Skip to main content

Google ads

நோய் குணமாக டானிக் அவசியமா?/அறியாத தகவல்கள்- Medical Tamizha

 டானிக் என்பது ஒரு கிரேக்கச் சொல். தொடர்ந்து திசுக்களுக்குச் சத்துமூலம் சக்தி அளிக்கும் ஒருபொருள் இது.

மனிதன் உயிர் வாழப் புரதம், கொழுப்பு. கார்போஹைட்ரேட். மினரல்ஸ் அல்லது தாதுப் பொருள், வைட்டமின்கள், நீர் ஆகிய ஆறு சத்துப் பொருள்களும் தேவை. நாம் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நீர் ஆகியவை இருக்க வேண்டும். ஆனால் தாதுப் பொருட்களும், வைட்டமின்களும் குறைந்த அளவில் இருந்தால் போதும்.

உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கும்,இயக்கத்திற்கும் வைட்டமின் சத்துக்கள் தேவைப்படுகின்றன். திரவமாக இந்த ஊட்டச் சத்துக்களை மருத்துவர்கள் கொடுக்கிறார்கள். இந்தச் சத்துக்களை நம் உடம்பே உற்பத்தி செய்துகொள்ள முடியாது.

நாம் சாப்பிடும் உணவில் எல்லாச் சத்துக்களும் அடங்கி இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சத்தை மட்டும் பிரித்துச் சாப்பிடமுடியாது.வைட்டமின் சத்துக்கள் சுமார் 20க்கு மேல் இருக்கின்றன. ஒவ்வொரு சத்தும் தனியாகப் பிரித்து எடுக்கப்பட்டுத் தனித்தனி மாத்திரைகளாகவோ, திரவப் பொருளாகவோ மாற்றப்பட்டு இரசாயனக் சுலவையாகத் தரப்படுகிறது. இதுவே டானிக்.



வைட்டமின் சத்துக்கள் உணவில் மிகக் குறைந்த அளவில் இருந்தால், நோய்கள் தோன்ற இடமளிக்கின்றன. வைட்டமின் A போதிய அளவில் இல்லாவிட்டால் நம் வளர்ச்சி குறைந்துவிடும். தொற்று நோய்கள் பரவும்.கண் சம்பந்தமான கோளாறுகள் தோன்றும்.

B-வைட்டமின் சத்துக் குறைவினால் நரம்பு சம்பந்தமான கோளாறுகள் வரும். ஜீரண உறுப்புகள் சரிவர வேலை செய்யா. அது போல C- வைட்டமின் குறைவினால் தோல், மூட்டுகள் சம்பந்தமான நோய்கள்,எலும்பு, பல் முதலியான பாதிப்புக்கு ஆளாகும். சளித் தொல்லை உண்டாகும். D-வைட்டமின் குறைவால் மார்புக் கூட்டின் வளர்ச்சி குன்றும். ரிக்கட்ஸ் நோய் உண்டாகும்.

E-வைட்டமின்குறைவால் இனப்பெருக்கத்திற்குக் கேடு சூழும்.

இவைதவிர கால்ஷியம். பொட்டாசியம், மெக்னிஷியம் அயோடின், நைட்ரஜன், அம்மோனியம், இரும்பு, கரி ஆகியவை போதுமான அளவு இல்லாவிட் டாலும் பல வகை நோய்கள் நம்மைத் தாக்கும்.

இந்த நோய்களைப் போக்க அல்லது வரவிடாமல் தடுக்க நம் தினசரி உணவில் காய்கறி, கீரை, பால், முட்டை ஆகியவற்றைச் சோர்த்துக் கொள்ளவேண்டும். உணவு வகைகளில் எல்லாச் சத்துக்களும் இருக்கும்போது டானிக் தேவை தானா? டானிக் ஒரு சிலருக்குத் தேவை தான். இதைத் தீர்மானம் செய்யவேண்டியவர் டாக்டர் ஒருவரே.

உதாரணமாக, கர்ப்பமான பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 5 மி.கிராம் பாலிக் ஆஸிட் தேவை. இதைச் சாப்பிடா விட்டால் கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும் என்ற சூழ்நிலை ஏற்ப்படும்போது பாலிக் அமில மாத்திரைகளைச் சாப்பிடும்படி டாக்டர் சிபாரிசு செய்கிறார். ஆனால் இதே பாலிக் அமிலச் சத்து முட்டைக்கோஸ், கீரை, வெள்ளரிக்காய்,சோயா பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடுவதன் மூலம் பெறலாம். சில பெண்களுக்கு இவற்றைத் தேடிப் பெற அவகாசமில்லை என்பதால் டாக்டர் டானிக் சாப்பிடும்படி கூறுகிறார்.

நோய் குணமான பிறகு சிலர் ஏதாவது டானிக் சாப்பிட்டால் நல்லது என்று நினைக்கிறார்கள். நோயினால் இழந்த பலத்தை டானிக்குகளால் மீட்டு ஆரோக்கியத்தைப் பெறலாம் என்பது இவர்கள் நினைப்பு. நோயிலிருந்து விடுபட்டவர்கள் உணவில் சத்தான பொருட்களைச் சேர்த்துக் கொள்வதுதான் இயற்கைக்குச் சரிப்பட்டுவரும்.

 செயற்கை முறையில் ஊட்டச் சத்தைப் பெறுவது உடல் நலத்திற்கு ஏற்றதல்ல. மேலும், உடலுக்கு எந்தச் சத்து குறைவாக இருக்கிறது என்று அறிந்து செயல் படவேண்டும்.ஒரே டானிக்கில் பல வகைச் சத்துக்கள் அடங்கி இருக்கலாம். ஆனால் தேவைப் படுவதை மட்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இன்னும் சிலர், சோகை நோய்க்கு உடம்பில் இரும்புச்சத்தை சேர்க்க வேண்டும் என்பதற்காக அயர்ன் சாப்பிடுகிறார்கள். அதையும் அளவுக்கு மீறிச் சாப்பிடுகிறார்கள். இதன் பின் விளைவு? வேறு சில கோளாறுகள்! ஒரு சில டானிக்குகளைத் தவிர மற்றவை பயன் ஏதும் தருவதில்லை. அவை வண்ணத் தண்ணீர்களே! 

உடம்புக்கு அயர்வு, சோர்வு, களைப்புத் தோன்றும் போது டானிக் தெம்பை அளிக்கிறது என்று கற்பனை செய்துக்கொண்டு ஏதாவது ஒரு விளம்பரத்தில் வந்த டானிக் கை சாப்பிடுகிறார்கள். இதனாலும் ஆபத்து உண்டாகிறது. சோர்வுக்குக் காரணத்தைக் கண்டுபிடித்து அதைப் போக்க மருந்து சாப்பிடவேண்டும். அதை விட்டுவிட்டு டானிக் சாப்பிடுவது நன்மை தராது.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...