Skip to main content

Google ads

அழுவதால் கிடைக்கும் நன்மைகள்-தீரும் நோய்கள்

 நோய் வந்த பிறகு நோயின் கொடுமையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அழுகிறோம். இதனால் நோய் தீர்ந்துவிடாது. மருந்து சாப்பிட்டால்தான் நோய் தீரும். இது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் அழுவதால் ஒருவகை ஆறுதல் கிடைக்கிறது.

கதறுவதும்; கண்ணீர் விட்டு அழுவதும், மன நோய்களைப் போக்கும் ஒரு மருந்து என்பது பலருக்குத் தெரியாது. அழவேண்டிய நேரத்தில் அழாமல், மனதிற்குள் போட்டு அமுக்கிவைப்பது நோய்களுக்குக் பல காரணமாகிறது என்று மன இயல் மருத்துவர்கள் ஒரு புதிய கருத்தை நமக்குச் சொல்லுகிறார்கள்.

அழுவது கோழைத்தனம்; அழுவது ஆண்மைக்கு இழுக்கு; அழுவது அகௌரவமானது; அழுவது சிறு பிள்ளைத்தனம் என்றெல்லாம் சில மேல்பூச்சுகளைப் பூசிக் கண்ணீரின் கதவுகளை சாத்திவிடுகிறார்கள். இதனால் உடலுக்கும் உள்ளத்துக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுவதை மறந்துவிடுகிறார்கள். மறைமுகமான சில நோய்களுக்கு ஆளாகிறார்கள். இவை உடனே வெளியே தெரிவதில்லை.



அன்புக்குரிய ஒருவர் இறந்து விட்டார் என்றதும் அதிச்சியும் உடனே அழுகையும் வரும். இதை அடக்க முடியாது. தடுக்கவும் முடியாது. ஆனால், வாய்விட்டு அழ வேண்டிய நேரம் இது. இந்த நேரத்தில் அழாமல் இருக்கலாமா? மௌனக் கண்ணீர் வடிக்கலாமா? கூடாது. கதறி அழ வேண்டும். அப்போதுதான் நெஞ்சின் சோகத்தினால் உண்டாகும் மனபாரம் உடைந்து நெஞ்சு நெகிழும். இல்லாவிட்டால் கவலையினால், அதிர்ச்சியினால், மாரடைப்பு போன்ற பல தொந்தரவுகள் உண்டாகலாம்.

எத்தனையோ தலைவர்கள், அறிஞர்கள் தாங்க முடியாத துன்பம் ஏற்படும் போது விம்மி விம்மி அழுதிருக்கிறார்கள். பேரறிஞர் தாமஸ் கால்லைல் தன் மனைவி இறந்த போது கதறி அழுதாராம். மனைவியின் நினைவு வரும்போதெல்லாம் விம்மி அழுவாராம்.

வின்ஸ்டன் சர்ச்சிலைக் கல்நெஞ்சக்காரர் என்று சொல்லுவார்கள். யுத்தத்தால் அழிந்த நகரத்தின் அழிவுகளை நேரில் பார்த்தபோது வாய்விட்டு அழுதாராம். அவர் பேரன் பிறந்த நேரத்தில் யுத்தத்தின் கோரச் சூழ்நிலையில் ஏன் பிறந்தாய்? என்று மனம் உருகி அழுதாராம்.


இதிலிருந்து என்ன தெரிகிறது? பெரிய மனிதர்களும் மனப் பக்குவம் பெற்றவர்களும் கூடச் சில நேரங்களில் அழுது ஆறுதல் அடைந்திருக்கிறார்கள்.

சோகக் கண்ணீர் இறுக்கமான நம்புகளைத் தளர்த்து கிறது. விறைப்பான உணர்வு தோன்றாதவாறு தொய்வை உண்டாக்குகிறது. உடம்பில் பிராணவாயு பரவுகிறது. நுரையீரல் சம்பந்தமான நோய்களைப் போக்குகிறது. ஜீரண சக்தியைப் பெருக்குகிறது. நச்சுப் பொருள்களை வெளியேற்றுகிறது.

துன்பம் நரம்பு மண்டலத்திலும் இரத்த ஓட்ட மண்டலத்திலும் மிகுந்த இரத்த அழுத்தத்தை உண்டாக்குகிறது. இதனால் உடலும் மனமும் பாதிக்கப்படுகிறது. இரத்தக் குழாய்களில் அழுத்தம் அதிகமாகி, இருதயத் துடிப்பைப் பெருக்கி இருதய நோய்க்கு நம்மை ஆளாக்குகிறது.

அழுவதால் இறுக்கம் குறைந்து கொலஸ்டிராலின் அளவும் குறைகிறதாம்.

கவலை உண்டானால் அதை மறக்க அதிகமாகச் சிகரெட்டை ஊதித் தள்ளுகிறார்கள்,அல்லது போதை மருந்துகளையும் மது வகைகளையும். தூக்க மாத்திரைகளையும் சிலர் சாப்பிடும் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள். சிலர் மாது, சூது என்று தீயவழிகளில் காலத்தைப் போக்குகிறார்கள். இதனால் நேரத்தையும் பணத்தையும் உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்கிறார்கள்.

வாய்விட்டு அழுதால் பல நோய்கள் நம் உடம்பை விட்டு, மனத்தை விட்டு ஓடிவிடுகின்றன. அழுவது நரம்புக்கு நல்லது. நரம்பு நோய்களிலிருந்து தப்பிக்கலாம். கண்ணிர்விட்டு அழுவதால் கண் தூய்மை பெறுகிறது. கண் பிரகாசம் அடைகிறது. இதயத்தின் இறுக்கம் குறைந்து அதனால் ஆறுதல் கிடைக்கிறது.

இருதய நோய், பிளட் பிரஷர், அல்சர் ஆகிய பல நோய்கள் மனக் கவலைகளால் அதிகமாகின்றன. இதற்கு வடிகால் அழுகை என்று சொன்னால் அதில் தவறில்லை.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும