Skip to main content

Google ads

நீரிழிவு நோய் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் ? -

 நீரிழிவு நோய் என்று மொத்தமாக ஒரு நோயைப் பற்றிச் சொன்னாலும் இதில் நூற்றுக்கு மேற்பட்ட நோய் வகைகள் இருப்பதாகச் சித்தவைத்தியர்கள் சொல்லுகிறார்கள். 

இதில் நோயாளிகள் அனுபவிக்கும் நீரிழிவு நோய் எந்த வகையைச் சேர்ந்தது என்பது அவர்களுக்கே தெரியாது. நீரிழிவு நோயைப்போல் தோன்றும் சில நோய்கள் உங்களிடத்தில் இருக்கலாம். குறி குணங்கள் சில, நீரிழிவை ஒத்திருக்கும். இவற்றை ஆராய்ச்சி செய்து கொண்டு காலத்தைக் கடத்த வேண்டாம்.

முதலில் பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்ததா என்று தெரிந்துகொள்ளுங்கள். இருந்தது என்று அறிந்தால் இந்த நோயைப்பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.

 பெற்றோருக்கு இருந்தால் அது பிள்ளைகளுக்கும் வரலாம் என்று வைத்திய சாஸ்திரம் சொல்லுகிறது. முப்பது வயதிற்குப் பிறகு அது தலையை நீட்டும். சிலருக்கு இளவயதிலும் தோன்றலாம்.

நீரிழிவு நோய் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் ?

 1) இளவயதிலிருந்தே உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டால் இந்த நோயினால் உங்களுக்குத் தொந்தரவு ஏற்படாது.

2)  சர்க்கரை, இனிப்புப் பண்டங்களை, மாவுப் பண்டங்களைக் கூடுமான அளவுக்குக் குறைக்க இப்போதிருந்தே திட்டமிடுங்கள். கொழுப்புப் பதார்த்தங்களையும் குறைத்துக்கொள்ளுங்கள். உடல் குண்டாகி வருவதைத் தடுத்து நிறுத்துங்கள். அளவுக்கு மீறாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

3) அளவுக்கு மீறிச் சாப்பிடுவதையும் குறைத்துக் கொள்ளுங்கள். 

4) அடிவயிறு பெருக்காமல், கனக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள். 

உடல் பருமன் ஆயுளைக் குறைக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள். இதனால் நீரிழிவு, இரத்த அழுத்தம். இருதய நோய் எல்லாம் வருகின்றன. ஆகவே உணவைக் குறையுங்கள்.

5) உடல் உறுப்புக்களுக்கு அதிக வேலை கொடுக்காமல் ஓய்வு கொடுங்கள். எப்படி ஓய்வு கொடுக்கலாம்? மாதத்தில் ஒரு நாள் முடிந்தால், முடியாதென்றால் வாரத்திற்கு ஒரு நாள் பட்டினி இருக்கலாம். இதனால் உடல் உறுப்புக்களுக்கு ஓய்வு கிடைக்கிறது. ஒரு வேளை உணவை முதலில் நிறுத்தி வழக்கப் படுத்திக்கொள்ளுங்கள்.

6) விருந்துகளில் கலந்துகொள்ளுங்கள். ஆனால் சாப்பாடு நேரம் நெருங்கும்போது நழுவிவிடுங்கள். 

7) அப்படியே சாப்பிட உட்கார்ந்து விட்டால் இனிப்புப் பண்டங்களை உண்ணாமல் விட்டுவிடுங்கள். காப்பி டீ சாப்பிடுவதைக் குறைக்க முயற்சி செய்யுங்கள். 

8) சர்க்கரையின் அளவைக் குறைக்க முடிந்தால் குறைத்தச் சாப்பிடுங்கள்.

9)  நீங்கள் வேலை செய்யும் அலுவலகங்களில் ஆசனத்தில் அமர்ந்து மணிக்கணக்கில் வேலை செய்வதைத் தவிர்த்து, அலுவலகப் பணிகளுக்கு இடையில் சற்று நடந்து பிறகு அமர்ந்து வேலை செய்யுங்கள்.

10) அலுவல் முடிந்து வீட்டுக்கு வந்ததும் பூங்காவிலோ அல்லது வேறு வேலைகளுக்காகவோ ஒரு மைல் நடந்து பழகுங்கள்.

11) உணலில் சாதத்தின் அளவைக் குறைத்துக் கோதுமை, கேழ்வரகு கூழ் அல்லது புட்டு செய்து சாப்பிடுங்கள். வல்லாரைக் கீரை, வாழைப்பூ, வேப்பம்பூ துவையல், புதினாக் கீரையை உணவில் சேர்த்தக் கொள்வது நல்லது.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...