Skip to main content

Google ads

உடைகளால் வரும் உடல் கோளாறுகள்/அறியாத தகவல்கள்- Medical Tamizha

 வெப்பத்தையும் குளிரையும் சமாளிக்கவும் உடம்பின் உஷ்ணத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ளவும். மனிதனுக்கு உடை தேவைப்படுகிறது. இதனால் பருவ மாறுதல்களுக்கு ஏற்ப உடைகளைத் தைத்துப் போட்டுக் கொண்டு உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து வந்தார்கள் நம் முன்னோர்கள்.

உடை, உடம்பின் பாதுகாப்பிற்காக என்ற நிலைமாறி உடல் அழகுக்காகவும் தோற்றப் பொலிவுக் காகவும் புதிய புதிய பாஷன்கள் என்ற முறையில் உடை அலங்கார நிபுணர்கள் சில மாறுதல்களைச் செய்தார்கள்.

இதனால், ஒருபக்கம் நன்மை உண்டானது என்றாலும் இலைமறை காய்போல் சில தீமைகளும் தொடர்ந்துவந்து உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன.



இந்தியா வெப்பமான நாடு. இதற்கு மாறுபாடான சீரோஷ்ண நிலைமைகளை உடையவை மேலைநாடுகள்.

குளிர்ச்சியான நாட்டின் உடை அலங்காரம் வெப்ப நாட்டில் புகுந்தது. காழுத்தை இறுக்கும் காலர், டைப் பழக்கம், பாதங்களை மூடும் ஷூப் பழக்கம் ஆகியவற்றை  இங்குள்ள இந்தியர்கள் பின்பற்றவேண்டிய கட்டாயத்திற்கு வந்த பிறகு, புதிய நாகரிகத்தால் புதிய நோய்கள் சில தோன்றின.

குறிப்பாகத் தோல் தொல்லைகள் அதிகமாயின. இரத்த நாளங்கள் அழுத்தப்படுவதால் வலி, வீக்கம், நரம்புக் கோளாறுகள் உண்டாயின.

உடைகளாலும், உடைகளின் நிறங்களாலும் மனித உணர்வுகள் பாதிக்கப்படுவதாக மனோதத்துவ அறிஞர்கள் கூறுகிறார்கள்.

சோர்வு, மயக்கம், மனத்தளர்ச்சி, மந்த நிலை ஏற்படுவதாக உடற்கூறு அறிஞர்கள் சொல்லுகிறார்கள். பெண்கள் இறுக்கமான பிரா அணியவும், உடலோடு ஒட்டிய ஜாக்கெட் ,சோளிகள் உடுத்தவும் செய்கிறார்கள்.

இதனாலும் சில கெடுதல்கள் உண்டு.

பல பேர் இறுக்கமான ஜட்டிகளை அணிகிறார்கள். நைலான், நைலக்ஸ், டெர்லின், டெரிகாட்டன் துணி இரகங்கள் பெருகப் பெருக உடம்பின் வியர்வையை இந்தத் துணிகளால் ஈர்க்க முடியாமல் பலர் சரும நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.

இடுப்பைச் சுற்றிப் பாவாடை நாடா இறுக்கமாகக் கட்டப்படுவதால் பெண்களுக்கு இடுப்பைச் சுற்றித் தோல் தொல்லை உண்டாகிறது. இதனால் சூதகக் கோளாறுகளும் ஏற்படுவதாக மருத்துவ சொல்லுகிறார்கள். ஆராய்ச்சியாளர்கள்

நாகரீக பிரா அணிவதால் மார்புப் புற்று நோயும் சில பெண்களுக்கு உண்டாகிறது. காற்றும் வெளிச்சமும் இந்தப் பகுதிகளில் புகாததால் தோலின் ஆரோக்கியம் கெடுகிறது.

இளைஞர்கள் டைட் பேண்ட் உடலை ஒட்டிய சட்டை போன்ற இறுக்கமான உடைகளை உடுத்துவதால் உறுப்புகள் உஷ்ணமடைந்து ஆண்மைக் குறைவும் மலடும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

கல்லூரி, பள்ளி மாணவர்களும் மாணவிகளும், அலு வலகங்களில் வேலை பார்க்கும் ஆண் பெண்களும் இறுக்க மான உடைகளோடு பல மணி நேரங்கள் இருக்கும் சூழ் நிலைகளால் அலர்ஜி நோய்க்கு ஆளாகிறார்கள்.

எடுப்பான தோற்றம் வேண்டும் என்பதற்காக உடலோடு ஒட்டிய உடைகளை அணியும் போது தோலின் துவாரங்களில் வியர்வை, அழுக்கு, கிருமித் தொற்றுகளுக்கு ஆளாகி வயிற்றுக் கோளாறு, சிறுநீர்த் தொந்தரவு மலச் சிக்கல், நரம்புப் பலவீனம், இரத்தக் குழாய் பாதிப்பு ஆகிய தொந்தரவுகளால் பாதிக்கப்படுகிறார்கள்.

உடுத்தும் உடைகள், துணிகள் காலத்திற்கு ஏற்ற முறையில் இல்லாதிருப்பதால் மலச் சிக்கல் மட்டுமல்ல. மனச் சிக்கலும் ஏற்பட்டு மன நோயாளிகளாகவே இருந்து வருகிறார்கள்.

கைத்தறித் துணிகளே கோடைக் காலத்திற்கு ஏற்றவை. இந்தத் துணிகளை இப்போது எவரும் உடுத்துவதில்லை.

வெளி நாடுகளிலிருந்து வந்து குவியும் நவீன மோஸ்தர் துணிகளில் பேண்ட், சட்டை உடுத்துகிறவர்கள் இந்தத் துணி நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றவையா என்று எண்ணிப் பார்ப்பதில்லை.

பேஷன் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக நாசமாக்கிக் கொண்டு வருகிறது. 

ஜீன்ஸ் வகையைச் சேர்ந்த சாக்குப் போன்ற முரட்டுத் துணிகள், மென்மையான உடலில் உராய்ந்து, தோலைக் கெடுக்கின்றன.

இரசாயன நூல் இழைகளை உடம்பு ஏற்றுக் கொள்ளாதபோது அது அலர்ஜி நோயை உண்டாக்குகிறது. நாகரிகத்தின் பெயரால் வெளியே சொல்லமுடியாமல்

புழுங்கிக் கொண்டு நோய் சுமந்த உடலோடு உலா வருகிறார்கள் பலர்.இந்நிலை மாறவேண்டாமா?

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...