Skip to main content

Google ads

கக்குவான் இருமல் ஐ தடுப்பது எப்படி?அறியாத தகவல்கள்- Medical Tamizha

 பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தொல்லை கொடுக்கும் இருமல் நோய் கக்குவான். உண்ட உணவை இருமிஇருமிக் கக்கி வெயியேற்றுவதால் இதற்குக் கக்குவான் இருமல் என்று பெயர் வந்தது.

பெர்டுஸில் என்ற கிருமியினால் இந்த நோய் உண்டாகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இது ஒரு தொற்று நோய். குழந்தைகள் மத்தியில் மிக வேகமாகப் பரவித் தொல்லை தருவதால் இருமல் வந்த குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் பெற்றோர் பாதுகாக்க வேண்டும். இந்த நோய் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் தாக்கினால், இசிவை உண்டாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

இந்த நோய் வந்த குழந்தைகளுக்கு தொந்தரவுகளும் உண்டாகலாம். தொடர்ந்து இருமுவதால் சுவாசப் பைகளிலுள்ள சிறு காற்றுக் குழாய்கள் விரிவடைகின்றன. இதனால் பிராங்கியக்டஸிஸ் என்ற சுவாசக் கோளாறு நோயும் உண்டாகிறது.




ஆகாரத்தை இருமியபடி வாந்தி எடுப்பதால் குழந்தையின் உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டுத் துரும்பாய் இளைத்து விடுகிறார்கள். பகலைவிட இரவில் இருமல் அதிகமாவதால் குழந்தைகளின் தூக்கம் கெடுவதோடு, குடும்பத்திலுள்ள அனைவரின் தூக்கமும் கெட்டு எல்லோருமே துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.

இதையும் படிக்க :  சிறுநீர் கழிக்கும் போது சிரமமாக இருக்கிறதா ? எப்படி தடுப்பது ?

இந்த நோய் சில குழந்தைகளுக்கு மூன்று மாதங்கள் கூட தொடர்ந்து தொல்லை கொடுக்கும். இந்த நோயை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால் பிறகு நிமோனியா காய்ச்சல் கூடவரும்.

டிப்தீரியா, டெட்னஸ், ஊஃபிங் காஃப் (Whooping Cough) ஆகிய மூன்று நோய்களும் வராமல் தடுக்கக் குழந்தைப் பருவத்திலிருந்தே டிரிபிள் ஆன்டிஜன் ஊசி போட்டுக் கொண்டால் கக்குவான் இருமலைத் தடுத்து நிறுத்தலாம்.

மாதம் ஒரு ஊசி வீதம் மூன்று மாதங்கள் அடுத்தடுத்து போட்டு வந்தால் இந்த நோய் வராது.

ஒவ்வொரு குழந்தைக்கும் மூன்றாவது மாதம், நான்காவது மாதம், ஐந்தாவது மாதங்களில் போடலாம். இப்படிப் போட்டு வந்தால் குழந்தைக்கு நோய் எதிர்க்கும் சக்தி வந்துவிடுகிறது.

 கக்குவான் இருமல் வந்த குழந்தைகளுடன் விளையாடும் மற்ற குழந்தைகளுக்கும் சீரம் ஊசி போட்டுக் கொள்வதால் நோய் தொற்றாமல் தடுத்துக் கொள்ளலாம்.

தமிழ் வைத்தியத்தில் தூதுவளைச் சாற்றில், கோஷ்டம் என்ற நாட்டு மருந்து சரக்கைக் குழப்பி அதோடு பசு நெய்யையும் கலந்து கொடுக்கிறார்கள். இது கக்குவான் நோயைக் குணப்படுத்தகிறது. இது தவிர பலாச் சுளையைத் தேனில் நனைத்துக் கொடுக்கிறார்கள். எளிமையான வைத்தியம்.

இப்போது பெரும்பாலான குழந்தை நோய்களுக்குத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு ஆரம்பத்திலேயே போட்டுக்கொள்ள வசதிகள் இருக்கின்றன. இதனால் கக்குவான் நோய் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும