Skip to main content

Google ads

மூக்கில் ஏற்படும் கோளாறுகளை போக்க வழிமுறைகள்

 மனித இனத்திற்கு அழகைத் தரும் உறுப்பு மூக்கு.

மிருகங்களுக்கு முகத்துடன் மறைந்து சப்பையான மூக்கு அமைந்திருக்கிறது. மூக்கு என்று சொல்ல இரண்டு துவாரங்கள் மட்டும் காணப்படும்.

 ஆனால் மனிதனுக்கு அப்படி அல்ல. முகத்தில் எடுப்பாக, அமைந்திருக்கிறது. அழகாக ஒரு பொருளை முகர்ந்து பார்த்து அதன் மணத்தை அறிந்துகொள்வதோடு மூக்கின் முக்கியத்துவம் முடிந்து விட்டதா? இல்லை. பிராணவாயுவை உள்ளே இழுத்துக் கரியமிலவாயுவை வெளியே தள்ளும் முக்கியமான கருவி மூக்கு.

 இருதயம் நீடித்து உழைக்க மூச்சை இழுத்து, மூச்சை விட்டு அரும்பணி ஆற்றுகிறது மூக்கு. தூசு தும்புகள் பூச்சிகள் அசுத்தப் பொருட்கள் எதுவும் உடம்புக்கு உள்ளே காற்றுமூலம் நுழைந்துவிடாத படி தடுத்து நிறுத்துகிறது.

இந்த மூக்கில் சிலருக்குக் கோணல் இருப்பது தெரிவதில்லை.

கோணல் மூக்கு கோளாறை உண்டாக்குகிறது என்று காது மூக்குத் தொண்டை நிபுணர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மூக்கில் இரண்டு துவாரங்களுக்கு மத்தியில் ஒரு சுவர் இருக்கிறது. இது மூக்கின் உள்ளே இரண்டாகப் பிரிந்து சுவாசத்திற்கு வழி அமைத்துக் கொடுக்கிறது. இந்தச் சுவர்குருத்து எலும்பினால் ஆனது. இது சில காரணங்களால் ஒரு பக்கம் விலகி நிற்கிறது.




பிறவியிலேயே சிலருக்கு மூக்கின் நடுச் சுவர் விலகி இருக்கலாம். வளைந்திருக்கலாம்.

சிலருக்குப் பரம்பரை காரணமாகவும் ஏற்பட்டிருக் கலாம். இன்னும் சிலருக்குக் குழந்தைப் பருவத்திலேயே விபத்துக் காரணமாக விலகி இருக்கலாம். மூக்கின் நடு எலும்பு மென்மையானது. நீண்டு சுருங்கும் தன்மை உள்ளது. மூக்கில் அடிபடும் போது சற்று விலகி ஒரு பக்கம் வளைந்து விடுவது உண்டு.

இதனால் மூச்சு ஒரு வழியாக மட்டுமே உள்ளே செல்லும்; வெளியே வரும். இதனால் மூக்கின் ஒரு பக்கத்திற்குப் போதுமான காற்றுக் கிடைக்காததால் காய்ந்து விடும்.

இந்தச் சுவர் எலும்பு, நாசியை அழுத்தித்தலைவலியை உண்டாக்கும். சுவாசத்திற்குத் தடையையும் உண்டாக்கும். சளிப் பிடித்திருக்கும் சந்தர்ப்பத்தில் சுத்தக் காற்றைச் செல்லவிடாமல் தடை ஏற்படுத்துவதும் உண்டு. தொண்டை ஆழற்சி அடிக்கடி ஏற்படும். நமைச்சலும் வலியும் சில சமயங்களில் வீக்கமும் உண்டாகித் தொந்தரவு கொடுக்கும். நீண்ட காலமாக இந்த நிலை தொடர்ந்தால் தொண்டைபாதிக்கும். சுவாசம் விடைத் தடை ஏற்பட்டு அடிக்கடி சிரமத்தைச் கொடுக்கும்.

மூக்கு இருக்கும் வரை சளி உண்டு என்பதைப்போல் கோணல் மூக்கு இருக்கும்வரை மூச்சுக்குத் தடையும், புளூ ஜூரமும் (Nasal allergy) என்று சொல்லப்படும் மூக்கு நோய் ஒவ்வாமைத் தொந்தரவுகளும், தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

கோணல் மூக்கை நிமிர்த்த முடியாதா? முடியும், மூக்கின் உள்ளே மிக நுட்பமான ஓர் ஆப்ரேஷனைச் செய்து நடுச் சுவரை ஒழுங்குபடுத்தி மூச்சு இழுக்கவும், மூச்சு விடவும் சௌகரியமான சூழ்நிலைகளைச் செய்கிறார்கள் ஈ.என்.டி.டாக்டர்கள்.

இந்த ஆபரேஷனை அனுபவமிக்க டாக்டர்களிடம் மட்டுமே செய்துகொள்ள வேண்டும்.

வெளிப் பார்வைக்கு மூக்கின் உள்ளே ஏற்பட்டிருக்கும் கோணல் தெரியாது.

இந்தக் கோளாறை டாக்டரிடம் காட்டி சோதித்த பிறகே கண்டுகொள்ள முடியும்.

ஆகவே, மூக்கில் எந்தக் கோளாறு ஏற்பட்டாலும் காது, மூக்கு, தொண்டை நிபுணர்களிடம் காட்டிச் சிகிச்சை செய்து கொள்ளவேண்டும்.

சிறு வயதில் ஏற்பட்ட கோளாறு வயதான பிறகும் தொடர்வதால் ஆரம்பத்திலேயே இந்தக் கோணலைச் சரி செய்து கொள்வது நல்லது.

ஆகவே மூக்கை கவனிக்க வேண்டியது முக்கியம்.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...