Skip to main content

Google ads

நோய் குணமாக டானிக் அவசியமா?/அறியாத தகவல்கள்- Medical Tamizha

 டானிக் என்பது ஒரு கிரேக்கச் சொல். தொடர்ந்து திசுக்களுக்குச் சத்துமூலம் சக்தி அளிக்கும் ஒருபொருள் இது.

மனிதன் உயிர் வாழப் புரதம், கொழுப்பு. கார்போஹைட்ரேட். மினரல்ஸ் அல்லது தாதுப் பொருள், வைட்டமின்கள், நீர் ஆகிய ஆறு சத்துப் பொருள்களும் தேவை. நாம் உட்கொள்ளும் உணவில் புரதம், கொழுப்பு, கார்போஹைட்ரேட், நீர் ஆகியவை இருக்க வேண்டும். ஆனால் தாதுப் பொருட்களும், வைட்டமின்களும் குறைந்த அளவில் இருந்தால் போதும்.

உடல் உறுப்புகளின் வளர்ச்சிக்கும்,இயக்கத்திற்கும் வைட்டமின் சத்துக்கள் தேவைப்படுகின்றன். திரவமாக இந்த ஊட்டச் சத்துக்களை மருத்துவர்கள் கொடுக்கிறார்கள். இந்தச் சத்துக்களை நம் உடம்பே உற்பத்தி செய்துகொள்ள முடியாது.

நாம் சாப்பிடும் உணவில் எல்லாச் சத்துக்களும் அடங்கி இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட சத்தை மட்டும் பிரித்துச் சாப்பிடமுடியாது.வைட்டமின் சத்துக்கள் சுமார் 20க்கு மேல் இருக்கின்றன. ஒவ்வொரு சத்தும் தனியாகப் பிரித்து எடுக்கப்பட்டுத் தனித்தனி மாத்திரைகளாகவோ, திரவப் பொருளாகவோ மாற்றப்பட்டு இரசாயனக் சுலவையாகத் தரப்படுகிறது. இதுவே டானிக்.



வைட்டமின் சத்துக்கள் உணவில் மிகக் குறைந்த அளவில் இருந்தால், நோய்கள் தோன்ற இடமளிக்கின்றன. வைட்டமின் A போதிய அளவில் இல்லாவிட்டால் நம் வளர்ச்சி குறைந்துவிடும். தொற்று நோய்கள் பரவும்.கண் சம்பந்தமான கோளாறுகள் தோன்றும்.

B-வைட்டமின் சத்துக் குறைவினால் நரம்பு சம்பந்தமான கோளாறுகள் வரும். ஜீரண உறுப்புகள் சரிவர வேலை செய்யா. அது போல C- வைட்டமின் குறைவினால் தோல், மூட்டுகள் சம்பந்தமான நோய்கள்,எலும்பு, பல் முதலியான பாதிப்புக்கு ஆளாகும். சளித் தொல்லை உண்டாகும். D-வைட்டமின் குறைவால் மார்புக் கூட்டின் வளர்ச்சி குன்றும். ரிக்கட்ஸ் நோய் உண்டாகும்.

E-வைட்டமின்குறைவால் இனப்பெருக்கத்திற்குக் கேடு சூழும்.

இவைதவிர கால்ஷியம். பொட்டாசியம், மெக்னிஷியம் அயோடின், நைட்ரஜன், அம்மோனியம், இரும்பு, கரி ஆகியவை போதுமான அளவு இல்லாவிட் டாலும் பல வகை நோய்கள் நம்மைத் தாக்கும்.

இந்த நோய்களைப் போக்க அல்லது வரவிடாமல் தடுக்க நம் தினசரி உணவில் காய்கறி, கீரை, பால், முட்டை ஆகியவற்றைச் சோர்த்துக் கொள்ளவேண்டும். உணவு வகைகளில் எல்லாச் சத்துக்களும் இருக்கும்போது டானிக் தேவை தானா? டானிக் ஒரு சிலருக்குத் தேவை தான். இதைத் தீர்மானம் செய்யவேண்டியவர் டாக்டர் ஒருவரே.

உதாரணமாக, கர்ப்பமான பெண்ணுக்கு ஒரு நாளைக்கு 5 மி.கிராம் பாலிக் ஆஸிட் தேவை. இதைச் சாப்பிடா விட்டால் கர்ப்பச் சிதைவு ஏற்படக்கூடும் என்ற சூழ்நிலை ஏற்ப்படும்போது பாலிக் அமில மாத்திரைகளைச் சாப்பிடும்படி டாக்டர் சிபாரிசு செய்கிறார். ஆனால் இதே பாலிக் அமிலச் சத்து முட்டைக்கோஸ், கீரை, வெள்ளரிக்காய்,சோயா பீன்ஸ் ஆகியவற்றைச் சாப்பிடுவதன் மூலம் பெறலாம். சில பெண்களுக்கு இவற்றைத் தேடிப் பெற அவகாசமில்லை என்பதால் டாக்டர் டானிக் சாப்பிடும்படி கூறுகிறார்.

நோய் குணமான பிறகு சிலர் ஏதாவது டானிக் சாப்பிட்டால் நல்லது என்று நினைக்கிறார்கள். நோயினால் இழந்த பலத்தை டானிக்குகளால் மீட்டு ஆரோக்கியத்தைப் பெறலாம் என்பது இவர்கள் நினைப்பு. நோயிலிருந்து விடுபட்டவர்கள் உணவில் சத்தான பொருட்களைச் சேர்த்துக் கொள்வதுதான் இயற்கைக்குச் சரிப்பட்டுவரும்.

 செயற்கை முறையில் ஊட்டச் சத்தைப் பெறுவது உடல் நலத்திற்கு ஏற்றதல்ல. மேலும், உடலுக்கு எந்தச் சத்து குறைவாக இருக்கிறது என்று அறிந்து செயல் படவேண்டும்.ஒரே டானிக்கில் பல வகைச் சத்துக்கள் அடங்கி இருக்கலாம். ஆனால் தேவைப் படுவதை மட்டும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

இன்னும் சிலர், சோகை நோய்க்கு உடம்பில் இரும்புச்சத்தை சேர்க்க வேண்டும் என்பதற்காக அயர்ன் சாப்பிடுகிறார்கள். அதையும் அளவுக்கு மீறிச் சாப்பிடுகிறார்கள். இதன் பின் விளைவு? வேறு சில கோளாறுகள்! ஒரு சில டானிக்குகளைத் தவிர மற்றவை பயன் ஏதும் தருவதில்லை. அவை வண்ணத் தண்ணீர்களே! 

உடம்புக்கு அயர்வு, சோர்வு, களைப்புத் தோன்றும் போது டானிக் தெம்பை அளிக்கிறது என்று கற்பனை செய்துக்கொண்டு ஏதாவது ஒரு விளம்பரத்தில் வந்த டானிக் கை சாப்பிடுகிறார்கள். இதனாலும் ஆபத்து உண்டாகிறது. சோர்வுக்குக் காரணத்தைக் கண்டுபிடித்து அதைப் போக்க மருந்து சாப்பிடவேண்டும். அதை விட்டுவிட்டு டானிக் சாப்பிடுவது நன்மை தராது.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும