Skip to main content

Google ads

உடலுக்கு சத்தான உணவு எது ? தேர்ந்தெடுத்து சாப்பிடுவது எப்படி?

சரிவிகித உணவு  அர்த்தம் :

 ✷ நம் உணவை ஆறு பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள். சக்தி கொடுக்கும் மாவுப் பொருள்கள், வளர்ச்சியைத் தரும் புரதம், கொழுப்புப் பொருள்கள், வெப்பமும் சக்தியும் தரும் உணவுப் பொருள்கள்.

 ✷ ஜீவ சத்துக்கள் உலோக உப்புக்கள், மற்றும் குடிநீர் ஆகியவை நம் உணவில் தகுந்த அளவில் கலந்தும்,சரியான விகிதத்திலும் இருக்கவேண்டும். இதுவே சரிவிகித உணவு என்று உணவு விஞ்ஞானம் கூறுகிறது.


ஆறு சுவைகளும் அவற்றின் நன்மைகளும்:

✷  உணவில் இன்னொரு விஷயமும் கவனிக்கப்பட வேண்டும். ஆறு சுவைகளும் அளவோடு கலந்திருக்க வேண்டும்.

✷ காரச்சுவை உடலுக்கு உஷ்ணத்தை அளிப்பது. உணர்வுகளைக் கூட்டவும் குறைக்கவும் செய்வது. 

✷ கசப்புச் சுவை உடலுக்குத் தேவையில்லாத கிருமிகளை அழிக்கவும், சக்தியை உண்டாக்கவும் உதவுகிறது. 

✷ இனிப்புச் சுவை தசைகளை வளர்க்க உதவுகிறது. 

✷ புளிப்புச் சுவை இரத்தக் குழாயில் உள்ள சுசடுகளை நீக்க உதவுகிறது.

✷ துவர்ப்புச் சுவை இரத்தத்தை வீணாக வெளியேறாமல் உறையச் செய்வது. 

✷ உப்புச் சுவை அளவோடு சேர்த்துக் கொண்டால் நினைவாற்றலை அளிக்க உதவுகிறது.

ஆக, இந்த ஆறு சுவைகளில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் உடலுக்குக் கேடு உண்டாகிறது.

✷ சிலர் சுசப்புச் சுவையை ஒதுக்கி விடுகிறார்கள். இதனால் உடல் நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். பெரும் பாலான நோய்களுக்குக் காரணம் கசப்புச் சுவையை விலக்குவதுதான்.

உணவில் இந்தச் சத்துக்கள் தேவையான அளவு இருக்கவேண்டியது அவசியமா?

✷ நமக்குத் தேவையான சத்துக்கள் சில உணவுப் பொருள்களில் அதிக அளவில் இருக்கின்றன. சிலவற்றில் குறைவான அளவில் இருக்கின்றன. அதிகச் சத்துள்ள உணவை கொஞ்சமாகச் சாப்பிட்டாலும் போதும்.

சத்துணவு என்றால் விலை உயர்ந்த காய்கறிகள்.பழங்கள் என்று அர்த்தமா?

 ✷ இல்லை.சத்துணவு என்றால் விலை உயர்ந்த காய்கறிகள்.பழங்கள் என்று அர்த்தமல்ல. மளிவாகக் கிடைக்கும் உணவுப் பொருள்களில் அற்புதமான சக்தி தரும் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

 ✷ நாம் சாப்பிடும் அரிசி உணவில் சத்துக் குறைவாக இருக்கிறது. இயந்திரத்தில் அரிசி அரைக்கப்படுவதால் அதன் உயிர்ச்சத்து நீங்கி விடுகிறது. கோதுமை உணவில் சத்து நிறைந்திருக்கிறது. தமிழர்கள் கோதுமையை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய தானியங்களில் சத்து நிறைய உள்ளது.

சத்தான உணவு கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம் ?

 ✷பசும்பால் வாங்கச் சக்தியற்றவர்கள் இப்படி  செய்யலாம். நிலக்கடலையை அம்மியில் வைத்து அரைத்து ஒரு வழி அதிலிருந்து பால் எடுத்துக்கொண்டு வாழைப் பழம் ஒன்று சேர்த்து சத்துள்ள உணவைத் தயாரித்துக்கொள்ளலாம், ஆரஞ்சுப்பழம் விலை உயர்ந்து நிற்கிறது. இதை வாங்க முடியாதவர்கள் நெல்லிக்காய் சாப்பிடலாம். வைட்டமின் சி-சத்து நிறைய உள்ளது.

 ✷கோழி முட்டை வாங்கச் சக்தியற்றவர்கள். கத்தரிக்காய் வாங்கிச் சாப்பிடலாம். முட்டையிலுள்ள அத்துனைச் சத்துக்களும் கத்தரிக்காயில் இருக்கின்றன. கீரை வகைகளில் எல்லாச் சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன. விலையும் மலிவு.  


✷ புளிச்சக் கீரை முருங்கக் கீரைகளில் இல்லாத சத்துக்களா? பழங்களில் ஆப்பிள் விலை அதிகம். அதில் உள்ள சத்து எலுமிச்சை, பேரிச்சை, நாவல், சீதா, அத்தியில் உள்ளது.

 ✷நோயை எதிர்க்கும் சக்தி எல்லாக் கீரைகளிலும். எல்லாப் பழங்களிலும் இருக்கிறது.பருவக்காலத்தில் வரும் எல்லாப் பழங்களையும் வாங்கிச் சாப்பிடலாம். சாதாரணமாசுக் கடைகளில் கிடைக்கும் வாழைப் பழத்தில் ஓர் உடலுக்குவேண்டிய அத்துணையும் உண்டு. தினசரி இரண்டு வாழைப் பழம் சாப்பிட்டு வரலாம் .


✷ஆகவே அதிக விலையுள்ள பொருட்களில்தான் சத்து அதிகம் என்பதில்லை. மலிவான பொருட்களிலும் சத்து உண்டு. அதிக அளவில் சாப்பிட்டால்தான் சத்து நிறைய உண்டு என்பதில்லை. சிறு அளவு தினசரி சாப்பிட்டால் போதும். இந்த வகையில் எவருமே சத்துணவை உண்டு நலமாக வாழமுடியும்.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...