Skip to main content

Google ads

மின்சார அதிர்ச்சிக்கு செய்ய வேண்டிய முதலுதவிகள்

 விஞ்ஞானம் மனித குலத்துக்கு எத்தனையோ வகையில் உதவினாலும், அதனால் சில விபத்துக்களும் ஏற்பட்டு விடுகின்றன.மின்னோட்டத்தின் சக்தியைப் பொறுத்து அதிர்ச்சி அதிகமாகி சுயநினைவு இழந்து, சுவாசம் தடைப்பட்டு, இருதய இயக்கம் சிரமப்படுகிறது.

சுயநினைவு இல்லாமல் போகுதல், மூச்சை அடைதல், நினைவு தடுமாறுதல் இவை எல்லாம் ஒரே பொருளைக் குறிப்பிடுகிற வெவ்வேறு செயல்கள் என்றாலும் இவற்றிற்கு முதலுதவி செய்தால் ஆபத்தான நிலைமை யிலிருந்து பாதிக்கப்பட்வர்களை மீட்கலாம்.

மின்சாரம் பாதிக்கப்பட்டவரை எப்படி மின்சாரத்தில் இருந்து அப்புறப்படுத்துவது?

  மின்சாரத்தில் இழுக்கப்பட்டவரைக் காப்பாற்ற உடனே மின்சார சுவிட்சை நிறுத்த முயற்சிக்க வேண்டும்:

மின்சாரக் கம்பியால் இழுக்கப் பட்டவரைப் பிரித்து அப்புறப்படுத்த வேண்டும்.

 மின்சாரம் கசியும் இடத்திலிருந்து பத்து மீட்டர் இடத்தைச் சுற்றித் தரையிலும் மின்சாரம் இருக்கு மென்பதால் பாதிக்கப்பட்பவரை மீட்க வெறுங் கால்களுடன் அவரை அனுகக்கூடாது. காலில் ரப்பர் செருப்பு அணிந்துகொண்டு அவரைக் காப்பாற்றவேண்டும். 



உலோகம் அல்லாத கம்பு, கட்டைகளால் அவரைப் பிரித்து அப்புறப்படுத்தவேண்டும். ஈரமான செருப்பு, ஈரமான கம்பு, சட்டைகளை உபயோகிக்கக்கூடாது. இவற்றால் பயனில்லை.

மின்சாரத்தால் பாதிக்கப்பட்டவரை என்னென்ன முதலுதவிகள் செய்து உடனே காப்பாற்றலாம்?

மின்சாரம் தாக்கப்பட்டவரைச் சிரமப்படுத்தாமல் தூக்கி வந்து படுக்க வைக்கவேண்டும். இவருடைய முகம் சிவந்தும், நாடி பலகீனமாகவும் இருக்கும். அவர் தலையைச் சற்று உயர்த்திவைத்துக் கழுத்து மற்றும் உடலை இறுக்கிக்கொண்டிருக்கும் துணிகளைக்த் தளர்த்தவேண்டும். உடல் வெது வெதுப்பாக இருக்கும்படி கம்பளியால் போர்த்தவேண்டும். அம்மோனியா ஸ்பிரிட்டில் பஞ்சை நனைத்து மூக்குக்கு முன்னால் இரு வினாடிகள் பிடிக்கவேண்டும்.

முகம் நீலம் பாய்ந்து, நாடி அடங்கி சுவாசம் நின்று விடுமானால் உடனே செயற்கைச் சுவாச முறையில் அவரை நன்கு இயக்கவேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் இருதயமும் செயலற்றிருப்பதால் இதயத்தையும் பிசைந்து விடவேண்டும். இந்த இரண்டு வேலைகளையும் ஒரே சமயத்தில் ஒருவரால் செய்யமுடியாது. இரண்டு பேர் செய்யவேண்டும்.

தாக்குண்டவரை மல்லாந்து படுக்கும்படி செய்து அவர் வாயில் ஊதவேண்டும். நிமிஷத்திற்கு 15 முறை ஊதவேண்டும். இது செயற்கை முறையில் சுவாசத்தை இயங்கச் செய்யும் முறை. இதுபோலவே அவருடைய நெஞ்சையும் பிசைந்துவிட வேண்டும். இதை வினாடிக்கு ஒருமுறை செய்யவேண்டும். தொடர்ந்து நீண்ட நேரம் இந்த இயக்கும். வேலையைச் செய்யவேண்டும். இவை எல்லாம் முதல் உதவிகள். 


மின்சாரத்தால் பாதிக்கப்பட்டவரை மல்லாக்கப் படுக்க வைத்து அவர் வாய் மூலம் மற்றவர் ஊதுவதால் கிளர்ச்சி உண்டாகிச் சுவாசம் மெதுவாகத் தொடரலாம். வாய் அல்லது மூக்கு மூலமும் ஊதலாம். ஊதுபவர் ஆரோக்கியம் உள்ளவராக இருக்கவேண்டும். நன்றாக மூச்சை இழுத்து அடக்கி வைத்துப் பிறகு ஊதவேண்டும். அவரைக் குப்புறப்படுக்க வைத்து முகத்தைத் தரையில் படாமல் சற்றுத் தூக்கிப் பிடித்துக்கொண்டு இடுப்புப் பகுதியை அமுக்கிவிட வேண்டும். இவை எல்லாம் அவர் சுவாசம் ஒழுங்காக நடப்பதற்கான முயற்சிகள்.

முதலுதவிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அடுத்து என்ன செய்ய வேண்டும்?

நிலைமை மோசமாகிறது என்று அறிந்தால் உடனே ஆம்புலன்ஸ்ஸில் ஏற்றி அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லவேண்டும். மருத்துவமனையில் அவருக்குப் பிராணவாயு செலுத்துவார்கள். இருதயம் நின்றிருந்தால் அதை ஊக்குவிக்க ஊசி மருந்து கொடுப்பார்கள். மருத்துவமனைக்கு மின்சாரம் தாக்கப்பட்டவரை எடுத்துச் செல்லுமுன் சில முதலுதவிச் சிகிச்சை மறைகளைத் தெரிந்தவர்கள் செய்யவேண்டும். அப்படிச் செய்யாமல் விட்டு விட்டால் சீக்கிரத்தில் ஆபத்தான சுட்டத்தை அடையநேரும்.

எந்தத் தாக்குதல் ஏற்பட்டாலும் அதற்குச் செய்ய வேண்டிய முதலுதவிகளைச் செய்ய நாம் தெரிந்து வைத்துக்கொண்டு செயல்பட்டால் பல விபரீதங்களைத் தவிர்க்கலாம்.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...