Skip to main content

Google ads

இரும்பு சத்து குறைவால் வரும் நோய்கள்/அறியாத தகவல்கள்- Medical Tamizha

 உடம்பில் இரும்பு இரும்பாக இல்லை. இரும்புச் சத்தாக இருந்து உயிரை இயக்குகிறது. இரும்புச் சத்து உடலுக்கு வலுவையும் வனப்பையும் தந்து நம்மை உயிர் வாழவைக்கிறது. உடலை வாழவைக்கிறது.

 இரும்பு இல்லையென்றால் இரத்த அணுக்கள் இல்லை. இரத்தம் இல்லை. ஆகவே இந்த உலகத்திற்கும் உடலுக்கும் இரும்பு, இரும்புச் சத்து எனப்படும் அயச் சத்து மிகமிகத் தேவையானது என்பதை கொண்டிருக்கிறது. 

இரும்புச்சத்து இரத்தத்திற்கும் நிறம் தருகிறது. பலம் தருகிறது. பிராண வாயுவை உடல் முழுவதும் கொண்டு செல்லும் பணியைச் செய்கிறது. இரும்புச்சத்து ஆண்களை விடப் பெண்களுக்கு இரும்புச் சத்து அதிகம் தேவை. அதைவிடக் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து அதிகம் தேவை என்று மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்.

நாள் ஒன்றுக்கு குழந்தைகளுக்கு ஒரு மில்லி கிராம் சத்தும், வயதானவர்களுக்குப் பத்து கிராம் இரும்புச் சத்தும், இளைஞர்களுக்கும் இளம் பெண்களுக்கும், கர்ப்பமான பெண்களுக்கும் 15 கிராம் இரும்புச் சத்தம் தேவைப்படும் என்று மருத்துவ விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.



ஹிமோகுளோபின் என்னும் புரொட்டீன் சத்துடன் இரும்புச் சத்து சேர்ந்து நம் உடலை இயக்கிக் கொண்டிருக்கிறது. இந்தச் சத்துக் குறைவினால் அனீமியா என்ற இரத்தச் சோகைநோய் உண்டாகிறது. 

பாண்டுரோகம், காமாலை நோய் தோன்றுவதாகவும் சொல்லுகிறார்கள். மலேரியா. கொக்கிப் புழுக்களால் உடம்பில் இரத்தக் குறைவு ஏற்படுகிறது. இதை ஈடுசெய்ய இரத்தத்தில் இரும்புச் சத்து தேவைப்படுகிறது.

பெண்கள் மாதவிடாயின் காரணமாக வெளியாகும் இரத்தத்தின் மூலமாக இரும்புச் சத்தை இழக்கிறார்கள். இதை ஈடுசெய்ய இரும்புச் சத்து பெண்களுக்கு அதிகமாகத் தேவைப்படுகிறது.

 கர்ப்பமான பெண்கள் உணவு மூலம் இரும்புச் சத்தைப் பெறாமல்போனால் குழந்தைகளுக்கும் அதனால் பாதிக்கப்படுகின்றன. உடம்புக்குச் சோர்வும், பலவீனமும், இரத்தக் குறைவும் ஏற்படுவதால் உடல் மெலிந்து, நிறம் வெளுத்து நடமாடும் சக்தியையே இழந்து வருகிறார்கள் பலர்.

இரும்புச் சத்துக் குறைவால் உண்டாகும் சோகை மற்றும் நோய்களை வராமல் தடுக்கவும். வந்தபின் சமாளிக்கவும் எந்த மாதிரி உணவு வகைகளைச் சாப்பிடவேண்டும்?

ஆட்டு ஈரலில் இரும்புச் சத்தும் புரதச் சத்தும் நிறைந்திருப்பதாக ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்து சொல்லுகிறார்கள். அசைவ உணவு சாப்பிடுகிறவர்கள் ஈரல் சாப்பிட வேண்டும் என்று மேலைநாட்டு மருத்துவர்கள் கூறுகிறார்கள். கல்லீரல் இந்தக் குறைபாட்டை ஈடு செய்கிறது.

சைவ உணவு சாப்பிடுபவர்கள் உருளைக்கிழங்கு வாழைக்காய், வாழைத் தண்டு, பூசணி, வெங்காயம், வெள்ளைப் பூண்டு, தக்காளி மற்றும் பருப்பு வகைகளை அதிகமாக உணவில் சேர்த்துகொள்ள வேண்டும்.

 முட்டையின் மஞ்சள் கருவில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. சுண்டைக்காய் வற்றல், சிறிய வகைப் பாகற்காயிலும் இரும்புச்சத்து அதிகம் இருக்கிறது. இவை தவிர வைட்டமின் B-12, வாட்டர் பெரீஸ் காம்பவுண்டு சிகப்பு லேபில் டானிக்கையும் சாப்பிடலாம்.

உடம்பு இரும்பைப்போல் உறுதியாக ஆக வேண்டுமானால் இரும்புச் சத்தை இழந்துவிடாதீர்கள்.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும