Skip to main content

Google ads

குழந்தைகளின் மந்த தன்மையை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் ?

 சில பெற்றோர், தங்களின் குழந்தையைப் பற்றிச் சொல்லும் போது, எல்லாக் குழந்தைகளும் ஓடியாடி விளையாடுகிறார்கள் என் குழந்தை மட்டும் எப்போதும் டல்லாக இருக்கிறான் என்பார்கள். 

இன்னும் சில தாய்மார்கள் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுத்தாலும் மண்டையில் ஏறுவதில்லை. மந்தமாக இருக்கிறான். இதற்கு என்ன காரணம்? என்று கேட்பதுண்டு.

பிறக்கும்போதே ஏற்படும் சில கோளாறுகளே மந்த புத்திக்குக் காரணங்களாகச் சொல்லலாம்.



கர்ப்பமாக இருக்கும் சில தாய்மார்கள் ஊட்டச் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடாமல் இருப்பதால் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தை மந்த புத்தியுள்ளவர்களாகப் பிறவியிலேயே உருவாகிறார்கள். கர்ப்பிணிகளின் உணவில் அயோடின் சத்தக் குறைவதால் மந்த நிலை ஏற்படலாம். ஆகவே கர்ப்பமான பெண்கள் அயோடின் உப்புச் சேர்ந்திருக்கும் உணவுகளை நன்கு சாப்பிடவேண்டும்.

கர்ப்பமான காலத்தில் அதிகமாக மருந்துகளைச் சாப்பிட்டாலும் குழந்தை மந்தமாகப் பிறக்கிறது என்று மகப்பேறு மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்.

குழந்தை பிறக்கும்போது ஏற்படும் சிக்கல் காரணமாகச் சில சமயங்களில் மூளை பாதிக்கப்படலாம்.

குழந்தைக்கு வலிப்பு உண்டாகலாம். இதனாலும் மந்த புத்தி உண்டாகும்.

பிரசவத் ன்போது சிலருக்கு கடுமையான இரத்தப் போக்கு ஏற்படும். இதைத் தடுக்க ஒருவகை ஊசி மருந்து கொடுக்கப்படும். இது கர்ப்பப் பையையும் இரத்த நாளங்களையும் கருங்க வைத்து விடுவது உண்டு.

 சிலருக்கு இந்த ஊசி பருந்தினால் பாதிப்பும் ஏற்படுவதாகச் சொல்லுகிறார்கள். இதன் காரணமாகப் பிறக்கும் குழந்தை மந்த புத்தியாக பிறக்க வாய்ப்பிருக்கிறது.

பெண்கள் நம் தேசத்தைப் பொறுத்த வரையில் புகைப்பதும், மதுக் குடிப்பதும் மிகமிகக் குறைவு. ஒரு சில நாடுகளில் நாகரிகத்தின் மோகத்தில் மூழ்கிப் புகைக்கிறார்கள். மது அருந்துகிறார்கள். இந்தப் பழக்கமுள்ள தாய்மார்கள் மந்த புத்தியுள்ள குழந்தைகளைத் தங்கள் தீய பழக்கத்தின் காரணமாக உருவாக்குகிறார்கள்.

கருத்தரித்த பெண்களுக்கு மணல்வாரி என்று சொல்லப்படும் மீசில்ஸ் நோய் தோன்றினால் குழந்தைக்கு மந்த புத்தி ஏற்படலாம். இது தவிர மஞ்சள் காமாலை நோய் தோன்றினாலும் இது போன்ற விளைவுகள் ஏற்படலாம்.

40 வயதிற்குமேல் பெண்கள் குழந்தை பெற்றாலும் மந்த புத்தியுள்ள குழந்தைகள் தோன்றலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். 

இதைவிட இன்னொரு காரணமும் சொல்லப் படுகிறது நெருங்கிய சொந்தத்தில் பெண் எடுப்பதும் திருமணம் செய்து கொள்வதும்கூட மந்த புத்தியுள்ள குழந்தைகள் பிறக்கக் காரணம்.

இவை எல்லாம் பிறவிக் காரணங்கள், குழந்தை வளர்ந்த பிறகும் சோகை நோயினால் பாதிக்கப்பட்டால் குழந்தைகள் வெளுத்துப் போய்ச் சோர்வாக இருக்கும். 

அயச்சத்துள்ள உணவு வகைகளைக் கொடுத்து வந்தால் இந்தக் குறை நீங்கும். தாயும் ஊட்டச் சத்துள்ள உணவைச் சாப்பிடவேண்டும். வளரும் குழந்தைகளும் சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். மந்தநிலை மாறும்.

வளரும் குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லை இருந்தாலும் குழந்தை மந்தமாக இருக்கும். படிப்பில் ஆர்வமில்லாமல் படித்தாலும் மூளை ஏற்றுக்கொள்ளாத நிலையில் மந்த புத்திக்காரர்களாய் வளர்வதும் உண்டு.

பெற்றோர் டாக்டரிடம் காட்டி, பரிசோதனை செப்து இதற்கு மருந்து கொடுத்தால் பூச்சித் தொல்லை ஒழியும்.

பொதுவாக மாவுப் பண்டங்களை, இனிப்புப் பண்டங்களை அதிகமாகச் சாப்பிடும் குழந்தைகள் மந்த புத்திக்காரர்களாக மாறுகின்றன. காரணம், உடலின் இயக்கத்தை மாவுப் பண்டங்கள் மந்தப்படுத்தும் தன்மை வாய்ந்தவை. மாவுச் சர்க்கரை குளுகோசாசு மாற்றப்படுகிறது. குளுகோஸ் முழுவதும் எரிக்கப்படாமல் போனால் கழிவுகள் எஞ்சி நிற்கின்றன.

 இதிலிருந்து பைவிக் அமிலம் உற்பத்தியாகிறது. இது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. மூளையை மந்தப்படுத்துகிறது. இதன் காரணமாகவும் சிறுவர் சிறுமிகள் மந்த புத்திக்காரர்களாக ஆகிறார்கள் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.

மந்த நிலையில் இருக்கும் குழந்தைகளின் மனதில் பெற்றோர் மகிழ்ச்சியையும் கிளர்ச்சியையும் தூண்டிக் கொண்டிருந்தால் நிலைமை மாறலாம். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை முறையாக கொடுத்து விளையாட்டிலும் பயிற்சி கொடுத்து வந்தால் மந்த நிலையை மாற்றி அமைக்கலாம்.

மூளைக்கு வேலை கொடுத்தால் முயற்சியோடு முன்னேறுவார்கள். துள்ளித் திரிகின்ற பருவத்தில் அவர்களை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று முத்திரை குத்தி நில் என்று ஒதுக்கி வைக்காதீர்கள். இதனால் மந்தம் அவர்களை நிரந்தரமாகச் சொந்தமாக்கிக் கொள்ளும்!

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...