Skip to main content

Google ads

வியர்வை நாற்றம் போக என்னென்ன செய்ய வேண்டும்?

 நம்மைச் சுற்றியுள்ள இடமும் சரி, சுற்றியுள்ள மனிதர்களும் சரி, தூய்மையாக இருந்தால் அந்த இடத்தையும், மனிதர்களையும் விட்டு நாம் விலகிப் போக விரும்பமாட்டோம்.

என்னதான் அறிவாளியாக இருந்தாலும், நல்லவனாக இருந்தாலும் மிக வேண்டியவனாக இருந்தாலும் அவனிடம் கெட்ட வாடை வீசினால் நெருங்கிப் பழக நம் மனம் இடம் தருவதில்லை.

ஆகவே மக்களைக் கவர்ந்து இழுக்க நல்ல குணம் இருந்துவிட்டால் மட்டும் போதாது. நல்ல வாடையும் நம்மைச் சுற்றி வீசவேண்டும்.

மனிதன் நெருங்கிப் பழகத் தடையாக இருப்பது வாய் நாற்றமும், வியர்வை நாற்றமும் என்பதை எவரும் ஒப்புப் கொள்வர்.

கெட்ட வாடை காரணமாக, கணவன் மனைவி நல்லுறவுகள் பாதிக்கப்படுகின்றன.

ஆகவே மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களில் உடல் தூய்மையும் ஒன்று.

உடல் நாற்றத்திற்குக் காரணம் குடல் நாற்றம், குடல் சுத்தமாக இருந்தால் உடல் சுத்தமாக இருக்கும். 

ஆகவே இதற்கு மலச்சிக்கல் ஒரு காரணம், மலச்சிக்கல் உள்ளவர்களின் உடம்பிலிருந்து வரும் வியர்வை நாற்ற மடிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

வியர்வை நம் உடலுக்கு நன்மை செய்வதற்காகவே அமைந்த ஒரு நல்ல திரவம். தினசரி 24 மணி நேரத்தில் சுமார் 75 அவுன்ஸ் தண்ணீர் நம் உடலை விட்டு வியர்வையாக வெளியேறுகிறது. உடல் உஷ்ணத்தைச் சமப்படுத்த இன்றியமையாதது.

வியர்வைச் சுரப்பிகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் நம் உடலில் இரண்டு வகையான சுரப்பிகள் இருப்பதாகச் சொல்லுகிறார்கள்.

ஒன்று எக்கிரைன்.

மற்றொன்று அப்போகிரனை.

உள்ளங்கை உள்ளங்கால் முதல் உடல் முழுவதும் எக்கிரைன் சுரப்பிகள் வியர்வையை உற்பத்தி செய்கின்றன.

இதில் சோடியம் குளோரைடு, யூரியா உப்புகள் உள்ளன. இரண்டாவது வகையான அப்போகிரைனுக்குத் தனி மணம் உண்டு.

மார்பு, அக்குள், தொடை இடுப்புகள் ஆகிய இடங்களில் இந்த அப்போ கிரைன் அதிகமாகச் சுரந்து ஒருவித வாடையை வீசச் செய்கிறது.



இது பாலுணர்வைத் தூண்டக்கூடியது என்ற இரகசியத்தையும் சொல்லுகிறார்கள் விஞ்ஞானிகள்.

நம் உடம்பில் சிம்பதெடிக் நெர்வஸ் சிஸ்டம் என்ற அமைப்பு உள்ளது. இவை வியர்வைச் சுரப்பிகளைத் தூண்டிவிட்டு வியர்வையை அதிகமாக வெளியேற்றுகிறது. 

பயம், கவலை கடுமையான உழைப்பு இந்த நேரங்களி உள்ளங்கை, உள்ளங்கால் பகுதியில் வியர்வை சிலருக்கு அதிகமாகச் சுரக்கிறது. இந்தப் பிரிவு நரம்புகள் பலகீனமாகிற தளர்ச்சி அடைவதால் சிலருக்கு அதிகமாக வியர்வை கொட்டுகிறது.

நிமோனியா, மூட்டு வாத நோய் மற்றும் ஸ்கர்வி நோயாளிகளுக்கு வியர்வை நாற்றம் பெரும்பாலும் இருக்கும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் அதிகமாக வியர்க்கும்.

நரம்புத்தளர்ச்சி அதிகம் உள்ளவர்களுக்கு மிகுதியாக வியர்வை சுரக்கும்.

டி.பி. நோயாளிகளுக்கு இரவில் அதிகமாக வியர்த்துக் கொட்டும். ஹார்ட் அட்டாக் வரும் நேரத்தில் அதிக வியர்வை உண்டாகும்.

வைட்டமின் குறைவு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வியர்வை அதிகமாக வெளியேறும்.

அடிக்கடி வியர்த்து; தோல் ஈரம் கண்டுவிட்டால் அது தொற்று நோய்களுக்கு இடமாகிவிடும் இது நல்லது அல்ல,வியர்வைத் திரவத்தில் நாற்றம் வீச என்ன காரணம்? இதற்குப் பல்காரணங்கள் சொல்லப்படுகின்றன. வியர்வை புளித்துப் போவதால் நாற்றம் அடிக்கிறது. கிருமித் தொற்று ஏற்பட்டால் வியர்வை நாறுகிறது.

வியர்வையில் இரசாயன மாறுதல் ஏற்பட்டால் நாற்றம் உண்டாகிறது. 

சிலவகை உணவுகளும், நோயாளிகளுக்குக் கொடுக்கப் படும் சில மருந்துகளும் வியர்வையை நாற்றமடையச் செய்கின்றன.

குளிக்காத காரணத்தால் வியர்வை அழுக்குகள் உடம்பில் படிந்து நாற்றத்தை உண்டாக்குகிறது.

வியர்வை நாற்றத்தைப் போக்க என்ன வழி? முதலில் மலச்சிக்கலைப் போக்க வேண்டும். இதற்கு மருந்துகள் நிறைய உண்டு. இரண்டாவது வியர்வையைப் போக்க வெயில் நாட்களில் தினசரி இரண்டு வேளை குளிக்கவேண்டும்.

உடுத்தும் ஆடைகளைத் திரும்பத் திரும்ப உடுத்தக் கூடாது. துவைத்துப் பயன்படுத்த வேண்டும்.

காரமான சோப்புகளை அடிக்கடி அதிசுமாக உபயோகிக்கக் கூடாது. இது உடலின் தோலில் உள்ள செல்களை அழித்துவிடுகின்றன.

ஆகவே சோப்பு உடம்புக்கு கெடுதல் செய்யாததாக இருக்கவேண்டும். 

மூலிகைகள் கலந்த சோப்புகளை உபயோகிக்க வேண்டும். கமுக்கட்டு, தொடை இடுக்குகளில் வியர்வையால் அழுக்கு சேர்கிறது. அந்த இடங்களிலுள்ள ரோமங்களை நீக்கவேண்டும்.

சிலருக்கு வியர்வையில் கற்றாழை நாற்றம் வீசும். வியர்வையில் சில நுண்ணுயிர்கள் வளர்வதால் இப்படி உண்டாகிறது.

இந்த நுண்ணுயிர்கள் வியர்வையில் இரசாயன மாற்றத்தை உண்டாக்கி மஞ்சளாகவும், பச்சையாகவும் நீலமாகவும் நிறமாற்றத்தை உண்டாக்குகின்றன. ஆகவே நுண்ணுயிர்க் கிருமிகளை ஒழிக்கவேண்டும்.

அப்போதுதான் நாற்றம் ஒழியும். இதற்குப் படிகாரம் சுரைத்த நீரில் கை கால்களைக் கழுவ வேண்டும். இப்பழக்கம் வியர்வை அதிகமாக வராமல் தடுக்கிறது. ஈரத்தைப் போக்கி நாற்றத்தை மாற்றுகிறது.

வியர்வையைக் கட்டுப்படுத்த சாலிசிலிக் ஆசிட் போரிக் பவுடர்: டால்கம் பவுடர் கலந்த கலவையை உடம்பில் தேய்த்துவந்தால் வியர்வை அடங்கும்.

கமுக்கட்டு போன்ற மறைவிடங்களில் 5% சதவீதம் படிக்கார நீர் 70% சதவீதம் மெடிக்கல் ஆல்கஹால் கலந்து தேய்க்கலாம். நாற்றம் மறையும்.

தினசரி குளிக்கும்போது மூலிகைக் குளியல் முறையில் குளிக்கலாம்.

அதாவது, பகலில் ஒரு பக்கெட்டில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு அதில் வேப்பம் இலை, தும்பைச் செடி இலை, நன்னாரி வேர், வெட்டி வேர்போட்டு ஊறவைத்து அடுத்த நாள் காலையில் இந்த மூலிகைந் தண்ணீரில் குளித்து வந்தால நாற்றம் பறந்துவிடும். இவை தவிர, சிறிதளவு நீரடி முத்து என்ற மருந்துடன் சிறிதளவு கசகசாவை அரைத்து உடம்பு முழுதும் தேய்த்துக் கொண்டு பிறகு வேப்பம் சோப்புப் போட்டுக் குளிக்கலாம்.

வியர்வை நாற்றம் போகும்.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...