Skip to main content

Google ads

சரிவிகித உணவு என்றால் என்ன ? சிறந்த உணவு எது ? Medical Tamizha

 சிறந்த உணவு என்று சொல்லும்போது குழந்தைகளுக்குத் தாய்ப் பால் தான் குழந்தைப் பருவத்தில் சிறந்த உணவாகிறது. தாய்ப் பாலில் நோய்த் தடுப்புச் சக்தி அதிகம் இருக்கிறது. ஆகவே நோய் வராமல் தடுக்கக் குழந்தைக்குத் தாய்ப் பாலைத் தவிர வேறு சிறந்த உணவு கிடையாது.

தாயின் மூலமே குழந்தைக்கு உணவு கிடைப்பதால் தாய் சிறந்த உணவு வகைகளைச் சாப்பிடவேண்டும். தாயின் உணவில் புரதச் சத்து, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து தேவையான அளவில் இருந்தால் குழந்தை நல்ல எடையுடன் பிறக்கும். பிறக்கும் குழந்தையும் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சியுடன் பிறக்கும்.

இதையும் படிக்க : குளிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

பிறந்த குழந்தையை மருத்துவமனைகளில் முதலில் எடை போடுகிறார்கள். குழந்தையின் எடை நான்கு கிலோவுக்கு அதிகமாக இருந்தால் தாய்க்குச் சர்க்கரை வியாதி இருக்குமோ என்று சந்தேகித்துச் சோதனை செய்வதுண்டு.

 இரண்டு கிலோ எடைக்கும் குறைவாக இருந்தால் குழந்தையை உன்னிப்பாகக் கவனித்துச் சிகிச்சை அளிக்கிறார்கள். குழந்தை பிறந்த பத்து நாட்களில் குழந்தையின் எடை குறையும். உடம்பிலுள்ள நீர்ச் சத்துக் குறைவதால் எடை இழப்பு ஏற்படலாம். இதைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. பிறகு எடை கூடிக்கொண்டு வரும்.


குழந்தை பிறந்தது முதல் ஐந்து வயதாகும் வரை குழந்தையின் எடையைக் கவனித்து வரவேண்டும். குறையும்போது என்ன உணவு கொடுக்கலாம். எந்த அளவு கொடுக்கலாம். எந்தெந்த நேரங்களில் கொடுக்கலாம். என்று குழந்தை மருத்துவரைக் கலந்து கொண்டு கொடுக்க வேண்டும். காரணம், குழந்தைகள் எல்லோரையும் ஒரே அளவில் வைத்துக் கணக்கிட முடியாது. குழந்தைக்குக் குழந்தை வித்தியாசம் உண்டு.



சாதாரணமாக ஒரு குழந்தை பிறந்தது முதல் 5 வயது அளவுகளைக் வரை எந்த மாதத்தில் எந்த அளவு எடை இருக்க வேண்டும் என்று பார்ப்போம் கவனிப்போம்.

 கவனிக்க வேண்டிய வயது   எடை அளவு 
 பிறந்த குழந்தை  3.0 கிலோ
 3 வது மாதத்தில்  5.5 கிலோ
 6 வது மாதத்தில்  7.5 கிலோ
 12 வது மாதத்தில் 10.0 கிலோ
 இரண்டு வயதில்  12.0 கிலோ
 மூன்று வயதில்  14.0 கிலோ
 நான்கு வயதில்  15.5 கிலோ
 ஐந்து வயதில்  17.0 கிலோ
.

மேலே கண்ட எடை அளவில் குழந்தை வளருகிறதா என்று தாய்மார்கள் கவனித்து வரவேண்டும். எடைக் குறைவு ஏற்பட்டால் உணவில் சத்துக்களை அதிகமாக்க வேண்டும். அதே நேரத்தில் நோய் தாக்குதல், கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்று டாக்டரிடம் சோதித்து உடனே சிகிச்சை செய்யவேண்டும்.


குழந்தை பிறந்த நான்கு மாதம் முதல் ஆறுமாதம் வரை தாய்ப் பால் கொடுத்து வரவேண்டும் என்பது முக்கியம். இரண்டு வயது வரை தாய்ப் பால் கொடுக்க வேண்டும் வேறு எதுவும் கொடுக்கக் கூடாது என்று மகப் பேறு மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

  இதையும் படிக்க :     காச நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

குழந்தையின் தோற்றமே சொல்லிவிடும். ஒரு குழந்தை ஊட்டச் சத்துக் குறைவால் மெலிந்திருக்கிறதா அல்லது வேறு காரணங்களால் உடல் நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறதா என்று. குழந்தைகளுக்கு ஆறாவது மாதத்திலிருந்து ஒரு வருடத்திற்குள்தான் ஊட்டச்சத்துக் குறைவால் நோய்கள் தொற்றுகின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் நோய்த் தடுப்பு ஊசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

தாய்ப் பால் கொடுத்தபிறகு ஐந்தாம் மாதத்திலிருந்து சிறிதுசிறிதாகத் திட உணவு மசித்தும், கரைத்தும், நொறுங்கப் பிசைந்தும் உணவு ஊட்டி வரலாம். குழந்தைக்குச் சக்தி அளிக்கும் உணவு வகைகள், புரதச் சத்து உணவு வகைகள், வைட்டமின் சத்து உணவு வகைகள், உலோகச் சத்து உணவு வகைகள் என்று படிப்படியாக ஊட்டவேண்டும்.

இதையும் படிக்க : வாகன புகையால் இவ்வளவு தீமைகளா?

ஒரு குழந்தையின் எடை அளவு குறைந்தால் உடல் நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது என்று அடையாளம் தெரிந்து கொள்வது போல், குழந்தையின் புஜத்தைப் பார்த்தும் தெரிந்துகொள்ளலாம் என்று நவீன வைத்தியம் கூறுகிறது.

புஜத்தின் அளவைத் தெரிந்து கொள்ள ஒரு டேப்பினால் அளந்து பார்க்கலாம் புஜத்தின் அளவு அதாவது முண்டா சதை அளவு பன்னிரண்டு சென்டி மீட்டர் அளவுக்குக் குறைந்தால் சத்துணவுக் குறைவதால் நோய் கண்டிருப்பதை அறியலாம் என்கிறார் ஒரு மேல் நாட்டு குழந்தை வைத்திய நிபுணர். முகம் கை கால் வயிறு பருமனாக இருந்தாலும் புஜம் மட்டும் சூம்பிப் போயிருந்தால் ஊட்டச் சத்துக் குறைவு என்று சொல்லுகிறார் டாக்டர். 

சத்தாண உணவு என்று சொல்லும்போது விலை உயர்ந்த உணவு என்பதல்ல. புரதச் சத்து உடம்பில் சேர கோழி இறைச்சி, முட்டை. மீன் சாப்பிடவேண்டும் என்று நினைக்காமல் பட்டாணி, மொச்சை, நிலக் கடலையில் செய்த எளிய உணவில் அதே சத்து உள்ளது. வைட்டமின் A- சத்து கண் பார்வைக் குறைவைச் சரி செய்துவிடும். 

இது முள்ளங்கி, பூசணி மற்றும் கீரைகளில் எளிதாகக் கிடைக்கிறது. வைட்டமின் D-மீன் எண்ணெயில் நிரம்ப உண்டு. செலவு அதிகம்.அதற்குப் பதில் சூரிய ஒளியில் அதே வைட்டமின் D- சத்து கிடைக்கிறது. சுண்ணாம்புச் சத்து இரும்பு சத்து கேழ்வரகு, கம்புத் தானியங்களில் நிரம்ப உண்டு.

இரும்புச் சத்து சர்க்கரையில் குறைவு. ஆனால் வெல்லத்தில் அதிகம் இருக்கிறது. புரதச் சத்து முள்ளங்கி, மரவள்ளிக்கிழங்கு இலைகளில் மிகுதியாக உண்டு. நம்முடைய மக்கள் கிழங்கைச் சாப்பிடுகிறார்கள். அதன் இலையைச் சாப்பிடுவதில்லை. மலிவு விளையில் ஊட்டச் சத்தைக் கொடுக்க முடியும் என்பதற்கு இவைகளே சான்று.

 எனவே, குழந்தைகளுக்கு நன்கு வேக வைத்த கிழங்கு, பழம் ஆகியவற்றை மசித்துக் கொடுக்கலாம். கீரைச் சாறு, பழரசங்களைக் கொடுக்கலாம். இவை எல்லாம் சிறுவர்களுக்கு ஏற்ற சிறந்த உணவுகள். இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து வந்தால் ஊட்டச் சத்து நிரம்பி உடல் வலுவும், வனப்பும் பெறுவார்கள் என்பது திண்ணம்!

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...