Skip to main content

Google ads

நோய் குணமாக நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

 நோய் உடலைத் தாக்கும் போது நோயாளி பலவீன மடைகிறான். உடலின் இயக்கம் தளர்ந்து போகிறது. பசி இல்லை. நல்ல தூக்கம் இல்லை. இதனால் உடல் சோர்ந்து போகிறது. மனமும் பாதிக்கப்படுகிறது.

ஆகவே நோயாளியை நல்ல காற்றோட்டமுள்ள அறையில், வெளிச்சம் உள்ள அறையில் ஓய்வாக இருக்கும் படி வைக்க வேண்டும். வெப்பமோ, குளிரோ தாக்காமல் நோயாளியைப் பாதுகாக்கவேண்டும்.

ஒருவருக்கு ஜூரம் வரும்போது மூளையும் நரம்புகளும் தங்களுக்கு வேண்டிய போஷிப்பை பெற்றுக் கொள்வதில்லை. இதனால் தளர்ச்சியும் வலிப்பும்கூட உண்டாகும். இழுப்பும் தோன்றும். இருதயம் அளவுக்கு அதிகமாகத் துடிப்பதால் அதன் முறையான வேலைகளும் பாதிக்கப் படுகின்றன. 

இது தவிரச் சிறுநீரகங்கள் கழிவுப் பொருளை வெளியே தள்ள முடியாமல் தளர்ச்சியடைந்து போகிறது. இதனால் சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. உடல் தளர்ந்த நிலையில் வேறு சில தொற்று நோய்களும் இந்தக் கட்டத்தில் தாக்கலாம். 

பெரியம்மை, தட்டமை தொற்றலாம். ஆகவே நோயாளி வெகு சுவனமாக இருக்க வேண்டும். ஜூரத்தை முற்றவிடாமல் மருந்துகளாலோ அல்லது உணவுகளாலோ அதிகமாகாமல் டாக்டருடன் சிகிச்சை முறையில் ஒத்துழைக்க வேண்டும்.


ஒரு டாக்டரிடம் மருந்து சாப்பிடுவது; இவர் சரியில்லை என்று வேறு டாக்டரிடம் செல்வது; இந்த மருந்து சரியில்லை என்று வேறு மருந்துகளைத் தானே வாங்கிச் சாப்பிடுவது; தன் வீட்டில் இதற்குமுன் காய்ச்சலுக்கு என்ன மருந்து சாப்பிட்டார் என்று தெரிந்து அந்த மருந்தை வாங்கிச் சாப்பிடுவது; ஆகியவை கோளாறுகளையே உண்டாக்குகின்றன. 

நண்பர்களோ, உறவினர்களோ தாங்கள் சாப்பிட்ட மருந்துகளை எல்லாம் டாக்டரிடம் கேட்காமல் சாப்பிடுவதால் கோளாறு ஏற்பட்டு நோயை முற்றவிட்டு விடுகிறார்கள் சிலர்.

நோய்க்காலத்தில் நாக்குக்கு ருசி இல்லை என்று ஆசைப்பட்ட உணவுகளை சாப்பிட்டு நோயை வளர விடுகிறார்கள் சிலர், திடமான உணவுகளை விலக்கித் திரவ ஆகாரத்தையே உண்ணுவதுதான் நல்லது. எளிதில் ஜீரணமாகும் உணவுகளையே சாப்பிட வேண்டும். நோய்க் காலத்தில் என்ன உணவு சாப்பிடவேண்டும் என்று டாக்டரிடம் கேட்டு அந்த உணவுகளையே சாப்பிடவேண்டும்.

 கடின நோய்களுக்குக் கஞ்சி உணவே சிறந்தது. திரவ உணவை உறிஞ்சிக் குடிக்கலாம். விழுங்கச் சிரமமாக இருந்தால் பத்து நிமிஷத்திற்கு ஒரு தடவை கொஞ்சங் கொஞ்சமாகச் சாப்பிடலாம்.

நோய் குணமாகிறது என்று தெரிந்தால் பழச்சாறு, சூப் சாப்பிடலாம். ஆனால் அவசரப்பட்டு மசாலா உணவுகளைச் சாப்பிட்டு விடக்கூடாது.

மருந்துகளில் அளவு உண்டு. எத்தனை வேளை சாப்பிடவேண்டும் என்று விதி இருக்கிறது. காலை ஒரு மாத்திரை, மதியம் ஒரு மாத்திரை இரவு ஒரு மாத்திரை என்றால் அதன்படிதான் சாப்பிடவேண்டும். கரண்டி அளவில், அவுன்ஸ் அளவில் சாப்பிடக் கூடிய சில திரவ மருந்துகள் உண்டு.

 அவற்றையும் முறைப்படி சாப்பிட வேண்டும். நோய் சீக்கிரம் குணம் ஆகவேண்டும் என்பதற்காக மூன்றுவேளை மருந்தையும் ஒரே வேளையில் குடித்துக் காலியாக்கிவிடக்கூடாது. மருந்துகளைச் சாப்பிடும் நேரத்தையும் சாப்பாட்டிற்கு முன்பா, பின்பா என்று தெரிந்து சாப்பிட வேண்டும்.

சில மருந்துகள் வெறும் வயிற்றில், வயிறு காலியாக இருக்கும் நேரத்தில் சாப்பிடவேண்டும் என்று நியதிகள் உண்டு ஆஸ்பிரின் கலந்த மருந்து, இரும்புச் சத்து மருந்து, வைட்டமின் மருந்து பி.ஏ.எஸ். மருந்துகளைச் சாப்பாட்டிற்குப் பிறகு சாப்பிட வேண்டும். அப்போதுதான் மருந்தின் வீரியம் உடலைப் பாதிக்காது வேளை அறிந்து, அளவு அறிந்து, டாக்டர் கூறும் நிலை அறிந்து மருந்துகளைச் சாப்பிடவேண்டும். 

அப்போதுதான் மருந்து வேலை செய்யும், நோயும் குணமாகும். நோயாளியோ, அல்லது அவருக்கு உதவி செய்பவர்களோ இதைத் தெரிந்து கொண்டு நோயாளிக்குப் புகட்டவேண்டும். நோய் குணமாக, நோயாளி நோயிலிருந்து தேற இது உதவும் அதை விட்டு விட்டு இஷ்டம் போல் சாப்பிடக்கூடாது.

நோயாளிகள் தங்கள் வெப்ப நிலையை அவ்வப்போது கவனித்துக் குறித்து வைத்துக்கொள்ள வேண்டும். ஜூரம் உயர்ந்துகொண்டு போகிறதா, குறைந்து கொண்டு வருகிறதா? சுவாசம் எந்த நிலையில் இருக்கிறது? 

சிறுநீர், மலம் ஒழுங்காகக் கழிகின்றனவா? சளியில் இரத்தம் வருகிறதா? சுவாசிப்பதில் சிரமம் உண்டா? தூக்கம் எப்படி? வாந்தி, வயிற்றுப் போக்கு உண்டா? காய்ச்சல் தொடர்ந்து அடிக்கிறதா விட்டுவிட்டு வருகிறதா? ஆகியவற்றை யெல்லாம் நோயாளி நுணுக்கமாகக் கவனித்து டாக்டரிடம் சொன்னால் அதற்கு ஏற்ற முறையில் மருந்து கொடுப்பார். நோயும் குணமாகும்.

நோயாளியின் படுக்கை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும். நோயாளி நீண்ட நாள் படுக்கையில் இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டால் படுக்கைப் புண் உண்டாகும். ஆகவே நோயாளியை ஒரே நிலையில் படுக்கவைக்காமல் பக்கவாட்டில் மாற்றிமாற்றிப் படுக்கவைக்க வேண்டும். குடும்பத்தில் உள்ள உதவியாளர்கள் நோயாளிக்குப் பலவகையில் உதவி செய்ய வேண்டும்.

நோயாளி நினைவிழந்த நிலையில் இருந்தால் வாய் வழியாக எதையும் கொடுக்கக் கூடாது. நோயாளிக்குக் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டால் அது குடல்வால் நோயாகவும் இருக்கலாம். உடனே நோயாளியை டாக்டரிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.

நோய் குணமாக நோயாளி டாக்டருடன் ஒத்துழைக்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களும் நோயாளியின் நிலை அறிந்து டாக்டரிடம் எடுத்துச் சொல்லி தோயை விரைவில் விரட்ட வேண்டும்.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும