Skip to main content

Google ads

புளுராசிஸ்- எனும் ஒருவகைப் பல்நோய்/அறியாத தகவல்கள்- Medical Tamizha

வாழ்க்கையில் சில மனிதர்களைப் பார்க்கிறோம். இவர்களுக்கு நேராக இருக்கவேண்டிய கால்கள், கைகள் வளைந்து போய் இருக்கும். நடக்கும் போது முட்டிக் கால்கள் ஒன்றோடொன்று உரசும். இதுவும் ஒருவகை உடல் ஊனம்தான். மூட்டு நோய்களால் ஏற்படும் கோளாறுதான்.

உறுப்புக்களில் இப்படி ஒரு வளைவை உண்டாக்கு வது ஒரு நோயின் விளைவு என்பது பலருக்கும் தெரிவதில்லை. இந்த நோயைப் புளூராசிஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறார்கள்.

இந்த நோய் மனிதனுக்குள்ளே முடங்கிக் கிடந்து காலமெல்லாம் அச்சமூட்டிக்கொண்டே இருக்கும். இதனால் உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் எலும்புத் தொடர்பான அங்கக் குறைவுகளை ஏற்படுத்தி உருவ அமைப்புக்களைப் பரிகசிக்கும்படி செய்து விடுகின்றது.

புளூராசிஸ் நோய் பத்து வயதுக்காரர்களை மடக்குகிறது.எப்படி?

பல் புளூராசிஸ் நோய் சிறுவர்-சிறுமியர்களின் பற்களைத் தாக்க ஆரம்பிக்கிறது.பற்களில் மஞ்சள் நிறக் கறையை உண்டாக்கிக் கடைசியில் கறுப்பு நிறத்தைப் படர விட்டு உறுதியான பற்களை உருக்குலைத்துவிடுகிறது.


புளூராசிஸ் நோய் மனிதனை மட்டும் தாக்குவதில்லை.

ஆடு,மாடுகள், எலி, மீன் ஆகியவற்றையும் தாக்கும். பிராணிகளின் பற்களைக் கறைப்படுத்தி நச்சுத் தன்மையை உண்டாக்கி சிறு அளவில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது.

புளூராசிஸ் நோய்க்கு அடிப்படைக் காரணம் குடிநீர்தான். குடிநீரில் புளோரைடு அயனியின் அளவு அதிகமானால் இந்த நோய் உண்டாகிறது. புளோரைடு எந்த அளவில் தண்ணீரில் கலந்திருக்கலாம் என்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள்.

ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மில்லி கிராம் புளோரைடு கலந்திருக்கலாம். இதனால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. இந்த அளவுக்கு மேற்பட்டால் பற்களில் பல் புளூராசிஸ் நோயும் மற்றும் சில தொந்தரவுகளும் உண்டாகின்றன.

ஹைட்ரோ புளோரிக் அமில வாயு மூலமாக புளூரைடு அயனி காற்றில் கலந்துவிடுவதாலும் நமக்குத் தீமைகள் உண்டாகின்றன.

நர் உணவுப் பண்டங்களிலும் புளோரைடு கலந்திருக் கிறது என்றாலும் இது செரிக்கப்பட்டுக் கழிவுப் பொருளாக வெளியே வந்துவிடுகிறது.

குடிநீரில் கலந்த புளோரைடு மட்டுமே இரத்தத்துடன் கலப்பதால் எலும்பு மூட்டுக்களில் பாதிப்பு ஏற்படுகிறது.

நாம் உபயோகிக்கும் பற்பசைகளில் புளோரைடு கலந்திருக்கிறதே, இதனால் பற்களும் பாதிப்பு உண்டாகாதா என்று நினைக்கலாம்.

இதில் அளவோடு கலந்திருப்பதால் பெரும்பாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை.

எலும்புகளிலும் மூட்டுக்களிலும் இந்த நோய் ஒரு முறை ஏற்பட்டு விட்டால் பிறகு குணப்படுத்துவது கஷ்டம் என்று சொல்லுகிறார்கள்.

இதனால் பற்களில் கறை படிந்திருந்தால் பல் டாக்டரிடம் சோதனை செய்து கொண்டு அதை நீக்க வழிசெய்ய வேண்டும்.

அடுத்து மூட்டு வாத நிபுணர்களிடம் சோதனை செய்து கொண்டு உடனே சிகிச்சை செய்து கொண்டால்  இந்நோய் தோன்றாமல் தடுக்கலாம், அல்லது பாதிப்பைக் குறைக்கலாம்.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...