Skip to main content

Google ads

கண்களில் ஏற்படும் வெள்ளெழுத்து பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 கண்களில் உட்புறத்தில் பட்டன் மாதிரி வட்ட வடிவில் ஒரு லென்ஸ் இருக்கிறது. இந்த லென்ஸ் தூரத்தில் உள்ள பொருட்களையோ அல்லது உருவத்தையோ பார்க்கும் போது விரிந்து கொடுக்கும். கிட்டத்திலுள்ள பொருட்களையோ அல்லது உருவத்தையோ பார்க்கும் போது சுருங்கும்.

இதுதான் இந்த லென்ஸின் வேலை. இதன் மூலம் ஒரு பொருளைப் பார்க்கிறோம். எழுத்தைப் பார்க்கிறோம்.

லென்ஸ் இந்தச் சக்தியை இழந்துவிட்டால் நாம் பார்க்கும் பொருள்கள் மங்கலாகவும், தெளிவில்லாமலும் புகைமண்டலம் போல் வெள்ளையாகவும் தோன்றும்.

இது நோய் அல்ல. கண் பார்வையில் உண்டாகும் கோளாறு. இதைக் கிராம மக்கள் சாலேசரம் என்றும் வெள்ளெழுத்து என்றும் கூறுகிறார்கள்.

பிரஸ்பியோப்பியா என்று கண் மருத்துவர்கள் இதைக் குறிப்பிடுவார்கள்.

வெள்ளெழுத்து என்று இதை ஏன் சொல்லுகிறார்கள்?

 படிக்கும் போது புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள் தெளிவில்லாமல் வெள்ளையாகத் தோன்றும். கண்களுக்கு வெகு தூரத்தில் புத்தகத்தை வைத்துக் கொண்டு பார்த்தால் தான் எழுத்து தெரியும். படிக்க முடியும். அருகில் புத்தகத்தை வைத்துக் கொண்டு படித்தால் சரியாகத் தெரியாது.



இதேபோன்று உருவங்களும் தூரத்தில் இருந்தால்தான் தெரியும். கிட்டத்தில் இருந்தால் தெரியாது. இது கண்களுக்கு வரும் நோய் அல்ல. கண் பார்வையில் ஏற்படும் கோளாறு.

கண்நோய்க்கும் பார்வை கோளாறுக்கும் சம்பந்தம் இருக்கிறதா?

இது வேறு, அது வேறு. இரண்டும் ஒன்றல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கண் பார்வைக் கோளாறு இரண்டு வகைகளில் உண்டாகும்.ஒன்று தூரப் பார்வை.இன்னொன்று கிட்டப் பார்வை.

வயது காரணமாக இந்தக் கோளாறு ஏற்படுகிறது என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது, இருந்தாலும் இதற்கு வேறு சில காரணங்களும் உண்டு.

கண் பார்வைக் குறைவுக்குச் சத்தான உணவு வகைகளை நீண்டகாலமாகவே சாப்பிடாமல் இருந்து வருவதும் ஒரு காரணம்.

கண்களுக்கு ஒளி தரும் சக்தியை வைட்டமின் - ஏ நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் பெறலாம்.

பால், முட்டை, கேரட், பப்பாளிப் பழம், மாம்பழம் இவைகளில் வைட்டமின் - ஏ நிறைய இருக்கிறது. 

இவை தவிரக் கண்களுக்கு ஒளி தரும் சத்துக்கள் பாதாம் பருப்பு, பேரீச்சம் பழம், அத்திப் பழங்கள் ஆகியவற்றில் உள்ளன.

இவற்றைச் சாப்பிட்டு வந்தால் இந்தப் பார்வைக் கோளாறுகள் ஏற்படாது. முருங்கைக்கீரையும் இந்தக் குறையைப் போக்குகிறது.

கண் பார்வைக் கோளாறுகளைப் போக்க டாக்டர்கள் சோதனை செய்து சொல்லுகிறார்கள்.

கண்ணாடி போடும்படி கண்களிலுள்ள லென்ஸ் சரியாக ஒளியை வளைத்து விழித் திரையில் ஒழுங்கான பிம்பத்தை விழச் செய்யக் கண்ணாடி ஒன்றுதான் உடனடிப் பரிகாரம். பைஃபோகல் (Bifocal) கண்ணாடி இந்தக் குறையைப் போக்குகிறது.

பைஃபோக்கல் கண்ணாடிகள் இரண்டு முகப்புக்களை உடையவை. இரண்டு வகை லென்ஸ்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

சாதாரணமாகப் பார்ப்பதற்குப் பெரிய லென்சும். எழுத்துக்களைப் படிப்பதற்குச் சிறிய லென்சும் இதில் இடம் பெற்றிருக்கும்.

இதனால் தூரப் பார்வையையும் கிட்டப் பார்வை யையும் ஒரே கண்ணாடி மூலம் சரிப்படுத்தி விடலாம். கண்ணாடியே வேண்டாம் என்று விரும்புகிறவர்கள் காண்டாக்ட் லென்ஸைக் கண்களில் பதித்துக் கொள்ளலாம்.

இது மூக்குக் கண்ணாடியைவிட விலை அதிகம். வசதி உள்ளவர்கள் காண்டாக்ட் லென்ஸ் பதித்துக் கொள்கிறார்கள்..  

வெள்ளெழுத்துக் குறைபாடு ஏற்பட்டு விட்டால் பிறகு கண் பார்வையே தெரியாமல் போய்விடுமா?கண் குருடாகிவிடுமா?

அப்படி எந்தக் குறைபாடும் ஏற்பட்டு விடாது. இப்படி அச்சப்படத் தேவையும் இல்லை.

நம்மால் வயதாகிக் கொண்டு போவதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது, வயதால் ஏற்படும் இந்தக் குறையை மாற்றிவிடக் கண்ணாடி இருக்கவே இருக்கிறது.

குறை என்று ஒன்று இருந்தால் அதற்கு ஈடு செய்ய் நிறை என்று ஒன்று இருக்கும் போது நாம் ஏன் அச்சப்பட வேண்டும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...