Skip to main content

Google ads

வீட்டுப் பிராணிகளால் இவ்வளவு நோய்கள் உருவாகுமா ? ஐயோ !

 ✷மனிதன் தன் சுயநலத்திற்காக மிருகங்களையும் பிராணிகளையும் பயன்படுத்திக்கொண்டு அவற்றைத் தன் வீட்டிலேயே வளர்க்க ஆரம்பித்தான். 

 ✷சவாரி செய்யக் குதிரையையும், பாலுக்காகப் பசுவையும், ஆட்டையும், உழவுக்காக மாட்டையும், காவலுக்காக நாயையும், எலிகளை ஒழிக்கப் பூனையையும் வளர்க்க ஆரம்பித்தான். அவற்றின் மீது பரிவுகாட்டி நாய் பூனைகளை மடிமீது வைத்துக் கொஞ்சவும் ஆரம்பித்தான்.

 ✷இதனால் பிராணிகளைத் தாக்கும் நோய்கள் மனிதனுக்கும் தொற்றிக்கொண்டு மனிதனை ஆட்டிப் படைத்தன.

 ✷நாம் விரும்பாமலே நம் வீட்டுக்குள் புகுந்து தொல்லை கொடுக்கும் பிராணி எலி. எப்படியோ அடுக்களையில் புகுந்துகொண்டு சமையலுக்காக வைத்திருக்கும் அரிசி, பருப்பு, காய்கறி பொருட்களைத் தின்று நமக்குத் தொல்லை கொடுப்பதிலிருந்து பிளேக் நோயைப் பரப்புவது வரை எலிகள்-பெருச்சாளிகள் பல கெடுதல்களைச் செய்கின்றன. 

 ✷எலிகளின் இரத்தத்தை உறிஞ்சி வாழும் ஒருவகை ஈக்கள் மனிதனைக் கடிக்கின்றன. எலியிடம் பெற்ற நோய் மனிதனுக்குப் பரவுகிறது. பிளேக் நோய் உண்டாகிறது. இப்போது இந்த நோயின் அட்ட காசங்கள் குறைந்துவிட்டன என்றாலும் முற்றிலும் ஒழியவில்லை.


வீட்டுப் பிராணிகளால் உருவாகும் நோய்கள்


 ✷ஈக்கொல்லி மருந்துகளையும் போட்டு வீட்டைவிட்டே இவற்றைத் துரத்தவேண்டும்.

 ✷வீட்டு நாய்களில் சில ராபீஸ் என்ற வெறி நோயால் தாக்கப்பட்டு மனிதர்களைக் கடிக்கவும் செய்கின்றன. வீட்டுப் பிராணிகளான ஆடு, மாடு, கோழிகளைக் கடித்து அதன் மூலம் வெறி நோயைப் பரப்பி மனிதனுக்கு மரணத்தை உண்டாக்குகின்றன.

 ✷இதுதவிர வீட்டு நாய்களுக்கு இன்னொரு நோயும் பரவுகிறது. இதற்கு ஹைடடிட்சிஸ்டு என்று பெயர். நாயின் உடலில் உண்ணி என்று சொல்லப்படும் ஒருவகைப் பூச்சிகள் ஒட்டிக்கொண்டு வளர்கின்றன. 

 ✷இதனால் சுல்லீரல், நுரையீரல், மூளை, இருதயம், தசைகள், எலும்புகள் சில நோய்களுக்கு ஆளாகி மனிதனுக்குப் பல தொல்லைக்ளை உண்டாக்குகின்றன. தெருநாய்களுக்குப் பரவி அதன் மூலம் வீட்டு நாய்களுக்குப் பரவுகிறது.

 ✷ஆடுகளுக்கு அந்த்ரக்ஸ் என்று சொல்லப்படும் மூட்டடைப்பான் என்று ஒரு நோய் பரவுகிறது. கசாப்புக் கடைக் காரர்கள், தோல் பதனிடும் தொழிலாளிகள், கம்பளித்துணி நெய்பவர்களுக்கு இந்த நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது.

 ✷மேலும் ஆட்டுப்பால், ஆட்டு மாமிசம் சாப்பிடு கிறவர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

 ✷மனிதர்களுக்கு வரும் டி.பி நோய் மாடுகளுக்கும் வருகிறது. டி.பி நேரய் பாலின்மூலம் மனிதர்களுக்கும் உண்டாகிறது.ஆகவே பாலை நன்கு காய்ச்சிக் குடிக்கவேண்டும். 

 ✷மிருகங்களின் தோல் செருப்பாகவும், கொம்பு சீப்பாகவும் மாறும்போது மனிதனுக்குச் சில தொல்லைகள் பரவாமலிருப்பதில்லை.

 ✷வீட்டுப் பூனைகளுக்கும், கிருமிகளால் சில நோய்கள் பரவுகின்றன. இதனால் சிறுவர்கள் சிறுமிகள் பூனையை அருகில் வைத்துக் கொண்டு தூக்கிக் கொஞ்சுவதாலும் நோய் பரவுகிறது.


 ✷முயல்களுக்கும் கிருமிகளால் சில நோய்கள் பரவுகின்றன. இவை வீட்டில் வளர்க்கப்படுவதால் மனிதர்களை அவர்கள் அறியாமல் தாக்குகிறது.

 ✷கர்ப்பமான பெண்களுக்குப் பூனையால் உண்டாகும் நோய் பரவி பிரசவகாலத்தில் தொல்லை உண்டாக்குகிறது. குழந்தைகளுக்கும் இதனால் பாதிப்பு உண்டாகிறது.

 ✷மனிதனுக்கு என்னென்ன நோய்கள் உண்டாகின்றனவோ அந்த நோய்கள் எல்லாம் பிராணிகளுக்கும் உண்டாகின்றன. 

 ✷பிராணிகளுக்கு என்ன நோய்கள்உண்டாகின்றனவோ அந்த நோய்கள் மனிதர்களுக்கும் உண்டாகின்றன.

 ✷இதனால் வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் பிராணிகள் விஷயத்தில் வீட்டுப் பெரியவர்கள், சிறுவர்கள் முதலானோர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

 ✷பிராணிகளை கவனிக்கக் கால்நடை மருத்துவ மனைகள் இருக்கின்றன. பூனைக்கோ, ஆட்டுக்கோ. மாட்டுக்கோ. நாய்களுக்கோ எந்த வகைப் பிணிகள் ஏற்பட்டாலும் உடனே கவனித்து மருந்து கொடுத்து வந்தால் பிராணி நோய்கள் மனிதனுக்குத் தொற்றா.

 ✷பிராணி நோய்தானே, அது நம்மை ஒன்றும் செய்யாது என்று அலட்சியமாக இருக்கக்கூடாது. நாம் குளிப்பது போலப் பிராணிகளையும் குளிப்பாட்ட வேண்டும். அவற்றின் உடலைச் சுத்தம் செய்யவேண்டும். பிராணிகளுக்கு என்று தனி இடம் ஒதுக்கவேண்டும். அதன் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.

 ✷சமையல்கட்டில் எந்தப் பிராணிகளையும் அண்ட விடாதீர்கள். படுக்கையில் படுக்க வைக்காதீர்கள். பிராணி மாமிசங்களை சாப்பிடுவதை முடிந்தவரை தவிருங்கள்.

 ✷நமக்கு வரும் நோய்களையே நம்மால் தடுக்க முடியாத போது பிராணிகளையும் வீட்டில் சேர்த்து வைத்துக் கொண்டு ஏன் வீண் தொல்லைகளையும் அனுபவிக்க வேண்டும்? யோசித்துப் பார்த்து நீங்களே முடிவுக்கு வாருங்கள்!

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும