Skip to main content

Google ads

பி.சி.ஜி நோய்த் தடுப்பு பற்றி மருந்து உங்களுக்கு தெரியாத தகவல்கள் -

 காச நோய் என்றும், உருக்கி நோய் என்றும், இராஜ ரோசும் என்றும் தமிழில் பல பெயர்களால் அழைக்கப்படும் டியூபர் குளோசிஸ் டி.பி. நோயைப்பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். 

இந்த நோயை க்ஷயரோகம் என்றும்சிலர் அழைக்கிறார்கள். க்ஷயம் என்ற வடமொழிச் சொல்லுக்கு பலியிடுதல், முடித்துவைத்தல் என்று பொருள்.

சுமார் 102 வருஷங்களுக்குமுன் காச நோய்க் கிருமியை ராபர்ட் காக் என்பவர் கண்டுபிடித்தார். இந்த நோய்க்குப் பலியாகும் மக்களைக் குணப்படுத்த பல விஞ்ஞானிகள், பல்வேறு சிகிச்சை கண்டுபிடித்து வைத்தியம் செய்துவந்தார்கள். முறைகளைக்

இந்த நோய் வராமலே தடுப்பது எப்படி என்று இரண்டு மருத்துவ விஞ்ஞானிகள் பாரிசிலுள்ள பாஸ்டர் நிலையத்தில் ஆராய்ச்சி செய்துவந்தார்கள். ஒருவர் மனித டி.பி. நோய்களுக்கு ஆராய்ச்சி செய்தார். இவர் பெயர் கால்மெட் என்பது. இன்னோருவர் மிருகங்களைத் தாக்கும் டி.பி.கிருமிகளை ஆராய்ச்சி செய்து வந்தார். இவர் பெயர் கெரின்.

இருவரும் பிரெஞ்சு விஞ்ஞானிகள். இவர்கள் கண்டுபிடித்த வாக்சின் மருந்திற்கு நோய்க் கிருமியின் பெயரோடு இந்த இரண்டு பேர்களின் பெயரையும் சேர்த்து வைத்து விட்டார்கள். Bacillus Calmette Guerin என்று. 

இதன் முதல் எழுத்துக்களைக்கொண்டே B.C.G மருந்திற்குப் பெயர் வைத்துவிட்டார்கள். டாக்டர் கால்மெட் டாக்டர் கெரின் கண்டுபிடித்த டி.பி. தடுப்பு மருந்து இன்று உலகம் பூராவும் ஊசிமருந்தாகப் பயன்பட்டுவருகிறது.

இந்த இரு விஞ்ஞானிகளும் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை ஆரம்பத்தில் வாய் மூலம் கொடுத்துவந்தார்கள். பிறகு ஊசிமருந்தாக உடலில் செலுத்தி வந்தார்கள். இந்த ஊசி மருந்தைச் செலுத்தினால் டி.பி. வருவதில்லை. என்பதை முதலில் மிருகங்களுக்குச் குத்திப் பரிசோதனை செய்துபார்த்தார்கள். 

மிருகங்களுக்கு டி.பி. நோய் வரவில்லை. பிறகு 1912இல் 664 குழந்தைகளுக்கு ஊசி போட்டார்கள். குழந்தைகளுக்கு டி.பி. வரவில்லை. ஆரம்பத்தில் பிரான்ஸ் நாட்டில் மட்டும் டி.பி.தடுப்பு ஊசியைப் பயன்படுத்தினார்கள். நல்ல பலன் கிடைத்தது. பிறகுதான் உலக நாடுகளுக்கு இந்த மருந்து பரவியது.

இதற்கிடையில் 1930இல் ஜெர்மனியிலுள்ளலூபெக் நகர ஆராய்ச்சிக் கூடத்தில் இந்த மருந்து தயாரிக்கப்படும் போது ஒரு தவறு நடந்துவிட்டது. ஜெர்மன் நாட்டில் இந்த மருந்து ஏற்றப்பட்ட 60 குழந்தைகள் இறந்து விட்டனர். இந்தச் சம்பவத்தை 'டிராஜடி ஆஃப் லூபெக்' என்று இன்றும் ஜெர்மன் நாட்டுச் சரித்திர ஏடுகளில் குறித்து வைத்திருக்கிறார்கள்.

லூபெக் ஆராய்ச்சிக் கூடத்தில் நடந்த தவறு என்ன? டாக்டர் கால்மெட், டாக்டர் கெரின் கண்டுபிடித்த பி.சி.ஜி. மருந்து என்ன? என்பதைத் தெரிந்துகொண்டால் இந்தத் தவறு புரியும்.

 டாக்டர்கள் இருவரும் மிருகங்களுக்கு டி.பி.யை உண்டாக்கும் கிருமியைத் தனியாகப் பிரித்து எடுத்து அதில் மாட்டின் பித்த நீரோடு கலந்து, அதில் கிளிசரின் சேர்த்து டி.பி. கிருமிகளை வளரவிட்டார்கள். கடைசியில் பலம் குன்றிய டி.பி. கிருமி உண்டானது. இதை வாக்சினாக (தடுப்புப் பால்) தயாரித்து வெளியிட்டார்கள்.

ஆனால் ஜெர்மனியிலுள்ள லூபெக் ஆய்வு கூடத்தில் பலம் குன்றிய டி.பி. கிருமிகளுக்குப் பதிலாக, சக்தியுள்ள, வீரியம் உள்ள டி.பி. கிருமிகளை ஞாபக மறதியாகக் கலந்து பி.சி.ஜி. ஊசி மருந்து தயாரித்துக் குழந்தைகளுக்குப் போட்டுவிட்டார்கள். இதன் விளைவுதான் அறுபது குழந்தைகளின் உயிர்பலி.

 ஊசி போடுமுன் சோதனை செய்து பிறகு ஊசி போட்டிருந்தால் இந்தத் துயரச் சம்பவம் நடந்திருக்காது. இந்த சம்பவத்திற்குப் பிறகு பி.சி.ஜி. மருந்து தயாரித்த இரு டாக்டர்களுக்கும், இந்தத் தடுப்பு மருந்திற்கும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு டாக்டர் கால்மெட், டாக்டர் கெரின் விளக்கம் கொடுத்த பிறகு இந்த மருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1948இல் அகில உலக பி.சி.ஜி. காங்கிரஸ் நடந்தது. இதில் 300 பிரதிநிதிகள் கலந்துகொண்டு தடுப்பு ஊசி அபாயமில்லாதது, நோய்தடுக்கும் சக்தி இதற்கு உண்டு என்று சான்று கொடுத்தார்கள். இப்போது உலகில் உள்ள எல்லா நாடுகளும் பி.சி.ஜி. மருந்தை ஏற்றுக்கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உபயோகித்து டி.பி. வராமல் தடுத்து வருகிறார்கள்.

டி.பி. நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் பி.சி.ஜி. மருந்துக்கு உண்டு என்று அறிந்து உலக நாடுகளின் சுகாதார ஸ்தாபனம் சென்னையில் பி.சி.ஜி. தடுப்பு மருந்து தயாரிக்கும் நிலையத்திற்கு நிதி உதவி செய்து வருகிறது.

பி.சி.ஜி. பயன்படுத்தாத நாடுகளில் 4 மடங்கு அதிகமான டி.பி. பரவிவருகிறது என்பதை ஒரு கணக்கெடுப்பின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்தியாவில் ஐந்து இலட்சம் மக்கள் டி.பி. நோயினால் இறக்கிறார்கள் என்ற நிலை இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை இந்தத் தடுப்பு முறையால் குறைந்துவருகிறது.

இயற்கை முறையில் டி.பி. வராமல் தடுக்கச் சீரான உணவும், சூரிய ஒளியும், காற்றோட்டமும், உடற்பயிற்சியும் தேவை. செயற்கை முறையில் டி.பி. வராமல் தடுக்கப் பி.சி.ஜி.யை விட்டால் வேறு தடுப்பு மருந்து இல்லை என்றே சொல்லலாம்.

இது ஒரு காப்பு மருந்து. இந்த மருந்தின் விலை மலிவு. ஆனால் செயல் திறன் அதிகம். எனவே உலகம் ஏற்றுக் கொண்ட இந்த மருந்தை நாமும் ஏற்று உருக்கி நோயை ஒழிக்கவேண்டும்.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...