Skip to main content

Posts

Google ads

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சமயங்க

இரும்பு சத்து குறைவால் வரும் நோய்கள்/அறியாத தகவல்கள்- Medical Tamizha

 உடம்பில் இரும்பு இரும்பாக இல்லை. இரும்புச் சத்தாக இருந்து உயிரை இயக்குகிறது. இரும்புச் சத்து உடலுக்கு வலுவையும் வனப்பையும் தந்து நம்மை உயிர் வாழவைக்கிறது. உடலை வாழவைக்கிறது.  இரும்பு இல்லையென்றால் இரத்த அணுக்கள் இல்லை. இரத்தம் இல்லை. ஆகவே இந்த உலகத்திற்கும் உடலுக்கும் இரும்பு, இரும்புச் சத்து எனப்படும் அயச் சத்து மிகமிகத் தேவையானது என்பதை கொண்டிருக்கிறது.  இரும்புச்சத்து இரத்தத்திற்கும் நிறம் தருகிறது. பலம் தருகிறது. பிராண வாயுவை உடல் முழுவதும் கொண்டு செல்லும் பணியைச் செய்கிறது. இரும்புச்சத்து ஆண்களை விடப் பெண்களுக்கு இரும்புச் சத்து அதிகம் தேவை. அதைவிடக் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து அதிகம் தேவை என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். நாள் ஒன்றுக்கு குழந்தைகளுக்கு ஒரு மில்லி கிராம் சத்தும், வயதானவர்களுக்குப் பத்து கிராம் இரும்புச் சத்தும், இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும், கர்ப்பமான பெண்களுக்கும் 15 கிராம் இரும்புச் சத்தம் தேவைப்படும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள். ஹிமோகுளோபின் என்னும் புரொட்டீன் சத்துடன் இரும்புச் சத்து சேர்ந்து நம் உடலை இயக்கிக் கொண்டிருக்கி

சைக்கிள் ஓட்டுவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்

 நடப்பது, நீந்துவது, படகு விடுவது, சைக்கிள் ஓட்டுவது இவை எல்லாம் மிதமான தேகப் பயிற்சிகள், இளைஞர்களும், முதியவர்களும் செய்யக் கூடிய ஒரு பயிற்சி சைக்கிள் சவாரி. சைக்கிள் ஓட்டுவதை நம் அவசியத்திற்காகச் செய்யப்படும் ஓர் அலுவலாக நினைக்கிறோம்.  உடற்பயிற்சியாக எவரும் நினைப்பதில்லை. அமெரிக்காவில் உள்ள ஒரு பிரபல இருதய நோய் ஆராய்ச்சிக் கழகம், சைக்கிள் ஓட்டுவதை ஆராய்ச்சி செய்து இதனால் இருதய நோய்களைப் போக்கலாம் என்று கண்டுபிடித்திருக்கிறது. அமெரிக்காவில் இருதய நோயாளிகள் பெருகி வருவதால் இவர்களுக்குச் சைக்கிள் பயிற்சி அவசியம் தேவை என்று சொல்லியிருக்கிறார்கள். நாம் சாதாரணமாக உட்கார்ந்து கொண்டோ. நின்றுகொண்டோ, படுத்துக்கொண்டோ இருக்கும்போது இரு நிமிஷத்திற்கு இருபது தடவை சுவாசிக்கிறோம். அப்போது சுத்தமான காற்று இரத்தக் குழாய்கள் மூலம் உச்சி முதல் உள்ளங்களால் வரை சென்று திரும்புகிறது. இதனால் பிராண வாயு கிரசிக்கப்பட்டு, கரியமிலவாயு வெளியே தள்ளப்படுகிறது. சாதாரண நிலையில் இரத்த ஓட்டம் மந்த கதியில் செல்கிறது. ஆனால் நடக்கும்போதோ, ஓடும் போதோ, சைக்கிள் சவாரி செய்யும் போதோ இரத்த ஓட்டம் துரிதமாக நடைபெறுகிறது. அதிகமா

மூக்கில் ஏற்படும் கோளாறுகளை போக்க வழிமுறைகள்

 மனித இனத்திற்கு அழகைத் தரும் உறுப்பு மூக்கு. மிருகங்களுக்கு முகத்துடன் மறைந்து சப்பையான மூக்கு அமைந்திருக்கிறது. மூக்கு என்று சொல்ல இரண்டு துவாரங்கள் மட்டும் காணப்படும்.  ஆனால் மனிதனுக்கு அப்படி அல்ல. முகத்தில் எடுப்பாக, அமைந்திருக்கிறது. அழகாக ஒரு பொருளை முகர்ந்து பார்த்து அதன் மணத்தை அறிந்துகொள்வதோடு மூக்கின் முக்கியத்துவம் முடிந்து விட்டதா? இல்லை. பிராணவாயுவை உள்ளே இழுத்துக் கரியமிலவாயுவை வெளியே தள்ளும் முக்கியமான கருவி மூக்கு.  இருதயம் நீடித்து உழைக்க மூச்சை இழுத்து, மூச்சை விட்டு அரும்பணி ஆற்றுகிறது மூக்கு. தூசு தும்புகள் பூச்சிகள் அசுத்தப் பொருட்கள் எதுவும் உடம்புக்கு உள்ளே காற்றுமூலம் நுழைந்துவிடாத படி தடுத்து நிறுத்துகிறது. இந்த மூக்கில் சிலருக்குக் கோணல் இருப்பது தெரிவதில்லை. கோணல் மூக்கு கோளாறை உண்டாக்குகிறது என்று காது மூக்குத் தொண்டை நிபுணர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள். மூக்கில் இரண்டு துவாரங்களுக்கு மத்தியில் ஒரு சுவர் இருக்கிறது. இது மூக்கின் உள்ளே இரண்டாகப் பிரிந்து சுவாசத்திற்கு வழி அமைத்துக் கொடுக்கிறது. இந்தச் சுவர்குருத்து எலும்பினால் ஆனது. இது சில காரணங்களால் ஒரு

தொப்பையை குறைக்க மருத்துவ வழிமுறைகள்/அறியாத தகவல்கள்- Medical Tamizha

 ஒரு மனிதனின் வாழ்வுக்கு அவனுடைய வயிறு ஓர் அளவுகோல். வயிற்றின் சுற்றளவு அதிகமாகப் போனால் வாழ்வு சுருங்கும் என்று ஒரு கணக்கு உண்டு. அதாவது, தொந்தி, தொப்பை, பெருவயிறு உண்டாகாமல் பார்த்துக் கொண்டால் நீண்ட காலம் வாழலாம். பணவசதி படைத்தவர்கள் பலர் வயிற்றின் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப் படாமல் வாழ்கிறார்கள். வயிறு வீங்கவீங்க வாழ்வு சுருங்கிவிடும் என்ற பயமே இல்லாது வாழ்கிறார்கள். பணக்காரர்கள் சிலருக்குத்தான் பானை வயிறு என்றால், ஏழைகளில் சிலருக்கும் பானைபோல் வயிறு பெருத்துவிடும் காட்சியைப் பார்க்கிறோம். வயிறு பெருத்து போவதற்கு என்ன காரணம்? சாதாரணமாகக் கொழுத்த உடல் உள்ளவர்களுக்குப் பெருத்த வயிறு அமையும். இதற்குக் காரணம் கொழுப்புச் சத்து அதிகமாக உடலில் சேர்ந்து அவர்கள் உழைக்க முடியாத சூழ்நிலையில் வயிறு மட்டும் பெரிதாகி விடும்.  நடந்தால் மூச்சு வாங்கும். சோர்வும் களைப்பும் அதிகமாகிச் சோம்பலுக்கு இடம் தந்துவிடுகிறார்கள். வயிறே இவர்களை வாழ்க்கையில் செயலற்றவர்களாக ஆக்கி விடுகிறது. இவை தவிர, தைராய்டு சுரப்பிக் கோளாறு காரணமாகவும் உடல் பருத்து, வயிறு பெருத்துச் சிலருடைய அழகைக் கெடுத்துவிடுகிறது. உடல் பெர

சளித் தொல்லையைப் போக்கும் வழிமுறைகள்

 மனிதர்களை எளிதில் தாக்கும் ஒரு நோய் சளித் தொல்லை. இத்ற்குத் தப்பிய மனிதர்களே இல்லை. அளவோடு இருந்தால் அது நோயில்லை. மூக்கின் பாதுகாப்பிற்காக இந்தப் பசை எல்லோர் மூக்கிலும் அளவோடு இருக்கும். அது அதிகமாகும்போது நோயாகிறது. இந்த நோயைச் சாதரணமாகக் குறிப்பிடும்போது Cold என்று ஆங்கிலத்திலும், சளி, தடுமன், ஜலதோஷம் என்று தமிழிலும் குறிப்பிடுகிறார்கள். கோல்ட் என்று சொன்னாலே குளிர்ச்சியைக் குறிக்கிறது.  இந்த சளித்தொல்லை எப்போதெல்லாம் ஏற்படுகிறது? மழையில் நனைந்தால், தண்ணீரில் குளித்தால் சிலருக்குத் தும்மல் வரும். பிறகு தொண்டைக் கரகரப்பு, இருமல், தலைவலி சிலருக்குக் காய்ச்சலும் உண்டாகும். இது அக்யூட் கோரிசா என்ற ஒருவகை விஷக்கிருமியின் வேலை, மூக்கையும் மூக்கைச் சுற்றியுள்ள காற்றுப் பைகளையும் இந்த விஷக் கிருமி தாக்குவதால் இது ஒரு நோயாக உருவெடுக்கிறது. மூன்று காரணங்களால் நமக்குச் சளி பிடிக்கிறது.  ஒன்று, கிருமிகள் காரணமாக, இரண்டு ஒவ்வாமை என்று சொல்லப்படும் அலர்ஜி காரணமாக, மூன்றாவது மூக்கையும் மூக்கைச் சுற்றியுள்ள சைனஸ் என்ற அவடிகள் பாதிக்கப்படுவதன் காரணமாக. சளி நோயால் பாதிக்கப்பட்ட ஒரு மனிதன் தும

தோல் நோய்களைப் போக்க செய்ய வேண்டிய வழிமுறைகள்

 தோல் என்பது நமது உடம்பு முழுவதற்குமான போர்வை போன்றது. இந்தப் போர்வையில் பத்தொன்பது இலட்சத்திற்கும் அதிகமான வியர்வைக் குழாய்கள் இருக்கின்றன. இந்த வியர்வைக் குழாய்களை நீட்டிவைத்துக் கணக்குப் போட்டால் சுமார் எட்டு மைல் நீளம் இருக்கும் என்று உடல் கூறு விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.  இந்த வியர்வைக் குழாய்கள் மூலம் நம் உடலிலுள்ள கழிவுப் பொருள்கள் வெளியேறுகின்றன. மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்தத் தோலில் நரம்புகள், திசுக்கள். வியர்வைக் குழாய்கள் எல்லாமே அடங்கி இருப்பதால் தோலுக்கு ஏதாவது கிருமிகளால் தொந்தரவுகள் ஏற்பட்டால் தோல் சம்பந்தமான பலவித நோய்கள் உண்டாகின்றன. தோலுக்கு வரும் நோய்கள் பல. இதில் சொறி, சிரங்கு, தேமல், கிரந்தி, மேக நோய், கரப்பான். படர்தாமரை, மதுமேகம், கட்டி, பரு, சேற்றுப்புண், படை என்று பலவகைப் பெயர்களால் இவை அழைக்கப்படுகின்றன. தோல் நோய்களில் அதிகமான அளவு தொந்தரவு கொடுப்பது எக்ஸிமா என்ற படை நோய். படை நோய்களிலும் பல வகைகள் உண்டு. இந்தப் படையை உண்டாக்கும் கிருமிகளை மைக்ரோஸ் போரன், என்றும் எபிடர்மைபியாடன் என்றும் அழைக்கிறார்கள். இந்த நோய், தோலின் மேல் புறத்தில் கடுகு போன்ற சிறுசிறு க

மூளையை தாக்கும் மூன்று நோய்கள்- தடுக்கும் வழிமுறைகள்

 வெப்பம் மிகுந்த நாடுகளில் இளம் பருவத்தினரை என்-சபாலிடிஸ், மெனிங்கெடிஸ், என்சபாலோ மெனிங்கெடிஸ், என்ற மூன்று நோய்கள் மூளையைத் தாக்கிப் பலரைச் சோதனைக்குள்ளாக்குகிறது.என் - சபாலிடிஸ் என்ற நோய் மூளையின் இரு அரைக் கோளங்களை மட்டும் தாக்குகிறது. மெனிங்கெடிஸ் என்பது மூளையிலுள்ள மெல்லிய உட்புறத் தோலைத் தாக்குகிறது.என்-சபாலோ மெனிங்கெடிஸ் என்பது மூளையுடன் இணைந்த முதுகெலும்பைத் தாக்குகிறது. இந்த மூன்று நோய்களுக்கும் ஏறக்குறைய ஒரே அடையாளங்கள் தோன்றுகின்றன. குளிர் ஜூரம் உண்டாகும். தலைவலி உண்டாகும். அதிகமான அசதியோடு தூக்கம் ஏற்படும். ஞாபக சக்தியை இழந்து விடுவார்கள். இன்று என்ன கிழமை, என்ன தேதி, என்ன சாப்பிட்டோம் என்பவை கூட மறந்து விடும். எதற்கெடுத்தாலும் கிடுசிடுவென்று எரிச்சல் அடைவார்கள். உடம்பில் நடுக்கம் ஏற்படும்.  கழுத்தில் விறைப்பு உண்டாகும். ஒருவகைப் பயம் உண்டாகும். சில சமயங்களில் குமட்டலும் வாந்தியும் உண்டாகும். மூளையைத் தாக்கும் இந்த மூன்று நோய்களுள் எது எந்த வகையைச் சேர்ந்தது என்பதை அனுபவமுள்ள டாக்டர்கள் தான் கண்டு பிடிக்க முடியும். இந்த நோய்கள் எப்படித் தோன்றுகின்றன? பண்டையில் ஒருவிதமான வி

மின்சார அதிர்ச்சிக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள்

 விஞ்ஞானம் மனித குலத்துக்கு எத்தனையோ வகையில் உதவினாலும், அதனால் சில விபத்துக்களும் ஏற்பட்டு விடுகின்றன.மின்னோட்டத்தின் சக்தியைப் பொறுத்து அதிர்ச்சி அதிகமாகி சுயநினைவு இழந்து, சுவாசம் தடைப்பட்டு, இருதய இயக்கம் சிரமப்படுகிறது. சுயநினைவு இல்லாமல் போகுதல், மூச்சை அடைதல், நினைவு தடுமாறுதல் இவை எல்லாம் ஒரே பொருளைக் குறிப்பிடுகிற வெவ்வேறு செயல்கள் என்றாலும் இவற்றிற்கு முதலுதவி செய்தால் ஆபத்தான நிலைமை யிலிருந்து பாதிக்கப்பட்வர்களை மீட்கலாம். மின்சாரம் பாதிக்கப்பட்டவரை எப்படி மின்சாரத்தில் இருந்து அப்புறப்படுத்துவது?   மின்சாரத்தில் இழுக்கப்பட்டவரைக் காப்பாற்ற உடனே மின்சார சுவிட்சை நிறுத்த முயற்சிக்க வேண்டும்: மின்சாரக் கம்பியால் இழுக்கப் பட்டவரைப் பிரித்து அப்புறப்படுத்த வேண்டும்.  மின்சாரம் கசியும் இடத்திலிருந்து பத்து மீட்டர் இடத்தைச் சுற்றித் தரையிலும் மின்சாரம் இருக்கு மென்பதால் பாதிக்கப்பட்பவரை மீட்க வெறுங் கால்களுடன் அவரை அனுகக்கூடாது. காலில் ரப்பர் செருப்பு அணிந்துகொண்டு அவரைக் காப்பாற்றவேண்டும்.  உலோகம் அல்லாத கம்பு, கட்டைகளால் அவரைப் பிரித்து அப்புறப்படுத்தவேண்டும். ஈரமான செருப்பு, ஈர

அழுவதால் கிடைக்கும் நன்மைகள்-தீரும் நோய்கள்

 நோய் வந்த பிறகு நோயின் கொடுமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அழுகிறோம். இதனால் நோய் தீர்ந்துவிடாது. மருந்து சாப்பிட்டால்தான் நோய் தீரும். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அழுவதால் ஒருவகை ஆறுதல் கிடைக்கிறது. கதறுவதும்; கண்ணீர் விட்டு அழுவதும், மன நோய்களைப் போக்கும் ஒரு மருந்து என்பது பலருக்குத் தெரியாது. அழவேண்டிய நேரத்தில் அழாமல், மனதிற்குள் போட்டு அமுக்கிவைப்பது நோய்களுக்குக் பல காரணமாகிறது என்று மன இயல் மருத்துவர்கள் ஒரு புதிய கருத்தை நமக்குச் சொல்லுகிறார்கள். அழுவது கோழைத்தனம்; அழுவது ஆண்மைக்கு இழுக்கு; அழுவது அகௌரவமானது; அழுவது சிறு பிள்ளைத்தனம் என்றெல்லாம் சில மேல்பூச்சுகளைப் பூசிக் கண்ணீரின் கதவுகளை சாத்திவிடுகிறார்கள். இதனால் உடலுக்கும் உள்ளத்துக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுவதை மறந்துவிடுகிறார்கள். மறைமுகமான சில நோய்களுக்கு ஆளாகிறார்கள். இவை உடனே வெளியே தெரிவதில்லை. அன்புக்குரிய ஒருவர் இறந்து விட்டார் என்றதும் அதிச்சியும் உடனே அழுகையும் வரும். இதை அடக்க முடியாது. தடுக்கவும் முடியாது. ஆனால், வாய்விட்டு அழ வேண்டிய நேரம் இது. இந்த நேரத்தில் அழாமல் இருக்கலாமா? மௌனக் கண்ணீர் வடி