Skip to main content

Google ads

வயிற்றில் ஏற்படும் எரிச்சலை போக்கும் வழிமுறைகள்

 நாம் Blow jaundice உணவு ஜீரணிப்பதற்காக இரைப்பையில் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உற்பத்தியாகிறது.

இதுபோலவே பித்த நீர்ப்பையில் பித்த நீர் சுரக்கிறது. இது கொழுப்புப் பொருட்களைக் கரைக்க உதவுகிறது. இந்த அமிலத்தால் அல்லது பித்த நீரால் இரைப்பையின் மெல்லிய ஜவ்வு பாதிக்கப்படலாம். புண்ணும் உண்டாகலாம்.

நாம் உண்ணும் உணவில் காரம், புளி, மசாலாப் பொருட்கள் அதிகமாகச் சேர்ந்தால் வயிற்றில் புண் உண்டாகும்.

புகை பிடிப்பது, மது அருந்துவது, இவற்றாலும் வயிற்றில் புண் உண்டாக இடம் உண்டு.

வலி போக்கும் சில மருந்துகள் வயிற்றில் கோளாறுகளை உண்டாக்குகின்றன.

நம் மனத்தில் ஏற்படும் கவலை, கோபம், பரபரப்பு ஆகிய உணர்ச்சிகளால் நரம்பு பாதிக்கப்படுகிறது. அமிலம் அதிகமாக ஊற்றெடுக்கக் காரணமாகிறது.

இதனாலும் வயிற்றில் புண் ஏற்படும்.இது தவிர, வயிறு முட்டச் சாப்பிடுவதாலும், வயிற்றைக் காலியாகப் போடுவதாலும் வயிற்றில் புண் உண்டாகும். எந்தக் காரணத்தால் வயிற்றில் புண் ஏற்பட்டாலும்

அது இரைப்பையைத் துளைத்துவிடும். சிலருக்கு இரைப்பையில் அடைப்பும் உண்டாகலாம். புண் காலப் போக்கில் புற்று நோயாகவும் மாறும்.

உண்ணும் உணவினால் மட்டும் வயிற்றுக்குக் கேடு வருவதில்லை.




உள்ளத்தின் உணர்ச்சிகளாலும் வயிற்றுக்குக் கேடு உண்டாகிறது.

இந்தக் கேடுகளில் மொத்த உருவம் வயிற்றில் வலி,ஒருவித எரிச்சல்.பெரும்பாலும் வயிற்றில் புண், குடலில் புண் இவை உண்டாகும்போது வயிற்றில் எரிச்சல் உண்டாகிறது.

 இரைப்பை - சிறுகுடலின் ஜவ்வுகள் அரிக்கப்படுவதால் வலியும், அமிலம் அதில் படும்போது எரிச்சலும் நோயாகவும் மாறும்.

அடிவயிற்றைப் பிசைவது போன்ற உபத்திரவம் உண்டாகிறது. உபத்திரவத்திற்குக் காரணமே அதிகமாகச் சுரக்கும் திரவம்தான்.

இந்தத் திரவம் இரைப்பையில் குழிப்புண்ணும், சிறு குடலில் குழிப்புண்ணும் தோன்றுவதற்கு மூலகாரணம்.

தொப்புளைச் சுற்றி வலி முதலில் ஆரம்பமாகும். பிறகு வலப் பக்கத்தில் வலி எடுக்கும். வலி தொடர்ந்து வராமல் விட்டு விட்டு வரும். இந்த நேரத்தில் வாந்தி எடுத்தால் இரத்தம் வரும். மலத்தின் நிறம் கறுப்பாக இருக்கும்.

வேகஸ் நரம்புகளும், பெப்சின் நொதியும் சூடேறுவதால் வயிற்றில் எரிச்சல் உண்டாகும். இவற்றைக் குளிர வைத்தால் வலி நிற்கும். எரிச்சல் மறையும்.இதற்குப் புதிய புதிய மருந்துகள் இப்போது வந்திருக்கின்றன.

வயிற்றில் வந்திருப்பது இரைப்பைப் புண்ணா,சிறு குடல் புண்ணா என்று அறிந்து கொள்ள எண்டார்ஸ்கோப் என்னும் நவீனக் கருவியை வாய்வழியாக விட்டு இதோடு இணைக்கப்பட்ட குழாய் மூலம் கவனித்துக் கண்டுபிடிக் கிறார்கள்.

இந்த இடங்களை உள்ளது உள்ளபடி போட்டோ எடுத்தும் பார்க்கலாம். உள்ளே என்ன கோளாறு என்று அந்த இடத்திலுள்ள திசுக்களைச் சுரண்டி எடுத்து பயாப்சி செய்தும் கண்டறி கிறார்கள்.

இந்தப் புண் பெப்டிக் அல்சரா, அல்லது டியாடெனல் அல்சரா என்றும் கண்டுபிடிக்க இந்தக் கருவிகள் உதவு கின்றன.

வயிற்று எரிச்சலை போக்க என்னென்ன செய்ய வேண்டும் ?

  1. வயிற்றில் எரிச்சலைத் தூண்டுவது வயிற்றுப் புண் என்பதால் இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் காப்பி குடிப்பதை நிறுத்திவிட வேண்டும்.
  2.  காப்பியிலுள்ள காஃபின் விஷம் ஹைட்ரோகுளோரிக் அமிலத்தை அதிகமாகச் சுரக்க உதவுகிறது. ஆகவே இந்தப் பழக்கத்தை நிறுத்திவிட்டுப் பால் நிறையக் குடிக்க வேண்டும். 
  3. வயிறு காலியாக இருக்கும்போது சிலர் சிகரெட்டை ஊதித்தள்ளுவார்கள். இதுவும் தவறு. 
  4. புரதப்பொருள் நிறைத் தயிர், முட்டை இவைகளைச் சாப்பிடவேண்டும். பாலுடன் தேன் கலந்து சாப்பிட வேண்டும். 
  5. வயிற்றில் எரிச்சலைத் தூண்டும் மிளகாய், மிளகு, கடுகு, ஊறுகாய் ஆகியவற்றைக் கொஞ்ச காலத்திற்கு ஒதுக்கிவைப்பது நல்லது. 
  6. அதிகச் சூடான ஆகாரங்களையும் அதிகக் குளிர்ச்சியான ஆகாரங்களையும் சாப்பிடக்கூடாது. உடலுக்கும் மனத்திற்கும் நல்ல ஓய்வு கொடுக்க வேண்டும். மனத்தால் எந்தக் காரியத்திற்கும் எரிச்சல் படாதீர்கள். 
  7. உடலுக்கு எரிச்சல் தரும் உணவு வகைகளைச் சாப்பிடாதீர்கள்.

இந்த இரண்டையும் கடைப்பிடித்தால் வயிற்றின் எரிச்சலைப் போக்கலாம்!

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும