Skip to main content

Google ads

உடலுக்கு சத்தான உணவு எது ? தேர்ந்தெடுத்து சாப்பிடுவது எப்படி?

சரிவிகித உணவு  அர்த்தம் :

 ✷ நம் உணவை ஆறு பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள். சக்தி கொடுக்கும் மாவுப் பொருள்கள், வளர்ச்சியைத் தரும் புரதம், கொழுப்புப் பொருள்கள், வெப்பமும் சக்தியும் தரும் உணவுப் பொருள்கள்.

 ✷ ஜீவ சத்துக்கள் உலோக உப்புக்கள், மற்றும் குடிநீர் ஆகியவை நம் உணவில் தகுந்த அளவில் கலந்தும்,சரியான விகிதத்திலும் இருக்கவேண்டும். இதுவே சரிவிகித உணவு என்று உணவு விஞ்ஞானம் கூறுகிறது.


ஆறு சுவைகளும் அவற்றின் நன்மைகளும்:

✷  உணவில் இன்னொரு விஷயமும் கவனிக்கப்பட வேண்டும். ஆறு சுவைகளும் அளவோடு கலந்திருக்க வேண்டும்.

✷ காரச்சுவை உடலுக்கு உஷ்ணத்தை அளிப்பது. உணர்வுகளைக் கூட்டவும் குறைக்கவும் செய்வது. 

✷ கசப்புச் சுவை உடலுக்குத் தேவையில்லாத கிருமிகளை அழிக்கவும், சக்தியை உண்டாக்கவும் உதவுகிறது. 

✷ இனிப்புச் சுவை தசைகளை வளர்க்க உதவுகிறது. 

✷ புளிப்புச் சுவை இரத்தக் குழாயில் உள்ள சுசடுகளை நீக்க உதவுகிறது.

✷ துவர்ப்புச் சுவை இரத்தத்தை வீணாக வெளியேறாமல் உறையச் செய்வது. 

✷ உப்புச் சுவை அளவோடு சேர்த்துக் கொண்டால் நினைவாற்றலை அளிக்க உதவுகிறது.

ஆக, இந்த ஆறு சுவைகளில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் உடலுக்குக் கேடு உண்டாகிறது.

✷ சிலர் சுசப்புச் சுவையை ஒதுக்கி விடுகிறார்கள். இதனால் உடல் நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். பெரும் பாலான நோய்களுக்குக் காரணம் கசப்புச் சுவையை விலக்குவதுதான்.

உணவில் இந்தச் சத்துக்கள் தேவையான அளவு இருக்கவேண்டியது அவசியமா?

✷ நமக்குத் தேவையான சத்துக்கள் சில உணவுப் பொருள்களில் அதிக அளவில் இருக்கின்றன. சிலவற்றில் குறைவான அளவில் இருக்கின்றன. அதிகச் சத்துள்ள உணவை கொஞ்சமாகச் சாப்பிட்டாலும் போதும்.

சத்துணவு என்றால் விலை உயர்ந்த காய்கறிகள்.பழங்கள் என்று அர்த்தமா?

 ✷ இல்லை.சத்துணவு என்றால் விலை உயர்ந்த காய்கறிகள்.பழங்கள் என்று அர்த்தமல்ல. மளிவாகக் கிடைக்கும் உணவுப் பொருள்களில் அற்புதமான சக்தி தரும் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.

 ✷ நாம் சாப்பிடும் அரிசி உணவில் சத்துக் குறைவாக இருக்கிறது. இயந்திரத்தில் அரிசி அரைக்கப்படுவதால் அதன் உயிர்ச்சத்து நீங்கி விடுகிறது. கோதுமை உணவில் சத்து நிறைந்திருக்கிறது. தமிழர்கள் கோதுமையை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய தானியங்களில் சத்து நிறைய உள்ளது.

சத்தான உணவு கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம் ?

 ✷பசும்பால் வாங்கச் சக்தியற்றவர்கள் இப்படி  செய்யலாம். நிலக்கடலையை அம்மியில் வைத்து அரைத்து ஒரு வழி அதிலிருந்து பால் எடுத்துக்கொண்டு வாழைப் பழம் ஒன்று சேர்த்து சத்துள்ள உணவைத் தயாரித்துக்கொள்ளலாம், ஆரஞ்சுப்பழம் விலை உயர்ந்து நிற்கிறது. இதை வாங்க முடியாதவர்கள் நெல்லிக்காய் சாப்பிடலாம். வைட்டமின் சி-சத்து நிறைய உள்ளது.

 ✷கோழி முட்டை வாங்கச் சக்தியற்றவர்கள். கத்தரிக்காய் வாங்கிச் சாப்பிடலாம். முட்டையிலுள்ள அத்துனைச் சத்துக்களும் கத்தரிக்காயில் இருக்கின்றன. கீரை வகைகளில் எல்லாச் சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன. விலையும் மலிவு.  


✷ புளிச்சக் கீரை முருங்கக் கீரைகளில் இல்லாத சத்துக்களா? பழங்களில் ஆப்பிள் விலை அதிகம். அதில் உள்ள சத்து எலுமிச்சை, பேரிச்சை, நாவல், சீதா, அத்தியில் உள்ளது.

 ✷நோயை எதிர்க்கும் சக்தி எல்லாக் கீரைகளிலும். எல்லாப் பழங்களிலும் இருக்கிறது.பருவக்காலத்தில் வரும் எல்லாப் பழங்களையும் வாங்கிச் சாப்பிடலாம். சாதாரணமாசுக் கடைகளில் கிடைக்கும் வாழைப் பழத்தில் ஓர் உடலுக்குவேண்டிய அத்துணையும் உண்டு. தினசரி இரண்டு வாழைப் பழம் சாப்பிட்டு வரலாம் .


✷ஆகவே அதிக விலையுள்ள பொருட்களில்தான் சத்து அதிகம் என்பதில்லை. மலிவான பொருட்களிலும் சத்து உண்டு. அதிக அளவில் சாப்பிட்டால்தான் சத்து நிறைய உண்டு என்பதில்லை. சிறு அளவு தினசரி சாப்பிட்டால் போதும். இந்த வகையில் எவருமே சத்துணவை உண்டு நலமாக வாழமுடியும்.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும