Skip to main content

Google ads

பாலியல் நோய்கள் என்றால் என்ன? பரவாமல் தடுக்கும் வழிமுறைகள் என்னென்ன?

 ஆபத்தான நோய்கள் என்று சொல்லப்படும் சிபிலிஸ், கொனேரியா நோய்கள் உலக நாடுகள் முழுவதும் பரவி மனித சமுகத்திற்கு பெரும் சாபக் கேடுகளாக தலைவிரித்து ஆடுகின்றன.

இந்தியாவில் 20 இலட்சம் பேர்கள் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள். இது ஒழுக்கக் கேட்டின் மூலமாகவே தோன்றியது என்றாலும் ஒழுக்க சீலர்களையும் தொற்றிக்கொண்டு வெளியே தலைகாட்ட முடியாமல் அணுவணுவாகக் கொல்லுகிறது.

சிபிலிஸ் என்றும், கிரந்தி நோய் என்றும், மேக நோய் என்றும் அழைக்கப்படும் இந்நோய் டிரிபோனீமா பாலிடம் என்ற கிருமிகளால் உண்டாகிறது. கொனோரியா கானோகாக்கல் என்ற கிருமிகளால் தோன்றுகிறது. இந்த நோய்க் கிருமிகளால் வெளிச்சம் பட்டால், வெளி உஷ்ணத்தில் செத்துவிடும். இதனால் மறைவாக இருந்தே மனித குலத்திற்கு தீமை செய்கின்றன.

இக்கிருமிகள் தவறான, நெறிகெட்ட ஆண்களிடம் பெண்களிடம் பிறப்பு உறுப்புக்களில் தங்கிக்கொண்டு உடலெங்கும் பரவி விடுகின்றன. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. இன்பம் என்ற போர்வையில் இன்னலை மட்டுமல்ல, இறுதிச் சடங்கையும் நடத்தி விட்டுச் சிரஞ்சீவியாக வாழ்கிறது.

ஆணிடமிருந்து பெண்ணுக்கோ, பெண்ணிடமிருந்து ஆணுக்கோ தொற்றிக்கொண்டு அவர்களுக்கு மட்டும் தொல்லை கொடுப்பதில்லை. கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கும் இந்த நோயைப் பரிமாறுகிறது. இதனால் தலைமுறை தலைமுறையாக ஒரு தொடர்கதை நீண்டு கொண்டே போகிறது. 

இந்த நோய்களைப் பொதுவாக வெனீரியல் டிசீஸ் என்றும் சுருக்கமாக V.D. என்றும் அழைத்தார்கள், உலக சுகாதார நிலையம் இந்த நோய்களுக்குச் சுருக்கமாக S.T.D. என்றும், விரிவாக Sexually Transmitted Diseases என்றும் புதிய பெயரைச் சூட்டி அழைக்கிறது.


வெளியே தெரிவதில்லை. தவறு செய்யும் ஓர் ஆணுக்கு அவன் உடலில் தொண்ணூறு நாட்களுக்குப் பிறகு புண் உண்டாகிறது. இந்த புண்ணுக்கு ஷாங்கர் புண் என்று பெயர். மருந்து போட்டால் ஆறிவிடும். ஆனால் பெண்களுக்கு இந்த ஆரம்பம் தெரிவதில்லை. நோய் கிருமிகள் கர்ப்பப்பையில் தங்கிக் கொண்டு கோடிக் கணக்கில் பெருகி பிறகு உபத்திரவம் கொடுக்க ஆரம்பிக்கின்றன.

இந்த நோய்கள் ஆரம்பத்தில் ஆண்களுக்கு இது தோலில் படிப்படியாகப் பரவும். பிறகு அசதி, கை கால் உளைச்சல் பிறகு மூட்டு வலி, எலும்பு வலி வேறு சில அறிகுறிகளைக் காட்டும். இதற்கு நோய் பரவி மூன்று மாதங்கள் ஆகியிருக்கும். 


அதன் பிறகு ஒரு வருஷம், இரண்டு வருஷங்களில் பாரிச வாயு, மூளைப் பாதிப்பு,இருதய நோய், இரத்தக் குழல் வெடிப்பு என்று படிப்படியாக நோயின் வேகம் முன்னேறிக் கடைசியில் ஹார்ட் அட்டாக் உண்டாகி இந்த உலகத்திலிருந்தே இந்த நோயாளியைப் பறித்துக் கொண்டு போய் விடுகிறது. இந்நோய் மூலையைத் தாக்கும். கை கால் குத்தல், குடைசல், குமட்டல், பசியின்மை என்று வேறு பல அறிகுறிகளைக் தோற்றுவிக்கும் குருடு, செவிடு, ஊமை, பைத்தியம் என்று வேறு பல கோளாறுகளை உண்டாக்கும். மலட்டுத் தன்மையும் முற்றினால் புற்று நோயும் உருவாகும்.

கொனேரியா நோய் உடலில் தொற்றிக் கொண்டால் ஆறு மணி நேரத்தில் தொல்லை கொடுக்கும். சிலருக்கு ஒரு நாள், இரண்டு நாளில் அறிகுறி தென்படும். நீர்க் கடுப்பு, உறுப்பில் எரிச்சல், அரிப்பு, வீக்கம் உண்டாகி நேயானியை டாக்டரிடம் விரட்டும். கொனேரியா முற்றினால் பிராஸ்டேட் கோளம் வீக்கம் அடையும். வலி எடுக்கும். ஜன்னிகூட உண்டாகும்.

சிபிலிஸ் அமைதியாகப் பரவுவதால் நோயாளிக்கு டாக்டரிடம் போகும் நெருக்கடி உடனே ஏற்படுவதில்லை. நோய் முற்றிய பிறகே டாக்டரிடம் ஓடுகிறான். இந்த நோயாளி தவறு செய்ததை வெளியே காட்டிக்கொள்ள மாட்டான். மிகவும் அவமானம் என்று அச்சப்பட்டு நோயை முற்றவிட்டு, பிறகு ஆபத்தான நிலைக்கு வந்த பிறகு டாக்டரிடம் செல்கிறான். இன்னும் சிலர் டாக்டரிடம் போகாமல் போலி வைத்தியர்களிடம் காட்டி மிக இரகசியமாக வைத்தியம் செய்து கொண்டு நோயைச் சிக்கலாக்கிக் கொண்டு அவதிப்படுகிறார்கள்.

குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி பெறுவதேதென்பத ஏது? என்று பாடிக்கொண்டிராமல் உடனே பால் இயல் டாக்டர்களை அணுகிச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். தொடர்ந்து 18 மாதங்கள் ஊசியும் மருந்தும் சாப்பிட்டால் குணமாகிவிடும்.

தவறு செய்த பிறகு மறைத்து வாழ்வதால் நோய் தீராது. வெட்கப்பட்டால் இரகசிய நோய்கள் குணமாகா.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும