Skip to main content

Google ads

புளுராசிஸ்- எனும் ஒருவகைப் பல்நோய்/அறியாத தகவல்கள்- Medical Tamizha

வாழ்க்கையில் சில மனிதர்களைப் பார்க்கிறோம். இவர்களுக்கு நேராக இருக்கவேண்டிய கால்கள், கைகள் வளைந்து போய் இருக்கும். நடக்கும் போது முட்டிக் கால்கள் ஒன்றோடொன்று உரசும். இதுவும் ஒருவகை உடல் ஊனம்தான். மூட்டு நோய்களால் ஏற்படும் கோளாறுதான்.

உறுப்புக்களில் இப்படி ஒரு வளைவை உண்டாக்கு வது ஒரு நோயின் விளைவு என்பது பலருக்கும் தெரிவதில்லை. இந்த நோயைப் புளூராசிஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறார்கள்.

இந்த நோய் மனிதனுக்குள்ளே முடங்கிக் கிடந்து காலமெல்லாம் அச்சமூட்டிக்கொண்டே இருக்கும். இதனால் உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் எலும்புத் தொடர்பான அங்கக் குறைவுகளை ஏற்படுத்தி உருவ அமைப்புக்களைப் பரிகசிக்கும்படி செய்து விடுகின்றது.

புளூராசிஸ் நோய் பத்து வயதுக்காரர்களை மடக்குகிறது.எப்படி?

பல் புளூராசிஸ் நோய் சிறுவர்-சிறுமியர்களின் பற்களைத் தாக்க ஆரம்பிக்கிறது.பற்களில் மஞ்சள் நிறக் கறையை உண்டாக்கிக் கடைசியில் கறுப்பு நிறத்தைப் படர விட்டு உறுதியான பற்களை உருக்குலைத்துவிடுகிறது.


புளூராசிஸ் நோய் மனிதனை மட்டும் தாக்குவதில்லை.

ஆடு,மாடுகள், எலி, மீன் ஆகியவற்றையும் தாக்கும். பிராணிகளின் பற்களைக் கறைப்படுத்தி நச்சுத் தன்மையை உண்டாக்கி சிறு அளவில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது.

புளூராசிஸ் நோய்க்கு அடிப்படைக் காரணம் குடிநீர்தான். குடிநீரில் புளோரைடு அயனியின் அளவு அதிகமானால் இந்த நோய் உண்டாகிறது. புளோரைடு எந்த அளவில் தண்ணீரில் கலந்திருக்கலாம் என்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள்.

ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மில்லி கிராம் புளோரைடு கலந்திருக்கலாம். இதனால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. இந்த அளவுக்கு மேற்பட்டால் பற்களில் பல் புளூராசிஸ் நோயும் மற்றும் சில தொந்தரவுகளும் உண்டாகின்றன.

ஹைட்ரோ புளோரிக் அமில வாயு மூலமாக புளூரைடு அயனி காற்றில் கலந்துவிடுவதாலும் நமக்குத் தீமைகள் உண்டாகின்றன.

நர் உணவுப் பண்டங்களிலும் புளோரைடு கலந்திருக் கிறது என்றாலும் இது செரிக்கப்பட்டுக் கழிவுப் பொருளாக வெளியே வந்துவிடுகிறது.

குடிநீரில் கலந்த புளோரைடு மட்டுமே இரத்தத்துடன் கலப்பதால் எலும்பு மூட்டுக்களில் பாதிப்பு ஏற்படுகிறது.

நாம் உபயோகிக்கும் பற்பசைகளில் புளோரைடு கலந்திருக்கிறதே, இதனால் பற்களும் பாதிப்பு உண்டாகாதா என்று நினைக்கலாம்.

இதில் அளவோடு கலந்திருப்பதால் பெரும்பாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை.

எலும்புகளிலும் மூட்டுக்களிலும் இந்த நோய் ஒரு முறை ஏற்பட்டு விட்டால் பிறகு குணப்படுத்துவது கஷ்டம் என்று சொல்லுகிறார்கள்.

இதனால் பற்களில் கறை படிந்திருந்தால் பல் டாக்டரிடம் சோதனை செய்து கொண்டு அதை நீக்க வழிசெய்ய வேண்டும்.

அடுத்து மூட்டு வாத நிபுணர்களிடம் சோதனை செய்து கொண்டு உடனே சிகிச்சை செய்து கொண்டால்  இந்நோய் தோன்றாமல் தடுக்கலாம், அல்லது பாதிப்பைக் குறைக்கலாம்.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும