Skip to main content

Google ads

கண்களில் ஏற்படும் வெள்ளெழுத்து பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 கண்களில் உட்புறத்தில் பட்டன் மாதிரி வட்ட வடிவில் ஒரு லென்ஸ் இருக்கிறது. இந்த லென்ஸ் தூரத்தில் உள்ள பொருட்களையோ அல்லது உருவத்தையோ பார்க்கும் போது விரிந்து கொடுக்கும். கிட்டத்திலுள்ள பொருட்களையோ அல்லது உருவத்தையோ பார்க்கும் போது சுருங்கும்.

இதுதான் இந்த லென்ஸின் வேலை. இதன் மூலம் ஒரு பொருளைப் பார்க்கிறோம். எழுத்தைப் பார்க்கிறோம்.

லென்ஸ் இந்தச் சக்தியை இழந்துவிட்டால் நாம் பார்க்கும் பொருள்கள் மங்கலாகவும், தெளிவில்லாமலும் புகைமண்டலம் போல் வெள்ளையாகவும் தோன்றும்.

இது நோய் அல்ல. கண் பார்வையில் உண்டாகும் கோளாறு. இதைக் கிராம மக்கள் சாலேசரம் என்றும் வெள்ளெழுத்து என்றும் கூறுகிறார்கள்.

பிரஸ்பியோப்பியா என்று கண் மருத்துவர்கள் இதைக் குறிப்பிடுவார்கள்.

வெள்ளெழுத்து என்று இதை ஏன் சொல்லுகிறார்கள்?

 படிக்கும் போது புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள் தெளிவில்லாமல் வெள்ளையாகத் தோன்றும். கண்களுக்கு வெகு தூரத்தில் புத்தகத்தை வைத்துக் கொண்டு பார்த்தால் தான் எழுத்து தெரியும். படிக்க முடியும். அருகில் புத்தகத்தை வைத்துக் கொண்டு படித்தால் சரியாகத் தெரியாது.



இதேபோன்று உருவங்களும் தூரத்தில் இருந்தால்தான் தெரியும். கிட்டத்தில் இருந்தால் தெரியாது. இது கண்களுக்கு வரும் நோய் அல்ல. கண் பார்வையில் ஏற்படும் கோளாறு.

கண்நோய்க்கும் பார்வை கோளாறுக்கும் சம்பந்தம் இருக்கிறதா?

இது வேறு, அது வேறு. இரண்டும் ஒன்றல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கண் பார்வைக் கோளாறு இரண்டு வகைகளில் உண்டாகும்.ஒன்று தூரப் பார்வை.இன்னொன்று கிட்டப் பார்வை.

வயது காரணமாக இந்தக் கோளாறு ஏற்படுகிறது என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது, இருந்தாலும் இதற்கு வேறு சில காரணங்களும் உண்டு.

கண் பார்வைக் குறைவுக்குச் சத்தான உணவு வகைகளை நீண்டகாலமாகவே சாப்பிடாமல் இருந்து வருவதும் ஒரு காரணம்.

கண்களுக்கு ஒளி தரும் சக்தியை வைட்டமின் - ஏ நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் பெறலாம்.

பால், முட்டை, கேரட், பப்பாளிப் பழம், மாம்பழம் இவைகளில் வைட்டமின் - ஏ நிறைய இருக்கிறது. 

இவை தவிரக் கண்களுக்கு ஒளி தரும் சத்துக்கள் பாதாம் பருப்பு, பேரீச்சம் பழம், அத்திப் பழங்கள் ஆகியவற்றில் உள்ளன.

இவற்றைச் சாப்பிட்டு வந்தால் இந்தப் பார்வைக் கோளாறுகள் ஏற்படாது. முருங்கைக்கீரையும் இந்தக் குறையைப் போக்குகிறது.

கண் பார்வைக் கோளாறுகளைப் போக்க டாக்டர்கள் சோதனை செய்து சொல்லுகிறார்கள்.

கண்ணாடி போடும்படி கண்களிலுள்ள லென்ஸ் சரியாக ஒளியை வளைத்து விழித் திரையில் ஒழுங்கான பிம்பத்தை விழச் செய்யக் கண்ணாடி ஒன்றுதான் உடனடிப் பரிகாரம். பைஃபோகல் (Bifocal) கண்ணாடி இந்தக் குறையைப் போக்குகிறது.

பைஃபோக்கல் கண்ணாடிகள் இரண்டு முகப்புக்களை உடையவை. இரண்டு வகை லென்ஸ்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

சாதாரணமாகப் பார்ப்பதற்குப் பெரிய லென்சும். எழுத்துக்களைப் படிப்பதற்குச் சிறிய லென்சும் இதில் இடம் பெற்றிருக்கும்.

இதனால் தூரப் பார்வையையும் கிட்டப் பார்வை யையும் ஒரே கண்ணாடி மூலம் சரிப்படுத்தி விடலாம். கண்ணாடியே வேண்டாம் என்று விரும்புகிறவர்கள் காண்டாக்ட் லென்ஸைக் கண்களில் பதித்துக் கொள்ளலாம்.

இது மூக்குக் கண்ணாடியைவிட விலை அதிகம். வசதி உள்ளவர்கள் காண்டாக்ட் லென்ஸ் பதித்துக் கொள்கிறார்கள்..  

வெள்ளெழுத்துக் குறைபாடு ஏற்பட்டு விட்டால் பிறகு கண் பார்வையே தெரியாமல் போய்விடுமா?கண் குருடாகிவிடுமா?

அப்படி எந்தக் குறைபாடும் ஏற்பட்டு விடாது. இப்படி அச்சப்படத் தேவையும் இல்லை.

நம்மால் வயதாகிக் கொண்டு போவதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது, வயதால் ஏற்படும் இந்தக் குறையை மாற்றிவிடக் கண்ணாடி இருக்கவே இருக்கிறது.

குறை என்று ஒன்று இருந்தால் அதற்கு ஈடு செய்ய் நிறை என்று ஒன்று இருக்கும் போது நாம் ஏன் அச்சப்பட வேண்டும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும