்மை, தட்டமை தொற்றலாம். ஆகவே நோயாளி வெகு சுவனமாக இருக்க வேண்டும். ஜூரத்தை முற்றவிடாமல் மருந்துகளாலோ அல்லது உணவுகளாலோ அதிகமாகாமல் டாக்டருடன் சிகிச்சை முறையில் ஒத்துழைக்க வேண்டும். ஒரு டாக்டரிடம் மருந்து சாப்பிடுவது;

குழந்தைகளின் மந்த புத்திக்குக் காரணம்?அறியாத தகவல்கள்- Medical Tamizha

 சில பெற்றோர், தங்களின் குழந்தையைப் பற்றிச் சொல்லும் போது, எல்லாக் குழந்தைகளும் ஓடியாடி விளையாடுகிறார்கள் என் குழந்தை மட்டும் எப்போதும் டல்லாக இருக்கிறான் என்பார்கள். இன்னும் சில தாய்மார்கள் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுத்தாலும் மண்டையில் ஏறுவதில்லை. மந்தமாக இருக்கிறான். இதற்கு என்ன காரணம்? என்று கேட்பதுண்டு. பிறக்கும்போதே ஏற்படும் சில கோளாறுகளே மந்த புத்திக்குக் காரணங்களாகச் சொல்லலாம். கர்ப்பமாக இருக்கும் சில தாய்மார்கள் ஊட்டச் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடாமல் இருப்பதால் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தை மந்த புத்தியுள்ளவர்களாகப் பிறவியிலேயே உருவாகிறார்கள். கர்ப்பிணிகளின் உணவில் அயோடின் சத்தக் குறைவதால் மந்த நிலை ஏற்படலாம். ஆகவே கர்ப்பமான பெண்கள் அயோடின் உப்புச் சேர்ந்திருக்கும் உணவுகளை நன்கு சாப்பிடவேண்டும். கர்ப்பமான காலத்தில் அதிகமாக மருந்துகளைச் சாப்பிட்டாலும் குழந்தை மந்தமாகப் பிறக்கிறது என்று மகப்பேறு மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். குழந்தைகளை படிப்பில் ஆர்வமாக இருப்பதற்கு வழிமுறைகள் குழந்தை பிறக்கும்போது ஏற்படும் சிக்கல் காரணமாகச் சில சமயங்களில் மூளை பாதிக்கப்படலாம். குழந்தைக்க

பற்களை உறுதியாக வைத்திருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

 உடம்பு உறுதியாக இருக்க வேண்டுமானால் பற்கள் உறுதியாக இருக்கவேண்டும் என்று பல்நோய் நிபுணர்கள் கூறுகிறார்கள். பல்லுக்கும் உடம்புக்கும் என்ன சம்பந்தம்? உணவைப் பக்குவப்படுத்துவது வாய்.  பற்கள் கடினமான உணவுகளை உடைத்து எச்சிலோடு கலக்கப்பட்டு இரைப்பைக்குச் செலுத்தப்படுகிறது. உணவு ஜீரணமாவதற்குப் பற்கள் ஆற்றும் பணி மிகமிக முக்கியமானது.  உணவுப் பொருள்கள் அரைக்கப்படாமல் அப்படியே விழுங்கப்பட்டால் இரைப்பைக்கு வேலை அதிகமாகிறது. இதனால் ஜீரண உறுப்புக்கள் சீர்கேடு அடைவதால் உண்டாவதுதான். பற்கள் எப்போது உருவாகின்றன?  தாயின் வயிற்றில் குழந்தை உருவாகி ஆறு வாரங்களில் பல்லுக்கு அஸ்திவாரம் போடப்படுகிறது. குழந்தை பிறந்த ஆறாவது மாதத்தில் பால் பற்கள் தோன்றுகின்றன. குழந்தையின் வளர்ச்சியில் இரண்டு ஆண்டுகளில் இருபது பற்கள் தோன்றுகின்றன.  பிறகு பன்னிரெண்டு ஆண்டுகளில் எல்லாப் பற்களும் முளைத்து விழுந்து விடுகின்றன. அதன் பிறகு நிலையான பற்கள் முளைக்க ஆரம்பித்து முழு மனிதன் ஆகும்போது முப்பத்திரண்டு . பற்களும் வளர்ச்சியடைந்து உறுதிபெறுகின்றன. சிறு வயதில்தான் பல்லுக்குப் பல நோய்கள் உண்டாகின்றன. பல்சொத்தை, பல் ஆட்டம், பல்லர