Skip to main content

Google ads

ஆஸ்துமா நோயாளிகள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்-

 நோயாளிகள் என்று சொல்லும் போது நோய் குணமாக அந்த நோயாளி தள்ளத்தக்கது எது? கொள்ளத் தக்கது எது? என்று டாக்டர்கள் கூறுவதுண்டு. அது உணவாகவும் இருக்கலாம். அல்லது சில பழக்க வழக்கங்களாகவும் இருக்கலாம். 

நாட்டு வைத்தியர்கள் இவற்றைப் பத்தியங்கள் என்று கூறுகிறார்கள் மருந்து சாப்பிடுங்காலத்திலும் குணமான பிறகும் சில நாட்கள் சில உணவு வகைகளை உடல் சம்பந்தமான சில பழக்கவழக்கங்களை ஒதுக்கிவைக்க வேண்டும் என்று யோசனை கூறுகிறார்கள்.

பொதுவாக, எல்லா நோய்களூக்கும் இன்னின்னது ஆகாது. என்று சொல்வது வழக்கம். சாப்பிடக் கூடாதவற்றைச்சாப்பிட்டால் நோய் குணமாகாது. மருந்தும் வேளை செய்யாது. எந்த வைத்தியமானாலும் உணவுக் கட்டுப்பாடுகள் உண்டு என்பதால் அவற்றை நோயாளிகள் தெரிந்து வைத்திருப்பது நல்லது அல்லவா?.

'நோய் குணமாக வாயைக் கட்டு, வயிற்றைக் கட்டு என்று நாட்டு வைத்தியர்கள் சொல்லுவது இயற்கை. உணவு வகைகள் சில வயிற்றைப் பாதிக்கின்றன. 

உணவே மருந்து, மருந்தே உணவு என்று கிரேக்க மருத்துவத் தந்தை என்று அழைக்கப்படும் ஹிப்போகிரேட் சொல்லுவார்.

ஆஸ்துமா நோய் பரம்பரையில் இல்லாமலும் வரலாம். எந்தக் காரணத்தால் வந்தாலும் குடிப்பது.குளிப்பது, உண்ணுவது ஆகிய விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

குடிப்பது என்று சொல்லும்போது காப்பி, டீ, மது வகைகள் குளிர்பானங்கள் சாப்பிடக் கூடாது. மது வகைகள் குளிர் பானங்கள் சாப்பிடக்கூடாது! மது வகைகள் அறவே கூடாது. ஐஸ் வாட்டர், ஐஸ் கிரீம் ஆகியவற்றைத் தொடக்கூடாது என்று கூறுவர். 

ஏற்கண்டிஷன் அறைகளிலும் இவர்கள் இருக்கக் கூடாது என்பர். உடலின் வெப்ப அளவு குறையும்போது குளிர்ந்த உணவுகளைச் சாப்பிடக் கூடாது. பழங்கஞ்சி உணவு ஆகாது. ஆறிப்போன உணவு வகைகளை ஒதுக்க வேண்டும்.

தண்ணீர் குளியல் ஆகாது. எண்ணெய் முழுக்குக் கூடாது வெந்நீரில்தான் குளிக்கவேண்டும். தலையில் உடலில் ஈரமில்லாமல் துணியினால் துவட்டிவிட வேண்டும். குளித்த பிறகு குளிர்ந்த காற்று உடலில் படக்கூடாது.

ஆஸ்துமா நோயாளிகள் விருந்துகளில் கலந்து கொள்ள கூடாது. அங்கு பல்சுவை உணவுகளைப் பறிமாறுகிறார்கள். காய்கறி, கிழங்கு, பழவகைகள், ஐஸ்கிரீம், பால் கோவா ஆகியவற்றுள் சில உடம்புக்குக் கெடுதலைச் செய்யும். வாழைப் பழம், தக்காளி, உருளைக் கிழங்கு, மோர், தயிர்கூடச் சில சமயங்களில் சில ஆஸ்துமாக்காரர்களுக்கு ஒந்துக் கொள்வதில்லை. முற்றிய 

வாழைக்காய், சேப்பங்கிழங்கு, மஞ்சள் பூசணி இவையும் ஆஸ்துமா காரர்களுக்கு ஆவதில்லை. இரவில் பால் சாப்பிடுவது கூட இவர்களுக்குச் செரிமானக் குறைவை உண்டாக்கித் தொந்தரவு கொடுக்கும்.

முந்திரிப் பருப்பு, மணிலாக் கடலை, பலாப் பழம், வாழைப் பழம், பேரிச்சை, தக்காளிப் பழங்கள் இழுப்பைத் தூண்டுவதால் இவற்றையும் ஆஸ்துமா நோயாளிகள் விலக்கவேண்டும்.

உணவில் சில செரிமானம் ஆகாமல் தொந்தரவு கொடுக்கும் இறைச்சி, முட்டை, மீன் வகைகளில் குளத்து மீன் ஆகியவற்றை ஒதுக்க வேண்டும். எளிதில் ஜீரணமாகாத உணவுகள் விஷயத்தில் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

எந்தெந்த உணவு வகைகளைச் சாப்பிட்டால் தொந்தரவு உண்டாகிறது என்று இவர்கள் ஒவ்வொரு நாளும் கவனித்து வந்து அந்த உணவை நீக்கவேண்டும். கத்தரிக்காய் சாப்பிட்டால் சிலருக்கு ஒத்துக் கொள்வதில்லை. வெண்டைக்காய் சிலருக்குத் தொந்தரவு தருகிறது. முள்ளங்கி சாப்பிட்டால் சிலருக்கு உபத்திரவம் ஏற்படுகிறது.

திருமணமான ஆண் ஆஸ்துமா நோயாளிகள் விலக்க வேண்டிய பல விஷயங்களில் ஒரு முக்கியமான் விஷயம் தாம்பத்திய உறவு. இவர்கள் இரவில் அதிக நேரம் கண் விழிப்பதும், இன்ப சுகங்களில் அதிக நேரம் நாட்டம் செலுத்துவதையும் தவிர்க்க வேண்டும். உயிரணு நஷ்டம் இந்த நோயாளிகளுக்கு இழக்கக் கூடாத ஒன்று. ஆகவே அளவோடு நடந்து கொள்ளவேண்டும்.

இதுவரை ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆகாது, கூடாது, ஒத்துக் கொள்ளாது, ஏற்காது என்று சொல்லப்படும் விஷயங்களை மட்டுமே சொல்லி வந்தேன். காரணம் நாம் தெரிந்து கொள்ளும் விஷயங்களில் ஆகாதவற்றைச் சொல்லிவிட்டால் நோயாளிகள் கூடுதல் தொந்தரவுகளைக் குறைத்துக்கொள்ளலாம். ஆகவே தவிர்க்கவேண்டிய வற்றை முதலில் கவனியுங்கள். தொந்தரவுகள் தொலை தூரம் ஓடிவிடும்.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும