Skip to main content

Google ads

உடல் எடையை குறைக்க கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்!

 பூமிக்குப் பாரமாகவும், சோற்றிற்குக் கேடாகவும் இருக்கிறார்கள் என்று ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் வேலை இல்லாத வாலிபர்களைப் பற்றிக் கூறுவார்கள் பெரியவர்கள்.

ஆனால் இப்போது பூமிக்கு மட்டும் பாரமாக இல்லை. சுமந்துகொண்டு தங்களுக்கே பாரமான உடலை வைத்துக் கொண்டு பலர் வாழ்கிறார்கள். இதற்குக் காரணம் உடல் எடையை வயதிற்கும், உயரத்திற்கும் தகுந்தபடி வளர்த்துக் கொள்ளாமல் அளவுக்குமீறிப் பெருக்கிக் கொண்டதுதான்.

சாதாரணமாக, வளரும் காலத்தில் ஆண்களும் பெண்களும் நன்றாகச் சாப்பிட்டு, ஓடி விளையாடி உடல் எடையைப் பெருக்கிக்கொள்கிறார்கள். இந்த வளர்ச்சி 16 வயதிலிருந்து 30, 40 வயது வரை நீடிக்கிறது. இவர்கள் தங்களையும் அறியாமல் உடல் எடையைப் பெருக்க வைத்துக் கொள்கிறார்கள். உடல் எடை பெருக்கத்தால் நடு வயதில்தான் பிரச்னையே எழுகிறது.

வயதுக்கு வந்த பெண்களும், மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களும் சில சமயம் உடல் எடை கூடுவதால் சிரமப்படுகிறார்கள்.

உடல் எடை கூடுவரற்குக் குடும்பப் பாரம்பரியம் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதுவும் ஓரளவு உண்மை என்றாலும் உணவைக் குறைத்து உழைப்பைப் பெருக்கி உடல் எடையைக் கட்டுப்படுத்தலாம்.


உடல் எடைக் கூடுதலுக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. உடம்பிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகளாலும், தைராய்டு சுரப்பி, பிட்யூட்டரி சுரப்பி, பால் இயல் சுரப்பிகளாலும் எடை கூடுகிறது. நம்முடைய மூளையிலுள்ள ஹைப்போதலமஸ் என்ற பகுதிதான் உடல் பெருக்கக் காரணமாக இருக்கிறது.

உடம்பின் சில பகுதிகளில் சதை கூடுவதைப் பார்க்கின்றோம். கழுத்து, தோள்பட்டை, இடுப்பு, தொடை, இதற்குக் காரணம் கொழுப்பு அதிகமான வயிற்று பகுதிகள். அளவில் இந்தப் பகுதியில் தங்கி இறுகிவிடுவதுதான். இவற்றைக் கரைக்க உணவைக் குறைத்து உழைப்பைப் பெருக்கினாலே போதும்.

வயது ஆண்கள் பெண்கள்
20 வயதில் 120 பவுண்டு 113 பவுண்டு
25 வயதில் 125 பவுண்டு 117 பவுண்டு
30 வயதில் 130 பவுண்டு 120 பவுண்டு
35 வயதில் 132 பவுண்டு 123 பவுண்டு
40 வயதில் 135 பவுண்டு 127 பவுண்டு
45 வயதில் 137 பவுண்டு 130 பவுண்டு
50 வயதில் 138 பவுண்டு 133 பவுண்டு

ஊளைச்சதை உருவ அழகைக் கெடுப்பதோடு நாம் அன்றாட வேலைகளைச் செய்யவும் தடையாக இருக்கிறது. அசௌகரியத்தைக் கொடுக்கிறது. செயல் வேகத்தை மந்தப் படுத்துகிறது. சிறிது உழைத்தாலும் வியர்வை சொட்டுகிறது. மூச்சு வாங்குகிறது. உடல் விரைவில் களைப்படைகிறது. எடை அதிகரிப்பதால் பல்வேறு நோய்களும் உண்டாகின்றன.

தொப்பை விழுகிறது. ஹெர்னியா நோய் உண்டாகிறது. நீரிழவு நோய், பித்தக் கற்கள், இருதய நோய், கொலஸ்டிரால் தொந்தரவு, இரத்த நாள நோய்கள், கீழ்வாதம், பிளட் பிரஷர், இன்னும் எத்தனையோ நோய்கள் உடல் பெருக்கத்தால், உடல் எடை கூடுவதால் வருகிறது. கடைசியில் மாரடைப்பு உண்டாகிறது.

இதனால் உடல் எடையைத் குறைக்கவேண்டும். எடையைக் குறைத்தால் எல்லா நோய்களும் பறந்துவிடும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

 இதற்கு என்ன வழி?

உடலின் எடையை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஓர் ஆண் 5 அடி உயரம் இருந்தால் 20 வயதில் எத்தனை பவுண்டு எடை இருக்கவேண்டும்? ஒரு பவுண்ட் 5 அடி உயரம் இருந்தால் 20 வயதில் எத்தனை பவுண்டு எடை இருக்கவேண்டும் ? என்று ஓர் அளவு உண்டு. இதைத் தெரிந்துகொள்வது பயனுள்ளது.

5 அடி உயரம் உள்ள ஓர் ஆண், அல்லது பெண் இந்த அளவில் சிறிது கூடவோ குறையவோ இருக்கலாம். ஆணுக்கோ பெண்ணுக்கோ 35 பவுண்டு அளவுக்கு மேல் போனால் ஆயுளில் 4 ஆண்டுகள் குறைந்துவிடும்,

உணவில் புரதச் சத்தைக் குறைக்க வேண்டும். கொழுப்புச் சத்தைச் குறைக்கவேண்டும். கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச் சத்தைக் குறைக்கவேண்டும். இதனால் உடல் எடை குறையும்.

நோய்களுக்கு விடை கொடுக்க குறையுங்கள்!

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும