Skip to main content

Google ads

மருந்து விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியவை!

 டாக்டருக்கும் நோயாளிக்கும் இடையில் மருந்து விற்பனையாளர் ஒருவர் இருக்கிறார். இவர் விற்பனை செய்யும் மருந்தை வாங்கி நோயாளி சாப்பிடுகிறார். மருந்து விற்பனையாளருக்கு மேலே, மருந்தை உற்பத்தி செய்பவர் இருக்கிறார். 

இவர் தயாரித்து அனுப்பும் மருந்தை, மருந்துக் கடைக்காரர்கள் விற்பனை செய்கிறார்கள். மருந்து வியாபாரம் ஓர் இலாபகரமான வியாபாரம் என்று இப்போது இந்தத் தொழிலில் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதனால் போலி மருந்துகளின் நடமாட்டம் இந்தியாவில் பெருகிவருகிறது என்ற அச்சம் தரும் செய்திகள் தினசரித் தாள்களில் படிக்கிறோம்.

நோயிலிருந்து விடுதலை பெற எந்தவிலை கொடுத்தும் மருந்துகளை வாங்கும் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதோடு. சீக்கிரமாகவே இந்த உலகத்தை விட்டுப் போய் விடுகிறார்கள். 

மருந்து விற்பனையில் கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் வியாபாரிகள் சட்டத்தின் சந்துகளில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதை அரசும் அதிகாரிகளும் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களுக்கு வருவோம்: 



ஒரு நோயாளி, டாக்டரிடம் சிகிச்சை செய்து கொள்ளும் போது டாக்டர் எழுதிக் கொடுக்கும் சீட்டைக் கவனமாகப் பெறவேண்டும். டாக்டர் சீட்டில் டாக்டரின் முழுவிலாசம் அச்சடிக்கப்பட்டிருக்கிறதா? தகுதி பெற்ற டாக்டரா என்று கவனிக்க வேண்டும். சீட்டுக்களில் நோயாளியின் பெயர், தேதி முதலியவற்றை கவனமாக டாக்டர் எழுதியிருக்கிறாரா என்பதை கவனிக்கவேண்டும். 

மேலும் மருந்துகளின் பெயர்கள். சாப்பிடும் வேளைகள், சாப்பிடும் பில்ஸ் எண்ணிக்கைகளைக் குறிக்கிறாரா என்று சுவனிக்க வேண்டும். மருந்துகளின் பெயர்களை எழுதும்போது டாக்டர்கள் சிலர் கோழிக் கிறுக்கலாக எழுதி விடுகிறார்கள். இது மருந்தாளர்களுக்கும் புரிவதில்லை. இதனால் குழப்பம் ஏற்படுகிறது.

எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் மருந்துச் சீட்டுக் கொடுக்கும் போது நோயாளி பெயரை எழுதுவதில்லை. தேதிகூடப் போடுவதில்லை. அவ்வளவு அவசரம்!

இந்தச் சீட்டை வீட்டில் பத்திரப் படுத்தமுடியாதபடி யாருக்கு, எந்தச் சீட்டு, என்ன மருந்து என்று புரியாமலே போய் விடுகிறது. டாக்டரிடம் இவற்றைக் கவனமாக எழுதி வாங்குங்கள். அவர் மறந்தாலும் நீங்கள் மறவாதீர்கள்!

டாக்டர் எழுதிக் கொடுக்கும் மருந்தை மட்டுமே மருந்துக் கடைகளில் கேட்டு வாங்குங்கள். மருந்துக் கடைக் காரர் அது இல்லை என்று வேறு மருந்து கொடுத்தால் வாங்காதீர்கள். டாக்டரிடம் வந்து சொல்லி வேறு மருந்தை எழுதி வாங்கிக் கொள்ளுங்கள். மருந்தை வாங்கிய உடனே சாப்பிட்டு விடாதீர்கள். சரிதானா என ஒப்பிட்டுப் பாருங்கள். 

நீங்கள் வாங்கிய மருந்துச் சீட்டில் உள்ள மருந்துகளை உங்கள் அக்கம் பக்கத்திலுள்ள மற்றவர்களுக்குக் கொடுக்காதீர்கள். அந்த மருந்துகளை வேறு ஒருவருக்குப் பயன்படுத்தாதீர்கள். இதனால் விபரீதம் ஏற்படலாம். உரிமம் பெற்ற மருந்துக் கடைகளில் மட்டுமே மருந்து வாங்குங்கள். கண்டகண்ட மருந்துகளை வாங்காதீர்கள். கடைகளில் விற்கும்

மருந்து மேல் மூடி அல்லது உறைகள் கிழிந்திருந்தால் வாங்காதீர்கள். லேபிள்கள் இருக்கின்றனவா என்று கவனியுங்கள். இல்லாவிட்டால் வாங்கவேண்டாம்.

மருந்துக் கடைகளில் வாங்கும் மருந்துகளுக்கு பில் கேட்டு வாங்குங்கள். பில் இல்லாமல் மருந்து வாங்காதீர்கள்.

மருந்து போலியாக இருக்கலாம் என்ற சந்தேகம் தோன்றினால் Drug Inspector அல்லது Drug Controller க்கு எழுதுங்கள். அல்லது நேரில் சென்று புகார் கொடுங்கள். இதனால் மருந்து மோசடிகளைச் கண்டுபிடிக்க உதவி செய்தவர் ஆகிறீர்கள். 

மருந்துக் கடைக்காரர்களிடம் நீங்களே உங்கள் நோய்களைச் சொல்லி மருந்து வாங்கிச் சாப்பிடாதீர்கள். மருந்து பாட்டிலில் விலைகளைக் சுவனியுங்கள். விலை குறைத்து கடைசாரர் உங்களிடம் பணம் கேட்டால் அந்த மருந்து போலியாக இருக்கலாம். குறைந்த விலைக்கு எந்தக் கடைக்காரரும் மருந்தை விற்க மாட்டார். ஏதோ சூது!"

மருந்து பாட்டிலில் மருந்து தயாரித்த மாதம் வருஷம் போட்டிருக்கும். அல்லது காலாவதியாகும் வருஷம் மாதம் போட்டிருக்கும். இவற்றைக் கவனிக்கவும். காலங்கடந்த மருந்துகளைக் குறைந்த விலைக்கு வாங்கிச் சாப்பிடாதீர்கள் ஆபத்து,

மருந்து சாப்பிட்டுத் தீர்ந்த பிறகு மருந்து பாட்டிலுள்ள லேபிளைக் கிழித்து விடுங்கள். பாட்டிலை முடிந்த வரை பழைய விலைக்கு விற்காதீர்கள்.

விஷம் என்று குறிப்பிடப்பட்ட மருந்துகளைக் குழந்தைகள் எடுக்காத உயரத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். ஒரு வீட்டில் இருவர், மூவர் மருந்து சாப்பிடலாம். எல்லோரும்.அவரவர் மருந்துகளைத் தனித்தனி இடங்களில் வைச்சு வேண்டும் ஒரே இடத்தில் வைக்கக் கூடாது.

மருந்துகள் சிலவற்றை டாக்டர் பொட்டலமாக மடித்துக் கொடுப்பார். அதில் உங்கள் பெயரை எழுதி வையுங்கள். சித்த மருத்துவ இலேகியங்களை ஆயில் பேப்பரில் வைக்கவேண்டும். நியூஸ் பேப்பரில் வைக்காதீர்கள். 

அச்சு மையானது மருந்துடன் கலந்து விபரீதங்கள் ஏற்படலாம்.

மருந்துகள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தால் உடல் நலத்தைக் காப்பதோடு, போலி மருந்துகளையும் கண்டுபிடித்து மோசடிகளைத் தடுக்கலாம்.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...