Skip to main content

Google ads

மூக்கில் ஏற்படும் கோளாறுகளை போக்க வழிமுறைகள்

 மனித இனத்திற்கு அழகைத் தரும் உறுப்பு மூக்கு.

மிருகங்களுக்கு முகத்துடன் மறைந்து சப்பையான மூக்கு அமைந்திருக்கிறது. மூக்கு என்று சொல்ல இரண்டு துவாரங்கள் மட்டும் காணப்படும்.

 ஆனால் மனிதனுக்கு அப்படி அல்ல. முகத்தில் எடுப்பாக, அமைந்திருக்கிறது. அழகாக ஒரு பொருளை முகர்ந்து பார்த்து அதன் மணத்தை அறிந்துகொள்வதோடு மூக்கின் முக்கியத்துவம் முடிந்து விட்டதா? இல்லை. பிராணவாயுவை உள்ளே இழுத்துக் கரியமிலவாயுவை வெளியே தள்ளும் முக்கியமான கருவி மூக்கு.

 இருதயம் நீடித்து உழைக்க மூச்சை இழுத்து, மூச்சை விட்டு அரும்பணி ஆற்றுகிறது மூக்கு. தூசு தும்புகள் பூச்சிகள் அசுத்தப் பொருட்கள் எதுவும் உடம்புக்கு உள்ளே காற்றுமூலம் நுழைந்துவிடாத படி தடுத்து நிறுத்துகிறது.

இந்த மூக்கில் சிலருக்குக் கோணல் இருப்பது தெரிவதில்லை.

கோணல் மூக்கு கோளாறை உண்டாக்குகிறது என்று காது மூக்குத் தொண்டை நிபுணர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

மூக்கில் இரண்டு துவாரங்களுக்கு மத்தியில் ஒரு சுவர் இருக்கிறது. இது மூக்கின் உள்ளே இரண்டாகப் பிரிந்து சுவாசத்திற்கு வழி அமைத்துக் கொடுக்கிறது. இந்தச் சுவர்குருத்து எலும்பினால் ஆனது. இது சில காரணங்களால் ஒரு பக்கம் விலகி நிற்கிறது.




பிறவியிலேயே சிலருக்கு மூக்கின் நடுச் சுவர் விலகி இருக்கலாம். வளைந்திருக்கலாம்.

சிலருக்குப் பரம்பரை காரணமாகவும் ஏற்பட்டிருக் கலாம். இன்னும் சிலருக்குக் குழந்தைப் பருவத்திலேயே விபத்துக் காரணமாக விலகி இருக்கலாம். மூக்கின் நடு எலும்பு மென்மையானது. நீண்டு சுருங்கும் தன்மை உள்ளது. மூக்கில் அடிபடும் போது சற்று விலகி ஒரு பக்கம் வளைந்து விடுவது உண்டு.

இதனால் மூச்சு ஒரு வழியாக மட்டுமே உள்ளே செல்லும்; வெளியே வரும். இதனால் மூக்கின் ஒரு பக்கத்திற்குப் போதுமான காற்றுக் கிடைக்காததால் காய்ந்து விடும்.

இந்தச் சுவர் எலும்பு, நாசியை அழுத்தித்தலைவலியை உண்டாக்கும். சுவாசத்திற்குத் தடையையும் உண்டாக்கும். சளிப் பிடித்திருக்கும் சந்தர்ப்பத்தில் சுத்தக் காற்றைச் செல்லவிடாமல் தடை ஏற்படுத்துவதும் உண்டு. தொண்டை ஆழற்சி அடிக்கடி ஏற்படும். நமைச்சலும் வலியும் சில சமயங்களில் வீக்கமும் உண்டாகித் தொந்தரவு கொடுக்கும். நீண்ட காலமாக இந்த நிலை தொடர்ந்தால் தொண்டைபாதிக்கும். சுவாசம் விடைத் தடை ஏற்பட்டு அடிக்கடி சிரமத்தைச் கொடுக்கும்.

மூக்கு இருக்கும் வரை சளி உண்டு என்பதைப்போல் கோணல் மூக்கு இருக்கும்வரை மூச்சுக்குத் தடையும், புளூ ஜூரமும் (Nasal allergy) என்று சொல்லப்படும் மூக்கு நோய் ஒவ்வாமைத் தொந்தரவுகளும், தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

கோணல் மூக்கை நிமிர்த்த முடியாதா? முடியும், மூக்கின் உள்ளே மிக நுட்பமான ஓர் ஆப்ரேஷனைச் செய்து நடுச் சுவரை ஒழுங்குபடுத்தி மூச்சு இழுக்கவும், மூச்சு விடவும் சௌகரியமான சூழ்நிலைகளைச் செய்கிறார்கள் ஈ.என்.டி.டாக்டர்கள்.

இந்த ஆபரேஷனை அனுபவமிக்க டாக்டர்களிடம் மட்டுமே செய்துகொள்ள வேண்டும்.

வெளிப் பார்வைக்கு மூக்கின் உள்ளே ஏற்பட்டிருக்கும் கோணல் தெரியாது.

இந்தக் கோளாறை டாக்டரிடம் காட்டி சோதித்த பிறகே கண்டுகொள்ள முடியும்.

ஆகவே, மூக்கில் எந்தக் கோளாறு ஏற்பட்டாலும் காது, மூக்கு, தொண்டை நிபுணர்களிடம் காட்டிச் சிகிச்சை செய்து கொள்ளவேண்டும்.

சிறு வயதில் ஏற்பட்ட கோளாறு வயதான பிறகும் தொடர்வதால் ஆரம்பத்திலேயே இந்தக் கோணலைச் சரி செய்து கொள்வது நல்லது.

ஆகவே மூக்கை கவனிக்க வேண்டியது முக்கியம்.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும