Skip to main content

Google ads

கக்குவான் இருமல் ஐ தடுப்பது எப்படி?அறியாத தகவல்கள்- Medical Tamizha

 பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்குத் தொல்லை கொடுக்கும் இருமல் நோய் கக்குவான். உண்ட உணவை இருமிஇருமிக் கக்கி வெயியேற்றுவதால் இதற்குக் கக்குவான் இருமல் என்று பெயர் வந்தது.

பெர்டுஸில் என்ற கிருமியினால் இந்த நோய் உண்டாகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இது ஒரு தொற்று நோய். குழந்தைகள் மத்தியில் மிக வேகமாகப் பரவித் தொல்லை தருவதால் இருமல் வந்த குழந்தைகளை மற்ற குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடாமல் பெற்றோர் பாதுகாக்க வேண்டும். இந்த நோய் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் தாக்கினால், இசிவை உண்டாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

இந்த நோய் வந்த குழந்தைகளுக்கு தொந்தரவுகளும் உண்டாகலாம். தொடர்ந்து இருமுவதால் சுவாசப் பைகளிலுள்ள சிறு காற்றுக் குழாய்கள் விரிவடைகின்றன. இதனால் பிராங்கியக்டஸிஸ் என்ற சுவாசக் கோளாறு நோயும் உண்டாகிறது.




ஆகாரத்தை இருமியபடி வாந்தி எடுப்பதால் குழந்தையின் உடல் வளர்ச்சி பாதிக்கப்பட்டுத் துரும்பாய் இளைத்து விடுகிறார்கள். பகலைவிட இரவில் இருமல் அதிகமாவதால் குழந்தைகளின் தூக்கம் கெடுவதோடு, குடும்பத்திலுள்ள அனைவரின் தூக்கமும் கெட்டு எல்லோருமே துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.

இதையும் படிக்க :  சிறுநீர் கழிக்கும் போது சிரமமாக இருக்கிறதா ? எப்படி தடுப்பது ?

இந்த நோய் சில குழந்தைகளுக்கு மூன்று மாதங்கள் கூட தொடர்ந்து தொல்லை கொடுக்கும். இந்த நோயை ஆரம்பத்திலேயே தடுக்காவிட்டால் பிறகு நிமோனியா காய்ச்சல் கூடவரும்.

டிப்தீரியா, டெட்னஸ், ஊஃபிங் காஃப் (Whooping Cough) ஆகிய மூன்று நோய்களும் வராமல் தடுக்கக் குழந்தைப் பருவத்திலிருந்தே டிரிபிள் ஆன்டிஜன் ஊசி போட்டுக் கொண்டால் கக்குவான் இருமலைத் தடுத்து நிறுத்தலாம்.

மாதம் ஒரு ஊசி வீதம் மூன்று மாதங்கள் அடுத்தடுத்து போட்டு வந்தால் இந்த நோய் வராது.

ஒவ்வொரு குழந்தைக்கும் மூன்றாவது மாதம், நான்காவது மாதம், ஐந்தாவது மாதங்களில் போடலாம். இப்படிப் போட்டு வந்தால் குழந்தைக்கு நோய் எதிர்க்கும் சக்தி வந்துவிடுகிறது.

 கக்குவான் இருமல் வந்த குழந்தைகளுடன் விளையாடும் மற்ற குழந்தைகளுக்கும் சீரம் ஊசி போட்டுக் கொள்வதால் நோய் தொற்றாமல் தடுத்துக் கொள்ளலாம்.

தமிழ் வைத்தியத்தில் தூதுவளைச் சாற்றில், கோஷ்டம் என்ற நாட்டு மருந்து சரக்கைக் குழப்பி அதோடு பசு நெய்யையும் கலந்து கொடுக்கிறார்கள். இது கக்குவான் நோயைக் குணப்படுத்தகிறது. இது தவிர பலாச் சுளையைத் தேனில் நனைத்துக் கொடுக்கிறார்கள். எளிமையான வைத்தியம்.

இப்போது பெரும்பாலான குழந்தை நோய்களுக்குத் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு ஆரம்பத்திலேயே போட்டுக்கொள்ள வசதிகள் இருக்கின்றன. இதனால் கக்குவான் நோய் குறித்துக் கவலைப்பட வேண்டியதில்லை.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...