Skip to main content

Google ads

பாலியல் நோய்கள் என்றால் என்ன? பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன?

 ஆபத்தான நோய்கள் என்று சொல்லப்படும் சிபிலிஸ், கொனேரியா நோய்கள் உலக நாடுகள் முழுவதும் பரவி மனித சமுகத்திற்கு பெரும் சாபக் கேடுகளாக தலைவிரித்து ஆடுகின்றன.

இந்தியாவில் 20 இலட்சம் பேர்கள் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள். இது ஒழுக்கக் கேட்டின் மூலமாகவே தோன்றியது என்றாலும் ஒழுக்க சீலர்களையும் தொற்றிக்கொண்டு வெளியே தலைகாட்ட முடியாமல் அணுவணுவாகக் கொல்லுகிறது.

சிபிலிஸ் என்றும், கிரந்தி நோய் என்றும், மேக நோய் என்றும் அழைக்கப்படும் இந்நோய் டிரிபோனீமா பாலிடம் என்ற கிருமிகளால் உண்டாகிறது. கொனோரியா கானோகாக்கல் என்ற கிருமிகளால் தோன்றுகிறது. இந்த நோய்க் கிருமிகளால் வெளிச்சம் பட்டால், வெளி உஷ்ணத்தில் செத்துவிடும். இதனால் மறைவாக இருந்தே மனித குலத்திற்கு தீமை செய்கின்றன.

இக்கிருமிகள் தவறான, நெறிகெட்ட ஆண்களிடம் பெண்களிடம் பிறப்பு உறுப்புக்களில் தங்கிக்கொண்டு உடலெங்கும் பரவி விடுகின்றன. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. இன்பம் என்ற போர்வையில் இன்னலை மட்டுமல்ல, இறுதிச் சடங்கையும் நடத்தி விட்டுச் சிரஞ்சீவியாக வாழ்கிறது.

ஆணிடமிருந்து பெண்ணுக்கோ, பெண்ணிடமிருந்து ஆணுக்கோ தொற்றிக்கொண்டு அவர்களுக்கு மட்டும் தொல்லை கொடுப்பதில்லை. கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கும் இந்த நோயைப் பரிமாறுகிறது. இதனால் தலைமுறை தலைமுறையாக ஒரு தொடர்கதை நீண்டு கொண்டே போகிறது. 

இந்த நோய்களைப் பொதுவாக வெனீரியல் டிசீஸ் என்றும் சுருக்கமாக V.D. என்றும் அழைத்தார்கள், உலக சுகாதார நிலையம் இந்த நோய்களுக்குச் சுருக்கமாக S.T.D. என்றும், விரிவாக Sexually Transmitted Diseases என்றும் புதிய பெயரைச் சூட்டி அழைக்கிறது.


வெளியே தெரிவதில்லை. தவறு செய்யும் ஓர் ஆணுக்கு அவன் உடலில் தொண்ணூறு நாட்களுக்குப் பிறகு புண் உண்டாகிறது. இந்த புண்ணுக்கு ஷாங்கர் புண் என்று பெயர். மருந்து போட்டால் ஆறிவிடும். ஆனால் பெண்களுக்கு இந்த ஆரம்பம் தெரிவதில்லை. நோய் கிருமிகள் கர்ப்பப்பையில் தங்கிக் கொண்டு கோடிக் கணக்கில் பெருகி பிறகு உபத்திரவம் கொடுக்க ஆரம்பிக்கின்றன.

இந்த நோய்கள் ஆரம்பத்தில் ஆண்களுக்கு இது தோலில் படிப்படியாகப் பரவும். பிறகு அசதி, கை கால் உளைச்சல் பிறகு மூட்டு வலி, எலும்பு வலி வேறு சில அறிகுறிகளைக் காட்டும். இதற்கு நோய் பரவி மூன்று மாதங்கள் ஆகியிருக்கும். 


அதன் பிறகு ஒரு வருஷம், இரண்டு வருஷங்களில் பாரிச வாயு, மூளைப் பாதிப்பு,இருதய நோய், இரத்தக் குழல் வெடிப்பு என்று படிப்படியாக நோயின் வேகம் முன்னேறிக் கடைசியில் ஹார்ட் அட்டாக் உண்டாகி இந்த உலகத்திலிருந்தே இந்த நோயாளியைப் பறித்துக் கொண்டு போய் விடுகிறது. இந்நோய் மூலையைத் தாக்கும். கை கால் குத்தல், குடைசல், குமட்டல், பசியின்மை என்று வேறு பல அறிகுறிகளைக் தோற்றுவிக்கும் குருடு, செவிடு, ஊமை, பைத்தியம் என்று வேறு பல கோளாறுகளை உண்டாக்கும். மலட்டுத் தன்மையும் முற்றினால் புற்று நோயும் உருவாகும்.

கொனேரியா நோய் உடலில் தொற்றிக் கொண்டால் ஆறு மணி நேரத்தில் தொல்லை கொடுக்கும். சிலருக்கு ஒரு நாள், இரண்டு நாளில் அறிகுறி தென்படும். நீர்க் கடுப்பு, உறுப்பில் எரிச்சல், அரிப்பு, வீக்கம் உண்டாகி நேயானியை டாக்டரிடம் விரட்டும். கொனேரியா முற்றினால் பிராஸ்டேட் கோளம் வீக்கம் அடையும். வலி எடுக்கும். ஜன்னிகூட உண்டாகும்.

சிபிலிஸ் அமைதியாகப் பரவுவதால் நோயாளிக்கு டாக்டரிடம் போகும் நெருக்கடி உடனே ஏற்படுவதில்லை. நோய் முற்றிய பிறகே டாக்டரிடம் ஓடுகிறான். இந்த நோயாளி தவறு செய்ததை வெளியே காட்டிக்கொள்ள மாட்டான். மிகவும் அவமானம் என்று அச்சப்பட்டு நோயை முற்றவிட்டு, பிறகு ஆபத்தான நிலைக்கு வந்த பிறகு டாக்டரிடம் செல்கிறான். இன்னும் சிலர் டாக்டரிடம் போகாமல் போலி வைத்தியர்களிடம் காட்டி மிக இரகசியமாக வைத்தியம் செய்து கொண்டு நோயைச் சிக்கலாக்கிக் கொண்டு அவதிப்படுகிறார்கள்.

குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி பெறுவதேதென்பத ஏது? என்று பாடிக்கொண்டிராமல் உடனே பால் இயல் டாக்டர்களை அணுகிச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். தொடர்ந்து 18 மாதங்கள் ஊசியும் மருந்தும் சாப்பிட்டால் குணமாகிவிடும்.

தவறு செய்த பிறகு மறைத்து வாழ்வதால் நோய் தீராது. வெட்கப்பட்டால் இரகசிய நோய்கள் குணமாகா.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...