Skip to main content

Google ads

காது மந்தத்திற்கு என்ன காரணம் ? சரி செய்வது எப்படி?

 ஒலிகள் எந்தத் திக்கிலிருந்து வந்தாலும் அதைக் கேட்பதற்கே மனிதனுக்கு இரண்டு காதுகள் படைக்கப் பட்டிருக்கின்றன.

இலை அசைவிலிருந்து உண்டாகும் ஒலி முதல், இடி முழக்கத்திலிருந்து உண்டாகும் ஒலிவரை. இந்தக் காதுகள் கேட்கும் திறனைப் பெற்றிருக்கின்றன.

ஆனால் உடலுக்கு ஏற்படும் கேடுகளைப் போலக் காதிற்கும் சில காரணங்களால் கேடுவிளைகின்றது. இதனால் ஒலிகள் முழுமையாகக் கேட்கும் திறன் குறைந்து காதுகள் மந்தமாகின்றன.

நம் நாட்டில் 100க்கு 35 பேர் காது மந்தம் உள்ளவர்களாகவும் 100க்கு ஐந்து பேர் முழுச் செவிடாகவும் வாழ்கிறார்கள். காதிருந்தும் செவிடர்களாய் வாழும் நிலை பலருக்கு ஏற்பட்டுக் கொண்டு வருகிறது.

இதற்கு என்ன காரணம்? 

நாகரிகமான வாழ்க்கை பலருக்கு நன்மையைத் தந்திருக்கிறது. விஞ்ஞானத்தின் வளர்ச்சியில் நாம் பல நன்மைகளைப் பெற்றிருக்கிறோம். ஆனால் அதே விஞ்ஞானத்தின் விளைவால் சில தீமைகளையும் அனுபவித்துக் கொண்டு வருகிறோம் என்று விஞ்ஞானிகளே சொல்லுகிறார்கள்.

60 வயதுக்கு மேல் உண்டாகும் காதுக் கோளாறுகள் எல்லாம் இப்போது 20 வயதுக் காரர்களுக்கு உண்டாகிறது. என்கிறார் மேற்குஜெர்மன் மருத்துவ டாக்டர் ப்ளெஸ்டர்.

ஒலி பெருக்கி, வானொலி, தொலைக் காட்சி, படக் காட்சி, விமானங்கள், தொழிற்சாலை ஒலிகள், போக்குவரத்துச் சாலை ஓசைகள் அத்தனையும் நம் காதுகளை மந்தமாக்கி வருகின்றன.

மனிதன் கொஞ்சம் கொஞ்சமாக செவிடாகிக் கொண்டு வருகிறான். இரைச்சலே காது மந்தத்திற்குக் காரணம் என்று ஈ.என்.டி மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இது தவிர காது மந்தத்திற்கு வேறு காரணங்களும் உண்டு. காதின் அமைப்பை வெளிக் காது, நடுக்காது,உள்காது என்று மூன்று பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள். ஒலியைக் கேட்க முடியாமல் வெளிச் செவியில் சில தடங்கல்கள் ஏற்படுகின்றன. 

காதின் பாதுகாப்பிற்காகச் சுரப்பு நீர் தயாரித்து வைத்திருக்கும் குரும்பி என்ற பசை அதிகமாகிக் கெட்டிப்பட்டுச் செவிப் பறையை அழுத்துவதால் ஒலிகளைக் கேட்க முடியாமல் காது மந்தப் படுகிறது. ஈ. எறும்பு, பூச்சிகளை உள்ளே நுழைய விடாமல் காதுகளின் பாதுகாப்பிற்காக அமைந்த குரும்பி காதுக்கே கேடு உண்டாக்கும் போது காது மந்தப் படுகிறது.

காதின் சதை வளர்ச்சியாலும், செவிப் பறை தடித்து விடுவதாலும் காதில் விழ வேண்டிய ஒலி தடுக்கப் பட்டுக் காது மந்தம் உண்டாகிறது. 

செவிப் பறையில் சில சமயங்களில் பென்சில், நெருப்புக் குச்சி மற்றும் கண்டவற்றையும் உள்ளே விட்டுக் குடைவதால் டிரம் என்று சொல்லப்படும் நாதத் தோல் கீறல் அல்லது கிழிந்து விடுவதும் உண்டு.

நடுக் காதிலுள்ள சிறு எலும்புகள் அமைப்புச் சீர் கெட்டுப் போவதாலும் ஒலி அலைகள் உள்ளே செல்ல முடியாமல் தடைப் படுகின்றன. இதனாலும் காது மந்தம் ஏற்படலாம்.

செவிப் புலன்கள் சரியாக இயங்காததால் கண்டக்டிவ் டெப்னஸ் ஏற்படுவதாக சொல்லுகிறார்கள். ஆரோக்கியமற்ற குளம் ஆறுகளில் நீச்சல் அடித்து விளையாடுவதால் காதில் நீர் புகுந்து சில வகை படைகளையும், நோய்களையும் உண்டாக்கிக் காது கேளாத மந்த நிலையை உண்டாக்கிக் விடுகின்றன.

காதுகளுக்கும், தொண்டைக்கும், மூக்கிற்கும், நிரம்பத் தொடர்பு. இணைப்பு உண்டு. மூக்கையும் தொண்டையையும் பாதிக்கும் கிருமித் தொற்று நோய்கள் காதையும் பாதித்துக் கோளாறு உண்டாக்குகின்றன.

இதனால் தான் Ear, Nose, Throat என்று மூன்றையும் கவனிக்க ஈ.என்.டி. டாக்டரிடம் இது சம்பந்தமான பிரச்சனைகளை விட்டிருக்கிறார்கள்.

மூக்கிற்கும் தொண்டைக்கும் வரும் நோய்கள் காதின் மையப் பகுதிகளைச் சேதப் படுத்திச் செவியை செயல் படாமல் மந்தப் படுத்தி விடுகின்றன.

ப்ளூ காய்ச்சல், டைபாயிடு காய்ச்சல், தட்டம்மை, மணல் வாரியம்மை சைனஸ், சளித் தொல்லைகள் இவற்றாலும் செவி நரம்புகள் பாதிக்கப் படுகின்றன. இது தவிர, நடுக் காதில் காற்றுக் குறைவாக இருந்தாலும் காது கேளாமை ஏற்படலாம்.

சில மருந்துகளாலும் காதுக்குக் கேடு விளைகிறது. ஆன்டிபயாடிக் மருந்துகளை அளவுக்கு மீறிச் சாப்பிட்டு வந்தாலும் காது கேட்கும் திறனை இழந்து விடுகிறது. காது மந்தங்களுக்கு மருந்துகள் உண்டு. ஆனால் செவிப் பறை கிழிந்து விட்டால் ஒன்றும் செய்ய முடியாது.

காதிலுள்ள சிறு எலும்பில் குறை இருந்தால் அதை நீக்கிச் செயற்கை உறுப்புக்களைப் பொருத்தி சரி செய்து விடுகிறார்கள்.

அறுவைசிகிச்சைமூலம் சில குறைபாடுகளைப் போக்குகிறார்கள். கேட்கும் ஒலி அமைப்புக் கருவிகள் இப்போது எங்கும் கிடைக்கின்றன. பரம்பரை காரணமாகவும் காது மந்தம் ஏற்படலாம். இதைப் போக்கவும் முயற்சிகளைச் செய்து வருகிறார்கள்.

ஒரு வார்த்தை, குழந்தைகளுக்குக் காதில் எந்தத் தொந்தரவு ஏற்பட்டாலும் காது மூக்குத் தொண்டை நிபுணரைச் சந்தித்துச் சிகிச்சை செய்து கொண்டால் காது மந்தத்தை ஆரம்பத்திலேயே போக்கலாம்.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும