Skip to main content

Google ads

அடிக்கடி உணர்ச்சிவசப்படுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா ?

 உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும், புல், பூண்டு, செடி, கொடி, மரங்களுக்கும் உணர்வுகள் உண்டு. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துகின்றன.

அவை தம் உணர்வுகளை தொட்டால் சிணுங்கி என்ற செடியின் இலைகள் விரிந்து இருக்கும். நாம் தொட்டவுடன் இலைகள் மூடிக் கொள்ளும்.

இதுபோலக் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை ஏதாவது ஒரு காட்சியைப் பார்க்கும்போதோ, ஏதாவது ஒரு சுவையை அறியும்போதோ, ஏதாவது ஒரு வாடையை நுகரும் போதோ கிளர்ச்சி அடைகிறார்கள்.



இந்தக் கிளர்ச்சியை உண்டுபண்ணுபவை உணர்வு நரம்புகளே.

ஆகவே, ஏதாவது ஓர் உணர்ச்சிக்கு வசப்படாதவர் என்று எவரையும் கூறிவிட முடியாது.

மகிழ்ச்சி, கோபம், துக்கம், விருப்பு, வெறுப்பு என்று ஏதாவது ஒருவகையில் மனிதன் வசப்படுகிறான். அப்போது மனிதனுடைய தசைகளில் அசைவுகள் ஏற்படுகின்றன.

இதனால் நாடித் துடிப்பு அதிகமாகிறது. இருதயம் படபடக்கிறது. இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன. இரத்த அழுத்தம் அதிகமாகிறது. இரத்தத்திலுள்ள சர்க்கரைப் பொருள்கள் பெருக்கெடுக்கின்றன. சுவாசம் சுறுசுறுப்பாக நடைபெறுகிறது.

உடம்பிலுள்ள நரம்புகள், எலும்புகள், தசைகள் எல்லாமே விழிப்படைந்து உடம்பின் இயக்கத்திற்கு உதவுகின்றன.

உணர்ச்சி கொந்தளிப்பால், உடலுக்கு நன்மையே தவிர, தீமை அல்ல. உணர்ச்சிவசப்படுவதால் மனிதனுக்கு ஆபத்து ஏற்படுவதில்லை. உடலுக்கு ஓரளவு நன்மையே ஏற்படுகிறது.

இன்னும் சொல்லப்போனால் மனித உடம்பு பக்குவப் படுகிறது.

மகிழ்ச்சியோ அல்லது துன்பமோ நம்மை அலைக் பெறுகிறோம். நம்மைத் தாக்கும் எந்த உணர்ச்சிக்கும் உள்ளம் சோர்ந்து போகாமல் ஒருவிதக் கட்டுப்பாட்டை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம்.

பெரிய காற்றும் வெள்ளமும் வந்து தாக்கும்போது நாணல் முறிந்து விடுவதில்லை. வளைந்துகொடுக்கிறது. பிறகு காற்று ஓய்ந்ததும், வெள்ளம் வடிந்ததும் நாணல் நிமிர்ந்துகொள்கிறது. இத்தகைய ஒரு திடமான உணர்வை மனமும் பெறுகிறது.

அதிகமான மகிழ்ச்சியும் அதிகமான துக்கமும் ஒரு மனிதனைக் கொல்லும் சக்தி படைத்தவை.

தேசபக்கதர் சின்ன அண்ணாமலை தம் 60 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மக்கள் கூட்டத்தைக் கண்டார். அந்த மகிழ்ச்சியில் திளைத்தார். அவர் அடைந்த பெருமகிழ்ச்சியில் பிறந்த நாள் அன்றே இறந்தார்.

மகிழ்ச்சியும் அளவுக்கு மீறும்போது துன்பத்தின் எல்லையைத் தொடுகிறது. 

உணர்ச்சி வசப்படுவது எப்போது நோயாகிறது?

சாதாரணமாக ஆரோக்கியமான உடலமைப்புக் கொண்டவர்கள் உணர்ச்சி அழுத்தம் முடிந்தவுடன் இரத்த அழுத்தம் முன்னே இருந்த நிலைமைக்குப் படிப்படியாகக் குறைந்து சகஜ நிலைமை அடைகிறார்கள்.

உணர்ச்சி அழுத்தம் அடிக்கடி ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதிக நேரம் இந்த நிலை நீடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

அப்போதுதான் அது நோயாகிறது. இரத்த அழுத்த நோயாக உருவெடுக்கிறது. நீண்ட நேர இரத்த அழுத்தம் குடற்புண்ணாக மாறுகிறது.

பீதியால் ஏற்படுகின்ற அச்சம், நெஞ்சை உருக்கும் கவலை, எதிர்பாராத இழப்புக்கள், முயற்சிகளில் தோல்விகள் ஆகியவை மூளையில் அழுத்தத்தை உண்டு பண்ணி நோயாக வடிவெடுக்கின்றன.

நாளமில்லாச் சுரப்பிகள் இரசாயனப் பொருள்களை, ஹார்மோன்களை நேரடியாக இரத்தத்தில் சேர்ப்பதால் அச்சம், ஆவசம், கடுமையான கோபம் ஆகியவை ஏற்பட்டு உடல் சோர்வடைகிறது.அட்ரினல் சுரப்பிகள் தீவிரமாவதால் இந்தச் சோர்வு ஏற்படுகிறது.

இவை தவிர தைராய்டு சுரப்பிகளின் வேலையும் தீவிரமாகிறது.

அதிக அளவு தைராக்ஸின் இரத்தத்தில் சுரந்து தைராய்டிசம் என்ற கடுமையான நரம்பு மண்டலம் பாதிப்பு ஏற்படுகிறது.

உணர்ச்சிவசப்படுவது அதிகமாகும் போது பித்தநீர் அதிகமாகச் சுரக்கிறது. ஈரல் சம்பந்தமான நோய்கள் உண்டாகின்றன.

டாக்டர்கள், கலைஞர்கள். வழக்கறிஞர்கள், அரசியல் வாதிகள் எல்லோருக்கும் எப்போதும் வேலை இருந்து கொண்டிருப்பதால் இவர்கள் அடிக்கடி உணர்ச்சிவசப்படு கிறார்கள். இதனால் வயிற்று வலி, அல்சர் போன்ற நோய்களுக்கு ஆளாகிறார்கள்.

மனிதனுக்கு ஏற்படும் அச்சம், பயம் இந்த உணர்வுகள் தாம் மனிதனைக் கோழையாக்கி அவனை நிரந்தர நோயாளியாக்குகின்றன.

மகிழ்ச்சி கரமான உணர்வுகள் தோன்றும்போது உள்ளத்தில் கிளுகிளுப்பு ஏற்படுகிறது. கலகலப்பாகப் பேசிச் சிரித்து மகிழ்ந்து போகிறான். இதனால் இளமை அடைகிறான்.

உணர்ச்சிவசப்படுவதால் ஏற்படும் நன்மை இது.கவலை, வருத்தம் மனிதனை மந்தமாக்குகின்றது. இளமைக் காலத்திலேயே அவனைக் கிழவனாக்கிவிடு கின்றன. 

ஆகவே எப்போதும் மகிழ்ச்சிகரமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொண்டு மனத்தைப் பக்குவப்படுத்திக் கொண்டால் சோக உணர்ச்சிகள் நம்மை ஆட்டிப் படைக்கா.

நரம்புக் கோளாறுகளுக்கு வைட்டமின்B, வைட்டமின் E குறைவே காரணம் என்று கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

இதனால் இந்தக் குறைகளைப் போக்கும் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டுவந்தால் நரம்புகள் வலுப்படும்.

முருங்கைக் கீரை, முருங்கைக்காய், முருங்கைப்பூ இவை நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

இதுபோல மாம்பழச் சாறும் தேனும் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத் தளர்ச்சி வராது, கேரட்டும்

நரம்புகளுக்கு வலுவூட்டவல்லது. வாழ்க்கையில் உணர்ச்சிவசப் படாத மனிதனே இல்லை.

ஆகவே உணர்வுகள் தோன்றும் போது மனத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ளும் மனப் பண்புகளை வளர்த்துக் கொண்டு வாழ்ந்தால் உணர்ச்சிகள் நம்மை உலுக்கா.

இன்ப உணர்வோ, அல்லது துன்ப உணர்வோ தோன்றும்போது அதன் எல்லைகளுக்கே போய்விடாமல் கட்டுப் படுத்திக் கொண்டால் உணர்ச்சி அழுத்த நோய்களால் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...