Skip to main content

Google ads

மருந்து விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியவை!

 டாக்டருக்கும் நோயாளிக்கும் இடையில் மருந்து விற்பனையாளர் ஒருவர் இருக்கிறார். இவர் விற்பனை செய்யும் மருந்தை வாங்கி நோயாளி சாப்பிடுகிறார். மருந்து விற்பனையாளருக்கு மேலே, மருந்தை உற்பத்தி செய்பவர் இருக்கிறார். 

இவர் தயாரித்து அனுப்பும் மருந்தை, மருந்துக் கடைக்காரர்கள் விற்பனை செய்கிறார்கள். மருந்து வியாபாரம் ஓர் இலாபகரமான வியாபாரம் என்று இப்போது இந்தத் தொழிலில் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதனால் போலி மருந்துகளின் நடமாட்டம் இந்தியாவில் பெருகிவருகிறது என்ற அச்சம் தரும் செய்திகள் தினசரித் தாள்களில் படிக்கிறோம்.

நோயிலிருந்து விடுதலை பெற எந்தவிலை கொடுத்தும் மருந்துகளை வாங்கும் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதோடு. சீக்கிரமாகவே இந்த உலகத்தை விட்டுப் போய் விடுகிறார்கள். 

மருந்து விற்பனையில் கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் வியாபாரிகள் சட்டத்தின் சந்துகளில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதை அரசும் அதிகாரிகளும் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களுக்கு வருவோம்: 



ஒரு நோயாளி, டாக்டரிடம் சிகிச்சை செய்து கொள்ளும் போது டாக்டர் எழுதிக் கொடுக்கும் சீட்டைக் கவனமாகப் பெறவேண்டும். டாக்டர் சீட்டில் டாக்டரின் முழுவிலாசம் அச்சடிக்கப்பட்டிருக்கிறதா? தகுதி பெற்ற டாக்டரா என்று கவனிக்க வேண்டும். சீட்டுக்களில் நோயாளியின் பெயர், தேதி முதலியவற்றை கவனமாக டாக்டர் எழுதியிருக்கிறாரா என்பதை கவனிக்கவேண்டும். 

மேலும் மருந்துகளின் பெயர்கள். சாப்பிடும் வேளைகள், சாப்பிடும் பில்ஸ் எண்ணிக்கைகளைக் குறிக்கிறாரா என்று சுவனிக்க வேண்டும். மருந்துகளின் பெயர்களை எழுதும்போது டாக்டர்கள் சிலர் கோழிக் கிறுக்கலாக எழுதி விடுகிறார்கள். இது மருந்தாளர்களுக்கும் புரிவதில்லை. இதனால் குழப்பம் ஏற்படுகிறது.

எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் மருந்துச் சீட்டுக் கொடுக்கும் போது நோயாளி பெயரை எழுதுவதில்லை. தேதிகூடப் போடுவதில்லை. அவ்வளவு அவசரம்!

இந்தச் சீட்டை வீட்டில் பத்திரப் படுத்தமுடியாதபடி யாருக்கு, எந்தச் சீட்டு, என்ன மருந்து என்று புரியாமலே போய் விடுகிறது. டாக்டரிடம் இவற்றைக் கவனமாக எழுதி வாங்குங்கள். அவர் மறந்தாலும் நீங்கள் மறவாதீர்கள்!

டாக்டர் எழுதிக் கொடுக்கும் மருந்தை மட்டுமே மருந்துக் கடைகளில் கேட்டு வாங்குங்கள். மருந்துக் கடைக் காரர் அது இல்லை என்று வேறு மருந்து கொடுத்தால் வாங்காதீர்கள். டாக்டரிடம் வந்து சொல்லி வேறு மருந்தை எழுதி வாங்கிக் கொள்ளுங்கள். மருந்தை வாங்கிய உடனே சாப்பிட்டு விடாதீர்கள். சரிதானா என ஒப்பிட்டுப் பாருங்கள். 

நீங்கள் வாங்கிய மருந்துச் சீட்டில் உள்ள மருந்துகளை உங்கள் அக்கம் பக்கத்திலுள்ள மற்றவர்களுக்குக் கொடுக்காதீர்கள். அந்த மருந்துகளை வேறு ஒருவருக்குப் பயன்படுத்தாதீர்கள். இதனால் விபரீதம் ஏற்படலாம். உரிமம் பெற்ற மருந்துக் கடைகளில் மட்டுமே மருந்து வாங்குங்கள். கண்டகண்ட மருந்துகளை வாங்காதீர்கள். கடைகளில் விற்கும்

மருந்து மேல் மூடி அல்லது உறைகள் கிழிந்திருந்தால் வாங்காதீர்கள். லேபிள்கள் இருக்கின்றனவா என்று கவனியுங்கள். இல்லாவிட்டால் வாங்கவேண்டாம்.

மருந்துக் கடைகளில் வாங்கும் மருந்துகளுக்கு பில் கேட்டு வாங்குங்கள். பில் இல்லாமல் மருந்து வாங்காதீர்கள்.

மருந்து போலியாக இருக்கலாம் என்ற சந்தேகம் தோன்றினால் Drug Inspector அல்லது Drug Controller க்கு எழுதுங்கள். அல்லது நேரில் சென்று புகார் கொடுங்கள். இதனால் மருந்து மோசடிகளைச் கண்டுபிடிக்க உதவி செய்தவர் ஆகிறீர்கள். 

மருந்துக் கடைக்காரர்களிடம் நீங்களே உங்கள் நோய்களைச் சொல்லி மருந்து வாங்கிச் சாப்பிடாதீர்கள். மருந்து பாட்டிலில் விலைகளைக் சுவனியுங்கள். விலை குறைத்து கடைசாரர் உங்களிடம் பணம் கேட்டால் அந்த மருந்து போலியாக இருக்கலாம். குறைந்த விலைக்கு எந்தக் கடைக்காரரும் மருந்தை விற்க மாட்டார். ஏதோ சூது!"

மருந்து பாட்டிலில் மருந்து தயாரித்த மாதம் வருஷம் போட்டிருக்கும். அல்லது காலாவதியாகும் வருஷம் மாதம் போட்டிருக்கும். இவற்றைக் கவனிக்கவும். காலங்கடந்த மருந்துகளைக் குறைந்த விலைக்கு வாங்கிச் சாப்பிடாதீர்கள் ஆபத்து,

மருந்து சாப்பிட்டுத் தீர்ந்த பிறகு மருந்து பாட்டிலுள்ள லேபிளைக் கிழித்து விடுங்கள். பாட்டிலை முடிந்த வரை பழைய விலைக்கு விற்காதீர்கள்.

விஷம் என்று குறிப்பிடப்பட்ட மருந்துகளைக் குழந்தைகள் எடுக்காத உயரத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். ஒரு வீட்டில் இருவர், மூவர் மருந்து சாப்பிடலாம். எல்லோரும்.அவரவர் மருந்துகளைத் தனித்தனி இடங்களில் வைச்சு வேண்டும் ஒரே இடத்தில் வைக்கக் கூடாது.

மருந்துகள் சிலவற்றை டாக்டர் பொட்டலமாக மடித்துக் கொடுப்பார். அதில் உங்கள் பெயரை எழுதி வையுங்கள். சித்த மருத்துவ இலேகியங்களை ஆயில் பேப்பரில் வைக்கவேண்டும். நியூஸ் பேப்பரில் வைக்காதீர்கள். 

அச்சு மையானது மருந்துடன் கலந்து விபரீதங்கள் ஏற்படலாம்.

மருந்துகள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தால் உடல் நலத்தைக் காப்பதோடு, போலி மருந்துகளையும் கண்டுபிடித்து மோசடிகளைத் தடுக்கலாம்.

Comments

Popular posts from this blog

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும் 1. முதல் சில மாதங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி & வயிற்றுப்போக்கு (Vomiting & Diarrhoea): Vomiting & Diarrhoea குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானவை. முதல் Step குழந்தைக்கு கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரைச் சிறிது கொடுக்கலாம். (or) feed of பால் கொடுப்பதை நிறுத்தலாம். பால் கொடுப்பதற்கு பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை செய்து கொடுக்கலாம். பாலைக் கொதிக்க வைத்து அதில் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை விடவும். பாலிலிருந்து தண்ணீர் தனியாகவும் Paneer தனியாகவும் பிரிந்து விடும். இதை வடிகட்டி அந்த நீரை மட்டும் இடைவெளி விட்டு கொடுத்து வரலாம். (or)  (i) 200ml தண்ணீர் (ii) 2 tsp சர்க்கரை  (iii) 1 tsp உப்பு  (iv) அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு (v) ½ tsp Soad bicarb (cooking soda) இவற்றைக் கலந்து அடிக்கடி கொடுத்து வரலாம். குழந்தை dehydration ஆகாமல் தடுப்பதற்கு இது மிகவும் உதவும். குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் பாத்திரங்களை மிகவும் சுத்தமாக உபயோகப்படுத்தல் அவசியம். (2)...

What is the natural remedy for body pain?

What is the natural remedy for body pain? A Comprehensive Guide If you have ever experienced body pain, you know how uncomfortable and frustrating it can be. Body pain can occur for a variety of reasons, including injury, illness, or chronic conditions. While over-the-counter pain relievers can provide temporary relief, they often come with unwanted side effects. Fortunately, there are natural remedies that can help relieve body pain without the risks associated with medications. In this article, we will explore the various natural remedies for body pain and how they work. Understanding Body Pain Before we dive into the natural remedies, it's important to understand what causes body pain. Body pain can be acute or chronic, and it can be caused by a variety of factors. Acute pain is usually caused by injury, such as a sprained ankle or pulled muscle. Chronic pain, on the other hand, is pain that persists for more than three months and is often caused by conditions such as arthritis ...