Skip to main content

Google ads

கக்குவான் இருமல் ஐ தடுப்பது எப்படி?அறியாத தகவல்கள்- Medical Tamizha

 பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தொல்லை கொடுக்கும் இருமல் நோய் கக்குவான். உண்ட உணவை இருமிஇருமிக் கக்கி வெயியேற்றுவதால் இதற்குக் கக்குவான் இருமல் என்று பெயர் வந்தது.

பெர்டுஸில் என்ற கிருமியினால் இந்த நோய் உண்டாகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இது ஒரு தொற்று நோய். குழந்தைகள் மத்தியில் மிக வேகமாகப் பரவித் தொல்லை தருவதால் இருமல் வந்த குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் பெற்றோர் பாதுகாக்க வேண்டும். இந்த நோய் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் தாக்கினால், இசிவை உண்டாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

இந்த நோய் வந்த குழந்தைகளுக்கு தொந்தரவுகளும் உண்டாகலாம். தொடர்ந்து இருமுவதால் சுவாசப் பைகளிலுள்ள சிறு காற்றுக் குழாய்கள் விரிவடைகின்றன. இதனால் பிராங்கியக்டஸிஸ் என்ற சுவாசக் கோளாறு நோயும் உண்டாகிறது.




ஆகாரத்தை இருமியபடி வாந்தி எடுப்பதால் குழந்தையின் உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டுத் துரும்பாய் இளைத்து விடுகிறார்கள். பகலைவிட இரவில் இருமல் அதிகமாவதால் குழந்தைகளின் தூக்கம் கெடுவதோடு, குடும்பத்திலுள்ள அனைவரின் தூக்கமும் கெட்டு எல்லோருமே துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.

இதையும் படிக்க :  சிறுநீர் கழிக்கும் போது சிரமமாக இருக்கிறதா ? எப்படி தடுப்பது ?

இந்த நோய் சில குழந்தைகளுக்கு மூன்று மாதங்கள் கூட தொடர்ந்து தொல்லை கொடுக்கும். இந்த நோயை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால் பிறகு நிமோனியா காய்ச்சல் கூடவரும்.

டிப்தீரியா, டெட்னஸ், ஊஃபிங் காஃப் (Whooping Cough) ஆகிய மூன்று நோய்களும் வராமல் தடுக்கக் குழந்தைப் பருவத்திலிருந்தே டிரிபிள் ஆன்டிஜன் ஊசி போட்டுக் கொண்டால் கக்குவான் இருமலைத் தடுத்து நிறுத்தலாம்.

மாதம் ஒரு ஊசி வீதம் மூன்று மாதங்கள் அடுத்தடுத்து போட்டு வந்தால் இந்த நோய் வராது.

ஒவ்வொரு குழந்தைக்கும் மூன்றாவது மாதம், நான்காவது மாதம், ஐந்தாவது மாதங்களில் போடலாம். இப்படிப் போட்டு வந்தால் குழந்தைக்கு நோய் எதிர்க்கும் சக்தி வந்துவிடுகிறது.

 கக்குவான் இருமல் வந்த குழந்தைகளுடன் விளையாடும் மற்ற குழந்தைகளுக்கும் சீரம் ஊசி போட்டுக் கொள்வதால் நோய் தொற்றாமல் தடுத்துக் கொள்ளலாம்.

தமிழ் வைத்தியத்தில் தூதுவளைச் சாற்றில், கோஷ்டம் என்ற நாட்டு மருந்து சரக்கைக் குழப்பி அதோடு பசு நெய்யையும் கலந்து கொடுக்கிறார்கள். இது கக்குவான் நோயைக் குணப்படுத்தகிறது. இது தவிர பலாச் சுளையைத் தேனில் நனைத்துக் கொடுக்கிறார்கள். எளிமையான வைத்தியம்.

இப்போது பெரும்பாலான குழந்தை நோய்களுக்குத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு ஆரம்பத்திலேயே போட்டுக்கொள்ள வசதிகள் இருக்கின்றன. இதனால் கக்குவான் நோய் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை.

Comments

Popular posts from this blog

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும் 1. முதல் சில மாதங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி & வயிற்றுப்போக்கு (Vomiting & Diarrhoea): Vomiting & Diarrhoea குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானவை. முதல் Step குழந்தைக்கு கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரைச் சிறிது கொடுக்கலாம். (or) feed of பால் கொடுப்பதை நிறுத்தலாம். பால் கொடுப்பதற்கு பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை செய்து கொடுக்கலாம். பாலைக் கொதிக்க வைத்து அதில் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை விடவும். பாலிலிருந்து தண்ணீர் தனியாகவும் Paneer தனியாகவும் பிரிந்து விடும். இதை வடிகட்டி அந்த நீரை மட்டும் இடைவெளி விட்டு கொடுத்து வரலாம். (or)  (i) 200ml தண்ணீர் (ii) 2 tsp சர்க்கரை  (iii) 1 tsp உப்பு  (iv) அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு (v) ½ tsp Soad bicarb (cooking soda) இவற்றைக் கலந்து அடிக்கடி கொடுத்து வரலாம். குழந்தை dehydration ஆகாமல் தடுப்பதற்கு இது மிகவும் உதவும். குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் பாத்திரங்களை மிகவும் சுத்தமாக உபயோகப்படுத்தல் அவசியம். (2)...

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந...