Skip to main content

Google ads

மூளையை தாக்கும் மூன்று நோய்கள்- தடுக்கும் வழிமுறைகள்

 வெப்பம் மிகுந்த நாடுகளில் இளம் பருவத்தினரை என்-சபாலிடிஸ், மெனிங்கெடிஸ், என்சபாலோ மெனிங்கெடிஸ், என்ற மூன்று நோய்கள் மூளையைத் தாக்கிப் பலரைச் சோதனைக்குள்ளாக்குகிறது.என் - சபாலிடிஸ் என்ற நோய் மூளையின் இரு அரைக் கோளங்களை மட்டும் தாக்குகிறது.

மெனிங்கெடிஸ் என்பது மூளையிலுள்ள மெல்லிய உட்புறத் தோலைத் தாக்குகிறது.என்-சபாலோ மெனிங்கெடிஸ் என்பது மூளையுடன் இணைந்த முதுகெலும்பைத் தாக்குகிறது.

இந்த மூன்று நோய்களுக்கும் ஏறக்குறைய ஒரே அடையாளங்கள் தோன்றுகின்றன.

குளிர் ஜூரம் உண்டாகும். தலைவலி உண்டாகும். அதிகமான அசதியோடு தூக்கம் ஏற்படும். ஞாபக சக்தியை இழந்து விடுவார்கள்.




இன்று என்ன கிழமை, என்ன தேதி, என்ன சாப்பிட்டோம் என்பவை கூட மறந்து விடும். எதற்கெடுத்தாலும் கிடுசிடுவென்று எரிச்சல் அடைவார்கள். உடம்பில் நடுக்கம் ஏற்படும். 

கழுத்தில் விறைப்பு உண்டாகும். ஒருவகைப் பயம் உண்டாகும். சில சமயங்களில் குமட்டலும் வாந்தியும் உண்டாகும்.

மூளையைத் தாக்கும் இந்த மூன்று நோய்களுள் எது எந்த வகையைச் சேர்ந்தது என்பதை அனுபவமுள்ள டாக்டர்கள் தான் கண்டு பிடிக்க முடியும்.

இந்த நோய்கள் எப்படித் தோன்றுகின்றன? பண்டையில் ஒருவிதமான விறைப்பு உண்டாகிறது.

மூளைக்குள் கோராய்டு என்று சொல்லப்படும் பள்ளங்கள் நிறைய உண்டு. இவற்றில் சுரக்கும் ஒருவகைத் திரவம் மூளை முழுவதும் பரவுகிறது. மூளையில் உண்டாகும் அதிர்ச்சிகளைத் தாங்க இந்தத் திரவம் உதவுகிறது.

மூளை நோய்கள் தாக்கும்போது இந்தத் திரவம் அதிகமாக உற்பத்தியாகிறது. இந்தத் திரவத்தை ஈர்க்கும் சத்தியை மூளை இழந்துவிடுவதால் இதுபோன்ற அசம்பாவிதக் கோளாறுகளைத் தோற்றுவிக்கிறது.

மூளை நோய்களில் கொடூரமானது என் சபாலிடிஸ் என்பதுதான். இந்த நோயில் தாக்குண்டவர்கள் மீள்வது கடினம் என்று சொல்லுகிறார்கள்.

மெனிங்கெடிஸ் காய்ச்சலில் நரம்புகள் பாதிக்கப் படுவதால் பாரிச வலிப்பு உண்டாகலாம். நோய் முற்றி விட்டால் மனநோயாளியாக ஆகவேண்டிவரும்.

மூளை நோய்கள் பெரும்பாலும் மழைக்காலங்களில் பரவுகின்றன.  அர்போவிரஸ் என்ற கிருமிகளால் இந்த நோய் வலுப் பெறுகிறது. அர்போவிரஸ் கிருமிகளில் 200 வகைகள் இருப்பதாகச் சொல்லுகிறார்கள் பன்றிகளும், கொசுக்களும் இந்தக் கிருமிகளும் வாகனங்கள், இவை மூலமே மெனிங்கெடிஸ் நோய் பரவுகிறது.

பன்றி மாமிசம் அடிக்கடி சாப்பிடுகிறவர்களுக்கு இந்த நோய் வரலாம். பெரும்பகுதி கொசுக்களே இதற்குக்காரணம், கொசுக்களை விரட்டியடித்தால் இந்த நோய் பரவாமல் தடுக்கலாம்.

வைட்டமின் பி-1, பி-6, பி-12, வைட்டமின் சி. நிக்கோடினிக் அமிலம், பாலிக் அமிலம் இதன் சத்துக்கள் குறைவாக உள்ள உணவு வகைகளைச் சாப்பிடுகிறவர்களுக்கு மூளை நோய்கள் உண்டாகலாம். இந்த நோய் வராமல் தடுப்பு ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.

உங்கள் குழந்தைகளிடம் விசித்திரமான போக்குத் தோன்றினால் உடனே மனநோய் மருத்துவர்களிடம் கொண்டு செல்லுங்கள். உடம்பைச் சோதித்து மூளை பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடித்துச் சிகிச்சை செய்வார்கள்.

ஆரம்பத்திலேயே இந்த நோயைக் குணப்படுத்தலாம். மூளை நோய்க்கு மூளையில் ஏற்படும் திரவத்தால் தொந்தரவு ஏற்படுவதால் திரவத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகளைக் கொண்டு குணப்படுத்துகிறார்கள்.

கட்டியாக இருந்தால் ஆபரேஷன் செய்யலாம். கட்டியால் மூளை நோய் உண்டாவதில்லை. இதனால் மெனிங்கெடீசுக்கு அறுவை சிகிச்சை எதுவும்

இல்லை. மூளையைப் பாதிக்கும் இந்த மூன்று நோய்களை வரவொட்டாமல் தடுக்க விடும் வெளியும் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

கொசுக்களால் தீமை உண்டாவதால் கொசுக்களை அணுக விடாமல் பார்த்துக் கொள்ளக் கொசுவலை கட்டிக் கொண்டு படுப்பது நல்லது. மனிதனுக்கு மூளை மிகவும் முக்கியம். அது

பாதிக்காதபடி பாதுகாப்பது எல்லோருடைய கடமை. குறிப்பாக, வளரும் குழந்தைகளுக்கு இந்த நோய் வருவதால் பெற்றோர் குழந்தைகளைக் கண்காணிக்க வேண்டியது அவசியத்திலும் அவசியம்!

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும