Skip to main content

Google ads

தோல் நோய்களைப் போக்க செய்ய வேண்டிய வழிமுறைகள்

 தோல் என்பது நமது உடம்பு முழுவதற்குமான போர்வை போன்றது. இந்தப் போர்வையில் பத்தொன்பது இலட்சத்திற்கும் அதிகமான வியர்வைக் குழாய்கள் இருக்கின்றன. இந்த வியர்வைக் குழாய்களை நீட்டிவைத்துக் கணக்குப் போட்டால் சுமார் எட்டு மைல் நீளம் இருக்கும் என்று உடல் கூறு விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

 இந்த வியர்வைக் குழாய்கள் மூலம் நம் உடலிலுள்ள கழிவுப் பொருள்கள் வெளியேறுகின்றன. மூன்று அடுக்குகளைக் கொண்ட இந்தத் தோலில் நரம்புகள், திசுக்கள். வியர்வைக் குழாய்கள் எல்லாமே அடங்கி இருப்பதால் தோலுக்கு ஏதாவது கிருமிகளால் தொந்தரவுகள் ஏற்பட்டால் தோல் சம்பந்தமான பலவித நோய்கள் உண்டாகின்றன.

தோலுக்கு வரும் நோய்கள் பல. இதில் சொறி, சிரங்கு, தேமல், கிரந்தி, மேக நோய், கரப்பான். படர்தாமரை, மதுமேகம், கட்டி, பரு, சேற்றுப்புண், படை என்று பலவகைப் பெயர்களால் இவை அழைக்கப்படுகின்றன.

தோல் நோய்களில் அதிகமான அளவு தொந்தரவு கொடுப்பது எக்ஸிமா என்ற படை நோய். படை நோய்களிலும் பல வகைகள் உண்டு. இந்தப் படையை உண்டாக்கும் கிருமிகளை மைக்ரோஸ் போரன், என்றும் எபிடர்மைபியாடன் என்றும் அழைக்கிறார்கள்.


இந்த நோய், தோலின் மேல் புறத்தில் கடுகு போன்ற சிறுசிறு கொப்புளங்களாக ஓரிடத்தில் தோன்றும். அது உடைந்து அந்த இடத்தில் வட்டமாகப் பரவும். அரிப்பு எடுக்கும். சொறியத் தோன்றும் சொறியும்போது கிருமிகள் நகத்தில் ஒட்டிக்கொள்ளும், எந்தெந்தப் பொருள்களைத் தொடுகிறோமோ அந்தப் பொருள்கள் மூலம் மற்றவர்களுக்கும் தொற்றும். உடைகள், படுக்கை விரிப்புக்கள், துண்டுகள், சீப்பு மற்றும் பல பொருள்களில் ஒட்டிக்கொண்டு யார்யார் இவற்றைப் பயன்படுத்து கிறார்களோ அவர்களுக்கெல்லாம் மறைமுகமாகப் பரவும். இது காளான் வகையைச் சேர்ந்த கிருமிகளால் உண்டாவது. குளிர்ச்சியான, ஈரமான இடங்களில் இந்தக் கிருமிகளின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.


படை நோய் எல்லா இடங்களிலும் படையெடுக்கும். தசைகளில் குறிப்பாக மடிப்பு விழுந்த தசைகளில், நகத்தில் முடியில், தலையில், தாடையில், தொடை இடுக்குகள் எல்லாம் இந்தக் கிருமிப் படை வட்ட வட்டமாக நகர்ந்து கொண்டே இருக்கும். அந்தந்த இடங்களுக்கு ஏற்ப இந்தப் படைகளுக்குப் பெயர்கள் உண்டு.

உதாரணமாக, தாடி மீசைப்பகுதிகளில் இந்தப் படை தோன்றும். இதை ஆங்கிலேயர்கள் Barber's nash என்பார்கள். பலர் முடிவெட்டிக் கொள்ள-சவரம் செய்து கொள்ளப் போகிறார்கள். 

படை போன்ற சரும் நோயாளிகளுக்குப் பயன்படுத்துப்படும் அதே கத்திரிக் கோல், கத்தி, முகச் சவரத்திற்கு உபயோகிக்கும் பிரஷ் ஆகிய கருவிகளில் இந்தக் கிருமிகள் ஒட்டிக் கொண்டு மற்றவருக்குத் தொற்றிக் கொள்ளும். இதுதான் மேற்கண்ட பெயரைப் பெறுகிறது.

சலவைத் துணிகள் மூலமாகவும் இந்தப் படை நோய் பரவும். சரும நோய்உள்ள ஒரு நோயாளியின் துணியோடு நம்முடைய துணிகளை வைத்துச் சுருட்டுப்போதும். துவைக்கும்போதும், அடுக்கும்போதும் இந்த நோய் பரவும். இதை டோபீஸ் இட்ச் என்று சொல்லுகிறார்கள்.

இது தவிர, பொதுக் கழிப்பிடங்கள் மூலமும் இந்தப் படை நோய் பரவுகிறது. மறைவிடம் தொடைப் பகுதியில் இந்த நோய் பற்றிக் கொள்வதால் கழிப்பிடப் படை நோய் என்று பெயர் பெறுகிறது. கிருமிகள் நம் சருமத்தை முதலில் தாக்கி நோய்களைப் பலவிடங்களுக்குப் பரப்புகின்றன.

படை நோய் சாமானியத்தில் சரியாவதில்லை. இதனால் தோல் சிகிச்சை நிபுணர்களிடம் காட்டி மருந்து போடுவது நல்லது. சாதாரணமாக, படை நோயாளிகளுக்கு பெட்னவேட் ஆயின்ட்மென்ட் தடவலாம். இதுபோல எத்தனையோ மருந்துகள் இருக்கின்றன. மருத்துவர்களின் ஆலோசனைப்படி மருந்துகளை வாங்கி உபயோகிப்பதால் நோய் சீக்கிரம் குணம் ஆகும்.

பொதுவாக, டாக்டர்களுக்குக் கெட்ட பெயரை வாங்கிக் கொடுக்கும் நோய் என்று தோல் நோய்களைப் பற்றி மேலை நாடுகளில் சொல்லுவார்கள். காரணம், புண் ஆறுவது போல் தோன்றும் ஆனால் ஆறாமல் பழையபடி தொந்தரவு கொடுக்கும். டாக்டர்களையும் இது டபாய்க்கும் என்று சிலர் கிண்டலாகச் சொல்லுவார்கள்.

மருந்தைத் தொடர்ந்து போடவேண்டும். நிறுத்தக் கூடாது. அடிக்கடி டாக்டர்களை மாற்றிக்கொண்டே போகக் கூடாது: மருந்துகளையும் மாற்றக்கூடாது.

தமிழ் மருந்துகளில் படை நோய்க்கு ஒரு மருந்து சொல்கிறார்கள். ஒரு சிறுகட்டி நவச்சாரத்தை உடைத்துப் பவுடர் ஆக்கி அதில் தேன் விட்டுக் குழப்பி பீங்கான் பாத்திரத்தில் வைத்துக் கொண்டு தினசரி படையின்மீது தடவிவந்தால் படை உதிர்ந்துவிடும்.

சரும நோய்களுக்கு காரணம் முதலில் உடல் சுத்தம் இல்லாதது. தினசரி குளிக்க வேண்டும். அழுக்கைப்போக்க வேண்டும். குளித்த பிறகு உடம்பில் ஈரம் இல்லாமல் நன்கு துடைத்துவிட வேண்டும். தொங்கு சதை உள்ளவர்களுக்கு தசையின் மடிப்புக்களில் ஈரம் தங்கும். இது கேடு பயக்கும்.

உடல் சுத்தத்திற்கு அடுத்தபடி குடல் சுத்தம் வேண்டும். மலச் சிக்கல் காரணமாக உடம்பில் தேங்கியிருக்கும் கழிவுகள், நச்சுக்கள் சருமத்தின் வழியாக வெளியேறும். சருமம் சுத்தமில்லாவிட்டால் கழிவுகளால் அழற்சி ஏற்படலாம். ஆகவே கை, கால், உடல், உடை இவை சுத்தமாக இருந்தால் தோல் நோய்கள் தொலை தூரத்திற்கு ஓடிவிடும். 

நல்ல காற்றும், நல்ல வெளிச்சமும், சூரியக்கதிர்களும் நம்மீது படும்படி பார்த்துக்கொண்டால் எப்படை வந்தாலும் சுத்தம், சுகாதாரம், ஆரோக்கியம் என்ற முப் படைகளை எதிரே நிறுத்திப் பாருங்கள். இவை தூள் கிளப்பும்! 

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...