Skip to main content

Google ads

இரும்பு சத்து குறைவால் வரும் நோய்கள்/அறியாத தகவல்கள்- Medical Tamizha

 உடம்பில் இரும்பு இரும்பாக இல்லை. இரும்புச் சத்தாக இருந்து உயிரை இயக்குகிறது. இரும்புச் சத்து உடலுக்கு வலுவையும் வனப்பையும் தந்து நம்மை உயிர் வாழவைக்கிறது. உடலை வாழவைக்கிறது.

 இரும்பு இல்லையென்றால் இரத்த அணுக்கள் இல்லை. இரத்தம் இல்லை. ஆகவே இந்த உலகத்திற்கும் உடலுக்கும் இரும்பு, இரும்புச் சத்து எனப்படும் அயச் சத்து மிகமிகத் தேவையானது என்பதை கொண்டிருக்கிறது. 

இரும்புச்சத்து இரத்தத்திற்கும் நிறம் தருகிறது. பலம் தருகிறது. பிராண வாயுவை உடல் முழுவதும் கொண்டு செல்லும் பணியைச் செய்கிறது. இரும்புச்சத்து ஆண்களை விடப் பெண்களுக்கு இரும்புச் சத்து அதிகம் தேவை. அதைவிடக் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து அதிகம் தேவை என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்.

நாள் ஒன்றுக்கு குழந்தைகளுக்கு ஒரு மில்லி கிராம் சத்தும், வயதானவர்களுக்குப் பத்து கிராம் இரும்புச் சத்தும், இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும், கர்ப்பமான பெண்களுக்கும் 15 கிராம் இரும்புச் சத்தம் தேவைப்படும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.



ஹிமோகுளோபின் என்னும் புரொட்டீன் சத்துடன் இரும்புச் சத்து சேர்ந்து நம் உடலை இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் சத்துக் குறைவினால் அனீமியா என்ற இரத்தச் சோகைநோய் உண்டாகிறது. 

பாண்டுரோகம், காமாலை நோய் தோன்றுவதாகவும் சொல்லுகிறார்கள். மலேரியா. கொக்கிப் புழுக்களால் உடம்பில் இரத்தக் குறைவு ஏற்படுகிறது. இதை ஈடுசெய்ய இரத்தத்தில் இரும்புச் சத்து தேவைப்படுகிறது.

பெண்கள் மாதவிடாயின் காரணமாக வெளியாகும் இரத்தத்தின் மூலமாக இரும்புச் சத்தை இழக்கிறார்கள். இதை ஈடுசெய்ய இரும்புச் சத்து பெண்களுக்கு அதிகமாகத் தேவைப்படுகிறது.

 கர்ப்பமான பெண்கள் உணவு மூலம் இரும்புச் சத்தைப் பெறாமல்போனால் குழந்தைகளுக்கும் அதனால் பாதிக்கப்படுகின்றன. உடம்புக்குச் சோர்வும், பலவீனமும், இரத்தக் குறைவும் ஏற்படுவதால் உடல் மெலிந்து, நிறம் வெளுத்து நடமாடும் சக்தியையே இழந்து வருகிறார்கள் பலர்.

இரும்புச் சத்துக் குறைவால் உண்டாகும் சோகை மற்றும் நோய்களை வராமல் தடுக்கவும். வந்தபின் சமாளிக்கவும் எந்த மாதிரி உணவு வகைகளைச் சாப்பிடவேண்டும்?

ஆட்டு ஈரலில் இரும்புச் சத்தும் புரதச் சத்தும் நிறைந்திருப்பதாக ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்து சொல்லுகிறார்கள். அசைவ உணவு சாப்பிடுகிறவர்கள் ஈரல் சாப்பிட வேண்டும் என்று மேலைநாட்டு மருத்துவர்கள் கூறுகிறார்கள். கல்லீரல் இந்தக் குறைபாட்டை ஈடு செய்கிறது.

சைவ உணவு சாப்பிடுபவர்கள் உருளைக்கிழங்கு வாழைக்காய், வாழைத் தண்டு, பூசணி, வெங்காயம், வெள்ளைப் பூண்டு, தக்காளி மற்றும் பருப்பு வகைகளை அதிகமாக உணவில் சேர்த்துகொள்ள வேண்டும்.

 முட்டையின் மஞ்சள் கருவில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. சுண்டைக்காய் வற்றல், சிறிய வகைப் பாகற்காயிலும் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. இவை தவிர வைட்டமின் B-12, வாட்டர் பெரீஸ் காம்பவுண்டு சிகப்பு லேபில் டானிக்கையும் சாப்பிடலாம்.

உடம்பு இரும்பைப்போல் உறுதியாக ஆக வேண்டுமானால் இரும்புச் சத்தை இழந்துவிடாதீர்கள்.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...