Skip to main content

Google ads

குழந்தைகள் சொத்தை பற்கள் சரிப்படுத்துவது எப்படி?

 குழந்தைகள் சிரிக்கும்போது முகத்திற்தகு அழகு தருபவை அழகிய பற்கள். இந்தப் பற்களில் சொத்தை விழுந்துவிட்டால் அழகின் சிரிப்பே பறந்துவிடும். எனவே குழந்தைப் பருவத்தில் பற்களைப் பழுதுபடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

புட்டிப்பால் கொடுக்கும் தாய்மார்கள் பாலில் இனிப்புக்காகச் சர்க்கரையை அதிக அளவில் சேர்த்துக் கொள்வதால் சர்க்கரையானது பல்லில் சில விளைவுகளை உண்டாக்குகிறது. ஊட்டச் சத்து என்ற பெயரில் மாவு சேர்க்கப்படுவதால் இந்த மாவு பல் பகுதியில் படிகிறது.

 கிருமிகள் சர்க்கரையையும், மாவுப் பண்டங்களையும் பயன்படுத்திக்கொண்டு அவற்றை அமிலமாக மாற்றுகின்றன. இந்த அமிலம் வளரும் பற்களின் எனாமலை அரிக்கிறது.

 பற்களில் புள்ளிகளை உண்டாக்கி அந்தப் புள்ளிகள் மூலம் துளை விழுந்து கிருமிகள் பற்களின் வேர்ப் பகுதிவரை சென்று கட்டியை உண்டாக்குகிறது. அதிலிருந்து சீழ் உண்டாகிறது.

 கிருமிகள் உற்பத்தி செய்யும் நச்சு நீரும் பற்களை அரித்துச் சேதப்படுத்திவிடுகிறது. கிருமிகள் உற்பத்தி செய்யும் என்சைம் என்ற சுரப்பு நீர்தான் பற்களின் எனாமல் அழிவதற்கு காரணம். 



குழந்தைகள் மிட்டாய், ரொட்டி, ஐஸ்கிரீம் ஆகிய தின்பண்டங்களை அதிகமாக விரும்பிச் சாப்பிடுகிறார்கள். இது குழந்தைப் பருவத்தில் இயற்கை. ஆனால் இனிப்பும், மாவும் பல் இடுக்குகளில் புகுந்துகொண்டு தங்கிவிடுகின்றன. கிருமிகளுக்கு இது வசதியாக இருக்கிறது.

பற்களின் மேல்பரப்பில் ஒரு மெல்லிய படலம் படர்கிறது. இதுவும் கிருமிகளால் உண்டாகிறது. இதனால் பற்களில் குழி விழுகிறது. இந்தக் குழிகளில் கிருமிகள் தங்கிப் பலவிதத் தொல்லைகள் கொடுத்துப் பற்களை சொத்தையாக்கிவிடுகின்றன.

பல் சொத்தை விழுவதற்குப் பலவிதக் கிருமிகள் காரணம் என்று சொல்லுகிறார்கள். லேக்டோபேசிலஸ் என்ற கிருமியே இதில் முக்கியத் தலைமை வகிக்கிறது. இந்தக் கிருமிகள் இனிப்புப் பொருள்களைச் சாப்பிடுவதால் வருகின்றன.

சொத்தைப் பல் என்பதற்கு அடையாளங்களாகப் பின்வருவனவற்றைச் சொல்லலாம். ஆரம்பத்தில் பற்களின் மேற்பரப்பில் வெள்ளை அல்லது மஞ்சள் நிறப் புள்ளிகள் உண்டாகும். குழி உண்டாகும். பிறகு கறுப்பாக நிறம் மாறும். 

கிருமிகள் பற்களின் உறுப்புக்களில் புகுந்து வேர்ப் பகுதியைத் தாக்கும். கட்டி உண்டாகும். சீழ் பிடிக்கும். பல் வலி ஆரம்பிக்கும். உணவுப் பொருளைக் கடிக்க முடியாது. இவைதாம் சொத்தைப் பல்லின் அறிகுறிகள்.

சொத்தைப் பல்லைக் சுவனிக்காமல் விட்டுவிட்டால் பல் சிதைந்து பல்லை எடுக்கும் நிலை உண்டாகும். அது மட்டுமா?அது அடுத்த பல்லைத் தாக்கும். அங்கிருந்து அடுத்த பல்லுக்கும் தாவும். பிறகு பாதிக்கப்பட்ட எல்லாப் பற்களையும் எடுக்கும் நிலை உண்டாகும்.

இதற்கு என்ன மருத்துவம் தரப்படுகிறது?

பல்லின் மேற்பரப்பில் சோடியம் மருந்தை டாக்டர் தடவுவார். அமிலம் சுரப்பது குறையும்.

புளூரின் மருந்தைக் கொப்பளிக்கச் செய்வார். இலட்சத்தில் ஒரு பங்கு அளவு புளூரின் காப்சூல் கொடுக்கிறார்கள். பாலுடன் புளூரின் மருந்தைக் கொடுக்கிறார்கள். 

சோடியம் புளூரைட் மருந்தையும் பல்லின் மீது தடவுகிறார்கள்.கொடுத்து வாயைக் சொத்தைப் பல் வராமல் தடுக்க முடியுமா? முடியும் நம் சாப்பாட்டில் வைட்டமின் -D, வைட்டமின் -C, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகியவற்றைச் சேர்த்துக்கொண்டு வந்தால் பல்லில் சொத்தை வராது. 

இனிப்புப் பண்டங்களையும் மாவுப் பண்டங்களையும் சாப்பிடுவதைக் குறைக்கவேண்டும். சாப்பிட்டாலும் உடனே வாயைக் கொப்பளிக்க வேண்டும். தினசரி பற்களை நன்றாக பிரஷ் மூலம் சுத்தம் செய்யவேண்டும். புளூரைடு கலந்த பற்பசைகளை உபயோகிக்கவேண்டும்.

குழந்தைகளுக்குப் பல் சுத்தம் மிகமிகத் தேவை. பெரியவர்கள் தாய்மார்கள் குழந்தைகளைப் பல்லைச் சுத்தமாகத் தேய்க்கத் தூண்ட வேண்டும், உதவவேண்டும். கவனிக்காமல் விட்டுவிட்டால் தொல்லைகள் பெருகும்!


Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...