Skip to main content

Posts

Google ads

கண்களில் ஏற்படும் வெள்ளெழுத்து பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 கண்களில் உட்புறத்தில் பட்டன் மாதிரி வட்ட வடிவில் ஒரு லென்ஸ் இருக்கிறது. இந்த லென்ஸ் தூரத்தில் உள்ள பொருட்களையோ அல்லது உருவத்தையோ பார்க்கும் போது விரிந்து கொடுக்கும். கிட்டத்திலுள்ள பொருட்களையோ அல்லது உருவத்தையோ பார்க்கும் போது சுருங்கும். இதுதான் இந்த லென்ஸின் வேலை. இதன் மூலம் ஒரு பொருளைப் பார்க்கிறோம். எழுத்தைப் பார்க்கிறோம். லென்ஸ் இந்தச் சக்தியை இழந்துவிட்டால் நாம் பார்க்கும் பொருள்கள் மங்கலாகவும், தெளிவில்லாமலும் புகைமண்டலம் போல் வெள்ளையாகவும் தோன்றும். இது நோய் அல்ல. கண் பார்வையில் உண்டாகும் கோளாறு. இதைக் கிராம மக்கள் சாலேசரம் என்றும் வெள்ளெழுத்து என்றும் கூறுகிறார்கள். பிரஸ்பியோப்பியா என்று கண் மருத்துவர்கள் இதைக் குறிப்பிடுவார்கள். வெள்ளெழுத்து என்று இதை ஏன் சொல்லுகிறார்கள்?  படிக்கும் போது புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள் தெளிவில்லாமல் வெள்ளையாகத் தோன்றும். கண்களுக்கு வெகு தூரத்தில் புத்தகத்தை வைத்துக் கொண்டு பார்த்தால் தான் எழுத்து தெரியும். படிக்க முடியும். அருகில் புத்தகத்தை வைத்துக் கொண்டு படித்தால் சரியாகத் தெரியாது. இதேபோன்று உருவங்களும் தூரத்தில் இருந்தால்தான் தெரியும்

நடப்பதால் கிடைக்கும் நன்மைகள்/அறியாத தகவல்கள்- Medical Tamizha

 குளத்து நீரில் அசுத்தங்கள் தேங்கி நிற்கின்றன. ஆனால் ஆற்று நீரில் அசுத்தங்கள் தேங்குவதில்லை, எப்போதும் ஓடிக் கொண்டிருப்பதால் அசுத்தங்கள் நிற்பதில்லை. மேலும் ஓடும் நீரில் பிராண வாயு கலந்திருக்கும். அசுத்த நீரில் கரியமில வாயு கலந்திருக்கும். இதுபோலவே இரத்தம் ஓடிக் கொண்டிருந்தால் அதில் அழுக்குச் சேர்வதில்லை. ஒதுங்கிவிடுகிறது. இரத்தம் ஓடிக் கொண்டிருப்பதால் அதில் பிராண வாயும் கலந்து ஓடுகிறது. கரியமில வாயு ஒதுக்கப் படுகிறது. இரத்தத்தை ஓட வைப்பது நம்முடைய உழைப்பு. குறிப்பாகச் சொன்னால் கைகளை வீசி நடக்கும் நடையே நம் இரத்தத்தை ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு நன்கு ஓடச் செய்கிறது. உடல் உறுப்புக்களில், இரத்த நாளங்களில் இரத்தம் தங்கு தடையில்லாமல் ஓடுவதற்கு நடை மிகமிக அவசியமாகத் தேவைப் படுகிறது. தத்தித்தத்திச் செல்லும் சிறு குழந்தைக்கு மூன்று சக்கரத் தள்ளு வண்டியைக் கொடுத்து நடைபயில விடுகிறார்கள். இல்லா விட்டால் குழந்தை சப்பாணியாகி விடும்.  இடுப்புக்குக் கீழே உள்ள தசைகளை, நரம்புகளை இயக்கி விட வேண்டும். அப்போது தான் கீழ்ப் பகுதிக்கு வந்த அசுத்த இரத்தம் நடக்கும்போது மேல் நோக்கித் தள்ளி விடப்படும். அ

உடைகளால் வரும் உடல் கோளாறுகள்/அறியாத தகவல்கள்- Medical Tamizha

 வெப்பத்தையும் குளிரையும் சமாளிக்கவும் உடம்பின் உஷ்ணத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ளவும். மனிதனுக்கு உடை தேவைப்படுகிறது. இதனால் பருவ மாறுதல்களுக்கு ஏற்ப உடைகளைத் தைத்துப் போட்டுக் கொண்டு உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து வந்தார்கள் நம் முன்னோர்கள். உடை, உடம்பின் பாதுகாப்பிற்காக என்ற நிலைமாறி உடல் அழகுக்காகவும் தோற்றப் பொலிவுக் காகவும் புதிய புதிய பாஷன்கள் என்ற முறையில் உடை அலங்கார நிபுணர்கள் சில மாறுதல்களைச் செய்தார்கள். இதனால், ஒருபக்கம் நன்மை உண்டானது என்றாலும் இலைமறை காய்போல் சில தீமைகளும் தொடர்ந்துவந்து உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. இந்தியா வெப்பமான நாடு. இதற்கு மாறுபாடான சீரோஷ்ண நிலைமைகளை உடையவை மேலைநாடுகள். குளிர்ச்சியான நாட்டின் உடை அலங்காரம் வெப்ப நாட்டில் புகுந்தது. காழுத்தை இறுக்கும் காலர், டைப் பழக்கம், பாதங்களை மூடும் ஷூப் பழக்கம் ஆகியவற்றை  இங்குள்ள இந்தியர்கள் பின்பற்றவேண்டிய கட்டாயத்திற்கு வந்த பிறகு, புதிய நாகரிகத்தால் புதிய நோய்கள் சில தோன்றின. குறிப்பாகத் தோல் தொல்லைகள் அதிகமாயின. இரத்த நாளங்கள் அழுத்தப்படுவதால் வலி, வீக்கம், நரம்புக் கோளாறுகள் உண்டாயின. உடைகளாலும், உடை

நோய் குணமாக நோயாளிகள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்

 நோய் உடலைத் தாக்கும் போது நோயாளி பலவீன மடைகிறான். உடலின் இயக்கம் தளர்ந்து போகிறது. பசி இல்லை. நல்ல தூக்கம் இல்லை. இதனால் உடல் சோர்ந்து போகிறது. மனமும் பாதிக்கப்படுகிறது. ஆகவே நோயாளியை நல்ல காற்றோட்டமுள்ள அறையில், வெளிச்சம் உள்ள அறையில் ஓய்வாக இருக்கும் படி வைக்க வேண்டும். வெப்பமோ, குளிரோ தாக்காமல் நோயாளியைப் பாதுகாக்கவேண்டும். ஒருவருக்கு ஜூரம் வரும்போது மூளையும் நரம்புகளும் தங்களுக்கு வேண்டிய போஷிப்பை பெற்றுக் கொள்வதில்லை. இதனால் தளர்ச்சியும் வலிப்பும்கூட உண்டாகும். இழுப்பும் தோன்றும். இருதயம் அளவுக்கு அதிகமாகத் துடிப்பதால் அதன் முறையான வேலைகளும் பாதிக்கப் படுகின்றன.  இது தவிரச் சிறுநீரகங்கள் கழிவுப் பொருளை வெளியே தள்ள முடியாமல் தளர்ச்சியடைந்து போகிறது. இதனால் சிறுநீரகமும் பாதிக்கப்படுகிறது. உடல் தளர்ந்த நிலையில் வேறு சில தொற்று நோய்களும் இந்தக் கட்டத்தில் தாக்கலாம்.  பெரியம்மை, தட்டமை தொற்றலாம். ஆகவே நோயாளி வெகு சுவனமாக இருக்க வேண்டும். ஜூரத்தை முற்றவிடாமல் மருந்துகளாலோ அல்லது உணவுகளாலோ அதிகமாகாமல் டாக்டருடன் சிகிச்சை முறையில் ஒத்துழைக்க வேண்டும். ஒரு டாக்டரிடம் மருந்து சாப்பிடுவது;

திக்குவாய் பிரச்சனையை சரி செய்வது எப்படி? அறியாத தகவல்கள்- Medical Tamizha

 வாய் உள்ள அத்துணை பேரும் பேசவேண்டிய விஷயங்களைப் பிறர் விளங்கிக் கொள்ளும் படி பேசுவதில்லை.ஆனால், சிலரோ தட்டுத் தடுமாறிப் பேசுகிறார்கள். சொல்லுகிறார்கள். இதை ஸ்டட்டரிங் என்று ஆங்கிலத்தில் இன்னும் சிலர் சொற்களையோ, வாக்கியங்களையோ முழுவதும் சரியாக உச்சரிக்க முடியாமல் விழுங்கிவிழுங்கிப் பேசுகிறார்கள். இதை ஸ்டாமரிங் என்று ஆங்கிலத்திலும் திக்கித் திக்கிப்  பேசுதல் என்று தமிழிலும் சொல்லுகிறார்கள். தமிழ்நாட்டின் சில கிராமங்களில் இதைக் கொன்னை வாய்ப் பேச்சு என்று கூறுவர். இந்தியாவில் திக்குவாய்ப் பேச்சாளர்கள் சுமார் ஒருகோடிப் பேர் இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். இது ஒரு நோயா? இல்லை. சிலருக்குச் சில காலங்களில் இப்படி ஒரு குறைபாடு ஏற்படுகிறது. இது ஒன்றைத் தவிர இவர்களின் உடலில் வேறு எவ்விதக் குறைபாடும் இருப்பதில்லை. இந்தக் குறைபாட்டையும் இவர்கள் வாயைத் திறந்து பேசும் போதுதான் அறிய முடிகிறது. பெண்களைவிட ஆண்களையே இந்தக் குறைபாடு அதிகமாகச் சோதித்துவிடுகிறது. மேலும் குழந்தைப் பருவத்தில் உள்ளவர்களைத்தான் இந்தக் குறைபாடு அதிகமாகப் பாதிக்கிறது. குழந்தைப் பருவத்தில் கண்ணால் கண்டதையும், காதால் கேட்

மருந்து விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியவை!

 டாக்டருக்கும் நோயாளிக்கும் இடையில் மருந்து விற்பனையாளர் ஒருவர் இருக்கிறார். இவர் விற்பனை செய்யும் மருந்தை வாங்கி நோயாளி சாப்பிடுகிறார். மருந்து விற்பனையாளருக்கு மேலே, மருந்தை உற்பத்தி செய்பவர் இருக்கிறார்.  இவர் தயாரித்து அனுப்பும் மருந்தை, மருந்துக் கடைக்காரர்கள் விற்பனை செய்கிறார்கள். மருந்து வியாபாரம் ஓர் இலாபகரமான வியாபாரம் என்று இப்போது இந்தத் தொழிலில் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் போலி மருந்துகளின் நடமாட்டம் இந்தியாவில் பெருகிவருகிறது என்ற அச்சம் தரும் செய்திகள் தினசரித் தாள்களில் படிக்கிறோம். நோயிலிருந்து விடுதலை பெற எந்தவிலை கொடுத்தும் மருந்துகளை வாங்கும் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதோடு. சீக்கிரமாகவே இந்த உலகத்தை விட்டுப் போய் விடுகிறார்கள்.  மருந்து விற்பனையில் கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் வியாபாரிகள் சட்டத்தின் சந்துகளில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதை அரசும் அதிகாரிகளும் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களுக்கு வருவோம்:  ஒரு நோயாளி, டாக்டரிடம் சிகிச்சை செய்து கொள்ளும் போது டாக்டர் எழுதிக் கொடுக்கும் சீட்டைக் கவனமாகப் ப

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுப்பது எப்படி?

 குழந்தைகளைப் பாதிக்கும் எத்தனையோ தொந்தரவுகளில் Bed wetting என்று சொல்லப்படும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் தொந்தரவும் ஒன்று. சாதரணமாக குழந்தைகள் இரண்டு வயது முதல் நான்கு வயதிற்குள் சிறுநீர் மற்றும் மலத்தைக் கட்டுப் படுத்தும் சக்தியைப் பெற்று விடுகிறார்கள். ஆனால் ஒருசில குழந்தைகள் சில நேரங்களில் தங்களைக் கட்டுப் படுத்த முடியாமல் படுக்கையில் சிறுநீர், கழித்துவிடுகிறார்கள். இது பெற்றோருக்குத் தர்மசங்கடமான நிலைமையை ஏற்படுத்திவிடுகின்றன. பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா? அதைப் பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா? என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். பேணி வளர்ப்பதில் குழந்தைக்கு " டாய்லட் டிரைனிங்" என்று சொல்லப்படும் சிறுநீர், மலம் கழிக்கும் பயிற்சியும் ஒன்று. குறிப்பிட்ட நேரத்தில் குழந்தைகளுக்கு மலம் சிறுநீர் கழக்கும் பழக்கத்திற்குத் தாய்தான் உதவ வேண்டும். பொதுவாக இடுப்புக் கீழே உள்ள உறுப்புக்கள் தன்னிச்சையாகச் செயல்படுவதில்லை. வயிறு, குடல், சிறுநீரகம் இவை எல்லாம் பழக்கத்திற்கு அடிமையான உறுப்புக்கள். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட செயலைச் செய்யும்படி பழக்கப் படுத்தினால் அந்தப் பழக்

தொற்று நோய்கள் பரவாமல் தடுப்பது எப்படி?அறியாத தகவல்கள்- Medical Tamizha

 இந்த உலகில் எல்லோரையும் சமமாகப் பாவிக்கும் ஒரு சக்தி உண்டு என்றால் அது நோய் ஒன்று தான். பிறந்த குழந்தை என்றோ சாகப் போகும் பெரியவர் என்றோ, எவரையும் பிரித்துப் பார்ப்பதில்லை. மனிதன் என்றோ,மிருகம் என்றோ பேதம் பார்ப்பதில்லை.  ஆண் என்றோ,பெண் என்றோ,பணக்காரன் என்றோ, ஏழை என்றோ பாகுபாடு பார்ப்பதில்லை. படித்தவன் என்றோ, பாமரன் என்றோ ஏற்றத் தாழ்வுகளைப் பார்ப்பதில்லை. சொல்லாமல் வருகிறது. கொல்லாமல் கொல்லுகிறது! இந்த நோய்களில் மட்டும் இரண்டு பெரிய பிரிவுகள் உண்டு. ஒன்று தொற்றும் நோய்கள். இன்னொன்று தொற்றாத நோய்கள். நோய்களில் சில மனிதனைத் தொத்திக் கொண்டு அவன் மூலம் இன்னொரு மனிதனை வாரி வளைத்துப் போடுவதைப் பார்க்கிறோம். பெரியம்மை , சின்னம்மை , மணல்வாரி , தட்டம்மை கிச்சிலுப்பை , நீர்க் கொளுவான், புட்டாலம்மை , பொன்னுக்கு வீங்கி, அக்கி , சொறி , சிரங்கு . டிப்தீரியா , டெட்டனஸ் , கக்குவான் , மூலைக் காய்ச்சல் , டைபாய்ட் , பாரா டைபாய்ட், இளம்பிள்ளை வாதம். டி.பி. தொழுநோய் என்று, தொத்தும் நோய்களைப் பட்டியலாகப் போடலாம். தொத்தும் நோய்கள் அனைத்தையும் கண்களுக்குத் தெரியாத கிருமிகளால் உண்டாகின்றன. ஒவ்வொரு நோய்க்

கீரைப் பூச்சிகள் நூல் புழுக்கள்/அறியாத தகவல்கள்- Medical Tamizha

 குழந்தைகளுக்குச் சில சமயங்களில் சளி பிடித்துக் கொள்கிறது. நெஞ்சில் சளி, இருமல், இருமித்துப்பும் போது இரத்தம் விழுகிறது. இதற்கு என்ன காரணம்? சில குழந்தைகளுக்கு ஜூரம் வருகிறது, அதோடு வலிப்பும் உண்டாகிறது. இதற்கு என்ன காரணம்? சில குழந்தைகளுக்கு முகம் வெளுந்து, வயிறு பெருத்து, கன்னங்கள் ஊதிப் போய் இருக்கும். இதற்குக் காரணம்? சில குழந்தைகளுக்கு வயிற்றுவலி, பேதி ஆகிறது. விஷக் கிருமிகளால் பேதி ஆகிறது. இதற்கு என்ன காரணம்? குழந்தைகள் நன்றாகச் சாப்பிடுகின்றன. ஆனால் உடம்பு தேறவில்லை. தேய்ந்து தேய்ந்து தேவாங்குகள் போல் ஆகிவிடுகின்றன. குழந்தைகள் சாப்பிடும் சாப்பாடு எல்லாம் எங்கே போகிறது? எல்லாவற்றிற்கும் காரணம் குடற் பூச்சிகள் என்கிறார்கள் மருத்துவர்கள். இவை எல்லாம் உண்மைதானா? உண்மைதான்! இந்தப் புழுக்களால் குழந்தைகளுக்கு வரும் நோய்கள் அநேகம். மறைமுகமாகக் குடலில் போய் தங்கிக் கொண்டு குழந்தைகளையும் சில சமயங்களில் பெரியவர்களையும் தொல்லைப் படுத்துகின்றன. இந்தப் புழுக்கள் சில உருண்டை வடிவமாகவும், இன்னும் சில இலை போல் தட்டையாகவும் இருக்கின்றன. இதில் ஓர் ஆச்சரியம் என்னவென்றால் இவற்றினுள் ஆண்,பெண் பிரிவுக

குழந்தைகளின் மந்த புத்திக்குக் காரணம்?அறியாத தகவல்கள்- Medical Tamizha

 சில பெற்றோர், தங்களின் குழந்தையைப் பற்றிச் சொல்லும் போது, எல்லாக் குழந்தைகளும் ஓடியாடி விளையாடுகிறார்கள் என் குழந்தை மட்டும் எப்போதும் டல்லாக இருக்கிறான் என்பார்கள். இன்னும் சில தாய்மார்கள் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுத்தாலும் மண்டையில் ஏறுவதில்லை. மந்தமாக இருக்கிறான். இதற்கு என்ன காரணம்? என்று கேட்பதுண்டு. பிறக்கும்போதே ஏற்படும் சில கோளாறுகளே மந்த புத்திக்குக் காரணங்களாகச் சொல்லலாம். கர்ப்பமாக இருக்கும் சில தாய்மார்கள் ஊட்டச் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடாமல் இருப்பதால் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தை மந்த புத்தியுள்ளவர்களாகப் பிறவியிலேயே உருவாகிறார்கள். கர்ப்பிணிகளின் உணவில் அயோடின் சத்தக் குறைவதால் மந்த நிலை ஏற்படலாம். ஆகவே கர்ப்பமான பெண்கள் அயோடின் உப்புச் சேர்ந்திருக்கும் உணவுகளை நன்கு சாப்பிடவேண்டும். கர்ப்பமான காலத்தில் அதிகமாக மருந்துகளைச் சாப்பிட்டாலும் குழந்தை மந்தமாகப் பிறக்கிறது என்று மகப்பேறு மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். குழந்தைகளை படிப்பில் ஆர்வமாக இருப்பதற்கு வழிமுறைகள் குழந்தை பிறக்கும்போது ஏற்படும் சிக்கல் காரணமாகச் சில சமயங்களில் மூளை பாதிக்கப்படலாம். குழந்தைக்க