Skip to main content

Google ads

கீரைப் பூச்சிகள் நூல் புழுக்கள்/அறியாத தகவல்கள்- Medical Tamizha

 குழந்தைகளுக்குச் சில சமயங்களில் சளி பிடித்துக் கொள்கிறது. நெஞ்சில் சளி, இருமல், இருமித்துப்பும் போது இரத்தம் விழுகிறது. இதற்கு என்ன காரணம்?

சில குழந்தைகளுக்கு ஜூரம் வருகிறது, அதோடு வலிப்பும் உண்டாகிறது. இதற்கு என்ன காரணம்? சில குழந்தைகளுக்கு முகம் வெளுந்து, வயிறு பெருத்து, கன்னங்கள் ஊதிப் போய் இருக்கும். இதற்குக் காரணம்?

சில குழந்தைகளுக்கு வயிற்றுவலி, பேதி ஆகிறது. விஷக் கிருமிகளால் பேதி ஆகிறது. இதற்கு என்ன காரணம்?

குழந்தைகள் நன்றாகச் சாப்பிடுகின்றன. ஆனால் உடம்பு தேறவில்லை. தேய்ந்து தேய்ந்து தேவாங்குகள் போல் ஆகிவிடுகின்றன. குழந்தைகள் சாப்பிடும் சாப்பாடு எல்லாம் எங்கே போகிறது? எல்லாவற்றிற்கும் காரணம் குடற் பூச்சிகள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இவை எல்லாம் உண்மைதானா? உண்மைதான்! இந்தப் புழுக்களால் குழந்தைகளுக்கு வரும் நோய்கள் அநேகம். மறைமுகமாகக் குடலில் போய் தங்கிக் கொண்டு குழந்தைகளையும் சில சமயங்களில் பெரியவர்களையும் தொல்லைப் படுத்துகின்றன.

இந்தப் புழுக்கள் சில உருண்டை வடிவமாகவும், இன்னும் சில இலை போல் தட்டையாகவும் இருக்கின்றன. இதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால் இவற்றினுள் ஆண்,பெண் பிரிவுகள் கிடையாது. ஒரே புழு ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கிறது. இந்தப் புழுக்களை -Round Worm - (நாக்குப் புழு). Hook Worm (கொக்கிப் புழு), Thread Worm- (நூல் புழூ அல்லது கீரைப் புழு) என்று மூன்று பெரிய பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள்.

இதில்நூல் போல் தோற்றமளிக்கும் கீரைப் புழுவைப் பற்றி இங்கு பார்ப்போம்.


கீரைப் புழுக்களில் மட்டும் ஆண், பெண் என்று ஜாதி உண்டு. பெருங்குடல் பகுதியின் ஆரம்பத்தில் இந்தப் புழுக்கள் தங்குமிடமாகக் கொண்டு வாழ்கின்றன. இரவு நேரங்களில் ஆசனப் பகுதியில் வந்து முட்டையிடுகின்றன. இரவு குழந்தைகள் தூங்கும் நேரத்தில் ஆசனப் பகுதியில் அலைவதால் நமைச்சல் எடுக்கிறது.

பெண் குழந்தைகளின் ஆசன வாய்க்கு அருகில் சிறு நீர்ப் பாதை இருப்பதால் புழுக்கள் அங்குபோய்ச் சுரண்டுகின்றன. இதனால் சிறுமிகள் இரவில் சிறுநீர் கழித்து விடுகிறார்கள். இதனை அறியாத பெற்றோர் சிறுமிகளை அடித்து விடுகிறார்கள்.

பிப்பிராசின் என்றும் பைரினியம் பாமோட் ஆகிய மருந்துகளை டாக்டரின் ஆலோசனைப்படி அளவோடு கொடுக்கவேண்டும். ஆசனவாயில் தடவுதற்காக எல்லோ மெர்குரி ஆயின்ட்மென்ட் உள்ளது.

இவை தவிர, சில தற்காப்பு முறைகளைப் பெற்றோர் செய்ய வேண்டும். குழந்தைகளின் நகங்களை வெட்டிவிட வேண்டும். மலம் கழித்த பிறகு ஆசனப் பகுதியை சுத்தமாகக் கழுவிக்கொள்ளச் சொல்லவேண்டும். குழந்தைகளின் கைகளை அடிக்கடி டெட்டால் விட்டுக் கழுவ வேண்டும். சோப்புப் போட்டுக் கழுவினாலும் போதும்.

குழந்தைகளைப் படுக்கச் செல்லும்போது ஜட்டி. டிராயர் முதலியனவற்றை உடுத்திப் படுக்க வைக்க வேண்டும். அந்தத் துணிகளை வெந்நீரில் நனைத்துப்பிறகு துவைக்க வேண்டும். அசுத்தமான பகுதிகளில் குழந்தைகள் நடமாடுவதால் காலில் செருப்பு அணியும் பழக்கத்தை வழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகள் விளையாடிவிட்டு வந்ததும் கால்களை, விரல்களைச் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாகக் கைகளைச் சுத்தம் செய்த பிறகே தின்பண்டம். உணவு சாப்பிட அனுமதிக்க வேண்டும்.

பூச்சித் தொல்லைகளிலிருந்து விடுபடக் குழந்தைகளுக்கு அன்னாசிப் பழங்கள், பப்பாளிப் பழங்களைச் சாப்பிடத் தூண்டவேண்டும். பூச்சிகளை விரட்டவேப்பங் கொழுந்துத் துவையல், சுண்டைக்காய் வற்றல், பாகற்காய்ப் பொரியல் முதலிய சுசப்புச் சுவை உணவுகளைச் சாப்பிட்டுப் பழக முயற்சி செய்யவேண்டும்.

புழுக்களால் குழந்தைகளுக்குத் தொந்தரவு அதிகம் ஏற்படுவதால் சுத்தமும், கண்காணிப்பும் மிக மிகத் தேவை! குழந்தைகள் வளருங் குருத்துக்கள். ஆகவே அவர்களைக் குடற்புழுக்கள் பாதித்துவிடாதபடி பாது காக்க வேண்டியது. பெற்றோர் கடன்!

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...