Skip to main content

Google ads

திக்குவாய் பிரச்சனையை சரி செய்வது எப்படி? அறியாத தகவல்கள்- Medical Tamizha

 வாய் உள்ள அத்துணை பேரும் பேசவேண்டிய விஷயங்களைப் பிறர் விளங்கிக் கொள்ளும் படி பேசுவதில்லை.ஆனால், சிலரோ தட்டுத் தடுமாறிப் பேசுகிறார்கள். சொல்லுகிறார்கள்.

இதை ஸ்டட்டரிங் என்று ஆங்கிலத்தில் இன்னும் சிலர் சொற்களையோ, வாக்கியங்களையோ முழுவதும் சரியாக உச்சரிக்க முடியாமல் விழுங்கிவிழுங்கிப் பேசுகிறார்கள்.

இதை ஸ்டாமரிங் என்று ஆங்கிலத்திலும் திக்கித் திக்கிப் பேசுதல் என்று தமிழிலும் சொல்லுகிறார்கள்.

தமிழ்நாட்டின் சில கிராமங்களில் இதைக் கொன்னை வாய்ப் பேச்சு என்று கூறுவர்.

இந்தியாவில் திக்குவாய்ப் பேச்சாளர்கள் சுமார் ஒருகோடிப் பேர் இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள்.

இது ஒரு நோயா? இல்லை. சிலருக்குச் சில காலங்களில் இப்படி ஒரு குறைபாடு ஏற்படுகிறது. இது ஒன்றைத் தவிர இவர்களின் உடலில் வேறு எவ்விதக் குறைபாடும் இருப்பதில்லை.

இந்தக் குறைபாட்டையும் இவர்கள் வாயைத் திறந்து பேசும் போதுதான் அறிய முடிகிறது.


பெண்களைவிட ஆண்களையே இந்தக் குறைபாடு அதிகமாகச் சோதித்துவிடுகிறது.

மேலும் குழந்தைப் பருவத்தில் உள்ளவர்களைத்தான் இந்தக் குறைபாடு அதிகமாகப் பாதிக்கிறது.

குழந்தைப் பருவத்தில் கண்ணால் கண்டதையும், காதால் கேட்டதையும் இவர்கள் உணர்ச்சியோடு பேசத் துடிக்கிறார்கள். வேகமாக வெளியிட விரும்புகிறார்கள்.

ஆனால் வார்த்தைகள் வருவதில்லை. சொற்கள் சிதறுகின்றன வார்த்தைகள் வக்கிரமாக வந்துவிழுகின்றன.

இதற்கு என்ன காரணம்?

தொண்டையில் அமைந்துள்ள தசைகளில் ஒருவித வலிப்பு உண்டாகிறது.

இந்த வலிப்பு, பேச்சு உறுப்பைச் சரியான முறையில் செயல்பட முடியாத படி தடுக்கிறது. இதுதான் இதற்குக் காரணம் என்று திக்குவாய்ப் பேச்சாளர்களை ஆராய்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்தக் குறைபாட்டிற்கு உடல் பலகீனமும், மனப் பலகீனமும் ஒரு காரணம்.

தனக்குப் பழக்கமில்லாத நபருடன் பேச முற்படும் போது ஒருவித பயம், அச்சம், மிரட்சி உண்டாகிறது.

தன்னைவிட அறிவில் முதிர்ந்தவர்களிடம் பேசும் போதும், வயதானவர்களிடம் பேசும்போதும் இதுபோல் அச்சம் உண்டாகிறது.

இன்னும் சில சமயங்களில் தாழ்வு மனப்பான்மை காரணமாகப் பேசும் போது திக்கல் ஏற்படுகிறது. 

திக்கிப் பேசுகிறவர்கள். அவர்கள் பேசும்போது சிலருக்கு முகத்திலும் வலிப்புச் சின்னங்கள் தோன்றுவதைப் பார்க்கலாம்.

இன்னும் சிலர் தோள்ப்பட்டை களை உலுக்கி உலுக்கிப் பேசுவார்கள். முகத்திலும், உடம்பிலும், கை அசைப்பினும் சேஷ்டைகள் தோன்றுவதும் உண்டு.

சிலருக்கு உதடுகள் நடுங்கும். நாக்கு வாயின் மேற்புறத்தில் ஒட்டுக் கொள்ளும், முகச் சதைகள் சுருங்கும். விரியும். இது, தசைகளில் ஏற்படும் குறை என்று முன்காலத்தில் நினைத்து நரம்பைத் தளர்த்துவதும் நாக்கின் அமைப்பை மாற்றுவதும் ஆகிய முயற்சிகளில் இறங்கினார்கள்.உடம்பில் பித்தம் அதிகமாக இருப்பதே காரணம் என்றும் சொன்னார்கள்.

இந்தக் குறையைக் கண்டுபிடிக்க நீண்ட ஆராய்ச்சிகள் செய்து மனநிலையைச் சரிப்படுத்தினால் தீர்ந்துவிடும் என்றுமுடிவு செய்து சைக்கோதெரபி என்ற சிகிக்சை (ஸ்பீச் தெரபி) முறையைக் கொண்டுவந்தார்கள் மன இயல் நிபுணர்கள்.

 இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு கை, தோள் பட்டைகளைத் தளர்த்துவதன் மூலமும், வயிறு விதானம் மார்பு பகுதிகளில் அசைவை உண்டாக்குவதன் மூலமும் பயிற்சி கொடுக்கிறார்கள்.

இதன் மூலம் திக்குவாய் குணப்படுத்தமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது, பேச்சில் ஏற்படும் தடுமாற்றம், மற்றும் திக்கல்களைப்

போக்க இப்போது கனி மருத்துவச் சிகிச்சைகள் முக்கிய கரங்களில் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

குழந்தைப் பருவத்திலே தோன்றும் திக்கல்களைக் குழந்தைப் பருவத்திலேயே சில பயிற்சிகள் மூலம் நீக்குகிறார்கள். இதற்குப் பொறுமையும் விடாமுயற்சியும் தேவை என்று மன இயல் மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்.

திக்குவாய் பிரச்சனையை போக்க தமிழ் மருத்துவ முறைகள் என்ன?

தமிழ் மருத்துவத்திலும் குரல் வளத்திற்கு எளிய வைத்தியம் செய்கிறார்கள். நாக்கு வார்த்தைகளைச் சரிவர உச்சரிக்க முடியாமல் போனால் ஆடாதொடைக் கஷாயம் செய்து அதில் தேனும் திம்பிலியும் சேர்த்துக் குடிக்கக் கொடுக்கிறார்கள்.

சுத்தமான தேனும் பாலும் கலந்து குடித்து வந்தாலே போதும் குரல் நாண்கள் வலுப்படும்.

பேச்சு உறுப்பு நன்கு செயல்பட இப்போது நவீன துணைக்கருவிகளும் பயிற்சி சிகிச்சைகளும் எப்பேர்ப்பட்ட திக்குவாய் குறைபாட்டையும் போக்குகின்றன.

குழந்தைப் பருவத்திலேயே இந்தக் குறையைப் போக்கி விட்டால் பெரியவர்கள் ஆன பிறகு இது தொல்லைத் தராது.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும