Skip to main content

Google ads

பிறவி கோளாறுகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் - தமிழ் சித்த மருத்துவம்

 குழந்தை பிறந்தவுடன் குழந்தையும் தாயும் இரண்டு உடல்களாக, இரண்டு உயிராகப் பிரிந்ததும் தாய் மகிழ்ச்சி அடைகிறாள். கணவனும் மகிழ்ச்சி அடைகிறான். இது எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பதுதான்.

ஆனால், இதற்கு மாறாகச் சில தாய்மார்களுக்குக் குழந்தை பிறந்தவுடன் பிறந்த குழந்தை கண்ணோ, மூக்கோ, வாயோ, உதடோ, கைகால்களோ கோரமாக அமைந்துவிட்டால் பெற்றவள் முகம் சுளிக்கிறாள்.

 குழந்தை பிறந்தவுடன் சில குழந்தைகள் அங்கஹீனமாகவும், பிறந்த சில காலத்திற்குள் அவலட்சணமாகவோ அமைந்து விடுவது உண்டு. இந்தக் குறைகளைப் பிறவிக் கோளாறு என்று சொல்லுவார்கள்.

ஜீன்கள் என்று சொல்லப்படும் பாரம்பரியத்திற்கு ஆதாரமான ஒரு பொருளில் கோளாறு ஏற்பட்டுத் தோன்றுகின்ற குறைபாடுகளே இவை. ஜீன்களில் ஏற்படும் விபரிதங்களால் உதடுகள் பிளந்தும், நாக்கு ஒட்டியும். காதுகள் சிதைந்தும், விரல்கள் ஒட்டியும் ஆறு விரல்களாகப் பிரிந்தும், கவட்டைக் கால்களுடனும் சில குழந்தைகள் பிறக்கின்றன. 

இவை கண்களுக்குத் தெரிந்த பிறவிக் கோளாறுகள். சில கண்களுக்குத் தோன்றாமல் மறைந்து நின்று குழந்தைகளுக்குத் துன்பம் தருபவை. நீர்க் கட்டிகள் என்று சொல்லப்படும் (Cysts) நுரையீரலிலும் சிறுநீரகத்திலும் தோன்றி குழந்தைகளுக்குத் தொந்தரவு கொடுக்கும்.

இது தவிர (Blue baby) என்று செல்லப்படும் நீலக் குழந்தைகள் இருதயக் கோளாறுகள் தோன்றுகின்றன. நீலம் பாய்ந்த குழந்தைகள் நீண்ட நாட்கள் வாழமுடியாத சூழ்நிலை ஒரு காலத்தில் இருந்தது. நவீன மருத்துவ சிகிச்சைகளால் இந்தக் குறைகளை மெல்லப் போக்கி வருகிறார்கள்.

பிறவி இருதயக் கோளாறுகள் எப்படித் தோன்றுகின்றன? வைரஸ் கிருமிகள் நஞ்சுக் கொடியின் வழியாகப் புகுந்து இருதயத்தைக் தாக்குவதால் இருதயம் பழுதடைந்து உறுப்புகளில் பாதிப்புகளை உண்டாக்கு கின்றன. இது தவிர, பிறவிலேயே தாக்கும் இன்னொரு நோய் ஹேமோபைலியா, இரத்த நாளங்களிலிருந்து சுரக்கும் இரத்தம் இயற்கைக்கு மாறுபட்டுக் கட்டுப் படாமல் போகும் நிலைதான் இரத்தக் கசிவு நோய். 

இது ஆண் குழந்தைகளுக்கே அதிகமாகத் தோன்றுகிறது என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். இதனால் என்ன கோளாறு உண்டாகிறது என்று கேட்கலாம். குழந்தைகளுக்கு எங்காவது அடிபட்டால் இரத்தக் கசிவு அதிகமாக ஏற்பட்டு உடலிலிருந்து அதிகமான இரத்தம் வெளியேறி விடுகிறது இரத்தம் உறையும் தன்மையை இழந்து விடுவதால் வேறு சில சிக்கல்கள் தோன்றுகின்றன.

தாய் தந்தையர்களிடையே இரத்த அமைப்பில் வித்தியாசம் தோன்றிக் குழந்தைகளுக்கு இரத்தச் சோகையையும், மஞ்சள் காமாலையையும் உண்டாக்கக் கூடும். இரத்தப் பிரிவுகளில் ஒன்றான R.H. பரம்பரையின் மாற்றத்தால் தாய்க்கு இல்லாமலிருந்து, தந்தைக்கு இருந்து விட்டால் கடுமையான மஞ்சள் காமாலை நோய் தோன்ற வாய்ப்பு உண்டு.

குடும்பத் தொடர்பான நோய்களாலும் அதாவது நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, ஆஸ்துமா, அலர்ஜி, அல்சர், புற்றுநோய் காரணமாகவும் குழந்தைகளுக்குப் பிறவிக் கோளாறுகள் உண்டாகலாம்.

நெருங்கிய உறவில் பெண் எடுப்பதும், பெண் கொடுப்பதும் இதுபோன்ற பிறவிக் கோளாறுகளுக்குக் காரணமாக அமையலாம்.

இரகசிய நோய்களாலும் குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகவே பிறவிக் கோளாறுகளுக்கு ஏராளமான காரணங்கள் இருந்தாலும், உறுப்புச் சிதைவுகளைப் பொறுத்தவரை சர்ஜரி மூலம் பெரும்பகுதி சரிப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை இப்போது ஏற்படும் அளவுக்கு மருத்துவ விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...