Skip to main content

Google ads

தொப்பையை குறைக்க மருத்துவ வழிமுறைகள்/அறியாத தகவல்கள்- Medical Tamizha

 ஒரு மனிதனின் வாழ்வுக்கு அவனுடைய வயிறு ஓர் அளவுகோல். வயிற்றின் சுற்றளவு அதிகமாகப் போனால் வாழ்வு சுருங்கும் என்று ஒரு கணக்கு உண்டு.

அதாவது, தொந்தி, தொப்பை, பெருவயிறு உண்டாகாமல் பார்த்துக் கொண்டால் நீண்ட காலம் வாழலாம்.

பணவசதி படைத்தவர்கள் பலர் வயிற்றின் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப் படாமல் வாழ்கிறார்கள். வயிறு வீங்கவீங்க வாழ்வு சுருங்கிவிடும் என்ற பயமே இல்லாது வாழ்கிறார்கள். பணக்காரர்கள் சிலருக்குத்தான் பானை வயிறு என்றால், ஏழைகளில் சிலருக்கும் பானைபோல் வயிறு பெருத்துவிடும் காட்சியைப் பார்க்கிறோம்.

வயிறு பெருத்து போவதற்கு என்ன காரணம்?

சாதாரணமாகக் கொழுத்த உடல் உள்ளவர்களுக்குப் பெருத்த வயிறு அமையும். இதற்குக் காரணம் கொழுப்புச் சத்து அதிகமாக உடலில் சேர்ந்து அவர்கள் உழைக்க முடியாத சூழ்நிலையில் வயிறு மட்டும் பெரிதாகி விடும்.

 நடந்தால் மூச்சு வாங்கும். சோர்வும் களைப்பும் அதிகமாகிச் சோம்பலுக்கு இடம் தந்துவிடுகிறார்கள். வயிறே இவர்களை வாழ்க்கையில் செயலற்றவர்களாக ஆக்கி விடுகிறது.




இவை தவிர, தைராய்டு சுரப்பிக் கோளாறு காரணமாகவும் உடல் பருத்து, வயிறு பெருத்துச் சிலருடைய அழகைக் கெடுத்துவிடுகிறது.

உடல் பெருத்தவர்கள் இறைச்சிக் கொழுப்பு, முட்டையின் மஞ்சள் கரு, வெண்ணெய், நெய், வனஸ்பதி. இனிப்புப் பண்டங்கள், கிழங்கு வகைகளை அதிகமாகச் சாப்பிட்டுச் சதையை வளர்த்து வயிற்றையும் பெருக்க வைத்து விடுகிறார்கள்.

பெரிய வயிறு சில நோய்கள் காரணமாகவும் உண்டாகிறது. அதில் முக்கியமான நோய் சிரோசிஸ் என்பது. ஈரல் கெட்டுப் போய் வயிற்றில் நீர் சுரந்து பெருவயிறு உண்டாகிறது. இதை மகோதரம் என்று சொல்லுகிறார்கள்.

 கெட்ட இரத்தத்தை ஈரலுக்கு எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய் அழுத்தம் அதிகமானால் மகோதரம் என்ற பெருவயிறு நோய் உண்டாகிறது. இரத்தத்தில் புரதச் சத்துக் குறைவதும் ஒரு காரணம்.



உடம்பை விட்டு வெளியேறவேண்டிய உப்பும், நீரும் வயிற்றுறைக்கு வந்து சேர்வதால் வயிறு உப்பிவிடுகிறது. சிரோசிஸ் நோய் பல்வேறு நோய்களுக்குக் காரணமாக இருக்கிறது.

பித்த நீர் தடைப்படுவதால் மஞ்சள் காமாலை தோய் ஏற்படுகிறது. இருதயம் சுருங்குவதால் கார்டியாக் சிரோசிஸ் என்ற இருதய நோய் உண்டாகிறது.

டி.பி. நோய், சிறுநீரகக் கோளாறு, ஈரலில் கட்டி, புற்று நோய் இவை எல்லாமே சிரோசிஸ் நோய் காரணமாக உண்டாகின்றன.

புரதச் சத்துக் குறைவாலும் வயிறு பெருப்பதும் உண்டு. மது அருந்துபவர்களுக்கும் வயிறு பெருக்கும். குடிப்பவர்களின் வயிறு பெரும்பாலும் பலூன் மாதிரி ஆகும்.



அடிக்கடி வயிறு உப்பலுக்குப் பல காரணங்கள் சொல்லப் படுவதால் பல்வேறு சோதனைகளைச் செய்து பார்க்க. வேண்டும். வயிற்றில் நீர் சேர்ந்துவிடுவதால் இந்தத் தொந்தித் தொல்லை உண்டாகிறது என்றால் வயிற்றிலுள்ள நீரை எடுத்துச் சோதித்து அறிந்து கொள்ள முடியும்.

ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால எக்ஸ்ரே எடுத்துப் பார்க்கலாம். மண்ணீரல் வீக்கம், சிறுநீரசு வீக்கம் எது இருந்தாலும் அதை எக்ஸ்ரே மூலம் அறியலாம்.

சிறுநீரைச் சோதனை செய்தால் ஈரல் பாதித்திருக்கிறதா?

ஈரலில் கட்டி இருந்தாலும் லிவர்ஸ்கேன் மூலம் அறிந்துகொள்ளலாம்.வயிற்றில் பெரிடோனா ஸ்கோப் என்ற கருவி மூலம் உள் கோளாறுகளை அறியலாம். சோதனை மூலம் தெரிந்து கொண்ட பிறகு வைத்தியச் சிகிச்சையை ஆரம்பித்தால் எந்த மாதிரிக் கோளாறையும் நிவர்த்தி செய்து விட முடியும்.

பெண்களுக்கு மாத விடாய்க் கோளாறு காரணமாக வயிறு பெருக்கலாம். அடி வயிற்றில் வலியும் உண்டாகும். இதற்குப் பல மருந்துகள் உண்டு. 

கர்ப்பமானவர்களுக்கு வயிறு பெருக்கும். பிரசவம் ஆனவுடன் பழைய நிலை உண்டாகும்.

பிரசவத்திற்குப் பிறகு சிலருக்கு வயிறு பெருத்தே இருக்கும். இதற்கு பெல்ட் உண்டு. அதன் மூலம் வயிற்றைச் சமநிலைக்கு கொண்டுவந்து விடலாம்.

வயிறு பெருத்தவர்கள், நோயினால் வயிறு பெருத்திருக்கிறதா? அல்லது கொழுப்பு மிகுதியால் பானை வயிறு உண்டாகி இருக்கிறதா? என்று கண்டு பிடிக்க அவர்களின் தொப்புள் குழியைப் பார்த்தாலே தெரிந்துவிடும்.

தொப்புள் குழி ஆழமாக இருந்தால் கொழுப்பு மிகுதி என்பதை உணரலாம். இதற்கு உணவுக் கட்டுப்பாடும். உடற்பயிற்சியும் மிக மிக அவசியம்.

டாக்டர்கள் வயிற்றைத் தட்டிப் பார்த்தே இந்தக் கோளாறுகளை மேலோட்டமாகத் தெரிந்து சொல்லி விடுவார்கள்.

உடல் அழகிற்கும் ஆரோக்கியத்திற்கும் வயிறு மிக முக்கியமான உறுப்பு. இதை வாடவிடவும் கூடாது. பெருக்கவும் விடக்கூடாது.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும