Skip to main content

Google ads

மூச்சுத் திணறல் ஏன் ஏற்படுகிறது ? தடுப்பது எப்படி ? Medical Tamizha

 மூச்சு விடுதல் என்பது எந்தவிதச் சிரமும் இல்லாமல் சலனம் இல்லாமல், இன்னும் சொல்லப் போனால் நாம் உணராமல் இந்தநிகழ்ச்சி பிறந்தது முதல் இறக்கும் வரையில் நடந்து கொண்டு வருகிறது.

பெருமூச்சு விடும்போது மட்டும் நெஞ்சு விம்முகிறது. அதிக அளவு காற்று உள்ளே இழுக்கப்பட்டு அதிக அளவு காற்று வெளியே தள்ளப்படும் போது ஒருளிதச் சலனம் ஏற்படுவதை உணர்கிறோம். மற்ற நேரங்களில் மூச்சு தன்னிச்சையாகச் செயல் படுகிறது.

ஆனால் மூச்சுத் திணறல் என்பது அப்படி அல்ல. சாதாரணசுவாசத்தைவிட வேறு பட்டது வித்தியாசமானது. சற்று சிரமத்தையும் தருவது. மிஞ்சினால் ஆபத்து உண்டு.

ஒரு நிமிஷத்திற்கு 16 முதல் 20 தடவை மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுகிறோம் என்று விஞ்ஞானிகள் அளந்து கூறுகிறார்கள். இந்த எண்ணிக் கைக்குமேல் போகும்போது அது திணறல் எனப்படுகிறது.

இருதய நோயாளிகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகள், மூச்சுத் திணறலால் அதிகமான சிரமத்திற்கு ஆளாகிறார்கள். 

மூச்சுத் திணறல் என்பது நோய் அல்ல. நோயின் அடையாளமே சில நோய்கள் உடலைத் தாக்கும் போது மூச்சுத் திணறல் அதில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.

குழந்தைகள், பெண்கள். ஆண்கள், வயதானவர்கள் என்ற பல பிரிவினரையும் மூச்சுத் திணறல்துவட்டி எடுக்கிறது.

சிலருக்குப் படி ஏறும்போதும், மலை ஏறும்போதும், ஓட்டப் பந்தயங்களில் ஈடுபடும்போதும் மூச்சு இழுப்பதும் விடுவதும் மகா சிரமமாக இருக்கிறது.

ஆரோக்கியமான உடல் உறுதி பெற்றவர்களுக்கு இந்தத் திணறல் எதுவும் செய்வதில்லை. பலஹீனமாக வர்களையே தாக்குகிறது.

இன்னும் சிலருக்குச் சாதாரணமாக இருக்கும்போதே மூச்சுத் திணறல் திடீரென்றோ அல்லது நாளடைவிலோ தோன்றி உலுக்கி எடுக்கிறது.

இதில் இரண்டுவகை உண்டு. மூச்சை உள்ளே இழுக்கும் போது சிலருக்கு இடையூறு உண்டாகிறது. இன்னும் சிலருக்கு மூச்சை வெளியே விடும்போது சிரமம் உண்டாகிறது. மூச்சை உள்ளே இழுக்கும்போது தோன்றும் திணறலுக்குக் காரணம் மூச்சுப் பாதையில் அடைப்பு இருக்கலாம்.

உதாரணமாக, டிப்திரியா என்ற தொண்டை அடைப்பான் நோயினால் சுவாசப் பாதையில் தடங்கல் ஏற்படலாம். மூச்சை வெளியே விடும்போது சிலருக்குத் திணறல் உண்டாகலாம். இது சுவாசக் குழல் பாதிப்பு. நுரையீரல் பாதிப்புக் காரணமாக ஏற்படலாம். இதற்கு உதாரணம் ஆஸ்துமா நோய். 

சிலருக்குத் திடீரென்று திணறல் உண்டாகும். மூச்சுக் குழவில் ஏதாவது ஒரு பொருள், பட்டன், பட்டாணி அடைத்துக் கொள்ளும் போது திணறல் உண்டாகும். இது விபத்தினால் உண்டாவது.

சிலருக்கு நோயினால் காலப் போக்கில் உண்டாக இடமுண்டு. உடல் பருமனாக உள்ளவர்கள், இரத்தச் சோகை உள்ளவர்கள், நியுமோனியா காய்ச்சல் வந்தவர்கள். நுரையீரல் நோய் வந்தவர்கள் கர்ப்பமான பெண்கள் ஆகியோருக்கு மூச்சுத் திணறல் உண்டாகும்.

இன்னும் சிலருக்கு அலர்ஜி காரணமாகவும், நச்சுக்காற்றைச் சுவாசிப்பதாலும். காற்று அழுத்தம் குறைந்த மலை வாசஸ்தலங்களில் வாழ்வதாலும், கோளாறு, மனநோய் தைராய்டு சுரப்பிக் காரணமாகவும் மூச்சுத் திணறல் உண்டாகும். மூச்சுத் திணறலுக்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப் படுகின்றன.

மூச்சுத்திணறல் ஏற்பட காரணங்கள் :

இளம் பிள்ளை வாதம், முதுகு எலும்பு, மார்பு எலும்பு நோய், நுரையீரலின் மேலுறையில் நீர்க் கசிவு, மகோதரம் என்று சொல்லப்படும் வயிறு வீக்கம் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மூச்சுத் திணறல் உண்டாகிறது.

மூச்சுத் திணறலால் அவதிப்படுகிறவர்கள் தங்கள் நிலைமையை டாக்டரிடம் சொல்லும் போது திணறல் தி(டீரென்று உண்டானதா? அல்லது அவ்வப்போது வந்து போகிறதா? என்று கண்டு உணர்ந்து சொல்லவேண்டும். 

மூச்சத் திணறல் காய்ச்சலோடு வருகிறதா? இருமலோடு வருகிறதா? அப்போது சளி இருமல் உண்டா?மார்ப்புப் பக்கம் வலி உண்டாகிறதா? தோலில் நீல நிறம் உண்டாகிறதா? அதிக வியர்வை உண்டாகிறதா என்றெல்லாம் தெளிவாகச் சொல்ல வேண்டும்.

அப்போதுதான் டாக்டர் நோயின் நிலைமையைக் கண்டு அதற்கு ஏற்ற முறையில் சிகிச்சை அளிக்க முடியும். மூச்சுத் திணறல் எதனால் உண்டானது என்று கண்டு பிடிக்க இருபதுக்கு மேற்பட்ட சோதனைகள் உள்ளன.

சிறுநீர்ச் சோதனை, மலப் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, ஸ்கிரீனிங் என்று சொல்லப்படும் நேர்முக எக்ஸ்ரே சோதனை மார்பு எக்ஸ்ரே, தொண்டைப் பரிசோதனை, மூச்சுக் குழல் பரிசோதனை, சிறுநீரகப் பரிசோதனை, ஈ.சி.ஜி. சோதனை என்று பல்வேறு சோதனைகள் மூலம் அடிப்படைக் கோளாறுகளைக் கண்டு பிடித்து, எதன் காரணமாக மூச்சுத் திணறல் உண்டானது என்று தெரிந்து கொண்டு டாக்டர்கள் வைத்தியம் செய்கிறார்கள்.

நோயாளியும், நோயாளிக்கு உதவியாக இருப்பவர்களும் கூர்ந்து கவனித்து மூச்சுத் திணறல் ஏற்படும்போது நோயாளிக்கு என்ன மாறுதல்கள் ஏற்படுகின்றன என்ற விவரங்களையும் டாக்டரிடம் எடுத்துச் சொல்லி டாக்டருக்கு உதவ வேண்டும். இது மிக முக்கியம்.

நாம் சுவாசிப்பதில் எந்தத் தடங்கள் ஏற்பட்டாலும் உடனே அதைக் கண்டு அதற்குப் பரிகாரம் செய்யலாம். நிலைமைகளைச் சீராக்கிக் கொள்ளலாம்.

Comments

Popular posts from this blog

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும் 1. முதல் சில மாதங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி & வயிற்றுப்போக்கு (Vomiting & Diarrhoea): Vomiting & Diarrhoea குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானவை. முதல் Step குழந்தைக்கு கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரைச் சிறிது கொடுக்கலாம். (or) feed of பால் கொடுப்பதை நிறுத்தலாம். பால் கொடுப்பதற்கு பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை செய்து கொடுக்கலாம். பாலைக் கொதிக்க வைத்து அதில் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை விடவும். பாலிலிருந்து தண்ணீர் தனியாகவும் Paneer தனியாகவும் பிரிந்து விடும். இதை வடிகட்டி அந்த நீரை மட்டும் இடைவெளி விட்டு கொடுத்து வரலாம். (or)  (i) 200ml தண்ணீர் (ii) 2 tsp சர்க்கரை  (iii) 1 tsp உப்பு  (iv) அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு (v) ½ tsp Soad bicarb (cooking soda) இவற்றைக் கலந்து அடிக்கடி கொடுத்து வரலாம். குழந்தை dehydration ஆகாமல் தடுப்பதற்கு இது மிகவும் உதவும். குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் பாத்திரங்களை மிகவும் சுத்தமாக உபயோகப்படுத்தல் அவசியம். (2)...

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந...