Skip to main content

Google ads

எண்ணெய் தேய்த்து குளிப்பது நல்லதா ? கெட்டதா? -

 தமிழ்நாட்டு வழக்கம், மாதத்தில் ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களோ தலைக்கு எண்ணெய் தேய்த்துத் தலைமுழுகிக் கொள்வது. தலைமுறை தலைமுறையாக நடந்துவரும் தலைமுழுக்குப் பழக்கம் இப்போது குறைந்து கொண்டு வருகிறது.

வாழ்க்கையில் ஒரு விஷயம் தேவை என்று நாம் நினைக்கும்போது அது தேவையான காரியமாகிறது. தேவை இல்லை என்று நினைக்கும்போது அது தேவையற்றதாகிறது! ஆனால் உடல் நலத்திற்குத் தேவையாகும் போது ஏற்றுக் கொள்ள வேண்டியதுதானே!

எண்ணெய்த் தலைமுழுக்குத் தேவைதானா? என்ற கேள்வி, படித்தவர்கள் மத்தியில் ஒரு பெரும் சர்ச்சையை உண்டாக்கியிருக்கிறது. ஆங்கில வைத்தியர்கள் பலர் எண்ணெய்த் தலைமுழுக்கால் பயன் இல்லை என்கிறார்கள்.


 ஆனால் அதற்கு மாறாகச் சித்த வைத்தியர்களும், ஆயுர்வேத வைத்தியர்களும், எண்ணெய் முழுக்கு அவசியம்தான். இதனால் ஏராளமான நன்மைகளும் உண்டு என்று வாதித்துக்கொண்டு வருகிறார்கள்.

குளிர்ச்சி மிகுந்தது மேல்நாடு. வெப்பம் நிறைந்தது இந்திய நாடு. மேலைநாட்டார் குளிப்பதில்லை. இந்தியர்கள் குளிக்காமல் இருப்பதில்லை.

 வெம்மையின் கொடுமையைத் தணிக்க உச்சி குளிர நல்லெண்ணெயையோ அல்லது தேங்காய் எண்ணெயையோ தலைக்குத் தடவிக் கொண்டும். உடல் முழுவதும் தேய்த்துக்கொண்டும் ஊறவைத்து, சூரிய ஒளியில் சிறிது நேரம் நின்ற பிறகு குளிக்கிறார்கள். 

சிகைக்காய் அல்லது அரப்புத்தூள் தேய்த்து எண்ணெய்ப் பிசுபிசுப்பைப் போக்கி நீராடுகிறார்கள். கிராமத்து மக்கள் ஆறு குளங்களிலும், நகரத்து மக்கள் குளியல் அறையில் தண்ணீரோ, வெந்நீரோ ஊற்றிக் குளிக்கிறார்கள். இப்படிக் குளிப்பதிலே ஒரு சுகம் இருப்பதாகவும் நம்புகிறார்கள்.

மண்டை ஓடு தலையில் தேய்க்கும் எண்ணெய்யை ஈர்த்துக்கொள்வதில்லை. இதனால் மூளை குளிர்ச்சி அடைகிறது என்ற வாதமே தவறு என்கிறார்கள் டாக்டர்கள். 

உடம்பிலுள்ள வியர்வைத் துவாரங்கள் எண்ணெய்ப் பிகபிசுப்பால் அடைத்துக் கொள்கின்றன. உடம்பின் உள்ளே எண்ணெய் செல்வதில்லை. மேலும் நமது சருமத் துவாரங்கள் ஒரு வழிப்பாதையாக அமைந்திருக்கின்றன. உள்ளே இருக்கும் வியர்வை வெளியே வருமே தவிர, வெளியிலிருக்கும் நீர்ப் பொருள் உள்ளே செல்ல வாய்ப்பில்லை என்கிறார்கள்.

தமிழகத்தில், இந்தியாவில் சித்தர்களும், ஆயுர்வேத வைத்திய நிபுணர்களும் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே எண்ணெய்க் குளியல்களால் ஏராளமான நன்மைகளை இந்த உடல் பெற்றுக்கொண்டு பயனடைந்து வந்திருப்பதாக ஆதாரம் காட்டுகிறார்கள். 

தமிழர்கள் 'சனி நீராடு' என்று மருத்துவ யோசனைகளைக் கூறினார்கள். வாரம் இரண்டு நாட்கள் எண்ணெய்யால் தலைமுழுகு என்கிறார்கள். ஆண்கள் புதன், சனிக்கிழமைகளிலும், பெண்கள் செவ்வாய். வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் முழுக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என்று உடல் வறட்சிக்கு வழி கூறினார்கள். 

வைத்தியனுக்குக் கொடுப்பதை வாணியனுக்குக் கொடு. உடல் நலம் பெருகும் என்று பழமொழியினால் பாதை வகுத்துக் காட்டினார்கள்.



எண்ணெய் முழுக்கு ஆரோக்கியத்தின் திறவுகோல். நாள் இரண்டு, வாரம் இரண்டு, மாதம் இரண்டு, ஆண்டு இரண்டு என்று இரட்டை விரல்களைக் காட்டினார்கள்.

 தினசரி இர முறை மலம் கழிக்கவும், வாரத்தில் இரண்டு நாட்கள் எண்ணெய்க் குளியல் எடுக்கவும், மாதத்தில் இரண்டு நாட்கள் தாம்பத்தியம் கொள்ளவும், ஆண்டில் இரண்டு முறை குடலைச் சுத்தம் செய்துகொள்ள பேதி மருந்து சாப்பிடவும் நம் முன்னோர் நெறிமுறைகளை வகுத்தார்கள்.

சித்த, ஆயுர்வேத முறைகளில் சுமார் 37 தைல முறைகள் கூறப்பட்டிருக்கின்றன. இவற்றுள் சில உள் மருந்தாகவும், சில வெளிப்பூச்சு மருந்தாகவும் மூலிகைச் சாறுகளை எண்ணெயுடன் கலந்து தேய்த்துக் குளித்தால் நோய்கள் அணுகாது என்றும் சொல்கிறார்கள்.

 உடல் வெப்பத்தால் பல நோய்கள் உண்டாகின்றன. எண்ணெய்க் குளியல் வெப்பத்தைப் போக்கி, கண்களுக்குக் குளிர்ச்சியை உண்டாக்குவதாகப் பல மூலிகைத் தைலங்களை அறிமுகம் செய்து அவற்றின் செய் முறைகளையும் கூறிச் சென்றார்கள்.

தலையில் உண்டாகும் வியர்வை சிக்குகளைப் போக்கவும், சீபம் என்று சொல்லப்படும் நச்சுப்பொருளை அகற்றவும், மூட்டுவாதம் பக்கவாதம், பீனிசம், ஒற்றைத் தலைவலிகளைப் போக்கவும், நல்ல உறக்கம் உண்டாகவும் உடல் புத்துணர்ச்சி பெறவும் தைல முறைகளை உண்டாக்கிக் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆங்கில வைத்தியமுறை டாக்டர்களும் ஏற்றுக்கொள்ளும் முறையில் தைலங்களை இப்போது நடைமுறைக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள்.

 மேல் நாட்டிலும் எண்ணெய்க் குளியல் முறைகளால் பயன் உண்டு என்று ஆய்வு செய்யப்பட்டு நீராவிக் குளியல், சூரிய ஒளிக்குளியல் சில நேரங்களில் மூலிகை எண்ணெய்களை மசாஜ் செய்து தேய்த்துக்கொண்டு அதன் பயன்களைப் பெற்று வருகிறார்கள்.

உடல் சூடு தணிய சீந்தில் கொடித் தைலம், நெல்லித் தைலம், அருகம்புல் தைலம், கீழாநெல்லித் தைலம், கரிசலாங்கண்ணித் தைலம் ஆகியவற்றால் கண்களுக்குக் குளிர்ச்சியும் ஏற்படுவதாக இந்த எண்ணெய்த் தலை முழுக்கு மூலம் பயனடைந்தவர்கள் கூறுகிறார்கள்.

சித்தர்களும், முனிவர்களும் கையாண்ட மருத்துவ முறைகள் இப்போது ஆய்வு செய்யப்பட்டு மேலை நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் கொஞ்சங் கொஞ்சமாக ஏற்றுக்கொண்டு வருகிறார்கள். ஆங்கில மருத்துவ முறைகளை ஏற்றுக்கொண்ட டாக்டர்களும் இப்போது ஒப்புக்கொண்டு வருகிறார்கள்.

எண்ணெய்த் தலைமுழுக்கு பயனில்லாதது என்று சொல்லிவிட முடியாது. வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள் சித்த மருத்துவர்களையும், ஆயுர்வேத மருத்துவர்களின் ஆலோசனைகளின்படி முறையோடு தலை முழுகினால் பயன் உண்டு. 

ஆங்கில மருத்துவத்தில் அதீதப் பற்றுக் காரணமாக, தமிழ் வைத்திய முறைகளை அடியோடு தலைமுழுகி விடாதீர்கள். சாமானியப்பட்டவர்கள் அல்லர்!

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும