Skip to main content

Google ads

பள்ளிக்கூடத்தில் ஏற்படும் நோய்களை தடுக்கும் வழிமுறைகள்

 பள்ளிக்கூடங்கள் நோய்களின் உற்பத்தி ஸ்தானங்கள் அல்ல. ஆனால் நோய்கள் பரவும் இடங்களுள் ஒன்று என்பதை மறுக்க முடியாது. பள்ளிப்பருவ இளம் சிறார்களுக்கு நோய் தொற்றும் இடங்களுள் பள்ளிக் கூடங்கள் முக்கிய இடத்தைப் பெறுகின்றன. 

இன்றையப் பள்ளிக் கூடங்களில் படிக்கும் மாணவர்களும், மாணவிகளும் நாளைக்கு நாட்டின் குடி மக்களாகவும், குடும்பத் தலைவராகவும், நாடாளும் தலைவர்களாகவும் வளர்ந்து ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கக் கூடியவர்கள். இவர்களின் உடல்நலமும், மனநலமும் வளர அரசும் பெற்றோரும், ஆசிரியர்களும் செயல்படவேண்டும்.

பள்ளிப் பருவத்திலே வரும் நோய்கள் பல. கண் நோய்கள், பல் நோய்கள், காது மூக்குத் தொண்டை நோய்கள், தோல் சம்பந்தமான நோய்கள், ஊட்டச் சத்துக் குறைகளால் ஏற்படும் நோய்கள் இப்படிப் பல வாறாகச் சொல்லிக் கொண்டே போகலாம்.

இவற்றுள் பெரியம்மை, காலரா, டைபாய்டு, இளம் பிள்ளை வாதம் டிப்தீரியா என்ற தொண்டை அடைப்பான் நோய், வலிப்பு நோய்கள் ஆகியவை ஆபத்தையும் கொடுக்கும். 


பள்ளிக்கூடத்தில் ஏற்படும் நோய்கள்

இதனால் இந்த நோய்கள் தோன்றும் போது வீட்டில் பெற்றோர் மிகவும் கவனமாக அக்கறை எடுத்துக் கொண்டு உடனே சிகிச்சை செய்ய வேண்டும். நோய் உள்ள பிள்ளைகளைத் தனிமைப்படுத்திக் குணம் ஆகும் வரையில் வீட்டிலேயே வைத்துச் சிகிச்சை செய்து கொண்டு பின்னரே பள்ளிக் கூடத்திற்கு அனுப்பவேண்டும்.

 நோயோடு பள்ளிக் கூடத்திற்கு அனுப்புவதால் இந்த நோய் மற்ற குழந்தைகளுக்கும் தொற்றிக் கொண்டு பரவும். இதைப் பெற்றோர் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். பள்ளிக் கூடத்தில் ஆசிரியர்களும் நோய்வாய்ப் பட்ட குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் பழக விடாமல் பெற்றோருக்குச் சொல்லி வீட்டுக்கு அனுப்பிவிட வேண்டும். வைத்தியச் சிகிச்சைக்கும் சிபாரிசு செய்ய வேண்டும்.

கிருமிகளின் காரணமாக நோய் பரவுவதால் நோய்த் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ளவேண்டும் காலராத் தடுப்பு ஊசி, டைபாய்டு தடுப்பு ஊசி இவைகளைப் போட்டுக் கொள்ளப் பெற்றோர் ஏற்பாடு செய்யவேண்டும். தடுப்பு ஊசிகள் மூலம் தொற்று நோய் மற்றவர்களுக்குப் பரவாமல் தடுக்கலாம்.

பெரியம்மை நோய் ஒரு தொற்று நோய், கடுமையான ஜூரம் வரும். கை கால் முதுகுப் பகுதியில் வலி ஏற்படும். அம்மைக் கொப்புளங்கள் தோன்றும். அம்மை நோய்த் தடுப்பு ஊசிகளை ஆரம்பத்திலேயே போட்டுக் கொண்டால் ஐந்து வருடங்கள் வரை இதனால் பாதிப்பு ஏற்படாது.

சின்னம்மை நோயும் ஒரு தொற்று நோய். இதனால் காது நோயும் நுரையீரல் நோயும் தோன்றும். அதிக கவனம் தேவை. 

சளியில் ஆரம்பிக்கும். ஜூரம் அடிக்கும். இரண்டு வயது முதல் ஏழு வயதுவரை இதனால் குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கும் உடனே கவனித்தால் குணம் ஆகும்.

குழந்தைகளைச் சிறிவயதிலும் டி.பி. தாக்கலாம். மூளைக் காய்ச்சலும் உண்டாகும். கவனக் குறைவாக இருந்தால் இந்த நோய் உயிருக்கும் ஆபத்தை உண்டாக்கும். சளிதானே, ஜூரம் தானே இது என்ன செய்து விடும் என்று அசட்டையாக இருக்காமல் உடனடிச் சிகிச்சை செய்துகொண்டால் வரப்போகும் ஆபத்தைத் தடுத்து நிறுத்தலாம்.

டான்சில்ஸ் என்று சொல்லப்படும் உள்நாக்கு வளர்ச்சி யினால் சில குழந்தைகளுக்கு இருமல், ஜூரம் உண்டாகித் தொல்லை தரும்.

இது போல அடினாயிட்ஸ் நோய் வந்தால் மூக்கில் சுவாசிக்க முடியாமல் வாயினால் சுவாசிக்கும் சிரமம் உண்டாகும். டாக்டரிடம் காட்டி ஆப்ரேஷன் தேவைப் பட்டால் செய்ய வேண்டும்.

பொன்னுக்குவீங்கி என்ற தொற்று நோயினாலும் குழந்தைகளுக்குப் பள்ளிப் பருவத்தில் தொல்லைகள் உண்டாகும். காதிற்குக் கீழ் வீக்கம், வலி உண்டாகும். தலை வலிக்கும். குளிர் ஜூரம் அடிக்கும். இதுதவிர குடல் பூச்சிகளால் சில உபத்திரவம் உண்டாகும்.

நாக்குப் பூச்சி, கொக்கிப்புழு இவற்றால் 12 வயதிற்கு உட்பட்டவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். முகம் வெளுக்கும். பசி எடுக்காது. உடல் இளைக்கும். வாந்தி, வயிற்றோட்டம் ஏற்படும். 

குழந்தைகள் சுத்தமில்லாத பள்ளிப் புழுதியில் விளையாடுவதாலும் பள்ளிக் கூட வாசலில் விற்கும் அசுத்தமான, சுகாதாரக் குறைவான தின்பண்டங்களை வாங்கிச் சாப்பிடு வதாலும் இம் மாதிரிப் பூச்சி, புழு உபத்திரவங்களுக்கு ஆளாகிறார்கள்.

இது தவிர ஊட்டச்சத்துக் குறைவினால் மாலைக்கண், எலும்புருக்கி நோய், ரிக்கெட்ஸ், குடல்புண், சோகை நோய்களாலும், மற்றும் சொறி சிரங்கு போன்ற தோல் நோய்களாலும், இதர நோய்களாலும் பள்ளிப் பிள்ளைகள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

பள்ளிப் பருவத்தில் சிலருக்கு இருத நோய்களும் உண்டாகின்றன.

பள்ளிக்கூடத்தில் குழந்தைகளுடன் நெருங்கிப் பழகி விளையாடுவதால் பள்ளிக்கூடங்களில் படிக்கும் காலத்தில் குழந்தைகளிடத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருந்து அவர்களுக்கு உண்டாகும் நோய்களை உடனுக்குடன் கவனிக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...