Skip to main content

Google ads

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம்.

பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள்.

குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம்.

உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம்.

அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான அளவு உயிர்க் காற்று மூளைக்கு எட்டாததால் மூளை சேதமடைவதாலும் மூளை பாதிக்கப்படலாம்.

ஆரம்பத்திலேயே இந்தச் சிக்கலைக் கண்டுபிடித்துச் சிகிச்சை அளித்தால் ஓரளவு குணப்படுத்தலாம். இதற்கென்று உள்ள டாக்டர்களை அணுகிச் சிகிச்சை செய்து கொள்வது நல்லது.

நான்கு வயதான ஒரு குழந்தைக்கு மூன்று வயதுக் குழந்தையின் அறிவும், ஆற்றலும் இருந்தால் இதன் வளர்ச்சிக் காலத்தில் 16 வயதில் 12 வயது குழந்தையின் புத்திக்கூர்மை இருக்கும். இதை அறியாத பொற்றோர், மற்றும் ஆசிரியர்கள் தடுமையாக நடந்துகொள்ளும்போது குழந்தை பயத்தாலும் அச்சத்தாலும் மன நோயாளியாக ஆகிவிடுகிறது.

புத்தி மந்தம், உடல் விகாரம், கொழுத்த சதை உருவம் பெற்ற குழந்தைகள் ஏளனத்திற்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் பலியாகி மன நோயாளிகளாக மாறுவதும் உண்டு.

குழந்தைகளுக்குக் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டாலும் மனநோய் உண்டாகும் என்று மனநோய் நிபுணர்கள் அபூர்வமான ஒரு கருத்தைச் சொல்லுகிறார்கள்.

மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் மனச் சோர்வோடும், அச்சத்தோடும். பயத்தோடும் வாழ்கிறார்கள் பெற்றோருக்கு இந்தக் குழந்தைகளால் பெரும் மனக் கவலைதான். பெற்றோரின் அன்பைப் பெறாத குழந்தைகள் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு அன்பு ஒன்றே மருந்து. அன்பு காட்டினால் போதும், மனநலம் பெறுகிறார்கள்.

டிரான்ஸ் ஆர்மிடல் லபோடமி என்று மூளையில் அறுவை சிகிச்சை செய்து ஓரளவு மனவளர்ச்சி பெற உதவுகிறார்கள் டாக்டர்கள். இதன் மூலம் முற்றிலும் சீராக்க முடியாது என்றாலும் ஓரளவு நன்கு வாழவைக்க உதவுகிறார்கள்.

 பெற்றோர் மனவளர்ச்சி பெறாத குழந்தைகளை ஒரு சாபக்கேடு என்று கருதாமல் அன்போடும் அரவணைப் போடும் இவர்களுக்கு என்று நடைபெறும் பள்ளிக் கூடங்களில் சேர்த்துப் போதனைகள் மூலமாகவும், பயிற்சிகள் மூலமாகவும், அவர்களுக்குத் தொழிற் பயிற்சி அளித்துத் தங்கள் கால்களில் தாங்களே நிற்கும்படி வழி செய்ய வேண்டும்.

முளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளைக் கண்காணிக்க வெளிநாடுகளில் சில அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. நொப்ரோசிஸ் சங்கம், செரிப்ரல் பால்சி சங்கம், சிஸ்டிக்ஃபைரோசிஸ் சங்கம் போன்ற அமைப்புக்கள் இங்கும் பெரிய நகரங்களில் இருக்கின்றன. இவர்களை இங்கு சேர்த்துப் பயிற்சிக்கொடுத்தால் அவர்கள் பெற்றோருக்குச் சுமையாக இருக்கமாட்டார்கள்.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும