Skip to main content

Google ads

கீரைப் பூச்சிகள் நூல் புழுக்கள்/அறியாத தகவல்கள்- Medical Tamizha

 குழந்தைகளுக்குச் சில சமயங்களில் சளி பிடித்துக் கொள்கிறது. நெஞ்சில் சளி, இருமல், இருமித்துப்பும் போது இரத்தம் விழுகிறது. இதற்கு என்ன காரணம்?

சில குழந்தைகளுக்கு ஜூரம் வருகிறது, அதோடு வலிப்பும் உண்டாகிறது. இதற்கு என்ன காரணம்? சில குழந்தைகளுக்கு முகம் வெளுந்து, வயிறு பெருத்து, கன்னங்கள் ஊதிப் போய் இருக்கும். இதற்குக் காரணம்?

சில குழந்தைகளுக்கு வயிற்றுவலி, பேதி ஆகிறது. விஷக் கிருமிகளால் பேதி ஆகிறது. இதற்கு என்ன காரணம்?

குழந்தைகள் நன்றாகச் சாப்பிடுகின்றன. ஆனால் உடம்பு தேறவில்லை. தேய்ந்து தேய்ந்து தேவாங்குகள் போல் ஆகிவிடுகின்றன. குழந்தைகள் சாப்பிடும் சாப்பாடு எல்லாம் எங்கே போகிறது? எல்லாவற்றிற்கும் காரணம் குடற் பூச்சிகள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

இவை எல்லாம் உண்மைதானா? உண்மைதான்! இந்தப் புழுக்களால் குழந்தைகளுக்கு வரும் நோய்கள் அநேகம். மறைமுகமாகக் குடலில் போய் தங்கிக் கொண்டு குழந்தைகளையும் சில சமயங்களில் பெரியவர்களையும் தொல்லைப் படுத்துகின்றன.

இந்தப் புழுக்கள் சில உருண்டை வடிவமாகவும், இன்னும் சில இலை போல் தட்டையாகவும் இருக்கின்றன. இதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால் இவற்றினுள் ஆண்,பெண் பிரிவுகள் கிடையாது. ஒரே புழு ஆணாகவும் பெண்ணாகவும் இருக்கிறது. இந்தப் புழுக்களை -Round Worm - (நாக்குப் புழு). Hook Worm (கொக்கிப் புழு), Thread Worm- (நூல் புழூ அல்லது கீரைப் புழு) என்று மூன்று பெரிய பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள்.

இதில்நூல் போல் தோற்றமளிக்கும் கீரைப் புழுவைப் பற்றி இங்கு பார்ப்போம்.


கீரைப் புழுக்களில் மட்டும் ஆண், பெண் என்று ஜாதி உண்டு. பெருங்குடல் பகுதியின் ஆரம்பத்தில் இந்தப் புழுக்கள் தங்குமிடமாகக் கொண்டு வாழ்கின்றன. இரவு நேரங்களில் ஆசனப் பகுதியில் வந்து முட்டையிடுகின்றன. இரவு குழந்தைகள் தூங்கும் நேரத்தில் ஆசனப் பகுதியில் அலைவதால் நமைச்சல் எடுக்கிறது.

பெண் குழந்தைகளின் ஆசன வாய்க்கு அருகில் சிறு நீர்ப் பாதை இருப்பதால் புழுக்கள் அங்குபோய்ச் சுரண்டுகின்றன. இதனால் சிறுமிகள் இரவில் சிறுநீர் கழித்து விடுகிறார்கள். இதனை அறியாத பெற்றோர் சிறுமிகளை அடித்து விடுகிறார்கள்.

பிப்பிராசின் என்றும் பைரினியம் பாமோட் ஆகிய மருந்துகளை டாக்டரின் ஆலோசனைப்படி அளவோடு கொடுக்கவேண்டும். ஆசனவாயில் தடவுதற்காக எல்லோ மெர்குரி ஆயின்ட்மென்ட் உள்ளது.

இவை தவிர, சில தற்காப்பு முறைகளைப் பெற்றோர் செய்ய வேண்டும். குழந்தைகளின் நகங்களை வெட்டிவிட வேண்டும். மலம் கழித்த பிறகு ஆசனப் பகுதியை சுத்தமாகக் கழுவிக்கொள்ளச் சொல்லவேண்டும். குழந்தைகளின் கைகளை அடிக்கடி டெட்டால் விட்டுக் கழுவ வேண்டும். சோப்புப் போட்டுக் கழுவினாலும் போதும்.

குழந்தைகளைப் படுக்கச் செல்லும்போது ஜட்டி. டிராயர் முதலியனவற்றை உடுத்திப் படுக்க வைக்க வேண்டும். அந்தத் துணிகளை வெந்நீரில் நனைத்துப்பிறகு துவைக்க வேண்டும். அசுத்தமான பகுதிகளில் குழந்தைகள் நடமாடுவதால் காலில் செருப்பு அணியும் பழக்கத்தை வழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். குழந்தைகள் விளையாடிவிட்டு வந்ததும் கால்களை, விரல்களைச் சுத்தம் செய்ய வேண்டும். குறிப்பாகக் கைகளைச் சுத்தம் செய்த பிறகே தின்பண்டம். உணவு சாப்பிட அனுமதிக்க வேண்டும்.

பூச்சித் தொல்லைகளிலிருந்து விடுபடக் குழந்தைகளுக்கு அன்னாசிப் பழங்கள், பப்பாளிப் பழங்களைச் சாப்பிடத் தூண்டவேண்டும். பூச்சிகளை விரட்டவேப்பங் கொழுந்துத் துவையல், சுண்டைக்காய் வற்றல், பாகற்காய்ப் பொரியல் முதலிய சுசப்புச் சுவை உணவுகளைச் சாப்பிட்டுப் பழக முயற்சி செய்யவேண்டும்.

புழுக்களால் குழந்தைகளுக்குத் தொந்தரவு அதிகம் ஏற்படுவதால் சுத்தமும், கண்காணிப்பும் மிக மிகத் தேவை! குழந்தைகள் வளருங் குருத்துக்கள். ஆகவே அவர்களைக் குடற்புழுக்கள் பாதித்துவிடாதபடி பாது காக்க வேண்டியது. பெற்றோர் கடன்!

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும