Skip to main content

Google ads

நீரிழிவு நோய் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் ? -

 நீரிழிவு நோய் என்று மொத்தமாக ஒரு நோயைப் பற்றிச் சொன்னாலும் இதில் நூற்றுக்கு மேற்பட்ட நோய் வகைகள் இருப்பதாகச் சித்தவைத்தியர்கள் சொல்லுகிறார்கள். 

இதில் நோயாளிகள் அனுபவிக்கும் நீரிழிவு நோய் எந்த வகையைச் சேர்ந்தது என்பது அவர்களுக்கே தெரியாது. நீரிழிவு நோயைப்போல் தோன்றும் சில நோய்கள் உங்களிடத்தில் இருக்கலாம். குறி குணங்கள் சில, நீரிழிவை ஒத்திருக்கும். இவற்றை ஆராய்ச்சி செய்து கொண்டு காலத்தைக் கடத்த வேண்டாம்.

முதலில் பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்ததா என்று தெரிந்துகொள்ளுங்கள். இருந்தது என்று அறிந்தால் இந்த நோயைப்பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

 பெற்றோருக்கு இருந்தால் அது பிள்ளைகளுக்கும் வரலாம் என்று வைத்திய சாஸ்திரம் சொல்லுகிறது. முப்பது வயதிற்குப் பிறகு அது தலையை நீட்டும். சிலருக்கு இளவயதிலும் தோன்றலாம்.

நீரிழிவு நோய் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் ?

 1) இளவயதிலிருந்தே உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டால் இந்த நோயினால் உங்களுக்குத் தொந்தரவு ஏற்படாது.

2)  சர்க்கரை, இனிப்புப் பண்டங்களை, மாவுப் பண்டங்களைக் கூடுமான அளவுக்குக் குறைக்க இப்போதிருந்தே திட்டமிடுங்கள். கொழுப்புப் பதார்த்தங்களையும் குறைத்துக்கொள்ளுங்கள். உடல் குண்டாகி வருவதைத் தடுத்து நிறுத்துங்கள். அளவுக்கு மீறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

3) அளவுக்கு மீறிச் சாப்பிடுவதையும் குறைத்துக் கொள்ளுங்கள். 

4) அடிவயிறு பெருக்காமல், கனக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். 

உடல் பருமன் ஆயுளைக் குறைக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் நீரிழிவு, இரத்த அழுத்தம். இருதய நோய் எல்லாம் வருகின்றன. ஆகவே உணவைக் குறையுங்கள்.

5) உடல் உறுப்புக்களுக்கு அதிக வேலை கொடுக்காமல் ஓய்வு கொடுங்கள். எப்படி ஓய்வு கொடுக்கலாம்? மாதத்தில் ஒரு நாள் முடிந்தால், முடியாதென்றால் வாரத்திற்கு ஒரு நாள் பட்டினி இருக்கலாம். இதனால் உடல் உறுப்புக்களுக்கு ஓய்வு கிடைக்கிறது. ஒரு வேளை உணவை முதலில் நிறுத்தி வழக்கப் படுத்திக்கொள்ளுங்கள்.

6) விருந்துகளில் கலந்துகொள்ளுங்கள். ஆனால் சாப்பாடு நேரம் நெருங்கும்போது நழுவிவிடுங்கள். 

7) அப்படியே சாப்பிட உட்கார்ந்து விட்டால் இனிப்புப் பண்டங்களை உண்ணாமல் விட்டுவிடுங்கள். காப்பி டீ சாப்பிடுவதைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். 

8) சர்க்கரையின் அளவைக் குறைக்க முடிந்தால் குறைத்தச் சாப்பிடுங்கள்.

9)  நீங்கள் வேலை செய்யும் அலுவலகங்களில் ஆசனத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் வேலை செய்வதைத் தவிர்த்து, அலுவலகப் பணிகளுக்கு இடையில் சற்று நடந்து பிறகு அமர்ந்து வேலை செய்யுங்கள்.

10) அலுவல் முடிந்து வீட்டுக்கு வந்ததும் பூங்காவிலோ அல்லது வேறு வேலைகளுக்காகவோ ஒரு மைல் நடந்து பழகுங்கள்.

11) உணலில் சாதத்தின் அளவைக் குறைத்துக் கோதுமை, கேழ்வரகு கூழ் அல்லது புட்டு செய்து சாப்பிடுங்கள். வல்லாரைக் கீரை, வாழைப்பூ, வேப்பம்பூ துவையல், புதினாக் கீரையை உணவில் சேர்த்தக் கொள்வது நல்லது.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும