Skip to main content

Posts

Google ads

பி.சி.ஜி நோய்த் தடுப்பு பற்றி மருந்து உங்களுக்கு தெரியாத தகவல்கள் -

 காச நோய் என்றும், உருக்கி நோய் என்றும், இராஜ ரோசும் என்றும் தமிழில் பல பெயர்களால் அழைக்கப்படும் டியூபர் குளோசிஸ் டி.பி. நோயைப்பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கிறோம்.  இந்த நோயை க்ஷயரோகம் என்றும்சிலர் அழைக்கிறார்கள். க்ஷயம் என்ற வடமொழிச் சொல்லுக்கு பலியிடுதல், முடித்துவைத்தல் என்று பொருள். சுமார் 102 வருஷங்களுக்குமுன் காச நோய்க் கிருமியை ராபர்ட் காக் என்பவர் கண்டுபிடித்தார். இந்த நோய்க்குப் பலியாகும் மக்களைக் குணப்படுத்த பல விஞ்ஞானிகள், பல்வேறு சிகிச்சை கண்டுபிடித்து வைத்தியம் செய்துவந்தார்கள். முறைகளைக் இந்த நோய் வராமலே தடுப்பது எப்படி என்று இரண்டு மருத்துவ விஞ்ஞானிகள் பாரிசிலுள்ள பாஸ்டர் நிலையத்தில் ஆராய்ச்சி செய்துவந்தார்கள். ஒருவர் மனித டி.பி. நோய்களுக்கு ஆராய்ச்சி செய்தார். இவர் பெயர் கால்மெட் என்பது. இன்னோருவர் மிருகங்களைத் தாக்கும் டி.பி.கிருமிகளை ஆராய்ச்சி செய்து வந்தார். இவர் பெயர் கெரின். இருவரும் பிரெஞ்சு விஞ்ஞானிகள். இவர்கள் கண்டுபிடித்த வாக்சின் மருந்திற்கு நோய்க் கிருமியின் பெயரோடு இந்த இரண்டு பேர்களின் பெயரையும் சேர்த்து வைத்து விட்டார்கள். Bacillus Calmette Guerin என்று. 

வலிப்பு நோய்க்கு என்ன முதல் உதவி கொடுக்க வேண்டும் ?-

 ஒருவர் சாலையில் நடந்து செல்கிறார். திடீரென்று கீழே விழுகிறார். வாயிலிருந்து நுரை தள்ளுகிறது. கை கால்களை உதைத்துக்கொள்கிறார்.  கைகளை உதறுகிறார் சில நிமிடங்களில் அப்படியே அமைதியாக இருந்துவிட்டுச் சோர்வுடன் எழுந்து செல்கிறார். இது என்ன நோய்?  இதற்குக் கைகால் வலிப்புநோய் என்று சொல்லுகிறார்கள் டாக்டர்கள். ஆங்கிலத்தில் எலிலெப்சி என்கிறார்கள். இதில் இன்னொரு வகை வலிப்பும் உண்டு. நோயாளி கீழே விழுவதில்லை. சில நிமிடங்களில் விழித்தது விழித்தபடியே இருப்பார்கள் கை கால்களை மட்டும் அசைப்பார்கள். பேச மாட்டார்கள்.  தலையையும் வலது இடது புறங்களில் திருப்பிக்கொண்டே இருப்பார்கள். இதுவும் ஒருவகை வலிப்பு நோய். இது குழந்தைகளுக்கும் வரும். இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் வரும். மூளையில் ஏற்படும் ஒருவகை உறுத்தலே இதற்குக் காரணம் என்று பொதுவாகச் சொல்லலாம். இது போன்ற நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ என்ன உதவி செய்யலாம், எப்படி உதவலாம் என்பதை எடுத்துச் சொல்வதே இந்தக் கட்டுரை. ஒரு நோயாளி வலிப்பால் துடிக்கும்போது வேடிக்கை பார்ப்பவர்கள் தாம் அதிகம். உதவி செய்பவர்கள் குறைவு.  உதவி செ

பிறவி கோளாறுகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் - தமிழ் சித்த மருத்துவம்

 குழந்தை பிறந்தவுடன் குழந்தையும் தாயும் இரண்டு உடல்களாக, இரண்டு உயிராகப் பிரிந்ததும் தாய் மகிழ்ச்சி அடைகிறாள். கணவனும் மகிழ்ச்சி அடைகிறான். இது எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பதுதான். ஆனால், இதற்கு மாறாகச் சில தாய்மார்களுக்குக் குழந்தை பிறந்தவுடன் பிறந்த குழந்தை கண்ணோ, மூக்கோ, வாயோ, உதடோ, கைகால்களோ கோரமாக அமைந்துவிட்டால் பெற்றவள் முகம் சுளிக்கிறாள்.  குழந்தை பிறந்தவுடன் சில குழந்தைகள் அங்கஹீனமாகவும், பிறந்த சில காலத்திற்குள் அவலட்சணமாகவோ அமைந்து விடுவது உண்டு. இந்தக் குறைகளைப் பிறவிக் கோளாறு என்று சொல்லுவார்கள். ஜீன்கள் என்று சொல்லப்படும் பாரம்பரியத்திற்கு ஆதாரமான ஒரு பொருளில் கோளாறு ஏற்பட்டுத் தோன்றுகின்ற குறைபாடுகளே இவை. ஜீன்களில் ஏற்படும் விபரிதங்களால் உதடுகள் பிளந்தும், நாக்கு ஒட்டியும். காதுகள் சிதைந்தும், விரல்கள் ஒட்டியும் ஆறு விரல்களாகப் பிரிந்தும், கவட்டைக் கால்களுடனும் சில குழந்தைகள் பிறக்கின்றன.  இவை கண்களுக்குத் தெரிந்த பிறவிக் கோளாறுகள். சில கண்களுக்குத் தோன்றாமல் மறைந்து நின்று குழந்தைகளுக்குத் துன்பம் தருபவை. நீர்க் கட்டிகள் என்று சொல்லப்படும் (Cysts) நுரையீரலிலும் சிறுநீரகத

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான அளவு

எக்ஸ்ரே வால் உடம்புக்கு தீமை உண்டா ?அறியாத தகவல்கள்- Medical Tamizha

 கதிர் வீச்சுக்களின் மூலம் நோயைக் கண்டு பிடிக்கவும். அதைக் குணப்படுத்தவும் கூடிய சிகிச்சை முறையான எக்ஸ்-ரே சாதனத்தைக் கண்டுபிடித்து அதைச் செயல்முறைக்குக் கொண்டுவந்தார் ராஞ்சன் என்ற விஞ்ஞானி.எக்ஸ் ரே கண்டுபிடிக்கப்பட்டுச் சுமார் 90 ஆண்டுகள் ஆகின்றன. உடல் உறுப்புக்களில் கதிர் ஊடுருவும் விதத்தைக் கொண்டு சாதாரண எக்ஸ்ரே அல்லது பிளெயின் எக்ஸ்-ரே என்ற ஒரு முறையும், கதிர் ஊடுருவ முடியாத சூழ் நிலையில் மருந்துகளைப் பயன்படுத்தி உறுப்பின் தோற்றத்தைத் தெளிவாக்கும் இன்னொரு முறையும் ஆகிய இரண்டு முறைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. இதில் இரண்டாவது முறை எக்ஸ்-ரேவை (Contrast studies) என்றும் எக்ஸ்-ரே நிபுணர்கள் இனம் பிரித்து வைத்திருக்கிறார்கள். எக்ஸ்-ரே கதிர் சில உறுப்புக்களில் பாய்ச்சப்படும் போது அது தங்கு தடையில்லாமல் வெளியே சென்று விடும். இதனால் உள் உறுப்பின் தோற்ற அமைப்பு கண்ணுக்குத் தெரியாது. ஆகவே என்ன பாதிப்பு ஏற்படிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகிறது. உள் உறுப்பின் தோற்றமும். அந்தப் பகுதியில் தோன்றியிருக்கும் பாதிப்பும் என்னவென்று தெரிந்து கொள்ள சிலவகை மருந்துகளைச் செலுத்தி அத

ஆஸ்துமா நோயாளிகள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்-

 நோயாளிகள் என்று சொல்லும் போது நோய் குணமாக அந்த நோயாளி தள்ளத்தக்கது எது? கொள்ளத் தக்கது எது? என்று டாக்டர்கள் கூறுவதுண்டு. அது உணவாகவும் இருக்கலாம். அல்லது சில பழக்க வழக்கங்களாகவும் இருக்கலாம்.  நாட்டு வைத்தியர்கள் இவற்றைப் பத்தியங்கள் என்று கூறுகிறார்கள் மருந்து சாப்பிடுங்காலத்திலும் குணமான பிறகும் சில நாட்கள் சில உணவு வகைகளை உடல் சம்பந்தமான சில பழக்கவழக்கங்களை ஒதுக்கிவைக்க வேண்டும் என்று யோசனை கூறுகிறார்கள். பொதுவாக, எல்லா நோய்களூக்கும் இன்னின்னது ஆகாது. என்று சொல்வது வழக்கம். சாப்பிடக் கூடாதவற்றைச்சாப்பிட்டால் நோய் குணமாகாது. மருந்தும் வேளை செய்யாது. எந்த வைத்தியமானாலும் உணவுக் கட்டுப்பாடுகள் உண்டு என்பதால் அவற்றை நோயாளிகள் தெரிந்து வைத்திருப்பது நல்லது அல்லவா?. ' நோய் குணமாக வாயைக் கட்டு, வயிற்றைக் கட்டு என்று நாட்டு வைத்தியர்கள் சொல்லுவது இயற்கை. உணவு வகைகள் சில வயிற்றைப் பாதிக்கின்றன.  உணவே மருந்து, மருந்தே உணவு என்று கிரேக்க மருத்துவத் தந்தை என்று அழைக்கப்படும் ஹிப்போகிரேட் சொல்லுவார். ஆஸ்துமா நோய் பரம்பரையில் இல்லாமலும் வரலாம். எந்தக் காரணத்தால் வந்தாலும் குடிப்பது.குளிப்ப

குழந்தைகளின் மந்த தன்மையை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் ?

 சில பெற்றோர், தங்களின் குழந்தையைப் பற்றிச் சொல்லும் போது, எல்லாக் குழந்தைகளும் ஓடியாடி விளையாடுகிறார்கள் என் குழந்தை மட்டும் எப்போதும் டல்லாக இருக்கிறான் என்பார்கள்.  இன்னும் சில தாய்மார்கள் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுத்தாலும் மண்டையில் ஏறுவதில்லை. மந்தமாக இருக்கிறான். இதற்கு என்ன காரணம்? என்று கேட்பதுண்டு. பிறக்கும்போதே ஏற்படும் சில கோளாறுகளே மந்த புத்திக்குக் காரணங்களாகச் சொல்லலாம். கர்ப்பமாக இருக்கும் சில தாய்மார்கள் ஊட்டச் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடாமல் இருப்பதால் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தை மந்த புத்தியுள்ளவர்களாகப் பிறவியிலேயே உருவாகிறார்கள். கர்ப்பிணிகளின் உணவில் அயோடின் சத்தக் குறைவதால் மந்த நிலை ஏற்படலாம். ஆகவே கர்ப்பமான பெண்கள் அயோடின் உப்புச் சேர்ந்திருக்கும் உணவுகளை நன்கு சாப்பிடவேண்டும். கர்ப்பமான காலத்தில் அதிகமாக மருந்துகளைச் சாப்பிட்டாலும் குழந்தை மந்தமாகப் பிறக்கிறது என்று மகப்பேறு மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். குழந்தை பிறக்கும்போது ஏற்படும் சிக்கல் காரணமாகச் சில சமயங்களில் மூளை பாதிக்கப்படலாம். குழந்தைக்கு வலிப்பு உண்டாகலாம். இதனாலும் மந்த புத்தி உண்டாகும

குழந்தை நோய்களுக்கு தடுப்பூசிகள் எவ்வாறு உதவுகின்றன ?

 நோய்களைத் தடுக்கும் சக்தியை நம் முன்னோர்கள் பெற்றிருந்தார்கள். குழந்தை பிறந்குமுன் பிறக்கப்போகும் குழந்தைக்கு நோய் வராமல் தடுக்கத் தாய்மார்கள் முன்னோற்பாடாகக் கர்ப்பமுற்றிருக்கும் காலத்தில் ஊட்டச் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்தார்கள். இதனால் குழந்தை நோய்கள் அதிகமாக வருவதைத் தடுத்துவந்தார்கள். இடைக்காலத்தில் போதுமான கவனிப்பு இல்லாமல் அந்த முன்னேற்பாடுகளைச் செய்யாமல் விட்டு விட்டார்கள். இதனால் பிறக்கும் குழந்தை நோயோடு பிறக்கிறது. வைரஸ் கிருமிகளின் தாக்குதலால் தாய்க்கு மட்டுமல்ல. குழந்தைக்கும் இதனால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குழந்தை பிறந்ததும் தட்டம்மை என்று சொல்லப்படும் மணல்வாரி, சின்னம்மை, வைசூரி, மற்றும் டிப்தீரியா, கக்குவான் இருமல், டெட்டனஸ், டி.பி..போலியோ என்னும் இளம்பிள்ளை வாதம் ஆகிய நோய்கள் தடுக்கக் கூடும்.  மருத்துவத்தில் நவீன மருந்துகளைக் கண்டுபிடித்துக் குழந்தைகளுக்கு வரும் நோய்களைத் தடுத்து நிறுத்த வழி கண்டுபிடித்திருக்கிறார்கள். வாரக் கணக்கில், மாதக் கணக்கில்,வருடக் கணக்கில் இப்போது மருந்துகளைக் கொடுத்துக் குழந்தைகளைக் காப்பாற்றும் காலமாக இந்தக் சுலியுகம

நீரிழிவு நோய் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் ? -

 நீரிழிவு நோய் என்று மொத்தமாக ஒரு நோயைப் பற்றிச் சொன்னாலும் இதில் நூற்றுக்கு மேற்பட்ட நோய் வகைகள் இருப்பதாகச் சித்தவைத்தியர்கள் சொல்லுகிறார்கள்.  இதில் நோயாளிகள் அனுபவிக்கும் நீரிழிவு நோய் எந்த வகையைச் சேர்ந்தது என்பது அவர்களுக்கே தெரியாது. நீரிழிவு நோயைப்போல் தோன்றும் சில நோய்கள் உங்களிடத்தில் இருக்கலாம். குறி குணங்கள் சில, நீரிழிவை ஒத்திருக்கும். இவற்றை ஆராய்ச்சி செய்து கொண்டு காலத்தைக் கடத்த வேண்டாம். முதலில் பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்ததா என்று தெரிந்துகொள்ளுங்கள். இருந்தது என்று அறிந்தால் இந்த நோயைப்பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.  பெற்றோருக்கு இருந்தால் அது பிள்ளைகளுக்கும் வரலாம் என்று வைத்திய சாஸ்திரம் சொல்லுகிறது. முப்பது வயதிற்குப் பிறகு அது தலையை நீட்டும். சிலருக்கு இளவயதிலும் தோன்றலாம். நீரிழிவு நோய் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் ?  1) இளவயதிலிருந்தே உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டால் இந்த நோயினால் உங்களுக்குத் தொந்தரவு ஏற்படாது. 2)  சர்க்கரை, இனிப்புப் பண்டங்களை, மாவுப் பண்டங்களைக் கூடுமான அளவுக்குக் குறைக்க இப்போதிருந்தே திட்டமிடுங்கள். க

அடிக்கடி உணர்ச்சிவசப்படுவது உடலுக்கு நல்லதா? கெட்டதா ?

 உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும், புல், பூண்டு, செடி, கொடி, மரங்களுக்கும் உணர்வுகள் உண்டு. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துகின்றன. அவை தம் உணர்வுகளை தொட்டால் சிணுங்கி என்ற செடியின் இலைகள் விரிந்து இருக்கும். நாம் தொட்டவுடன் இலைகள் மூடிக் கொள்ளும். இதுபோலக் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை ஏதாவது ஒரு காட்சியைப் பார்க்கும்போதோ, ஏதாவது ஒரு சுவையை அறியும்போதோ, ஏதாவது ஒரு வாடையை நுகரும் போதோ கிளர்ச்சி அடைகிறார்கள். இந்தக் கிளர்ச்சியை உண்டுபண்ணுபவை உணர்வு நரம்புகளே. ஆகவே, ஏதாவது ஓர் உணர்ச்சிக்கு வசப்படாதவர் என்று எவரையும் கூறிவிட முடியாது. மகிழ்ச்சி, கோபம், துக்கம், விருப்பு, வெறுப்பு என்று ஏதாவது ஒருவகையில் மனிதன் வசப்படுகிறான். அப்போது மனிதனுடைய தசைகளில் அசைவுகள் ஏற்படுகின்றன. இதனால் நாடித் துடிப்பு அதிகமாகிறது. இருதயம் படபடக்கிறது. இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன. இரத்த அழுத்தம் அதிகமாகிறது. இரத்தத்திலுள்ள சர்க்கரைப் பொருள்கள் பெருக்கெடுக்கின்றன. சுவாசம் சுறுசுறுப்பாக நடைபெறுகிறது. உடம்பிலுள்ள நரம்புகள், எலும்புகள், தசைகள் எல்லாமே விழிப்படைந்து உடம்பின் இயக்கத்திற்கு உதவுகின்ற