Skip to main content

Google ads

அழுவதால் கிடைக்கும் நன்மைகள்-தீரும் நோய்கள்

 நோய் வந்த பிறகு நோயின் கொடுமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அழுகிறோம். இதனால் நோய் தீர்ந்துவிடாது. மருந்து சாப்பிட்டால்தான் நோய் தீரும். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அழுவதால் ஒருவகை ஆறுதல் கிடைக்கிறது.

கதறுவதும்; கண்ணீர் விட்டு அழுவதும், மன நோய்களைப் போக்கும் ஒரு மருந்து என்பது பலருக்குத் தெரியாது. அழவேண்டிய நேரத்தில் அழாமல், மனதிற்குள் போட்டு அமுக்கிவைப்பது நோய்களுக்குக் பல காரணமாகிறது என்று மன இயல் மருத்துவர்கள் ஒரு புதிய கருத்தை நமக்குச் சொல்லுகிறார்கள்.

அழுவது கோழைத்தனம்; அழுவது ஆண்மைக்கு இழுக்கு; அழுவது அகௌரவமானது; அழுவது சிறு பிள்ளைத்தனம் என்றெல்லாம் சில மேல்பூச்சுகளைப் பூசிக் கண்ணீரின் கதவுகளை சாத்திவிடுகிறார்கள். இதனால் உடலுக்கும் உள்ளத்துக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுவதை மறந்துவிடுகிறார்கள். மறைமுகமான சில நோய்களுக்கு ஆளாகிறார்கள். இவை உடனே வெளியே தெரிவதில்லை.



அன்புக்குரிய ஒருவர் இறந்து விட்டார் என்றதும் அதிச்சியும் உடனே அழுகையும் வரும். இதை அடக்க முடியாது. தடுக்கவும் முடியாது. ஆனால், வாய்விட்டு அழ வேண்டிய நேரம் இது. இந்த நேரத்தில் அழாமல் இருக்கலாமா? மௌனக் கண்ணீர் வடிக்கலாமா? கூடாது. கதறி அழ வேண்டும். அப்போதுதான் நெஞ்சின் சோகத்தினால் உண்டாகும் மனபாரம் உடைந்து நெஞ்சு நெகிழும். இல்லாவிட்டால் கவலையினால், அதிர்ச்சியினால், மாரடைப்பு போன்ற பல தொந்தரவுகள் உண்டாகலாம்.

எத்தனையோ தலைவர்கள், அறிஞர்கள் தாங்க முடியாத துன்பம் ஏற்படும் போது விம்மி விம்மி அழுதிருக்கிறார்கள். பேரறிஞர் தாமஸ் கால்லைல் தன் மனைவி இறந்த போது கதறி அழுதாராம். மனைவியின் நினைவு வரும்போதெல்லாம் விம்மி அழுவாராம்.

வின்ஸ்டன் சர்ச்சிலைக் கல்நெஞ்சக்காரர் என்று சொல்லுவார்கள். யுத்தத்தால் அழிந்த நகரத்தின் அழிவுகளை நேரில் பார்த்தபோது வாய்விட்டு அழுதாராம். அவர் பேரன் பிறந்த நேரத்தில் யுத்தத்தின் கோரச் சூழ்நிலையில் ஏன் பிறந்தாய்? என்று மனம் உருகி அழுதாராம்.


இதிலிருந்து என்ன தெரிகிறது? பெரிய மனிதர்களும் மனப் பக்குவம் பெற்றவர்களும் கூடச் சில நேரங்களில் அழுது ஆறுதல் அடைந்திருக்கிறார்கள்.

சோகக் கண்ணீர் இறுக்கமான நம்புகளைத் தளர்த்து கிறது. விறைப்பான உணர்வு தோன்றாதவாறு தொய்வை உண்டாக்குகிறது. உடம்பில் பிராணவாயு பரவுகிறது. நுரையீரல் சம்பந்தமான நோய்களைப் போக்குகிறது. ஜீரண சக்தியைப் பெருக்குகிறது. நச்சுப் பொருள்களை வெளியேற்றுகிறது.

துன்பம் நரம்பு மண்டலத்திலும் இரத்த ஓட்ட மண்டலத்திலும் மிகுந்த இரத்த அழுத்தத்தை உண்டாக்குகிறது. இதனால் உடலும் மனமும் பாதிக்கப்படுகிறது. இரத்தக் குழாய்களில் அழுத்தம் அதிகமாகி, இருதயத் துடிப்பைப் பெருக்கி இருதய நோய்க்கு நம்மை ஆளாக்குகிறது.

அழுவதால் இறுக்கம் குறைந்து கொலஸ்டிராலின் அளவும் குறைகிறதாம்.

கவலை உண்டானால் அதை மறக்க அதிகமாகச் சிகரெட்டை ஊதித் தள்ளுகிறார்கள்,அல்லது போதை மருந்துகளையும் மது வகைகளையும். தூக்க மாத்திரைகளையும் சிலர் சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். சிலர் மாது, சூது என்று தீயவழிகளில் காலத்தைப் போக்குகிறார்கள். இதனால் நேரத்தையும் பணத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்கிறார்கள்.

வாய்விட்டு அழுதால் பல நோய்கள் நம் உடம்பை விட்டு, மனத்தை விட்டு ஓடிவிடுகின்றன. அழுவது நரம்புக்கு நல்லது. நரம்பு நோய்களிலிருந்து தப்பிக்கலாம். கண்ணிர்விட்டு அழுவதால் கண் தூய்மை பெறுகிறது. கண் பிரகாசம் அடைகிறது. இதயத்தின் இறுக்கம் குறைந்து அதனால் ஆறுதல் கிடைக்கிறது.

இருதய நோய், பிளட் பிரஷர், அல்சர் ஆகிய பல நோய்கள் மனக் கவலைகளால் அதிகமாகின்றன. இதற்கு வடிகால் அழுகை என்று சொன்னால் அதில் தவறில்லை.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...