Skip to main content

Google ads

வலிப்பு நோய்க்கு என்ன முதல் உதவி கொடுக்க வேண்டும் ?-

 ஒருவர் சாலையில் நடந்து செல்கிறார். திடீரென்று கீழே விழுகிறார். வாயிலிருந்து நுரை தள்ளுகிறது. கை கால்களை உதைத்துக்கொள்கிறார்.

 கைகளை உதறுகிறார் சில நிமிடங்களில் அப்படியே அமைதியாக இருந்துவிட்டுச் சோர்வுடன் எழுந்து செல்கிறார். இது என்ன நோய்? 

இதற்குக் கைகால் வலிப்புநோய் என்று சொல்லுகிறார்கள் டாக்டர்கள். ஆங்கிலத்தில் எலிலெப்சி என்கிறார்கள்.

இதில் இன்னொரு வகை வலிப்பும் உண்டு. நோயாளி கீழே விழுவதில்லை. சில நிமிடங்களில் விழித்தது விழித்தபடியே இருப்பார்கள் கை கால்களை மட்டும் அசைப்பார்கள். பேச மாட்டார்கள்.

 தலையையும் வலது இடது புறங்களில் திருப்பிக்கொண்டே இருப்பார்கள். இதுவும் ஒருவகை வலிப்பு நோய். இது குழந்தைகளுக்கும் வரும். இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் வரும். மூளையில் ஏற்படும் ஒருவகை உறுத்தலே இதற்குக் காரணம் என்று பொதுவாகச் சொல்லலாம்.

இது போன்ற நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ என்ன உதவி செய்யலாம், எப்படி உதவலாம் என்பதை எடுத்துச் சொல்வதே இந்தக் கட்டுரை.

ஒரு நோயாளி வலிப்பால் துடிக்கும்போது வேடிக்கை பார்ப்பவர்கள் தாம் அதிகம். உதவி செய்பவர்கள் குறைவு. 

உதவி செய்வதனால் என்ன செய்யவேண்டும்?

குழந்தைகளுக்கு வலிப்பு ஏற்பட்டால் உடம்பைப் போர்த்தி வைக்கக்கூடாது. காற்று உடம்பில் பட வேண்டும். காற்றோட்டம் உள்ள இடத்தில் வைத்துப்பாதுகாக்க வேண்டும். குழந்தைகள் என்றால் அதிக ஜூரம் இருக்கும். குளிர்ந்த நீரில் ஒரு துணியை நனைத்து நெற்றியில் பதிக்க வேண்டும். 

வலிப்பு உள்ளபோது குழந்தைக்குப் பாலோ ஆகாரமோ கொடுக்கக்கூடாது. குழந்தையின் தலையை ஒருபுறமாகச் சாய்த்து வைக்கவேண்டும். குழந்தையை ஓரிடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குத் தூக்கிச் செல்லும்போது தோளில் செல்லக்கூடாது.

 கைகளில் ஏந்திச் செல்லவேண்டும். அப்போது தலையை ஒரு பக்கம் தாழ்த்தி,தூக்கிக் கொண்டு சரிவாக இருக்கும்படி பார்த்துக்கொள்வது முக்கியம்.

ஜூரத்துடன் வரும் இந்த வலிப்புக்கும், கை கால் வலிப்புக்கும் வித்தியாசம் உண்டு. ஆகவே வலிப்பு என்றதும் எல்லாம் ஒருவகையைச் சேர்ந்ததே என்று நினைக்கக் கூடாது.

பெரியவர்களுக்கு வரும் கை கால் வலிப்பு நோய்க்குச் சில இடங்களில் கொத்துச் சாவியை அல்லது இரும்பைக் கையில் கொடுக்கிறார்கள். சிலர் இரும்பைப் பழுக்கக் காய்ச்சி சூடு போடுகிறார்கள். இது ஒரு தவறான சிகிச்சை முறை. கிராமங்களில் நடப்பது இது!

வலிப்பு வந்தவர்களை மெதுவாகத் தரையில் கிடத்தவேண்டும். உமிழ் நீர், அல்லதுநுரையை வாயிலிருந்து வழிய பக்கவாட்டில் சாய்த்துக் கிடத்த வேண்டும். இவர்களுக்குப் பல் கிட்டிக் கொள்ளும். இதனால் நாக்கைக் கடித்துக் கொள்வார்கள்.

 கர்ச்சிப்பைப் பந்துபோல் சுற்றி, அல்லது ஒரு ரிப்பனைச் சுருட்டி மேல் கீழ் இரண்டு. பற்களுக்கும் இடையில் வைக்கவேண்டும். உதட்டைக் கடித்துக் கொள்ளாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

 முகத்தில் சிலர் குளிர்ந்த நீரைத் தெளிப்பார்கள். இது தவறு. சோடா, காப்பி எதையும் இந்தக் கட்டத்தில் வாயில் ஊற்றக்கூடாது. வலிப்பு நின்ற பிறகு வேண்டுமானால் கொடுக்கலாம். வலிப்பு அதிகநேரம் தொடர்ந்தால் உடனே டாக்டரிடம் எடுத்துச்செல்ல வேண்டும்.

வலிப்பு ஒரு நோய்தான். ஆனால் தொற்றுநோய் அல்ல. ஆகவே யார் வேண்டுமானாலும் அருகில் இருந்து உதவலாம். சிலர் நெருங்கி உதவி செய்ய பயப்படுகிறார்கள். இப்படி அச்சப்படத் தேவை இல்லை.

வலிப்பு வந்துள்ள நோயாளிகளை உயரமான இடங்களில் ஏறி வேலை செய்வதை அனுமதிக்கக்கூடாது. நெருப்பு அருகில் வேலை செய்யவிடக் கூடாது. ஆபத்தான இயந்திரங்களை இயக்கும் வேலைகளில் அமர்த்தக்கூடாது. 

கார், பஸ், லாரிகளையும் ஒட்ட அனுமதிக்கக்கூடாது. நீச்சல் கூடவே கூடாது. எப்போது வலிப்பு வரும் என்று தெரியாது என்பதால் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

வலிப்பு வந்து கை கால்களை உதைக்கும்போது கை கால்களை மற்றவர்கள் பிடித்து கட்டுப்படுத்தக் கூடாது. அப்படியே விட்டுவிட வேண்டும். வலிப்பு ஏற்படும் நேரங்களில் அவர்கள் அருகில் ஆபத்தான பொருள்கள் இருந்தால் அவற்றை மட்டும் அகற்ற வேண்டும்.

வலிப்பு நோயாளிகளுக்கு டாக்டர் எழுதிக் கொடுக்கும் மருந்துகளைத் தொடர்ந்து கொடுக்கவேண்டும். இடையில் நிறுத்தக்கூடாது. மூன்று ஆண்டுகள் வரை விடாமல் கொடுக்க வேண்டும். அல்லது டாக்டர் சொல்லும் காலம் வரை கொடுக்க வேண்டும்.

வலிப்புநோய் மருந்தைச் சிலர் மயக்க மருந்து. தூக்கமருந்து என்று நினைத்து நிறுத்திவிடுகிறார்கள். இது தவறு. நோயைக் கட்டுப்படுத்த கொடுக்கும் மருந்து என்பதை நினைவில் வைத்துக்கொண்டு தொடர்ந்து கொடுக்கவேண்டும் நிறுத்தக்கூடாது.

பெற்றோர் இவர்களுக்குத் திருமணம் செய்து கொடுக்கும்போது டாக்டர் யோசனைப்படி செய்ய வேண்டும். உண்மையை மறைக்கக் கூடாது. மறைப்பதால் சில விபரீதங்கள் ஏற்படும்.

வலிப்பு நோய் எவருக்கும் வரலாம். இதனால் கேலியோ கிண்டலோ செய்து அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வரும்படி செய்யக்கூடாது.

 நோயாளிகளை விட அவர்களுக்கு உதவி செய்பவர்கள் இவற்றையெல்லாம் தெரிந்துகொண்டு முதலுதவி செய்ய வேண்டும். மற்றவற்றை டாக்டர்கள் கவனித்துக் கொள்வார்கள்.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும