Skip to main content

Google ads

உடைகளால் வரும் உடல் கோளாறுகள்/அறியாத தகவல்கள்- Medical Tamizha

 வெப்பத்தையும் குளிரையும் சமாளிக்கவும் உடம்பின் உஷ்ணத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ளவும். மனிதனுக்கு உடை தேவைப்படுகிறது. இதனால் பருவ மாறுதல்களுக்கு ஏற்ப உடைகளைத் தைத்துப் போட்டுக் கொண்டு உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து வந்தார்கள் நம் முன்னோர்கள்.

உடை, உடம்பின் பாதுகாப்பிற்காக என்ற நிலைமாறி உடல் அழகுக்காகவும் தோற்றப் பொலிவுக் காகவும் புதிய புதிய பாஷன்கள் என்ற முறையில் உடை அலங்கார நிபுணர்கள் சில மாறுதல்களைச் செய்தார்கள்.

இதனால், ஒருபக்கம் நன்மை உண்டானது என்றாலும் இலைமறை காய்போல் சில தீமைகளும் தொடர்ந்துவந்து உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன.



இந்தியா வெப்பமான நாடு. இதற்கு மாறுபாடான சீரோஷ்ண நிலைமைகளை உடையவை மேலைநாடுகள்.

குளிர்ச்சியான நாட்டின் உடை அலங்காரம் வெப்ப நாட்டில் புகுந்தது. காழுத்தை இறுக்கும் காலர், டைப் பழக்கம், பாதங்களை மூடும் ஷூப் பழக்கம் ஆகியவற்றை  இங்குள்ள இந்தியர்கள் பின்பற்றவேண்டிய கட்டாயத்திற்கு வந்த பிறகு, புதிய நாகரிகத்தால் புதிய நோய்கள் சில தோன்றின.

குறிப்பாகத் தோல் தொல்லைகள் அதிகமாயின. இரத்த நாளங்கள் அழுத்தப்படுவதால் வலி, வீக்கம், நரம்புக் கோளாறுகள் உண்டாயின.

உடைகளாலும், உடைகளின் நிறங்களாலும் மனித உணர்வுகள் பாதிக்கப்படுவதாக மனோதத்துவ அறிஞர்கள் கூறுகிறார்கள்.

சோர்வு, மயக்கம், மனத்தளர்ச்சி, மந்த நிலை ஏற்படுவதாக உடற்கூறு அறிஞர்கள் சொல்லுகிறார்கள். பெண்கள் இறுக்கமான பிரா அணியவும், உடலோடு ஒட்டிய ஜாக்கெட் ,சோளிகள் உடுத்தவும் செய்கிறார்கள்.

இதனாலும் சில கெடுதல்கள் உண்டு.

பல பேர் இறுக்கமான ஜட்டிகளை அணிகிறார்கள். நைலான், நைலக்ஸ், டெர்லின், டெரிகாட்டன் துணி இரகங்கள் பெருகப் பெருக உடம்பின் வியர்வையை இந்தத் துணிகளால் ஈர்க்க முடியாமல் பலர் சரும நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

இடுப்பைச் சுற்றிப் பாவாடை நாடா இறுக்கமாகக் கட்டப்படுவதால் பெண்களுக்கு இடுப்பைச் சுற்றித் தோல் தொல்லை உண்டாகிறது. இதனால் சூதகக் கோளாறுகளும் ஏற்படுவதாக மருத்துவ சொல்லுகிறார்கள். ஆராய்ச்சியாளர்கள்

நாகரீக பிரா அணிவதால் மார்புப் புற்று நோயும் சில பெண்களுக்கு உண்டாகிறது. காற்றும் வெளிச்சமும் இந்தப் பகுதிகளில் புகாததால் தோலின் ஆரோக்கியம் கெடுகிறது.

இளைஞர்கள் டைட் பேண்ட் உடலை ஒட்டிய சட்டை போன்ற இறுக்கமான உடைகளை உடுத்துவதால் உறுப்புகள் உஷ்ணமடைந்து ஆண்மைக் குறைவும் மலடும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

கல்லூரி, பள்ளி மாணவர்களும் மாணவிகளும், அலு வலகங்களில் வேலை பார்க்கும் ஆண் பெண்களும் இறுக்க மான உடைகளோடு பல மணி நேரங்கள் இருக்கும் சூழ் நிலைகளால் அலர்ஜி நோய்க்கு ஆளாகிறார்கள்.

எடுப்பான தோற்றம் வேண்டும் என்பதற்காக உடலோடு ஒட்டிய உடைகளை அணியும் போது தோலின் துவாரங்களில் வியர்வை, அழுக்கு, கிருமித் தொற்றுகளுக்கு ஆளாகி வயிற்றுக் கோளாறு, சிறுநீர்த் தொந்தரவு மலச் சிக்கல், நரம்புப் பலவீனம், இரத்தக் குழாய் பாதிப்பு ஆகிய தொந்தரவுகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

உடுத்தும் உடைகள், துணிகள் காலத்திற்கு ஏற்ற முறையில் இல்லாதிருப்பதால் மலச் சிக்கல் மட்டுமல்ல. மனச் சிக்கலும் ஏற்பட்டு மன நோயாளிகளாகவே இருந்து வருகிறார்கள்.

கைத்தறித் துணிகளே கோடைக் காலத்திற்கு ஏற்றவை. இந்தத் துணிகளை இப்போது எவரும் உடுத்துவதில்லை.

வெளி நாடுகளிலிருந்து வந்து குவியும் நவீன மோஸ்தர் துணிகளில் பேண்ட், சட்டை உடுத்துகிறவர்கள் இந்தத் துணி நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றவையா என்று எண்ணிப் பார்ப்பதில்லை.

பேஷன் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக நாசமாக்கிக் கொண்டு வருகிறது. 

ஜீன்ஸ் வகையைச் சேர்ந்த சாக்குப் போன்ற முரட்டுத் துணிகள், மென்மையான உடலில் உராய்ந்து, தோலைக் கெடுக்கின்றன.

இரசாயன நூல் இழைகளை உடம்பு ஏற்றுக் கொள்ளாதபோது அது அலர்ஜி நோயை உண்டாக்குகிறது. நாகரிகத்தின் பெயரால் வெளியே சொல்லமுடியாமல்

புழுங்கிக் கொண்டு நோய் சுமந்த உடலோடு உலா வருகிறார்கள் பலர்.இந்நிலை மாறவேண்டாமா?

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும