Skip to main content

Google ads

காய்கறிகளை சமைப்பதால் சத்துக்கள் குறைகிறதா?

 ஓர் ஆங்கிலப் பழமொழி சொல்லுவார்கள். 'மனிதனை இறைவன் படைத்தான். சமயலைச் சாத்தான் 'படைத்தான்,' என்று நாவுக்கு ருசியாக இருக்கவும் மூக்குக்கு மணத்தைத் தரும் ஏலம் பட்டைக் கிராம்புப் பொருள்களையும், கண்களுக்கு அழகாக இருக்கச் சில இராசாயன பொருள்களையும் சேர்த்துச் சமைத்துவைப்பது தான் சாத்தானின் வேலை. இப்படிச் சமைப்பதால் ஆரோக்கியத்தை மனிதன் இழக்கிறான்.

இதையும் படிக்க :  பேதி மருந்து சாப்பிடுவது உடம்புக்கு நல்லதா? கெட்டதா ?

உடல் ஆரோக்கியத்திற்காக உணவு ஏற்பட்டது. உடல் நலத்தைக் கெடுத்துக் கொள்ள அல்ல. நாம் உண்ணும் உணவு எளிதாகச் சீரணிக்கவேண்டும். உடல் உறுப்புகளுக்குக் கேடு தரக்கூடாது, அந்நியப்பொருள்கள் அனாவசியமாக உள்ளே போகக்கூடாது. கவனமாகச் சமைத்து உண்ணும் உணவுதான் உடலுக்குச் சக்தி அளிக்கிறது, சத்துணவாகவும் மாறுகிறது.




பச்சை காய்கறி, கீரைகள். கிழங்குகளில் இயற்கையாக அமைந்த ஹைட்ரோலிஸ் என்று சொல்லப்படும் நீர்க் குணம், சமைப்பதால் மாறிவிடுகிறது. சமைப்பதால் காய்கறிகளில் உள்ள ஜீவ சத்துக்கள் அழிந்து விடுகின்றன. என்றும் வறுத்த, பொரித்த, தாளித்த உணவு வகைகள் அமில குணத்தைப் பெறுகின்றன என்றும் இயற்கை வைத்தியர்கள் கூறுகிறார்கள்.

உணவை ருசியாகச் சாப்பிடவேண்டும் என்ற எண்ணம் பொதுவாக எல்லோரிடத்திலும் உண்டு. இதனாக சமையல் துறையில் புதிய நூல்கள் எழுதப்பட்டு அதிகமாக விற்பனையாகிக் கொண்டு வருகின்றன. வெளி மாநிலத்தார் என்ன வகைகளை எப்படிச் சமைக்கிறார்கள். 

இதையும் படிக்க : எண்ணெய் தேய்த்து குளிப்பதால் உடலுக்கு தீமை ஏற்படுமா?

அதைப்போலவே நாமும் சமைத்து உண்ணவேண்டும் என்று ஆசை இப்போது மக்களிடத்தில் அதிகமாகப் பரவிவருகிறது. இதனால் ஆந்திர, கேரள, கன்னடச் சமையள்களையும் தாண்டி வடநாடு. மேற்கு நாடுகளின் சமையல் முறைகளையும் செய்து சாப்பிடுகிறார்கள்.

எந்த உணவாக இருந்தாலும் எளிதில் ஜீரணமாகக் கூடிய வகையில் உணவைச் சாப்பிடுவதில் தவறில்லை. அது, சத்துப் பொருள்கள் நிறைந்த உணவாக இருந்துவிட்டால் மிக நல்லது. உடலுக்குக் கேடுதரும் அமைந்துவிட்டால் என்ன செய்வது? உணவாக

ஆகவே காய்கறிகள், கீரைகள், கிழங்குகள், தானியங்களை எப்படிச் சமைத்து சாப்பிட்டால் நல்லது, எதில் சத்துப்பொருள் உண்டு, எதில் சத்து இல்லை ஆகியவற்றை நன்கு தெரிந்து கொள்வது நல்லது.

கீரை வகைகளிலும் முட்டைக்கோசிலும் பச்சை நிறமுள்ள பகுதியில்தான் ஊட்டச்சத்து அதிகம் இருக்கிறது. வெள்ளையாகத் தோன்றும் பகுதியில் சத்தில்லை. இதனால் முட்டைகோசின் உட்பகுதியை அதிகமாகச் சாப்பிட வேண்டும். 

இதில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. உருளைக்கிழங்கைத் தோலுடன் வேகவைத்தால் தோலில் உள்ள வைட்டமின் சி-சத்து நமக்குக் கிடைக்கிறது. சமைத்த பிறகு தோல் உரித்துச் சாப்பிடுவது நல்லது. கிழங்குகளை உடனுக்குடன் சமைத்துச் சாப்பிடுவது நல்லது, 

உடனே சமைக்க முடியாவிட்டால் அதை நறுக்கி உப்புப் போட்டுத் தண்ணீரில் கழுவி ஈரத் துணிகளில் மூடிவைப்பது நல்லது. குளிர் சாதனப் பெட்டி உள்ளவர்கள் அதில் வைத்துப் பாதுகாக்கலாம். 

இதையும் படிக்க : அடிக்கடி உணர்ச்சி வசப்படுவது நல்லதா ? கெட்டதா ?

கிழங்குகளில் உள்ள செல். தோல் நீக்கப்படும்போது வெளிவரும் என்சைம் வைட்டமின் • சி-யை அழித்துவிடுகிறது. காய்கறிகளை நறுக்கி உடனே வெந்நீரில் போட்டால் என்சைம் சத்து அழிந்து விடுகிறது.

சமைப்பதால் வைட்டமின் சத்துக்கள் முழுவதும் அழிந்துவிடுவதாகச் சொல்லப்படுகிறது. அதை ஏற்றுக் கொள்ள முடியாது. வைட்டமின் நஷ்டமடைகிறது என்பது மட்டும் உண்மை. சமைப்பதால் நன்மைகளும் உண்டு என்பதை மறந்துவிடக்கூடாது.

காய்கறிகளில் உள்ள மாவுப் பொருள்களும் கரிப் பொருள்களும் சமைக்கும்போது வரவேற்கத்தக்க மாறுதலை அடைகின்றன. மாவுப் பொருள்கள் எளிதில் ஜீரணமாகும் படி டெக்ஸ்டரின் என்று ஆகிறது. 

மீதி கரையும் பொருளாகிறது. இதனால் ஜீரண வேலை சுலபமாக நடக்கிறது. காரெட் கிழங்கில் உள்ள வைட்டமின் சத்து சமைப்பதால் அழிகிறது.

காய்கறிகளில், பழங்களில் உள்ள சர்க்கரை வெகு எளிதில் ஜீரணமாகிறது அமிலப் பழங்களில் உள்ள சர்க்கரை குளுகோஸாக மாறுகிறது. நோயாளிகளுக்கு குளுகோசைத் தண்ணீரில் கரைத்துக் கொடுக்கிறோம். அதுபோல் குளுகோஸ் சத்து கொள்ளப்படுகிறது. உடலில்

அப்படியே ஏற்றுக் சமைப்பதால் கனிம உறுப்புக்கள் நஷ்டம் அடைவதில்லை. வைட்டமின் சி-யும் வைட்டமின் பி-யும்தான் பாதிக்கப்படுகின்றன. என்றாலும் அதிக நஷ்டமில்லை.

சிலர் எளிதில் வேகவைக்கச் சோடா மாவைத் குழம்பில் கலக்கிறார்கள். இதனால் வைட்டமின் நஷ்டம் உண்டாகிறது. கிழங்குகளைச் சமைத்த பின் அதிக நேரம் வைத்திருக்கக்கூடாது. உடனே சாப்பிடவேண்டும்.

வேகவைக்காத எந்த உணவும் குடலுக்கு நல்லது அல்ல. இது போலவே ஆகாரப் பொருளை அளவுக்கு அதிகமாக வேகவைப்பதாலும் தீமை உண்டாகிறது. இதனால் அக்ரோலீன் எந்த விரும்பத்தகாத ஒரு பொருள் உண்டாகி உணவை நஞ்சாக்குகிறது. 

இதையும் படிக்க : முகத்தில் எண்ணெய் வடிகிறதா ? எப்படி தடுப்பது?

காய்கறி மற்றும் கிழங்குகளைத் தண்ணீரில் போட்டுக் கழுவியே சமைக்க வேண்டும். கீரைகளையும் கழுவியே சாப்பிட வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதால் காய்கறிகளில் இராசாயனப் பொருள்கள் கலந்துவிடுகின்றன. இதற்காகவாவது கழுவவேண்டும்.

சமைப்பதால் சத்துக்கள் 100-க்கு 100 போவதில்லை! இதனால் நன்மையே அதிகம்.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும