Skip to main content

Google ads

நீரிழிவு நோய் என்றால் என்ன ? அதன் பாதிப்பு மற்றும் தடுக்கும் வழிமுறை - Medical Tamizha

 சில நோய்களுக்கு உலகப் புகழ் உண்டு. நீண்ட சரித்திரமும் உண்டு. அப்படித் தோன்றிய நோய்களுள் ஒன்று நீரிழிவு.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இந்த நோயைக் கண்டு பிடித்து அதற்குப் பெயரிட்டவர்கள் கிரேக்கர்கள். இதற்கு  ( டயாபெடிஸ் மெலிட்டஸ்) என்று பெயர் வைத்தவர் அரிடாய்ஸ் என்ற கிரேக்கத் தத்துவஞானி.

டயாபெடிஸ் என்பது கிரேக்கப் பெயர். இதிலிருந்து நீரிழிவு நோய் நீண்ட காலப் புகழ்பெற்ற நோய் என்று தெரிகிறது.

உலகத்தில் 25 கோடி மக்கள் இந்த நீரிழிவால் தூண்டப்பட்டு இப்போது இன்சுலின் என்ற மருந்தால் ஓரளவு நோயைக் கட்டுப் படுத்திக்கொண்டு வாழ்கிறார்கள்.

நீரிழிவு என்றால் என்ன என்பதை இப்போது எல்லோரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு வீட்டுக்கு வீடு இந்த நோயாளிகள் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். சர்க்கரை நோயால் பாதிக்கப் படாத குடும்பங்கள் அபூர்வம். 

இரைப்பைக்குப் பின்னால் நாக்கு வடிவத்தில் ஓர் உறுப்பு இருக்கிறது. இந்த உறுப்பு பைக்குக் கனையம் (ஆங்கிலத்தில் பாங்கிரியாஸ்) என்று அழைக்கிறார்கள்.

இந்த உறுப்பிலிருந்து இரண்டு வகைத் திரவங்கள் சுரக்கின்றன. ஒன்றிற்குப் பெயர் கணைய நீர். இதைக் கைமோட்ரைப்சின் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இன்னொன்றை இன்சுலின் என்று அழைக்கிறார்கள்.

ஜீரண வேலை நடக்கும்போது மாவுச் சத்து, சர்க்கரை, கொழுப்புச் சத்து ஆகியவற்றைப் பிராண வாயுச் சக்தியால் எரிப்பதும், எரிக்க முடியாதவற்றைச் சேமித்து வைப்பதும் இன்சுலின் என்ற திரவத்தின் முக்கிய வேலை.


இந்த உடலாகிய அடுப்பில் சூடு இருக்கவேண்டும் என்றால் அதற்கு இன்சுலின் என்ற நெருப்புத் தேவை. ஆகவே இன்சுலின் ஓர் இன்றியமையாத சுரப்பு நீர்.

கணையத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான உயிரணுக்களின் தொகுதிகள் இருக்கின்றன. இந்த உயிரணுக்களுக்கு ஊட்டம் தருவது இன்சுலின். கணையத்தில் இன்சுலின் உற்பத்தி ஆவது குறைந்தால் அல்லது உற்பத்தி ஆவது தடைப்பட்டால் பல்வேறு கோளாறுகள் உண்டாகின்றன.


அவற்றுள் மிகமிக முக்கியமான தொல்லை நீரிழிவுத் தொல்லை, அதாவது, சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிகமாக சேர்ந்து சிக்கரை உண்டாக்கிவிடுகிறது. உடல் இயக்கத்திற்குத் தேவையான சக்தியைப் பறித்துவிடுகிறது.

நீரிழிவு நோயின் கை ஓங்கி விட்டால் நீரிழிவு நோயாளியைக் கோமாவில் தள்ளிவிடுகிறது. 

இதற்கு முடிவுகட்ட ஆராய்ச்சிகள் நடந்தன. அதன் பயனாய். இந்தக் கொடுமையிலிருந்து மனிதனைக் காப்பாற்றக் கண்டுபிடிக்கப்பட்ட அற்புத மருந்துதான் இன்சுலின்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைத்து நீரிழிவைக் கட்டுப்படுத்த செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மருந்து இது.

இயற்கையாகச் சுரக்கவேண்டிய இன்சுலின் குறைந்தால், அல்லது சுரக்காமல் போனால் செயற்கை முறையில் அதைத் தயாரித்து ஊசிமூலம் உடம்பில் செலுத்தி உடம்புக்கு இயக்கத்தையும் சக்தியையும் அளித்து மனிதனை நடமாடவைக்கிறது.

1921 இல் பிரடிரிக் கிராண்ட் பாண்டிங் என்ற மருத்துவ ஆராய்ச்சியாளரும், சார்லஸ் எச்பெஸ்ட் என்ற மருத்துவ நிபுணரும் இணைந்து இன்சுலின் மருந்தைக் கண்டு பிடித்து 1923 இல் மக்களின் நீரிழிவைக் கட்டுப் படுத்த உபயோகித்தனர்.

இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, நீரிழிவு நோயாளிகள் ஓரளவு சுகம் கண்டார்கள், சாதாரணமாக இரத்தத்தில் 100 மில்லி கிராம் முதல் 120 மில்லி கிராம் வரை சர்க்கரையின் அளவு இருக்கலாம். அதற்கு மேல் போனால் நீரிழிவு நோய் பாதிப்பை ஏற்படுத்தும்.


இன்சுலினை ஆடு, மாடு பன்றி ஆகியவற்றின் கணையத்திலிருந்து எடுத்து அதைத் திரவமாகவும். ஸ்படிகமாகவும் செய்து தயாரித்திருக்கிறார்கள். 

ஐந்து வகை இன்சுலின்கள் இப்போது கிடைக்கின்றன. ஊசி மருந்தாகவும், வாய்மூலம் சாப்பிடும் பில்ஸ் களாகவும் இரண்டு முறைகளிலும் நீரிழிவைக் கட்டுப்படுத்த உதவுகின்றது.

இன்சுலின் மருந்துகள் ஊசி மூலம் செலுத்தப்படுவது தன் சிறந்த பயனைத் தருகிறது. வாய் மருந்துகள் அவ்வளவு சிறப்பாகச் செயல்பட வில்லை என்கிறார்கள். நீரிழிவால் உண்டாகும் மயக்கத்தை இன்சுலின் கட்டுப்படுத்துகிறது.

ஆனால் இன்சுலின் அதிர்ச்சி என்று சொல்லப்படும் ஹைப்போகிளிசீமியா என்ற ஆபத்தும் சிலருக்கு உண்டாகிறது. மருந்து அளவுக் அதிகமானால், நோயாளி தாங்கும் சக்தியை இழந்தால் இன்சுலின் அதிர்ச்சி ஏற்பட்டு ஆபத்தான கட்டத்தை அடைய நேரிடுகிறது.

ஆகவே நீரிழிவு நிபுணர்களின் ஆலோசனைப்படி நடந்துகொண்டால் இன்சுலின் மருந்துகளின் ஆபத்தைத் தடுக்கலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு இப்போது இன்சுலினைத் தவிர வேறு சிறப்பான மருந்துகள் ஆங்கில வைத்தியத்தில் இல்லை.

 சித்த, ஆயுர்வேத வைத்தியத்தில் நீரிழிவைக் கட்டுப் படுத்த நிறைய மருந்துகள் உண்டு என்று சொல்லப்படுகிறது.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும