Skip to main content

Google ads

குழந்தைகளின் மந்த புத்திக்குக் காரணம்?அறியாத தகவல்கள்- Medical Tamizha

 சில பெற்றோர், தங்களின் குழந்தையைப் பற்றிச் சொல்லும் போது, எல்லாக் குழந்தைகளும் ஓடியாடி விளையாடுகிறார்கள் என் குழந்தை மட்டும் எப்போதும் டல்லாக இருக்கிறான் என்பார்கள். இன்னும் சில தாய்மார்கள் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுத்தாலும் மண்டையில் ஏறுவதில்லை. மந்தமாக இருக்கிறான். இதற்கு என்ன காரணம்? என்று கேட்பதுண்டு.

பிறக்கும்போதே ஏற்படும் சில கோளாறுகளே மந்த புத்திக்குக் காரணங்களாகச் சொல்லலாம்.

கர்ப்பமாக இருக்கும் சில தாய்மார்கள் ஊட்டச் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடாமல் இருப்பதால் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தை மந்த புத்தியுள்ளவர்களாகப் பிறவியிலேயே உருவாகிறார்கள். கர்ப்பிணிகளின் உணவில் அயோடின் சத்தக் குறைவதால் மந்த நிலை ஏற்படலாம். ஆகவே கர்ப்பமான பெண்கள் அயோடின் உப்புச் சேர்ந்திருக்கும் உணவுகளை நன்கு சாப்பிடவேண்டும்.

கர்ப்பமான காலத்தில் அதிகமாக மருந்துகளைச் சாப்பிட்டாலும் குழந்தை மந்தமாகப் பிறக்கிறது என்று மகப்பேறு மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்.

குழந்தைகளை படிப்பில் ஆர்வமாக இருப்பதற்கு வழிமுறைகள்

குழந்தை பிறக்கும்போது ஏற்படும் சிக்கல் காரணமாகச் சில சமயங்களில் மூளை பாதிக்கப்படலாம். குழந்தைக்கு வளிப்பு உண்டாகலாம். இதனாலும் மந்த புத்தி உண்டாகும்.

பிரசவத்தின்போது சிலருக்கு கடுமையான.இரத்தப் போக்கு ஏற்படும். இதைத் தடுக்க ஒருவகை ஊசி மருந்து கொடுக்கப்படும். இது கர்ப்பப் பையையும் இரத்த நாளங்களையும் சுருங்க வைத்து விடுவது உண்டு. சிலருக்கு இந்த ஊசி மருந்தினால் பாதிப்பும் ஏற்படுவதாகச் சொல்லுகிறார்கள். இதன் காரணமாகப் பிறக்கும் குழந்தை மந்த புத்தியாக பிறக்க வாய்ப்பிருக்கிறது.

பெண்கள் நம் தேசத்தைப் பொறுத்த வரையில் புகைப்பதும், மதுக் குடிப்பதும் மிகமிகக் குறைவு. ஒரு சில நாடுகளில் நாகரிகத்தின் மோகத்தில் புகைக்கிறார்கள். மது அருந்துகிறார்கள். இந்தப் பழக்கமுள்ள மூழ்கிப் தாய்மார்கள் மந்த புத்தியுள்ள குழந்தைகளைத் தங்கள் தீய பழக்கத்தின் காரணமாக உருவாக்குகிறார்கள்.

கருத்தரித்த பெண்களுக்கு மணல்வாரி என்று சொல்லப்படும் மீசில்ஸ் நோய் தோன்றினால் குழந்தைக்கு மந்த புத்தி ஏற்படலாம். இது தவிர மஞ்சள் காமாலை நோய் தோன்றினாலும் இது போன்ற விளைவுகள் ஏற்படலாம். 40 வயதிற்குமேல் பெண்கள் குழந்தை பெற்றாலும் மந்த புத்தியுள்ள குழந்தைகள் தோன்றலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள்.

இதைவிட இன்னொரு காரணமும் சொல்லப் படுகிறது நெருங்கிய சொந்தத்தில் பெண் எடுப்பதும் திருமணம் செய்து கொள்வதும்கூட மந்த புத்தியுள்ள குழந்தைகள் பிறக்கக் காரணம்.


இவை எல்லாம் பிறவிக் காரணங்கள், குழந்தை வளர்ந்த பிறகும் சோகை நோயினால் பாதிக்கப்பட்டால் குழந்தைகள் வெளுத்துப் போய்ச் சோர்வாக இருக்கும். அயச்சத்துள்ள உணவு வகைகளைக் கொடுத்து வந்தால் இந்தக் குறை நீங்கும். தாயும் ஊட்டச் சத்துள்ள உணவைச் சாப்பிடவேண்டும். வளரும் குழந்தைகளும் சத்துள்ள உணவுகளைச் சாப்பிடவேண்டும். மந்தநிலை மாறும்.

வளரும் குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லை இருந்தாலும் குழந்தை மந்தமாக இருக்கும். படிப்பில் ஆர்வமில்லாமல் படித்தாலும் மூளை ஏற்றுக்கொள்ளாத நிலையில் மந்த புத்திக்காரர்களாய் வளர்வதும் உண்டு.

பெற்றோர் டாக்டரிடம் காட்டி, பரிசோதனை செய்து இதற்கு மருந்து கொடுத்தால் பூச்சித் தொல்லை. ஒழியும்.

பொதுவாக மாவுப் பண்டங்களை, இனிப்புப் பண்டங்களை அதிகமாகச் சாப்பிடும் குழந்தைகள் மந்த புத்திக்காரர்களாக மாறுகின்றன. காரணம், உடலின் இயக்கத்தை மாவுப் பண்டங்கள் மந்தப்படுத்தும் தன்மை வாய்ந்தவை.

 மாவுச் சர்க்கரை குளுகோசாக மாற்றப்படுகிறது. குளுகோஸ் முழுவதும் எரிக்கப்படாமல் போனால் கழிவுகள் எஞ்சி நிற்கின்றன. இதிலிருந்து பைவிக் அமிலம் உற்பத்தியாகிறது. இது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. மூளையை மந்தப்படுத்துகிறது. இதன்

காரணமாகவும் சிறுவர் சிறுமிகள் மந்த புத்திக்காரர்களாக. ஆகிறார்கள் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.

மந்த நிலையில் இருக்கும் குழந்தைகளின் மனதில் பெற்றோர் மகிழ்ச்சியையும் கிளர்ச்சியையும் தூண்டிக் கொண்டிருந்தால் நிலைமை மாறலாம். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை முறையாக கொடுத்து விளையாட்டிலும் பயிற்சி கொடுத்து வந்தால் மந்த நிலையை மாற்றி அமைக்கலாம்.

மூளைக்கு வேலை கொடுத்தால் முயற்சியோடு முன்னேறுவார்கள். துள்ளித் திரிகின்ற பருவத்தில் அவர்களை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று முத்திரை குத்தி நில் என்று ஒதுக்கி வைக்காதீர்கள். இதனால் மந்தம் அவர்களை நிரந்தரமாகச் சொந்தமாக்கிக் கொள்ளும்!

Comments

Popular posts from this blog

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும் 1. முதல் சில மாதங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி & வயிற்றுப்போக்கு (Vomiting & Diarrhoea): Vomiting & Diarrhoea குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானவை. முதல் Step குழந்தைக்கு கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரைச் சிறிது கொடுக்கலாம். (or) feed of பால் கொடுப்பதை நிறுத்தலாம். பால் கொடுப்பதற்கு பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை செய்து கொடுக்கலாம். பாலைக் கொதிக்க வைத்து அதில் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை விடவும். பாலிலிருந்து தண்ணீர் தனியாகவும் Paneer தனியாகவும் பிரிந்து விடும். இதை வடிகட்டி அந்த நீரை மட்டும் இடைவெளி விட்டு கொடுத்து வரலாம். (or)  (i) 200ml தண்ணீர் (ii) 2 tsp சர்க்கரை  (iii) 1 tsp உப்பு  (iv) அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு (v) ½ tsp Soad bicarb (cooking soda) இவற்றைக் கலந்து அடிக்கடி கொடுத்து வரலாம். குழந்தை dehydration ஆகாமல் தடுப்பதற்கு இது மிகவும் உதவும். குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் பாத்திரங்களை மிகவும் சுத்தமாக உபயோகப்படுத்தல் அவசியம். (2)...

What is the natural remedy for body pain?

What is the natural remedy for body pain? A Comprehensive Guide If you have ever experienced body pain, you know how uncomfortable and frustrating it can be. Body pain can occur for a variety of reasons, including injury, illness, or chronic conditions. While over-the-counter pain relievers can provide temporary relief, they often come with unwanted side effects. Fortunately, there are natural remedies that can help relieve body pain without the risks associated with medications. In this article, we will explore the various natural remedies for body pain and how they work. Understanding Body Pain Before we dive into the natural remedies, it's important to understand what causes body pain. Body pain can be acute or chronic, and it can be caused by a variety of factors. Acute pain is usually caused by injury, such as a sprained ankle or pulled muscle. Chronic pain, on the other hand, is pain that persists for more than three months and is often caused by conditions such as arthritis ...