Skip to main content

Google ads

புளுராசிஸ்- எனும் ஒருவகைப் பல்நோய்/அறியாத தகவல்கள்- Medical Tamizha

வாழ்க்கையில் சில மனிதர்களைப் பார்க்கிறோம். இவர்களுக்கு நேராக இருக்கவேண்டிய கால்கள், கைகள் வளைந்து போய் இருக்கும். நடக்கும் போது முட்டிக் கால்கள் ஒன்றோடொன்று உரசும். இதுவும் ஒருவகை உடல் ஊனம்தான். மூட்டு நோய்களால் ஏற்படும் கோளாறுதான்.

உறுப்புக்களில் இப்படி ஒரு வளைவை உண்டாக்கு வது ஒரு நோயின் விளைவு என்பது பலருக்கும் தெரிவதில்லை. இந்த நோயைப் புளூராசிஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறார்கள்.

இந்த நோய் மனிதனுக்குள்ளே முடங்கிக் கிடந்து காலமெல்லாம் அச்சமூட்டிக்கொண்டே இருக்கும். இதனால் உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் எலும்புத் தொடர்பான அங்கக் குறைவுகளை ஏற்படுத்தி உருவ அமைப்புக்களைப் பரிகசிக்கும்படி செய்து விடுகின்றது.

புளூராசிஸ் நோய் பத்து வயதுக்காரர்களை மடக்குகிறது.எப்படி?

பல் புளூராசிஸ் நோய் சிறுவர்-சிறுமியர்களின் பற்களைத் தாக்க ஆரம்பிக்கிறது.பற்களில் மஞ்சள் நிறக் கறையை உண்டாக்கிக் கடைசியில் கறுப்பு நிறத்தைப் படர விட்டு உறுதியான பற்களை உருக்குலைத்துவிடுகிறது.


புளூராசிஸ் நோய் மனிதனை மட்டும் தாக்குவதில்லை.

ஆடு,மாடுகள், எலி, மீன் ஆகியவற்றையும் தாக்கும். பிராணிகளின் பற்களைக் கறைப்படுத்தி நச்சுத் தன்மையை உண்டாக்கி சிறு அளவில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது.

புளூராசிஸ் நோய்க்கு அடிப்படைக் காரணம் குடிநீர்தான். குடிநீரில் புளோரைடு அயனியின் அளவு அதிகமானால் இந்த நோய் உண்டாகிறது. புளோரைடு எந்த அளவில் தண்ணீரில் கலந்திருக்கலாம் என்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள்.

ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மில்லி கிராம் புளோரைடு கலந்திருக்கலாம். இதனால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. இந்த அளவுக்கு மேற்பட்டால் பற்களில் பல் புளூராசிஸ் நோயும் மற்றும் சில தொந்தரவுகளும் உண்டாகின்றன.

ஹைட்ரோ புளோரிக் அமில வாயு மூலமாக புளூரைடு அயனி காற்றில் கலந்துவிடுவதாலும் நமக்குத் தீமைகள் உண்டாகின்றன.

நர் உணவுப் பண்டங்களிலும் புளோரைடு கலந்திருக் கிறது என்றாலும் இது செரிக்கப்பட்டுக் கழிவுப் பொருளாக வெளியே வந்துவிடுகிறது.

குடிநீரில் கலந்த புளோரைடு மட்டுமே இரத்தத்துடன் கலப்பதால் எலும்பு மூட்டுக்களில் பாதிப்பு ஏற்படுகிறது.

நாம் உபயோகிக்கும் பற்பசைகளில் புளோரைடு கலந்திருக்கிறதே, இதனால் பற்களும் பாதிப்பு உண்டாகாதா என்று நினைக்கலாம்.

இதில் அளவோடு கலந்திருப்பதால் பெரும்பாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை.

எலும்புகளிலும் மூட்டுக்களிலும் இந்த நோய் ஒரு முறை ஏற்பட்டு விட்டால் பிறகு குணப்படுத்துவது கஷ்டம் என்று சொல்லுகிறார்கள்.

இதனால் பற்களில் கறை படிந்திருந்தால் பல் டாக்டரிடம் சோதனை செய்து கொண்டு அதை நீக்க வழிசெய்ய வேண்டும்.

அடுத்து மூட்டு வாத நிபுணர்களிடம் சோதனை செய்து கொண்டு உடனே சிகிச்சை செய்து கொண்டால்  இந்நோய் தோன்றாமல் தடுக்கலாம், அல்லது பாதிப்பைக் குறைக்கலாம்.

Comments

Popular posts from this blog

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும் 1. முதல் சில மாதங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி & வயிற்றுப்போக்கு (Vomiting & Diarrhoea): Vomiting & Diarrhoea குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானவை. முதல் Step குழந்தைக்கு கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரைச் சிறிது கொடுக்கலாம். (or) feed of பால் கொடுப்பதை நிறுத்தலாம். பால் கொடுப்பதற்கு பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை செய்து கொடுக்கலாம். பாலைக் கொதிக்க வைத்து அதில் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை விடவும். பாலிலிருந்து தண்ணீர் தனியாகவும் Paneer தனியாகவும் பிரிந்து விடும். இதை வடிகட்டி அந்த நீரை மட்டும் இடைவெளி விட்டு கொடுத்து வரலாம். (or)  (i) 200ml தண்ணீர் (ii) 2 tsp சர்க்கரை  (iii) 1 tsp உப்பு  (iv) அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு (v) ½ tsp Soad bicarb (cooking soda) இவற்றைக் கலந்து அடிக்கடி கொடுத்து வரலாம். குழந்தை dehydration ஆகாமல் தடுப்பதற்கு இது மிகவும் உதவும். குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் பாத்திரங்களை மிகவும் சுத்தமாக உபயோகப்படுத்தல் அவசியம். (2)...

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந...