Skip to main content

Google ads

முகத்தில் எண்ணெய் வடிகிறதா ? தடுப்பது எப்படி ? தமிழ் சித்த மருத்துவம்

 பிறவியிலேயே சிலர் அழகிய முகத் தோற்றத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

இயற்கை அழகு இல்லாதவர்கள் செயற்கை முறையில் அழகை உருவாக்கிக் கொள்ள இன்று எத்தனையோ அழகுச் சாதனங்கள் கடைகளில் அலங்காரமாக அடுத்தி வைக்கப் பட்டு விற்பனையாகிவருகின்றன.

முக அழகிற்கு இடையூறாக இருப்பவை முகப்பரு, மற்றும் தழும்புகள், கருஞ் சினைப்புகள், வெள்ளைப் புள்ளிகள் போன்றவைதாம்.


முகப்பரு. Black head என்று சொல்லப்படும் கருஞ் சினைப்புகளுக்குக் காரணம் முகத்தில் எண்ணெய்ப் பசையே என்று மருத்துவ விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். 

எண்ணெய்ப் பசை ஏன் உண்டாகிறது?

வியர்வையே இதற்குக் காரணம். முகத்தில் எண்ணெய்ச் சுரப்பிகள் அதிகமாக உள்ளன. முகம் வறண்டு போகாமல் இருக்க எண்ணெய்ப்பசை ஓரளவு தேவைதான்.

அளவுக்கு மீறி எண்ணெய் முகத்தில் படர்வது நல்ல தல்ல. இதனால் வேறு சில கோளாறுகளும் உண்டாகின்றன. 

முகத்தில் வழியும் எண்ணெய்க்குக் காரணம் நாம் உண்ணும் உணவில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதுதான்.

கொழுப்பிலிருந்து எண்ணெயைப் பிரித்து வெளியே கொண்டுவருபவை வியர்வைச் சுரப்பிகள். வியர்வைத் துவாரங்கள் மூலம் எண்ணெய் வெளியேறப் படுகிறது. 

இந்த எண்ணெய் முகத்தில்தான் அதிகமாகப் படிகிறது. உடம்பின் எல்லாப் பகுதிகளிலும் வியர்வை வெளியே வந்தாலும் முகத்தின் மூலம்தான் அதிகமாக வெளியேறுகிறது. 

குறிப்பாகச் சொன்னால் பருவ வயது இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் முகத்தில் எண்ணெய் அதிகமாக வழிகிறது. இந்தப் பருவத்தில் உள்ளவர்களுக்கு வியர்வைச் சுரப்பிகள் மிகச் சுறுசுறுப்பாக இயங்குவதுதான் இதற்குக் காரணம்.

இந்தப் பருவத்தில்தான் முகப்பருக்கள் அதிகமாக உண்டாகின்றன.இதற்குக் காரணம் எண்ணெய்ப் பசை, Acne Pacillus என்ற கிருமி இந்தப் பசையைப் பயன் படுத்திக் கொண்டு பருக்களை உண்டாக்குகிறது.

முகத்தில் வெயில் படும்போது அதை ஈடு செய்ய முகம் குப்பென்று வியர்க்கிறது.

இதுதவிர கடுமையான உழைப்பு, கவலை, அச்சம், அதிர்ச்சி தோன்றும்போதும் முகத்தில் வியர்வைத் துளிகளுடன் எண்ணெயும் வெளிவருகிறது.

எண்ணெய் வழியும் முகம் இயற்கை அழகைப் பாதிக்கிறது, முகத்திற்கு மினு மினுப்பைக் கொடுத்தாலும் அழகிய தோற்றத்தைச் சற்றுக் குறைத்துக் காட்டி விடுகிறது. 

எண்ணெய் முகத்தில் படர்வதை நீக்க என்ன செய்யலாம்?

கொழுப்புப் பதார்த்தங்களையும், நெய், எண்ணெய்ப் பண்டங்களையும் குறைவாகச் சாப்பிடலாம், இனிப்புப் பண்டங்களை விலக்கலாம். மாவுப் பண்டங்களை ஒதுக்கலாம்.

இதற்குப் பதிலாகப் பப்பாளி, கேரட், கோஸ், கீரை வகைளைச் சாப்பிடலாம். மாதுளை மற்றும் அத்திப் பழங்களைச் சாப்பிடலாம். இவை எல்லாம் முகத்தில் எண்ணெய் படிவதைத் தடுக்கும்.

எல்லோருக்குமே முகத்தில் எண்ணைய் படிகிறதா என்றால் இல்லை. சிலருக்கு மட்டுமே இந்தத தொந்தரவு தொடர்கிறது. இதனால் எண்ணெய் வழியும் முகம் படைத்தவர்கள் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும்.

உணவில் கட்டுப்பாடு என்பது இளம் பருவத்தினருக்கு முடியாத நிலை, இதனால் இவர்களுக்கு வேறு சில வழிகள் உண்டு.

தினசரி பத்து நிமிடம் காலையிலும் மாலையிலும் முகத்தை வெந்நீர் விட்டுக் காரமில்லாத மிதமான சோப்பைப் போட்டு முகத்தைக் கழுவிப் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி துணியால் ஈரம் போக துடைக்க வேண்டும். பவுடரைப் பரவலாகத் தடவிக் கொள்ள வேண்டும்.

முகத்தைக் கழுவிய பிறகு எலுமிச்சம் பழத்தை இரண்டாக அறுத்து ஒரு பாதியைப் பிழிந்து சாறு எடுத்து முகத்தில் தடவலாம். பிறகு முகத்தைக் கழுவலாம். 

இதுதவிர ஆல்கஹால் கலந்த Witch hazel க்ரீம் தடவலாம். இதிலுள்ள ஆல்கஹால் எண்ணெய்ப் பசையை நீக்குகிறது.

எலுமிச்சம் பழச் சாறு அரை மூடி பிழிந்து அதில் கிளிசரைன் மூன்று துளி, பன்னீர் மூன்று துளி விட்டுக் கலக்கி முகத்தில் தடவலாம்.

இது தவிர அழகுச் சாதனக் கடைகளில் ஆஸ்டிரின் ஜென்ட்ஸ் என்ற லோஷன் விற்கிறது. அதையும் தட வலாம். எண்ணெய்ப் பிசுபிசுப்பு நீங்கும்.

பாதாம் பருப்பு எண்ணெயுடன் தேன் சில சொட்டுக்கள் கலந்து முகத்தில் தடவலாம். முகம் பளபளப்பாக மாறும். எண்ணைப் படியாது. முகத்தைச் சோப்பு போட்டுக் கழுவி துடைத்துவிட்டு

லாக்டோ காலமைன் பூசலாம். நீராவியில் முகத்தைக் காட்டினால் வியர்வை சொட்டும். அதைத் துடைத்துவிட்டு ஏதாவது லோஷன் தடவலாம்.

கரும்புள்ளிகள் இருந்தால் சல்பர் சோப்புப் போட்டு முகம் கழுவலாம். முகத்தில் எண்ணெய் வழிந்தால் அழகு கெடும்.

முகத்தில் எண்ணெய்யும் வழியக் கூடாது; அசடும் வழியக்கூடாது.

Comments

Popular posts from this blog

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும் 1. முதல் சில மாதங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி & வயிற்றுப்போக்கு (Vomiting & Diarrhoea): Vomiting & Diarrhoea குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானவை. முதல் Step குழந்தைக்கு கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரைச் சிறிது கொடுக்கலாம். (or) feed of பால் கொடுப்பதை நிறுத்தலாம். பால் கொடுப்பதற்கு பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை செய்து கொடுக்கலாம். பாலைக் கொதிக்க வைத்து அதில் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை விடவும். பாலிலிருந்து தண்ணீர் தனியாகவும் Paneer தனியாகவும் பிரிந்து விடும். இதை வடிகட்டி அந்த நீரை மட்டும் இடைவெளி விட்டு கொடுத்து வரலாம். (or)  (i) 200ml தண்ணீர் (ii) 2 tsp சர்க்கரை  (iii) 1 tsp உப்பு  (iv) அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு (v) ½ tsp Soad bicarb (cooking soda) இவற்றைக் கலந்து அடிக்கடி கொடுத்து வரலாம். குழந்தை dehydration ஆகாமல் தடுப்பதற்கு இது மிகவும் உதவும். குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் பாத்திரங்களை மிகவும் சுத்தமாக உபயோகப்படுத்தல் அவசியம். (2)...

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந...