Skip to main content

Google ads

சிறுநீர் கழிப்பதில் சிரமமாக இருக்கிறதா? தடுக்கும் வழிமுறைகள்

 சாதாரணமாகக் கோடை வெயிலில் வெளியே சுற்றி விட்டு வந்தால் உடம்பிலுள்ள நீர்ப்பகுதி சுண்டும்.எரிச்சலோடு சிறுநீர் கழியும்.இதை நீர்க் கடுப்பு என்று சொல்கிறோம்.

சிறுநீர் வெளிவருவதில் தாமதம் உண்டாகும். சிறுநீர் குறைவாக வெளியாகும். சிரமமும் ஏற்படும்.

ஆனால் சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் வெளி வருவதற்குச் சில கோளாறுகள் சிறுநீர்ப்பை என்று சொல்லப்படும் பிளாடரில் ஏற்படுவது தான் காரணம். இது பெரும்பாலும் ஆண்களுக்கே உண்டாகிறது.

அதிலும் சற்று வயதானவர்களுக்கே உண்டாகிறது என்பது டாக்டர்களின் சுணிப்பு.

சிறுநீர்ப் பையின் அடிப்பாகத்தில் ஒரு சுரப்பி இருக்கிறது. இதைப் பிராஸ்டேட் சுரப்பி என்று சொல்லுகிறோம்.

இதன் வழியாகத்தான் ஒரு குழாய் சிறு நீரை வெளியே கொண்டுவருகிறது.

இந்த பிராஸ்டேட் சுரப்பி சில சமயங்களில் கிருமிகளின் தாக்குதலால் வீங்கிப் போய்ச் சிறுநீர்ப் பையின் வாயை அடைத்துவிடுகிறது.

இதனால் சிறுநீர் வெளியே வர முடியாமல் கடுப்புடன் சொட்டுச் சொட்டாக வருகிறது.ஒரு நாளைக்குச் சுமாராக 1.5 லிட்டர் வெளியேற் வேண்டிய சிறுநீர், இது போன்ற நீர்க் கடுப்புக்களால். பிராஸ்டேட் வீக்கங்களால், அடைப்பு ஏற்பட்டு 0.5 லிட்டர் ஆக வெளிவருகிறபோது சொட்டுச் சொட்டாக வெளிவருகிறது.

இதற்குக் காரணம் கிருமி நோயா?

ஆமாம்!  கிருமித் தொந்தரவால் கட்டியும். வீக்கமும் உண்டாகிறது. அடிக்கடி காய்ச்சல் உண்டாகும். அடி வயிற்றில் வலி இருக்கும். ஆரோக்கியமான உடல் என்றால் சிறுநீர் தங்கு தடையில்லாமல் சிறுநீர்க் குழாய் மூலம் பாய்ந்தோடி வரவேண்டும்.இதற்குத் தடை ஏற்பட்டால் சிறுநீர்ப் பையில் ஏதோ கோளாறு தோன்றி இருக்கிறது என்று அடையாளம்.

பெண்களுக்குக் கர்ப்பமான ஆறாம் மாதத்தில் வயிறு பெருத்துச் சிறுநீர்க் குழாயில் அழுத்தம் ஏற்பட்டு, அதனால்

நீர்ச் சுருக்கு நீர்க் கடுப்பு, நீர் அடைப்பு உண்டாகலாம். சிலசமயங்களில், சில காரணங்களால் நாமே சிறு நீரை அடக்கி வைக்கிறோம்.

பஸ், இரயில் பயணங்களில் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் சிறுநீர் கழிக்கும் உந்துதல் ஏற்பட்டும், நிலைமை இடம் கொடாததால் அடக்கி வைக்கிறோம்.இதனாலும் சில கோளாறுகள் ஏற்பட்டுச் சிறுநீர்ப் போக்குத் தடைப் படுகிறது.

இன்னொரு முக்கியமான விஷயம், சிறுநீர்ப்பை பாதிப்பு ஏற்படுவதற்குப் பலமான காரணம் தேவை இல்லை. மூக்கிலும், தொண்டையிலும் உண்டாகும் நோய்கள்கூடச் சிறுநீரகத்தைப் பாதிக்கலாம்.சிறுநீரகக் கட்டிப் புற்று நோயாகவும் மாறலாம்.

டி.பி. நோயினால் பாதிக்கப்படலாம்.சிறுநீர்க் குழாயில் எந்த விதமான பாதிப்பு ஏற்பட்டாலும் உடனே சுவனிக்க வேண்டும்.

இதற்கு சிஸ்டோஸ் ஸ்கோப் என்ற ஒரு சோதனைக் கருவி இருக்கிறது. இந்தக் கருவியை சிறுநீர் உறுப்பில் செலுத்தி என்ன கோளாறு என்பதை டாக்டர்கள் கண்டு பிடிக்கிறார்கள்.'பிராஸ்டேட் பழுதுபட்டிருந்தால் அறுவை சிகிச்சை மூலம் நீக்கிவிடுகிறார்கள்.

இவற்றிற்கு சல்பா மாத்திரைகள், ஸ்பரிடிம்,டெட்ராசின், அக்ரோமைசின், பாரா டான்டின் போன்றவை நல்ல பயனைத் தருவதாக டாக்டர்கள் எழுதிக்கொடுக்கிறார்கள்.

சொட்டுச் சொட்டாகச் சிறுநீர் வெளி வருகிறது என்றால் இந்தப் பாதிப்பு உள்ளவர்கள் அதிகமாகந் தண்ணீர் குடிக்க வேண்டும்.

வைட்டமின்-ஏ சத்துக் குறைவால் இம்மாதிரிக் குறைபாடுகள் பலருக்கு ஏற்படலாம். பால், தயிர், மோர், கேரட், பீட்ரூட், கீரை வகைகளை அதிக அளவில் சாப்பிட வேண்டும்.

தள்ள வேண்டிய சில விஷயங்களும் உண்டு. மிளகாய். மிளகு, பட்டை, இலவங்கம், சுடுகு இவை எரிச்சலைத் தூண்டும் சமையல் சரக்குகள், இவற்றைத் தள்ள வேண்டும்.

சிறுநீரகத்திற்கு அதிகமாகத் தொல்லை கொடுப்பவை இவை போன்ற காரப் பொருட்களே.சிறுநீரகம் மனித உடம்பில் ஒரு முக்கியமான வேலையைச் செய்யும் உறுப்பு. சிறுநீர்ப் பிரித்திகள் இரத்தத்தைச் சுத்தமாக்கி,அசுத்தத்தை வெளியேற்றும் முக்கிய அலுவல்களைக் கவனிக்கும் உறுப்பு.

இந்த உறுப்பு பாதிக்கப்படுமானால் உடலின் ஆரோக்கியமே பாதிக்கப்படடுவிடும். ஆகவே, சிறுநீர் தொல்லைதானே இது. இதனால் என்ன கெட்டுவிடப் போகிறது என்று அலட்சியமாக இருந்து விடாமல் உடனே கவனித்துச் சிகிச்சை செய்து கொள்ளுங்கள்.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...